23 பிப்ரவரி 2017

இடைக்காலம்

இடைக்காலம் என்பது ஒரு பெயர்ச் சொல். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், முற்காலம், பிற்காலம், தற்காலம், இடைக்காலம், குளிர் காலம், கோடைக் காலம், மழைக் காலம், வேனில் காலம், பனிக் காலம், சாயுங்காலம், பேறுகாலம் இப்படி நிறைய காலங்கள் உள்ளன.

சாயங்காலம் அல்ல சாயுங்காலம். அதாவது சூரியன் சாயும் காலம். பலர் சாயங்காலம் என்று சொல்கிறார்கள். அது தவறு. சாயுங்காலம் என்பதே சரி.

சட்டம் நடைமுறைக்கு வருவதில் இடைப்பட்ட காலம் என்று ஒரு காலம் வரும். அதுவும் ஓர் இடைக்காலம் தான். இடைமாறுபாட்டுக் காலத்தையும் இடைக் காலம் என்றும் சொல்லலாம். பணியேற்பு இடைக்காலம், வரலாற்று இடைக்காலம்... இவற்றையும் இடைக்காலப் பட்டியலில் சேர்க்கலாம்.

தற்காலிகம் என்பதும் ஒரு பெயர்ச் சொல். அதன் பொருள் நிலையற்றது அல்லது நிரந்தரம் இல்லாதது. ஆக தற்காலிகம் என்பது நிரந்தரம் இல்லாததைக் குறிப்பிடுகின்றது.

வாட்ஸ்அப் நிகழ்நிலை

சமூகவலைத் தளங்களில் முன்னணியாகத் திகழ்வது வாட்ஸ் அப். வியாழக் கிழமை 24 ஆம் திகதி வாட்ஸ் அப் தனது 8 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அந்த மகிழ்ச்சியில் புதிய ஓர் இற்றையம் (update) வெளிவருகிறது. அதாவது நிகழ்நிலை (status) இடத்தில் ஒரு புதிய இற்றையத்தைக் கொண்டு வருகிறார்கள். 


அதன் மூலம் புகைப்படம் அல்லது வீடியோ போன்றவற்றை வாட்ஸ் அப் நிகழ்நிலையாக வைக்க முடியும். தற்சமயம் வாட்ஸ் அப் நிகழ்நிலையாக (status) எழுத்துகளை மட்டுமே பதிப்பு செய்ய முடியும்.

எ.கா: இப்போது என்னுடைய வாட்ஸ் அப் புலனத்தில் வணக்கம் எனும் எழுத்துகள் மட்டுமே வாட்ஸ் அப் நிகழ்நிலையாக இருக்கிறது. பார்க்கும் போது எழுத்துகள் மட்டுமே தெரியும். சரிங்களா.

புதிய இற்றையத்தின் வழியாக அந்த நிகழ்நிலையை ஒரு படமாக மாற்றிக் கொள்ளலாம். அல்லது ஒரு காணொளியாகவும் மாற்றி கொள்ளலாம். அவசரப்பட வேண்டாம். இன்னும் ஒரு விசயம் இருக்கிறது.

இந்த மாற்றங்களை முதலில் ஐரோப்பாவில் அறிமுகம் செய்கிறார்கள். பின்னர் தான் உலகம் முழுமைக்கும் கொண்டு வருவார்கள். அப்புறம் என்ன. ஆளாளுக்குத் தங்களின் நிகழ்நிலைகளில் காணொளிகளைப் படங்களாகப் போட்டு ஒரு வழி பண்ணப் போகிறார்கள்.

19 பிப்ரவரி 2017

தமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு






தமிழ் தாத்தா தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் சென்னையில் வாழ்ந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. தமிழகம் முழுவதும் சிதறிக் கிடந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களைத் தேடி எடுத்து பதிப்பித்த பெருமைக்குரியவர் தமிழ் தாத்தா உ.வே.சா.

அழிந்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும், மூவாயிரத்துக்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் கால்நடையாக ஊர் ஊராக அலைந்து சேகரித்து ஆவணப் படுத்தினார்.




1903ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக் கேணியில் 20 ரூபாய் வாடகையில் ஒரு வீட்டில் வசித்தார். அந்த வீட்டையே பின்னர் விலைக்கு வாங்கி தனது ஆசிரியர் நினைவாக வீட்டுக்கு ‘தியாகராச விலாசம்' என்று பெயர் வைத்தார். 


திருவல்லிக் கேணியில் உ.வே.சா வசித்த வீடு அவரது உறவினர்களின் பராமரிப்பில் இருந்தது. பின்னர் இந்த வீடு விற்பனை செய்யப் பட்டது.

கடந்த 2012 செப்டம்பரில் வீட்டின் உள்பகுதி இடிக்கப் பட்டது. அதற்கு பத்திரிகைகள், தமிழறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

கட்டிட இடிப்புப் பணி தடைபட்டது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள் அழிந்து விடாமல் அவற்றைத் தொகுத்து அச்சிட்டு நூல்களாக்கிய உ.வே.சா. சென்னையில் வாழ்ந்த வீட்டை தமிழக அரசு அவரது நினைவு இல்லமாகப் பராமரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழறிஞர்கள் பலரும் முன்வைத்தனர். 

இருந்தாலும் அண்மையில் அந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. இதனால் தமிழறிஞர்களும், அரசியல் தலைவர்களும் வருத்தமடைந்து உள்ளனர். உ.வே.சாமிநாத ஐயரின் பங்கு இல்லாமல் புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் காப்பியங்கள் நமக்குக் கிடைத்து இருக்காது. 

பேருந்து, ரயில் போக்குவரத்து வளர்ச்சி பெறாத காலத்தில் ஊர் ஊராக நடந்து சென்று தமிழ் நூல்களை திரட்டித் தொகுத்தவர் உ.வே.சா.

இருந்தாலும் 2014 டிசம்பரில்... தமிழ் அன்னைக்குப் பூச்சரம் கட்டிய உ.வே.சாமிநாத ஐயரின் வீடு இடிக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை. தமிழகமா தமிழைக் காக்கப் போகிறது.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார் 

 
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) -கேளுங்கள்



 

ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் 
இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
எல்லா உயிரையும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே (2) -கேளுங்கள்

ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே  (2)
பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே
இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே  (2)
இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -கேளுங்கள்

தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா  சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின்
எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு
ஒன்றாக பதிந்து விட்டார்
அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு
ஆண்டவன் தொண்டு என்றார்

முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான்  என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே
துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே (2)
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே
முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே.

ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே (2)
சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே -கேளுங்கள்

18 பிப்ரவரி 2017

இறைவனிடம் கையேந்துங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
 



இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்

ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்