இன்றைய சிந்தனை 30.09.2019 - கடவுளும் மனிதர்களும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்றைய சிந்தனை 30.09.2019 - கடவுளும் மனிதர்களும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 அக்டோபர் 2019

இன்றைய சிந்தனை 30.09.2019 - கடவுளும் மனிதர்களும்

ஒரு சின்னக் குட்டிக் கதை... கடவுளும் மூன்று மனிதர்களும் எனும் கதை.

ஓர் ஆற்றின் மறு கரைக்குச் செல்ல இரு ஆண்கள்; ஒரு பெண் காத்து நிற்கின்றார்கள். அப்போது கடவுள் அந்தப் பக்கமாகப் பொடிநடையில் வருகிறார். அவரைப் பார்த்ததும் கரையில் இருந்த மூவருக்கும் மகிழ்ச்சி. மண்டியிட்டு வணங்குகிறார்கள்.



கடவுளார் கேட்கிறார்... இப்போது இந்தச் சமயத்தில் உங்களுக்கு என்ன வேண்டும்... அதை மட்டும் கேளுங்கள் என்கிறார்.

அவர்களில் ஓர் ஆண் 'ஆற்றில் நீந்திப் போக உடல் பலத்தைக் கொடுங்க கடவுளே’ என்று கேட்கிறார்.

கடவுள் உடல் பலத்தைக் கொடுக்கிறார். ஆனால் அந்த ஆளுக்கு நீந்தத் தெரியாது. வெறும் உடல் பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வதாம். தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தார். கடவுளார் அவரைக் காப்பாற்றிக் கரைக்கு இழுத்து வந்து விட்டார். சரி.

இரண்டாவது ஆண். ‘எனக்கு ஒரு படகைக் கொடுங்க கடவுளே’ என்று கேட்டார். படகு வந்தது. ஆனால் அந்தப் படகில் ஒரு சின்ன ஓட்டை. படகு தண்ணீரில் மூழ்கியது. இவரையும் கடவுளார் காப்பாற்றினார்.

மூன்றாவதாகப் பெண். 'ஆற்றில் தண்ணீர் இல்லாமல் செய்து விடுங்க அன்பான கடவுளே’ என்று கடவுளிடம் தாழ்ந்து மண்டியிட்டார். தண்ணீர் வற்றியது. அந்தப் பெண் கரையைத் தாண்டி அழகாய் நடந்து போனார்.

இதைக் கவனித்த பெரியவர் ஒருவர், 'எப்படியம்மா நீ மட்டும் புத்திசாலித் தனமாக இப்படி நடந்து கொண்டாய்?’ என்று கேட்டார்.

'எனக்கு முன்னால் இரண்டு பேர் செய்த தவறுகளில் இருந்து நான் படித்த பாடம். அந்த அனுபவம் தான் சரியான முடிவை எடுக்கச் செய்தது’ என்று அந்தப் பெண் சொன்னார்.

பெண்கள் எப்போதும் புத்திசாலிகள் என்று சொல்ல வரவில்லை. முடிவு எடுப்பதில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள் என்றும் சொல்ல வரவில்லை.

ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி; எடுக்கும் முடிவு சரியான முடிவாக இருக்க வேண்டும். தீர்க்கமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அனுபவங்களின் மூலமாக எடுக்கும் முடிவு சிறந்த முடிவாகவும் அமையலாம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
 
Chitra Ramasamy ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி; எடுக்கும் முடிவு சரியான முடிவாக இருக்க வேண்டும். தீர்க்கமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அனுபவங்களின் மூலமாக எடுக்கும் முடிவு சிறந்த முடிவாகவும் அமையலாம். வணக்கம். மிகவும் நிதர்சனமான உண்மை.
 
Muthukrishnan Ipoh என்னைக் கேட்டால் முடிவு எடுப்பதில் பெண்கள் தான் சிறந்தவர்கள்... ஆண்கள் மன்னிக்கவும்...
 
Ramaiah Paidiah என்ன?? பெண்கள் ...சரியான முடிவு எடுப்பது இல்லையா மாமா?  பிளிஸ் யோசித்து சொல்லவும்...  
 
Muthukrishnan Ipoh 😆 என்னைக் கேட்டால் முடிவு எடுப்பதில் கெட்டிக்காரர்கள் பெண்கள் தான்
 
Ravi Devaras அருமையான நன்னெறி கதை ஐயா... அனுபவக் கல்வி வாழ்க்கையின் அடுத்த நகர்வுக்கு சிறந்த வழிக்காட்டியாக அமைகிறது. நன்றி ஐயா... 
 
Muthukrishnan Ipoh உண்மைதான் தம்பி... அனுபவமே நம்மைச் செம்மைப் படுத்துகிறது...
 
Manickam Nadeson அன்று சரியான முடிவு எடுக்காததால் இன்று அவதி அடிக்கடி வந்து தாக்குகிறது. இதை அன்றே தாங்கள் சொல்லி இருக்கலாம், நெள இட்ஸ் டூ லேட்.
 
Muthukrishnan Ipoh சொல்லும் போது நீங்க கேட்கல... பெரிய வாத்தியார் என்கிற நினைப்பில் பெரிய நினைப்புகள்... சும்மா ஜோக் சார்... 
 
Manickam Nadeson ஆமாங்க ஐயா சார், அதான் டூடூடூடூ லேட்டா தான் புத்தி வருது.
 
Muthukrishnan Ipoh Manickam Nadeson இருந்தாலும் நீங்க ரொம்ப இளமை சார்...
 
Manickam Nadeson இளமை எல்லாம் கடந்து இப்போ எதிலோ வந்து நிக்குதுங்க ஐயா சார். எப்போ எது நடக்குமோ??
 
Muthukrishnan Ipoh வயதைப் பற்றி நான் கவலைப் படுவதே இல்லை சார்... இன்னும் 20 வருசம் பயணிக்க முடியும் எனும் நம்பிக்கை என்னிடம் உள்ளது சார்... அந்த நம்பிக்கை தான் இன்றும் உடலைத் தளர விடாமல் வைத்து இருக்கிறது...
 
Melur Manoharan "அனுபவங்கள்" தான்
"வாழ்க்கை" என்பதை
அருமையாக

எடுத்துக்கூறினீர்கள்...!
"வாழ்த்துகள்"...!
 
 
Muthukrishnan Ipoh இரு கண்களில் ஒரு கண் பழுது அடைந்தால் ஒரு மாதிரியாகத் தான் இருக்கும்... அதுவும் ஓர் அனுபவமே தம்பி...
 
Arjunan Arjunankannaya கருத்தான கதை.காலை வணக்கம் ஐயா.
 
Sheila Mohan இனிய வணக்கம் சார்..அனுபவமிக்க
குட்டிக் கதை..
அருமைங்க சார்..
 
Muthukrishnan Ipoh நன்றிம்மா... நம்முடைய அனுபவங்கள் தான் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு வழிகாட்டியாக அமைகின்றன...