25 ஜூன் 2016

சூரியகாந்தி

சூரியகாந்தி (Helianthus Annuus) பசுமைக் கொள்கையின் அடையாளம். பூக்களில் தனித்தன்மை வாய்ந்தது. அமெரிக்க நாடுகளில் உருவான மலர். மிகப் பெரிய மஞ்சரியைக் கொண்டது. மஞ்சரி என்றால் பூங்கொத்து. ஆலிவ் எண்ணெயைவிட மலிவாக இருப்பதால் வெண்ணெய் (மார்ஜரின்) மற்றும் பயோடீசல் தயாரிப்புக்கும் பயன்படுகிறது. 


தவிர ஈயம், யுரேனியம் போன்ற நச்சுப் பொருட்களை மண்ணில் இருந்து பிரித்து எடுப்பதற்கும் சூரியகாந்திகளைப் பயன்படுத்துகிறார்கள். உக்ரெய்ன் நாட்டின் தேசியப் பூ சூரியகாந்தி.

எத்தனைப் பூக்கள் இருந்தாலும் சூரியகாந்திப் பூவிற்கு வேறு ஒரு பூ நிகராகுமா. பூக்களுக்கு என்று அழகு ராணிப் போட்டி வைத்தால் சூரியகாந்திக்குத் தான் முதல் பரிசு. கி.மு 2600 ஆண்டுகளுக்கு முன் மெக்சிகோவில் தான் முதன்முதலாகப் பயிரிடப்பட்டது.

காட்டுச் சூரியகாந்தி (Tithonia Diversifolia) என்பது ஜப்பானிய சூரியகாந்தி. ஆங்கிலத்தில் Tree marigold எனும் பெயரும் உண்டு. மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. அங்கிருந்து மற்ற உலகப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப் பட்டது. ஜப்பானில் மிகப் பிரபலம். இந்தியாவின் நீலகிரி மாவட்டத்தில் பயிர் செய்கிறார்கள்.

இதில் பூ என அழைக்கப்படுவது உண்மையில் பெரும் எண்ணிக்கையிலான சிறுபூக்கள் ஆகும். பொதுவாக ஒவ்வொரு சிறு பூவும் 137.5° பாகையில் அடுத்த சிறுபூவை நோக்கி வரிசையான வடிவமைப்பை கொண்டு இருக்கும்.

சூரிய உதயத்தின் போது பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. அன்றைய நாள் நகரும் போது சூரியகாந்திகளின் முகங்களும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் சூரியனைப் பின் தொடருகின்றன. இரவில் அவை மீண்டும் கிழக்குத் திசைக்குத் திரும்புகின்றன. சூரியன் இல்லாத போது அவற்றின் முகங்கள் திரும்புவது பெரிய அதிசயம்.

சூரியகாந்திப் பூங்கொத்தின் சிறுபூக்களின் வடிவமைப்பின் மாதிரியை 1979 ஆம் ஆண்டில் ஹெச். வோஜெல் (H. Vogel) என்பவர் முன்வைத்தார். கணித முனைவு ஆயங்களில் (Fibonacci numbers). r = c square root n ; θ = n X 137.5 என்று தெரிவிக்கப்படுகிறது. இங்கே θ என்பது கோணம். r என்பது ஆரம் அல்லது மையத்திலிருந்து தூரம். n என்பது சிறுபூவின் சுட்டி எண். c என்பது ஓர் அளவீட்டுக் காரணியாகும்.

இது ஒரு கணிதச் சமன்பாடு. இந்தப் பூவைக் கொண்டு தான் *பைபானாச்சி சமன்பாடு* உருவாக்கப்பட்டது. கணித வளர்ச்சியில் தாவரங்கள் எப்படி எல்லாம் உதவிகள் செய்கின்றன. (சான்று: http://wiki.eanswers.com/ta/சூரியகாந்தி)

படித்தேன் ரசித்தேன்

நதியில் விழுந்த இலை போல... திக்கு திசை தெரியாமல் தத்தளித்து... பலச் சோகங்களைக் கண்டு... பல வேதனைகளைக் கண்டு... பல பந்தங்களை எதிர்க் கொண்டு... விழித்துவரும் நிலையில்... அற்புதமான வரிகள். படித்தேன் ரசித்தேன்.

தமிழ்த் தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி...

தனிக் காற்றாடி போலறுந்து வீழ்வதில்லையடி...

அன்பான உறவுதனில் கூடு கட்டி ஆடிடுவேன்...

பண்பான மறுவாழ்க்கை தனைத் தேடிடுவேன்...

பாரதி வார்த்தைகள் தோற்றதில்லையடி...

தோல்வி என்பதும் எனக்கில்லையடி...

ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி...  In the confrontation between the stream and the rock... the stream always wins... not through strength but by perseverance என்று சொல்வார்கள். 

வாழ்க்கையும் அப்படித் தான். பற்பல மேடு பள்ளங்கள்... பற்பல வேதனைகள் பற்பல சோதனைகள்... போராட வேண்டும்... 

ஜெயித்துக் காட்ட வேண்டும். போராடத் தெரியாதவன் மனிதனாகப் பேர் போட முடியாது. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும்.

தோம்... கருவில் இருந்தோம்

தோம்... கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடிக் கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
அப்போது அப்போது போன தூக்கம்
என் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோனலையே...
தண்ணீரில் வாழ்கின்றேன்
நான் கூட மச்சாவதாரம் தான்
(தோம் கருவில் இருந்தோம்...)

அலைகளை அலைகளை பிடித்துக் கொண்டு
கரைகளை அடைந்தவர் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்துக் கொண்டு
சௌக்கியம் அடைவது நியாமில்லை
கவலைக்கு மருந்து இந்த ராஜ திரவம்
கண்ணீர் கூட போதையின் மறு வடிவம்
வலி எது வாழ்க்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவும் இல்லை
கற்பனை வருவது நின்றுவிடும்
கனவுகள் மட்டும் இல்லை என்றால்
கவலைகள் நம் உயிரே தின்று விடும்

ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரைதான்
இரண்டுக்கும் நடுவே ஓடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி தான்
வாழ்கையில் பிடிமானம் வேறு இல்லை
இந்த கிண்ணம் தானே பிடிமானம் வேறு இல்லை
திராட்சை தின்பவன் புத்திசாலியா?
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா?
பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது
மண்ணுக்குள் முடிகிறது
விஷயம் தெரிந்தும் மனித இனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே

தோம்... கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடிக் கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
அப்போது அப்போது போன தூக்கம் என் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோனலையே...