24 மே 2017
23 மே 2017
ஜப்பானிய இளவரசி மாகோ
ஜப்பானின் மன்னர் அகிஹிட்டோவின் மூத்த பேத்தி இளவரசி மாகோ. இவருக்கு வயது 25. இவர் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படித்தவருடன் காதல்.
அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தார். இதன் காரணமாக அவர் தன் இளவரசி பட்டத்தைத் தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது.
இளவரசியின் மாகோவின் காதலன் பெயர் கெய் குமுரோ. தோக்கியோவில் உள்ள கல்லூரியில் படிக்கும் போதே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதைப் பற்றி இளவரசியார் தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அரச குடும்பத்தினரும் அவரின் காதலுக்குச் சம்மதம் தெரிவித்து விட்டனர்.
ஆனாலும் ஜப்பானிய அரசக் குடும்ப வழக்கப்படி அரச குடும்பத்துப் பெண்கள் அரச குடும்பத்தினரைத் தான் திருமணம் செய்ய வேண்டும். சாதாரண நபரைத் திருமணம் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அரச பட்டத்தைத் துறக்க வேண்டும். மீறினால் அவரின் அரசப் பட்டம் பறிக்கப்படும்.
அதனால் இளவரசி மாகோ தன் காதலுக்காகத் தன் இளவரசி பட்டத்தைத் துறக்க முடிவு செய்துள்ளார். தன் காதலுக்காக தன் இளவரசி அரசப் பட்டத்தையே துறக்கிறார் என்றால் அவரின் காதலை என்னவென்று சொல்வது.
தற்போது ஜப்பானின் முக்கியச் செய்தி இந்த இளவரசியின் காதல் செய்திதான். வாழ்க அந்த இளவரசியாரின் காதல்.
இளவரசியின் மாகோவின் காதலன் பெயர் கெய் குமுரோ. தோக்கியோவில் உள்ள கல்லூரியில் படிக்கும் போதே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ஆனாலும் ஜப்பானிய அரசக் குடும்ப வழக்கப்படி அரச குடும்பத்துப் பெண்கள் அரச குடும்பத்தினரைத் தான் திருமணம் செய்ய வேண்டும். சாதாரண நபரைத் திருமணம் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அரச பட்டத்தைத் துறக்க வேண்டும். மீறினால் அவரின் அரசப் பட்டம் பறிக்கப்படும்.
தற்போது ஜப்பானின் முக்கியச் செய்தி இந்த இளவரசியின் காதல் செய்திதான். வாழ்க அந்த இளவரசியாரின் காதல்.
22 மே 2017
ரஜினி முதல்வரானால்
'நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் தான் இருக்கு' என அதே பல நூற்றாண்டுக் காலத்து டயலாக்கை மீண்டும் சொல்லிப் பரபரப்பாக்கி உள்ளார் ரஜினி.
தலைவா வா; தலைமை ஏற்க வா, உங்களைத் தான் நம்புது இந்த பூமி; எங்களுக்கு இனி நல்ல வழி காமி' என இவ்வளவு நாள் கை காசு போட்டு போஸ்டர் அடித்து ஆடு, மாடுகளைச் சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள், இப்போதுதான் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார்கள்.
எத்தனை நாளைக்கோ...? சூட்டோடு சூடாக சூப்பர் ஸ்டார் அரசியலில் குதித்து முதலமைச்சரும் ஆகிவிட்டால் என்னென்ன திட்டங்கள் கொண்டு வருவார் என கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டோம்...
*ஒரு பவுன் தங்ககாசு திட்டம்*
அவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது நாம் தானே. அதனால், அந்த ஒரு பவுனை மறுபடியும் அவரவர் அக்கவுன்ட்டுக்கே போட்டுவிடும் திட்டத்துக்குப் பெயர் தான் `ஒரு பவுன் தங்கக்காசு திட்டம்'. இது அந்த 15 லட்ச ரூபாய் மாதிரி எப்ப வரும்? எப்படி வரும்?னு பயப்பட தேவையில்லை. வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடும்.
*அண்டா சட்டி' அருணாச்சலம் திட்டம்*
'அருணாச்சலம்' படத்தின் `அதான்டா இதான்டா அருணாச்சலம் நாந்தான்டா...' பாடலில் அண்டாவை கவிழ்த்தி கறுப்பு பெயின்ட் அடித்திருப்பார்கள் அல்லவா. அது போன்ற ஒரு பல்வகைப் பயன் அண்டா ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும்.
*மீசை வெச்ச குழந்தையப்பா திட்டம்*
பெற்றோர்கள் பேச்சைக் கேட்டு பொறியியல் படித்து, வேலை கிடைக்காமல் அதே பெற்றோர்களிடம் தண்டச் சோறு என திட்டு வாங்கி கொண்டிருக்கும் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான திட்டம் இது. அத்தகைய வி.ஐ.பி-க்களின் சோகமான சூழலைக் கருத்தில் கொண்டு இந்த அரசு அவர்களை மீசை வெச்ச குழந்தைகளாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளும். இந்தச் சமூகத்தில் கைக்குழந்தைகள் அனுபவிக்கும் அத்தனைச் சலுகைகளையும் இவர்கள் அனுபவிக்கவும் அனுமதி அளிக்கப்படும்.
*அலுவலக அறைத் திட்டம்*
காவல் நிலையம் இல்லாத ஊர்களில் எல்லாம் குட்டிக் குட்டியாக 'ஆபிஸ் அறைகள் அமைக்கப்படும். ஊருக்குள் அடாவடி செய்யும் ரவுடிகள் அந்த அறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரி பிரி என பிரித்து அனுப்பப் படுவார்கள். இதற்காக, `பாட்ஷா' படத்தில் வரும் பஞ்சாப் சிங்கைப் போல் பஞ்சாபில் இருந்து பயில்வான்கள் இறக்குமதி செய்யப் படுவார்கள்.
*தனி வழி திட்டம்*
தமிழகத்துக்குள் புதுச்சாலைகள் பல ஏற்படுத்தப்படும். மதுரையில் இருந்து சென்னைச் செல்வதற்குத் திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் வழியாகச் சாலைகள் அமைக்கப்படும். தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்ல ராமநாதபுரம், விருதுநகர் வழியாகச் சாலைகள் அமைக்கப்படும்.
நன்றி: ஆனந்த விகடன்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




