01 மார்ச் 2017

மகாபாரத எலும்புக்கூடு

 பொய்யாக இருந்தாலும் அந்தப் பொய் உவாக்கப்பட்ட பரபரப்பின் மேல் நம் அனைவருக்குமே சற்று அலாதியா ஆர்வம். அண்ல்மையில் ஒரு செய்தி. இணையத்தில் காய்ச்சல் பிடித்து கலாய்க்கும் செய்தி... அப்படிப் பரவிய ர் அதிசயமான பொய்.

ராமாயண மகாபாரத எலும்புக்கூடு என்று ஓர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு செய்தியை உருவாக்கி அதைப் பரவ விட்டு உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.


மகாபாரதத்தில் ஒரு பாத்திரம் கடோத்கஜன். அவனுடைய 40 அடி எலும்புக்கூடு வட இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டது என்று ஒரு செய்தி. கடைசியில் இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ‘தொல்பொருள் ஆராய்ச்சி’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் பிடிக்கப்பட்டவை.

வவை டிஜிட்டல் புகைப்பட ஆர்வலர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியின் போது எடுக்கப்பட்வை. எப்படியோ உண்மை ஒரு வழியாகத் தெரிய வந்தது. இருந்தாலும் மகாபாரத ரசிகர்கள் விடுவதாக இல்லை. ஆப்பிரிக்காவில் கிடைத்த எலும்புக் கூடுகளையும் சீனாவில் 
கிடைத்த எலும்புக் கூடுகளையும்  இணையத்தில் போட்டுத் தாக்குத் தாக்கு என்று தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.



உண்மையில் இது 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி கினோ டி டொமினிசிஸ் (Gino De Dominicis) எனும் இத்தாலிய சிற்பி இத்தாலி மிலான் நகரில் உருவாக்கிய இராட்சச மனித எலும்புக்கூடு. 




இந்த எலும்புக்கூடு ராமாயணம், மகாபாரதம் எதிலும் இல்லை. ஆனால் ராமாயண மகாபாரத எலும்புக்கூடு என்று ஓர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு செய்தியை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து அதைப் பரவ விட்டு உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
(சான்று: https://shewalkssoftly.com/page/227/?pages-list)


காந்தி நடனம்

வேலை வெட்டி இல்லாதவர்கள் அண்ணல் காந்தியையும் விட்டுவைக்கவில்லை. அவரைப் பற்றியும் தவறான படங்களை இணையத்தில் பதிவு செய்கிறார்கள்.

ஆங்கிலப் பெண்ணுடன் காந்தி நடனம் என்ற பெயரில் ஒரு புகைப்படம் பல வருடங்களாக இணையத்தில் பரவி வருகிறது. 
 




ஆனால் உண்மையில் அது ஆஸ்திரேலியா நடிகர் ஒருவர் காந்தியைப் போல வேடமிட்டு ஒரு பார்ட்டியில் நடனமாடும் போது எடுத்த புகைப்படம் ஆகும்.

⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு

1. புதிய திறன்பேசி வாங்கியதும் அல்லது புதிய மின்கலம் வாங்கியதும் முதலில் 8 மணி நேரம் மின்னூட்டம் செய்வது மிக மிக அவசியம். ஒரு மணி அல்லது 2 மணி நேரத்தில் ’Battery Full’ என காட்டினாலும் மின்னேற்றம் (Charge) செய்வதை நிறுத்தாதீர்கள். 8 மணி நேரம் முடிந்த பின்பே மின்னேற்றம் செய்வதை நிறுத்துங்கள்.

2. எப்போது திறன்பேசி "Battery Low" என காட்டுகிறதோ அப்போதுதான் மின்னூட்டம் செய்ய வேண்டும். சற்றுக் குறைந்ததும் உடனே மின்னூட்டம் செய்யக் கூடாது.


3. திறன்பேசியின் மின்கலம் mAh (Milliamp Hours) 1000 க்கும் அதிகமான திறன் உடைய மின்கலமா என சோதித்துப் பார்த்து வாங்குங்கள். ஏனெனில் ஆடியோ, வீடியோ, இணைய வசதி உள்ள திறன்பேசிகளுக்கு mAh 1000 க்கும் அதிகமான திறன் உடைய மின்கலம் தேவை.
                       
4. இரவு நேரங்களில் திறன்பேசியை மின்னேற்றத்தில் இணைத்துவிட்டு காலையில் கழற்றும் வழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் இப்படி மின்னூட்டம் செய்வதால் உங்களுடைய மின்கலம் விரைவில் பருத்துப் பெருத்து... பின்னர் பயன்படாமலேயே போகும்.



5. புளூடூத் (Bluetooth) வசதி, வை-பை (wifi) வசதி மற்றும் இணைய வசதிகள் தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் அடைத்து வைப்பதே சிறந்தது. எப்போதும் திறந்தே வைத்து இருந்தால் மின்கலத்தின் தயாரிப்பு நிலையில் இருந்த ஆற்றல் குறைந்து கொண்டே போகும்.                       

6. அழைப்பு ஒலிக்கு (Ringtone) ஒரு முழு பாட்டையும் வைக்காமல் Cut Songs அல்லது Split Songs எனும் குறுகிய பாடல்களையே அழைப்பு ஒலியாக வைத்தால்... மின்கலத்தின் திறன் அதிகமாகச் செலவழிக்கப் படுவதைத் தவிர்க்கலாம்.


7. திறன்பேசியில் எப்போதும் பாடல்களைப் பாட விடாதீர்கள்.

8. திறன்பேசியின் திரை வெளிச்சத்தைக் குறைத்து வையுங்கள். அனைத்து திறன்பேசிகளிலும் (Power Saver Mode) இருக்கும். அதை முடுக்கி (Activate) விடுங்கள் இதனால் உங்களுடைய மின்கலம் நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடிக்கும்.

9. திறன்பேசியின் முகப்பில் அதிக பிக்ஸ்ல்கள் (Pixels) கொண்ட படங்கள் வேண்டாமே. இதனால் மின்கலத்தின் ஆற்றல் மிக விரைவில் தீர்ந்து விடும்.