25 ஜூன் 2017

சோனியா காந்தி உணவு விடுதியில் வேலை

1965ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரத்தில் ஒரு மொழிக் கல்லூரியில் சோனியா காந்தி படிக்கும் போது வீட்டில் பணப் பிரச்சினை. அதனால் பல்கலைக்கழக உணவு விடுதியில் பணியாளர் வேலை செய்து வந்தார். 



அந்த உணவு விடுதியில் வேலை செய்யும் போது தான் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். அப்போது சோனியா காந்திக்கு வயது 18.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சோனியா காந்தி பட்டம் படிக்கவில்லை. படித்ததாகப் பொய் சொல்லி இருக்கிறார். 

அதைக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமே உறுதிபடுத்தி விட்டது. உயர்நிலைப்பள்ளி வரை தான் படித்தவர். 1968ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம். 


ஆனால் ராஜிவ் காந்தி ஒரு பொறியியலாளர். 1973ஆம் ஆண்டே சோனியா காந்தி இந்தியப் பிரஜை ஆகி இருக்கலாம். 

இருந்தாலும் அவர் இத்தாலியக் குடியுரிமையுடன் தான் வாழ ஆசைப் பட்டார். இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

சான்று: http://thevoiceofnation.com/politics/sonia-gandhi-bar-waitress-italy-bharat-ki-bahu/

வாட்ஸ் அப் தடை செய்த நாடுகள்

உலகில் சில நாடுகளில் வாட்ஸ் அப் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப் படுகின்றன. அரசியல் காரணங்களே முக்கியமானவை. 


எந்த நாட்டில் அரசியல் தலைவர்களைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் அதிகமாக விமர்சனங்கள் செய்யப் படுகின்றனவோ அங்கே எல்லாம் பல ஆயிரம் பயனர்களின் வாட்ஸ் அப் தடை செய்யப் படுகின்றன.

மலேசியாவில் வாட்ஸ் அப் தடை செய்யப்படும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன. முடிந்த வரையில் அரசு சார்ந்த அவதூறுகள், வதந்திகளைப் பதிவு செய்வதைத் தவிர்க்கவும். உண்மையான செய்திகளாக இருந்தால் பதிவு செய்யலாம்.

ஆனால் ஒரு தலைவரைப் பற்றி கிண்டல் கேலியான நையாண்டியான பதிவுகள்; அவரைப் பற்றிய அவதூறான நக்கலான செய்திகள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு தடவை உங்கள் வாட்ஸ் அப் தடை செய்யப் பட்டால் அதன் பின்னர் உங்கள் வாட்ஸ் அப் ஒரு நிரந்தரத் தடையாகி விடும். 



கைப்பேசி எண்களை மாற்றி விட்டால் தப்பிக்கலாமே என்று நினைக்க வேண்டாம். அந்த எண்கள் உங்கள் பெயரில் தானே பதிவு செய்யப் படுகிறது. 

 மனைவி பிள்ளைகளின் கைப்பேசிகளைப் பயன்படுத்தினால் அந்த எண்களின் வாட்ஸ் அப் கணக்கும் தடை செய்யப்படும்.

அந்தத் தடை வரிசையில் மலேசியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. 38 விழுக்காட்டுப் பயனர்களின் வாட்ஸ் அப் இயக்கம் தடை செய்யப்பட்டு உள்ளது. 

இது 2017 ஜூன் மாதத் தகவல். தென்னப்பிரிக்காவில் வாட்ஸ் அப் பயன்படுத்தவே முடியாது.

1. South Africa - 100%
2. Singapore - 96%
3. United Arab Emirates - 86%
4. United Kingdom - 55%
5. India - 50%
6. Pakistan - 39%
7. Malaysia - 38%
8. Canada - 13%
9. Australia - 11%
10. United States - 5%

சான்று:
http://unblockwhatsapp.online/2016/11/22/top-countries-where-whatsapp-is-blocked/

12 ஜூன் 2017

மலாயா ஒரு தமிழ்ச்சொல்

மலாயா எனும் பெயர் எப்படி தோன்றி இருக்கலாம் என்பதை வரலாற்றுச் ான்றுகின் வியாகப் பார்க்கப் போகிறோம். வரலாற்றுப் படிவங்களில் இருந்து சான்றுகள் தொகுக்கப் படுகின்றன. 

மலாக்கா பேரரசு தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னாலேயே மலாயா எனும் பெயர் வரலாற்றில் தடம் பதித்து விட்டது. 

இந்து சமயத்தில் 18 முக்கியமான புராணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று வாயு புராணம். மகாபாரத்தின் எழுத்துச் சுவடிகளில் அந்த வாயு புராணம் எழுதப்பட்டு இருக்கிறது. வாயுபுராணம் 24,000 சுலோகங்களைக் கொண்டது.

அந்த வாயு புராணத்தில் மலாயாத் தீபம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது (Malayadvipa). மலாயாத் தீபம் என்றால் மலைகள் சார்ந்த பெருநிலம் என்று பொருள். 



(முதல் சான்று: Pande, Govind Chandra (2005). India's Interaction with Southeast Asia, Vol. 1, Part 3. பக்கம். 266.) 


(இரண்டாம் சான்று: Mukerjee, Radhakamal (1984). The culture and art of India. பக்கம். 212. 


(மூன்றாம் சான்று: Sarkar, Himansu Bhusan (1970). Some contributions of India to the ancient civilisation of Indonesia and Malaysia. பக்கம். 8.)

அடுத்து பிரகதீஸ்வரர் கோயில் எனப்படும் தஞ்சைப் பெரிய கோயிலின் தென் சுவரில் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில் மலாயாவை மலையூர் (Malaiur) என்று செதுக்கி இருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் செதுக்கப்பட்ட கல்வெட்டு. 



(முதல் சான்று: Langer, William Leonard (1973). An Encyclopedia of World History: Ancient, Medieval, and Modern, Chronologically Arranged. பக்கம். 362.) 



(இரண்டாம் சான்று: Satchidananda Murthy; S., Sankaranarayanan (2002). Life, thought, and culture in India, c. AD 300-1000. பக்கம். 121.)

அடுத்து கி.பி. 100ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பெத்தோலமி (Claudius Ptolemy). இவர் ஓர் அறிவியலாளர். உலகம் பார்த்த மாபெரும் கிரேக்க அறிஞர். ஒரு கணித மேதை. ஒரு வானியல் வல்லுநர். ஒரு புவியியலார். ஒரு சோதிடர்.

இவர் எழுதிய தங்கத் தீபகற்பம் எனும் நூலில் மலாயாவை மலாயு கோலன் (Maleu-kolon) என்று எழுதி இருக்கிறார்.

மலாயு கோலன் எனும் சொல் மலாயா கோளம் (malayakolam) அல்லது மலாய்க்கூரம் (malaikurram) எனும் சமஸ்கிருதச் சொற்களில் இருந்து மருவி வந்தச் சொற்களாகும்.

மலாயா எனும் சொல் மலை எனும் சொல்லில் இருந்து உருவானதால் மலைக் கோளம் என்பது தான் மலாயா கோளம் என்று மாறி இருக்கலாம். இது என்னுடைய கருத்து. 




(சான்று: Gerini, Gerolamo Emilio (1974). Researches on Ptolemy's geography of eastern Asia (further India and Indo-Malay archipelago. பக்கம். 101.)
 

கோளம், கூரம் எனும் இரு சொற்களுமே சமஸ்கிருதச் சொற்களாகும். கோளம் என்பது ஒரு பெயர்ச் சொல். இங்கே முப்பரிமாண வடிவம் எனும் பொருள் கொண்டது.

அடுத்து சீனாவின் யுவான் அரசப் பரம்பரையின் காலவரிசை வரலாறு. அதில் மலாயாவை மலையூர் (Ma-li-yu-er) என்று சொல்லி இருக்கிறார்கள். 




(முதலாம் சான்று: http://www.guoxue.com/shibu/24shi/yuanshi/yuas_210.htm). 



(இரண்டாம் சான்று: Hall, Daniel George Edward (1981). History of South East Asia. பக்கம் 190.)

அடுத்து வருபவர் மார்க்கோ போலோ. உலக வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். கி.பி. 1570களில் கால் நடையாகவே ஆசிய நாடுகளைச் சுற்றி வந்தவர். அவர் எழுதிய பயண நூலில் மலையூர் (Malauir) எனும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்.

யுவான் அரசப் பரம்பரையின் காலவரிசை வரலாற்றில் பயன்படுத்தப்பட்ட அதே சொல்லைத் தான் மார்க்கோ போலோவும் பயன்படுத்தி இருக்கிறார். அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். 




(முதலாம் சான்று: Cordier, Henri (2009). Ser Marco Polo. பக்கம். 105.) 



(இரண்டாம் சான்று: Wright, Thomas (2004). The travels of Marco Polo, the Venetian. பக்கங்கள். 364–365.)

ஆக மலாயா எனும் சொல் மலை எனும் தமிழ்ச் சொல்லில் இருந்து உருவானது என்பதைச் சான்றுகளுடன் முன்வைக்கிறேன். மலாயா என்பது ஒரு தமிழ்ச்சொல். தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கு மருவியச் சொல்.

அந்த வகையில் மலாயா எனும் சொல் மலை + ஆயம் எனும் தமிழ்ச் சொற்களில் இருந்து உருவான ஒரு கூட்டுச்சொல் என்று பாரபட்சம் இல்லாமல் சொல்லலாம். 


மலை என்றால் ஆயிரம் அடிகளுக்கும் மேலே உயர்வாக நிற்கும் ஒரு நில அமைப்பு. ஆயம் என்றால் கூட்டம் அல்லது திரள்.

இதற்கு உள்நாட்டு வரலாற்று அறிஞர்கள் என்ன சொல்லப் போகிறார்கள். அங்கோர் வாட், பொரபுடுர், பூஜாங் பூர்வீகம் போன்றவை எல்லாம் அவர்களின் பூர்வீகச் சொத்து என்று பரப்புரை செய்ின்றர். 


ிரச்சினை இல்லை. இரந்தாலும் இந்த வரலாற்றுச் சான்றுகள் அவர்குக்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்ும் என்று நம்ாம். அுவே இந்த ஆய்வாளின் பிவான ிர்பார்ப்ப. நன்றி.

(ஆய்வு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)