27 ஆகஸ்ட் 2019

ஓம்ஸ் தியாகராஜன் சீற்றம்


இந்த நாட்டில் இருக்கின்ற இந்தியர்களைக் கிள்ளுக் கீரையாகக் கருதி ஜாதி அடிப்படையிலான மோசமான வார்த்தையைப் பேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு தாம் கண்டனம் தெரிவிப்பதாகச் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.



இந்த நாட்டின் வளப்பத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்தியச் சமூகத்தினரின் பங்களிப்பு என்ன என்பதை மற்ற தலைவர்களைக் காட்டிலும் இரண்டாவது முறையாக பிரதமராக வீற்று இருக்கும் துன் மகாதீருக்கு தெரிந்து இருக்கும்.

இருந்த போதிலும் எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் சகட்டு மேனிக்கு ’கெலிங், பறையா போன்ற வார்த்தைகளை உபயோகிப்பது இந்திய சமூகத்தின் உணர்வுகளை அவர் இழிவு படுத்துவதற்கு சமமாகும்.

இந்த விவகாரம் இப்போது பூதாகரமாகிவிட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் அவர் ’சோரி (SORRY) என்று அறிக்கை விடுவார். இந்தியர்களை எப்படி வேண்டுமானாலும் வெளுத்து வாங்கலாம், அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் வகையில் எந்த வார்த்தையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

ஆனால் முடிவில் மன்னிப்பு என்ற ஒருவார்த்தையை மட்டும் சொல்லி தப்பித்துக் கொள்ளலாம். எல்லாம் மறக்கப்பட்டு விடும் என்று மகாதீர் போன்றவர்கள் நினைத்து வருகின்றனர்.

இங்குள்ள தலைவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து சத்தம் இல்லாமல் நம் நாட்டுக்குள் புகுந்து இங்கு உள்ளவர்களின் கண்களில் விரல் விட்டு ஆட்டி குழப்பத்தை உண்டாக்கி முடிவில் ’மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில் தப்பித்துக் கொள்கின்றனர்.




இப்படி இன்னும் எத்தனை ’சோரிகளை நம் இந்திய சமுதாயம் ஏற்கும்.? எல்லாவற்றையும் மன்னிப்போம் மறப்போம் என்பது நாம் வாங்கி வந்த வரமா? இந்தியர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

எது அவர்களைக் காயப்படுத்துமோ அதை முற்றாக ஒடுக்க என்பதை பிரதமர் முதலில் உணர வேண்டும். எதைப் பேசினாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துப் பேச வேண்டும். 



அதை விடுத்து பேசி விட்டு ஒப்புக்காக ’சோரி என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டால் இனியும் இந்திய சமூகம் பொறுத்துக் கொண்டிருக்காது என்று ஓம்ஸ் தியாகராஜன் நினைவுறுத்தினார்.


  பேஸ்புக் ஊடகத்தில் அன்பர்களின் பதிவுகள்


M R Tanasegaran Rengasamy கிருஸ்துவ, பௌத்த, சீக்கிய மற்றும் இந்து சமயங்களின் கூட்டமைப்பு இப்பிரச்னைக்கு தீர்வு காண முயல வேண்டும். நாம் வாளா இருப்பதும் நமக்கு நாமே முட்டிக் கொள்வதும் நம் எதிர்காலத்துக்கு நல்லதன்று. ஆவன நடவடிக்கைகளில் இறங்குங்கள். இப்படியே விட்டால் நம்மை வருகின்ற போகின்றவர்களெல்லாம் சீண்டிப் பார்ப்பார்கள்.


Mbs Maniyam ஐயா நீங்களெல்லாம் சேர்ந்துதானே அவனை உட்காரவட்ச்சீங்க, இப்ப என்ன குத்துது குடையுதென்று!


Nedumaran Vengu Kayalvili Manian தங்கள் மீது நான் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது


Arojunan Veloo மானம் காக்கும் தலைவரே....!
கேளுங்கள்...கேளுங்கள்....!
நீதி கேளுங்கள்.....!
உரக்கக் கேளுங்கள்....!
தமிழர்களின் உரிமையை
நிலைநாட்டுங்கள்....!
நாம் இந்நாட்டுக்கு
அன்னியர் இல்லை....!
நாம் இந்நாட்டின்
மண்ணின் மைந்தர்கள்.....!



Sri Sai Morgan துன் அவர்கள் பதவி விளக்குவதே மிக சிறப்பு .


Doraisamy Lakshamanan தங்களைப் போன்ற தகுதி வாய்ந்தவர்கள் ஒன்றிணைந்து தெரிவித்தால்தான் அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்களின் ஆழ்மனத்தில் சென்று பயன்தரும்!

Muthukrishnan Ipoh ஒரு சொல் எப்படிப்பட்ட பின்விளைவுகளை உண்டாக்கும் என்பதை அவர் முன்கூட்டியே உணர்ந்து இருக்க வேண்டும்... 

அரசியலில் வாரிசை ஒரு பெரிய இடத்தில் வைத்தால் சரி... மூத்த தலைவரின் தூர நோக்கு...

அமேசான் காடுகளில் நெருப்புகள்... காடுகளை அழித்து மாடுகளை வளர்த்து விடுங்கள்... புதிய நாட்டை உருவாக்குங்கள் என்பது அந்த நாட்டின் புதிய வலதுசாரி அதிபரின் கொள்கை... இங்கேயும் ஒரு மகா தீ. மலேசிய இந்தியர்களை இழிவு படுத்தும் தீச்சுடர்... இரு நாடுகளில் இரு வேறுபாட்டு அரசியல் நகர்வுகள்.... பார்ப்போமே...

 
Manickam Nadeson மூளை இல்லாதவர்கள் இப்படித் தான் கருத்து சொல்லுவார்கள்.

வனஜா விண்வெளி வீராங்கனை - 2

விண்வெளிப் பயணத்திற்குத் தேர்வு செய்யப் படும் ஒருவரின் மனவலிமை, உடல் வலிமை என அனைத்து வலிமைகளும் தரம் பிரித்துப் பார்க்கப் படும். அவரால் நீண்ட நேரம் சுவாசிக்காமல் இருக்க முடியுமா. காற்று அழுத்தம் இல்லாத சூழ்நிலையில் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியுமா என்று பலவிதமான சோதனைகளையும் செய்து பார்ப்பார்கள். 


விண்வெளியில் மிதக்கும் போது ஒருவரின் உடல்வாகு பொருத்தமாக அமையுமா; உடல் திறன் சரியாக அமையுமா எனும் பற்பல தேர்வுகளிலும் வனஜா தேர்வு பெற்றார். இங்கே இன்னும் ஒரு முக்கியமான விசயம்.

பெண்களுக்கு இயற்கையிலேயே சிற்சில உபாதைகள் இருக்கும். தெரிந்த விசயம். அப்படிப்பட்ட அந்தச் சங்கடங்களையும் கடந்து வர வேண்டும். அதைப் பற்றி அவரே சொல்லி இருக்கிறார்.

தொடர்ந்தால் போல அடுக்கடுக்கான பயிற்சிகள். முதலில் மெது பயிற்சிகள். கடைசியில் கடினமான பயிற்சிகளில் போய் நிற்கும். அந்தப் பயிற்சிகள் அனைத்துமே உடல் சோர்வைக் கொடுக்கும் பயிற்சிகள். மன உளைச்சலைத் கொடுக்கும் பயிற்சிகள். இடையில் தூக்கத்திற்கு இடையூறு செய்யும் பயிற்சிகளும் அடுக்கடுக்காய் இருக்கும். 



உடல் அசதியில் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் போது விடியல் காலை மூன்று, நான்கு மணிக்கு வந்து எழுப்புவார்கள். ஒரு மணி நேரத்திற்கு மெது ஓட்டப் பயிற்சிகள். அப்புறம் அதன் பிறகு குளிர் நீரில் நீச்சல் பயிற்சிகள். ரஷ்யா ஒரு குளிர்ப் பிரதேசம். அங்கே குளிர் எப்படி இருக்கும் என்று சொல்லவே வேண்டாம்.

இத்தனைச் சோதனைகள் நடக்கும் போது ஒரு மருத்துவர் குழு அருகிலேயே இருக்கும். ஒருவரால் தாக்குப் பிடிக்க முடியுமா முடியாதா என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள். ஏமாற்று வேலைகள் எதுவும் அங்கே நடக்க வாய்ப்பே இல்லை. இடுப்பு வலிக்குது; நெஞ்சு வலிக்குது என்று எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக முடியாது. நோ சான்ஸ்.

1997-ஆம் ஆண்டு மிஸ்டர் நைஸ் கை (Mr. Nice Guy) எனும் ஒரு சீனத் திரைப்படம். அதில் ஜேக்கி சான் கதாநாயகனாக நடித்து இருப்பார். அந்தப் படத்தில் வருவது போல ஏமாற்று டிமிக்கி வேலைகள் எதையும் செய்ய வாய்ப்புகள் இல்லை.



மலைக்காட்டு இருட்டில் பல மணி நேரம் தனிமையில் இருக்க வேண்டும். அடித்துப் போட்ட தனிமையில் தாக்குப் பிடிக்க முடியுமா என்பதையும் சோதித்துப் பார்ப்பார்கள்.

பயங்கரமான காட்டில் தனிமையாக இருக்கும் போது உயிரே போகும் பயம் ஏற்படும். தெரியும் தானே. இருந்தாலும் இவர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏன் என்றால் பயிற்சியாளர்களுக்குத் தெரியாமல் அவர்களைச் சுற்றிலும் கமாண்டோக்கள் மறைந்தவாறு இருப்பார்கள். பயிற்சியாளர்களின் உயிருக்கு ஆபத்து என்றால் உடனே உதவிக்கு வந்து விடுவார்கள்.

வனஜா ஒரு பெண் என்பதால் அவருக்குத் தனிச் சலுகை என்பது எல்லாம் இல்லை. ஓர் ஆண் என்ன பயிற்சிகள் செய்கிறாரோ அவற்றையே வனஜாவும் செய்ய வேண்டும். பொதுவாகவே விண்வெளி பயிற்சிகளிலும் சரி; சோதனைகளிலும் சரி; ஆண் பெண் பாகுபாடு இருக்காது. பாகுபாடு பார்க்க மாட்டார்கள். செய் அல்லது செத்து மடி என்பார்களே. அந்த மாதிரி தான்.



விண்கலம் பயணமாகும் இறுதி நாள் வரை வனஜா அங்கேயே இருந்து இருக்கிறார். யூரி ககாரின் விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் பாய்ச்சப் பட்டது.

இருப்பினும் வனஜாவின் உடல்நலம் காரணம் காட்டப்பட்டு அவர் தேர்வு பெறாமல் போனார். விண்வெளி மையம் எடுத்த முடிவு. அதில் நாம் கருத்து சொல்ல முடியாது.

பயிற்சிக் காலத்தில் வனஜா நன்றாகவும் சிறப்பாகவும் விளங்கினார் என்று சர்டிபிகேட் கிடைத்து இருக்கிறது. தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்கள். அவை இரகசிய ஆவணங்கள். பொதுவில் விவரங்களை வெளியிட முடியாது.

(Dr Sheikh Muszaphar Shukor was the chosen one, with Dr Faiz Khaleed as the back-up in case Dr Sheikh cannot make it at the last moment.)

ஆகக் கடைசியாக ஷேயிக் முஸ்தாபா சுக்கோர் எனும் மருத்துவர் தேர்வு பெற்றார். எட்டு நாட்களுக்கு விண்வெளியில் தங்கி இருந்தார். 402 கி.மீ. உயரத்தில் பூமியை 20 முறை சுற்றிச் சுற்றி வலம் வந்து சாதனை படைத்து இருக்கிறார். 



இவரும் விண்வெளிக்குப் போய் வந்து விட்டார். பின்னர் அனைத்துலக கருத்தரங்குகளில் சொற்பொழிவுகள் நடத்தினார். தவறான முறையில் பணம் சம்பாதித்தார் என இவர் மீது புகார்கள் வந்தன. பேசியதற்கு ஊதியம் கொடுத்தார்கள் என்று டாக்டர் முஸ்தாபா சொல்கிறார். அது வேறு கதை. இப்போது வணிக மையம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

வனஜாவும் சும்மா இல்லை. இவரும் பல உள்ளூர் வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொள்கிறார். மலேசிய விண்வெளி துறையில் ஒரு முன்னோடியாகவும் விளங்கி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சபா மாநிலத்தின் கோத்தா கினபாலுவில் ஒரு நிகழ்ச்சி. 110 கி.மீ. காட்டுக்குள் இருக்குள் இருக்கும் லாவாஸ் பெண்கள் இடைநிலைப் பள்ளியில் விழிப்புணர்வு சொற்பொழிவு. குழுமி இருந்த ஆயிரம் மாணவிகளும் அவர் பேச்சைக் கேட்டது குறைவு. அவரைப் பற்றியே கேள்விகள் கேட்டதுதான் அதிகம்.

விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியப் பெண்மணி எனும் பெருமை இவருக்கு கிடைத்து இருக்கிறது என்பது ஒரு பெரிய விசயம். 



பத்துப் பதினோராயிரம் பேரில் இந்தப் பெண் முதலாவதாக வந்து இருக்கிறாரே. அதுவரை மகிழ்ச்சி அடைவோம். மலேசியா வாழ் இளைஞர்களுக்கு இவர் ஓர் உந்து சக்தியாக விளங்கி வருகிறார். பாராட்டுவோம்.

இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைக் கொஞ்சம் பார்ப்போம். இவர் சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் கிள்ளான் நகரில் 1971 மார்ச் 2-ஆம் தேதி பிறந்தவர். வானத்தில் மிளிரும் விண்மீன்களைப் பார்த்துக் கொண்டே இருப்பாராம்.

பத்து வயதில் இருந்தே விண்மீன் தேடல்கள் ஆரம்பித்து விட்டன. அந்த விண்மீன்கள்தான் இவருக்கு வானவியல் துறையில் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தி இருக்கின்றன.

விண்மீன்களைப் பற்றி நிறைய நூல்களைப் படித்தார். அவருக்கு உதவியாக அவருடைய தந்தை சிவ சுப்பிரமணியம் வானவியல் நூல்களை வாங்கிக் கொடுத்து இருக்கிறார். படிக்கச் சொல்லி உற்சாகப் படுத்தி இருக்கிறார். 



தந்தையின் வேலை மாற்றம். அதன் காரணமாக கெடா, கூலிம் நகருக்குச் சென்றார். அங்கே சுல்தான் பாட்லிஷா இடைநிலைப் பள்ளியில் படித்தார். எஸ்.பி.எம். தேர்வில் ஒன்பது ‘ஏ’ க்கள் பெற்று சாதனையும் செய்தார். அறிவியல் பாடங்கள் அனைத்திலும் முதல் நிலைத் தகுதி.

மலேசிய விமான நிறுவனத்தில் விமானியாக வேலை செய்ய ஆசைப்பட்டு கடிதம் எழுதிப் போட்டார். நேர்முகத் தேர்வுக்கும் சென்றார். ஆனால் பதில் கடிதம் இன்னும் இதுவரையில் வரவில்லை. தப்பு. வந்து சேரவில்லை.

பாவம் அவர். காத்துக் காத்து கண்களும் பூத்துவிட்டன. வனஜாவுக்கும் திருமணமாகி விட்டது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும் ஆகிவிட்டார். இன்னும் பதில் கிடைக்கவில்லையாம். என்ன செய்வது.

ஒருக்கால் பாட்டி ஆன பிறகு அவருடைய பேரன் பேத்திகளிடம் பதில் கடிதம் வந்து கிடைக்கலாம். சொல்ல முடியாது. எதற்கும் இன்னும் ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு வனஜா காத்து இருந்தால் நல்லது. கண்டிப்பாகப் பதில் வரும்.

பொறுத்து இருங்கள் வனஜா! பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் ‘சைன்’ வைக்க வேண்டும் இல்லையா. அதனால்தான் இவ்வளவு ‘லேட்’.



அண்மையில் படித்த ஒரு நகைச்சுவையான செய்தி. பத்து வயது பிள்ளைகளுக்கு என்று ஓர் ஓவியப் போட்டியை நடத்தினார்கள். அதில் 70 வயது பாட்டிக்கு முதல் பரிசு. என்னடா அநியாயம் என்று விசாரித்துப் பார்த்தால் கதை வேறு மாதிரியாகப் போகிறது.

பாட்டி அறுபது வருடங்களுக்கு முன்னால் அனுப்பி வைத்த ஓர் ஓவியம், அறுபது வருடங்களுக்கு பிறகு வந்து கிடைத்து இருக்கிறது. வேறுவழி இல்லாமல்  ஏற்பாட்டாளர்கள் பாட்டிக்கு முதல் பரிசைக் கொடுத்து சாதனை செய்து இருக்கிறார்களாம். இது எப்படி இருக்கு என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. எதற்கும் டி.எச்.ராகாவைக் கேட்டுப் பார்க்கிறேன்.

மலாயா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் படிக்கும் போதுகூட வனஜாவின் எண்ணங்களும் சரி; சிந்தனைகளும் சரி; விமானங்களைப் பற்றியே வலம் வந்தன. எதிர்காலத்தில் தான் ஒரு விமானியாக ஆக வேண்டும் என்று வனஜா ஆசைப் பட்டார்.

இந்தக் கட்டத்தில்தான் விண்வெளித் திட்டத்தில் மலேசியாவும் கால் பதித்தது. விண் ஆய்வுத் துறையில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை மலேசியாவும் பின்பற்றி வருகிறது.

வனஜாவின் தந்தை சிவசுப்பிரமணியம் என்ன சொல்கிறார். அதையும் கேளுங்கள். என்னுடைய மகள் விண்வெளிக்குப் போகவில்லை. பரவாயில்லை. ஆனால் விண்வெளிக்குச் செல்வதற்கான எல்லா பயிற்சிகளையும் பெற்று இருக்கிறார். அதுவே பெரிய சாதனை. பெரிய விசயம். தங்களுக்கு மட்டும் அல்ல. மலேசியப் பெண்கள் அனைவருக்குமே பெருமை என்கிறார். இப்போது கூலிம் நகரில் இருக்கிறார்.

சுவீடன் நாட்டில் இருக்கும் சால்மர் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர் வனஜா. தயாரிப்புத் தொழில் துறையில் 18 ஆண்டுகால அனுபவங்கள் உள்ளன. ஒரு தனியார் நிறுவனத்தில் மூத்த பொறியியலாளராகப் பணிபுரிந்தவர்.

இவர் மியாசாட் வான்கோள் நிலையத்தில் பொறியியலாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார். மியாசாட் வான்கோள் நிலையம் மலேசியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமானதாகும்.

வனஜா என்பவர் மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்த ஓர் அறிவுக் கலசம். பூபாளம் இசைக்கும் ஒரு பூமகளாய்த் திகழ்கின்றார். வாழ்த்துகிறோம்!

(முற்றும்)

சான்றுகள்:

1. https://www.youtube.com/watch?v=DsuSTtYdmRc - An Interview with the Malaysian Toughest Woman, Ms Vanajah - Part 1

2. https://tamizharmedia.com/2019/03/27/video-vanajah-subramaniam-who-almost-became-malaysias-first-astronaut/

3. http://drsmshukor.tripod.com/biblio/index.blog?topic_id=1096305

26 ஆகஸ்ட் 2019

வனஜா விண்வெளி வீராங்கனை - 1

மலேசிய இந்தியர்களின் இதய வானில் இசைக்கும் தென்றலாய்... ஜொலிக்கும் வண்ண முகிலாய்... நினைவின் விளிம்புகளில் தளும்பும் எண்ணங்களாய்... கவிதைகளாய்... கதைகளாய்... இன்னும் பல வடிவங்களாய் வலம் வரும் அழகிய வான்முகில். வனத்தின் வதனங்களில் அவர் வண்ண முகில். அழகிய ஒரு தமிழ் மகள். 



ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு. இது சாமானிய மனிதக் கணக்கு. அதே ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் மூன்று. இது அரசியல் சாணக்கியத்தில் வருகின்ற ஒரு பிணக்கு. அதுவே மலேசியத் தமிழர்களின் வரலாறுகளைத் திருப்பிப் போடும் வழக்கு.

அந்த மாதிரியான ஆதிக்க உணர்வுகள் புரையோடிக் கிடந்த காலத்தில் மலேசியத் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த அந்தத் தமிழ் மகளை மனதாரப் பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்.

இந்தியாவுக்கு ஒரு கல்பனா சாவ்லா என்றால் மலேசியாவுக்கு ஒரு வனஜா சிவசுப்பிரமணியம். 




அழகு, அறிவு, ஆற்றல் என்கிற மூன்றையும் ஒன்றாய்ச் சேர்த்து ஆலாபனை செய்யப் படுபவர்கள் மிகவும் குறைவு. சமயங்களில் வனஜா மாதிரி சில அரிதான அறிவு ஜீவிகளும் ஆராதனை செய்யப் படுகிறார்கள். மகிழ்ச்சி.

டாக்டர் வனஜா. இவர் விண்வெளிக்குப் போக தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியப் பெண். முதல் தமிழ்ப் பெண்.

சோயுஸ் வான்கலத்தின் மூலமாக விண்வெளியில் இருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப் படுவதற்காகத் தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியப் பெண் விண்வெளி வீரர். 

இயற்பியல் துறையில் பற்பல ஆய்வுகள் செய்தவர். சுவீடன் நாட்டில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஒரு டாக்டர் பட்டம் அல்ல. இரண்டு டாக்டர் பட்டங்கள். 




மலேசியாவின்  விண்வெளித் திட்டம் 92.9 மில்லியன் ரிங்கிட் செலவில் 2006-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. 2007-ஆம் ஆண்டிற்குள் ஒரு மலேசியரை விண்வெளிக்கு அனுப்பி வைப்பது என மலேசிய விண்வெளி ஆய்வுக் கழகம் தீர்மானித்து இருந்தது.

அங்காசா விண்வெளித் திட்டத்தில் கலந்து கொள்ள 11,275 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். மலேசியர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி வைப்பது என்பது மலேசியா, ரஷ்யா நாடுகளின் ஒரு கூட்டு ஒப்பந்தம் ஆகும்.

விண்ணுக்கு ஒருவரை அனுப்பி வைப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. அதிகம் செலவாகும். இதை எல்லா நாடுகளுமே தெரிந்து வைத்து இருக்கின்றன.

அந்த வகையில் மலேசியா தன் முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்பி வைக்க 100 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்து இருந்தது.

இந்தக் கட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் செய்து கொண்ட ஒரு விண்வெளித் திட்டத்தைச் சொல்ல விரும்புகிறேன். 




1984-ஆம் ஆண்டில் இந்திய-ரஷ்யக் கூட்டு விண்வெளி ஆய்வுத் திட்டம் உருவானது. அதாவது மலேசியாவின் விண்வெளித் திட்டம் உருவாவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அந்த இந்திய-ரஷ்யக் கூட்டு விண்வெளி ஆய்வுத் திட்டம் உருவாகிவிட்டது.

அதில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த ராகேஷ் சர்மா என்பவர் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அதே போல மலேசியாவும் ரஷ்யாவும் 2003-ஆம் ஆண்டில் ஒரு கூட்டு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன.

அதே 2003-ஆம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து சுக்கோய் (SU-30MKM) ரக 18 போர் விமானங்களை வாங்க மலேசியா முடிவு செய்தது. அவற்றின் விலை 3.34 பில்லியன் ரிங்கிட். அதாவது 334 கோடி ரிங்கிட். பெரிய தொகைதான்.

மலேசியாவில் உள்ள அத்தனைப் பேருக்கும் ஆளுக்கு ஆயிரம் வெள்ளி கொடுக்கலாம். அவ்வளவு பெரிய தொகை. சும்மா சொல்லக் கூடாது. எல்லாம் மலேசியர்கள் உழைத்துச் சம்பாதித்துக் கொடுத்த வரிப் பணம்தான்.

மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டத்தை 2003-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் துன் மகாதீர் முகமது தொடக்கி வைத்தார். 




அந்தக் காலக் கட்டத்தில் மலேசியாவின் விமானப் படைக்கு நவீனமான சுக்கோய் SU-30MKM ரக விமானங்கள் தேவைப் பட்டன. இந்தச் சுக்கோய் விமானங்கள் மலேசியாவுக்கு என்று சிறப்பாகச் செய்யப்பட்டவை. MKM என்றால் ரஷ்ய மொழியில் Modernizirovannyi Kommercheskiy Malaysia.

இந்த விமானம் மணிக்கு 2500 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியது. மூவாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் எதிரியைத் தாக்கிவிட்டு ஒன்றரை மணி நேரத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்துவிடும். இடையில் எண்ணெய் பிடிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

ஹிரோசிமா நாகாசாக்கி அணுகுண்டுகளைப் போல 12 அணுகுண்டுகளைத் தூக்கிச் செல்லும் ஆற்றல் கொண்டது. அதி அற்புதமான விமானம்.

2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புத்தின், மலேசியாவுக்கு அதிகாரத்துவ வருகை தந்தார். அப்போது இந்த விமானங்களை வாங்கும் உடன்படிக்கை கோலாலம்பூரில் கையெழுத்தானது.




அந்த ரஷ்ய - மலேசிய உடன்படிக்கையின் மேல் விவரங்கள். ரஷ்யாவின் விமானங்களை வாங்கிக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவரை விண்வெளிக்கு நாங்கள் அனுப்பி வைக்கிறோம்.

அதன்படி இறுதிக் கட்டமாக நால்வர் தேர்வு செய்யப் படுவார்கள். அந்த நால்வரில் இறுதிக் கட்டப் பயிற்சிகளுக்கு இருவர் தேர்வு செய்யப் படுவார்கள். ஒருவர் 2007 அக்டோபர் மாதம் விண்வெளிக்குச் செல்வார். மற்றும் ஒருவர் தயார் நிலையில் இருப்பார்.

தேர்வு செய்யப் பட்டவரை விண்வெளியில் பூமியைச் சுற்றி வரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவது. அவற்றுக்கான செலவுகளை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக் கொள்வது. அதுவே அந்த  உடன்படிக்கை.

பொருத்தமான விண்வெளி வீரரைத் தேர்வு செய்யும் பொறுப்பு மலேசியாவைப் பொருத்தது. அந்தப் பொறுப்பு மலேசிய தேசிய விண்வெளிக் கழகம், மலேசிய அறிவியல், தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சு ஆகிய இரு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இறுதிக் கட்டத்தில் தேர்வு செய்யப்படும் நால்வரும் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். ரஷ்யாவில் இருக்கும் யூரி ககாரின் ’ஸ்டார் சிட்டி’ விண்வெளி வீரர்கள் பயிற்சி முகாமில் ஆறு மாத காலத்திற்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும். 




அதன் பின்னர் அந்த நால்வரில் இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 18 மாத காலப் பயிற்சிகள் வழங்கப்படும்.

மலேசியாவில் இளைஞர்களிடையே அறிவியல் புத்தாக உணர்வுகளை மேலோங்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் ஆகும்.

மலேசியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் 11,275 பேர் விண்ணப்பம் செய்து இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கட்டம் கட்டமாகக் குறைக்கப் பட்டார்கள். இறுதியில் பத்து பேர். அவர்களில் நால்வர் மட்டுமே ஆகக் கடைசியாகத் தேர்வு செய்யப் பட்டார்கள்.

அவர்களில் ஒருவர் தான் நம் வானத்து அழகி வனஜா. தேர்வு செய்யப்பட்ட மற்ற மூவரும் ஆண்கள்.

1. டாக்டர் முஷபர் சுக்கோர். மலேசிய தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் எலும்பியல் மருத்துவர்.

2. கேப்டன் முகமட் கமாலுடின். மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி.

3. டாக்டர் பாயிஸ் காலிட். மலேசிய இராணுவத்தில் பல் மருத்துவர்.

4. டாக்டர் வனஜா. இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். தயாரிப்புத் தொழில்துறையில் மூத்த பொறியியலாளர்.




இறுதிக் கட்டத்தில் இந்த நால்வரும் ரஷ்யாவிற்கு அனுப்பப் பட்டார்கள். அங்கே ஆறு மாதங்கள் பயிற்சிகள். அதைத் தொடர்ந்து மேலும் பத்து மாதங்களுக்குத் தீவிரப் பயிற்சிகள்.

அனைத்தும் கடினமான பயிற்சிகள். உடலும் பலமாக இருக்க வேண்டும். உள்ளமும் பலமாக இருக்க வேண்டும். உடல் வலிமையைவிட மனவலிமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

வனஜாவின் மனவலிமை, உடல் வலைமை என அனைத்துத் தகுதிகளும் தரம் பிரித்துப் பார்க்கப் பட்டன. இவரால் நீண்ட நேரம் சுவாசிக்காமல் இருக்க முடியுமா. காற்று அழுத்தம் இல்லாத சூழ்நிலையில் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடிகிறது என்று எல்லாம் சோதனை செய்தார்கள்.

விண்வெளியில் மிதக்கும் போது உடல்வாகு பொருத்தமாக இருக்கிறதா என்று பல்வாறான தேர்வுகள். எல்லாத் தேர்வுகளிலும் ‘பாஸ்’. அதையும் தாண்டிய நிலையில் பெண்களுக்கே உரிய இயற்கையான உபாதைகளும் அவருக்குச் சில சங்கடங்களைக் கொடுத்தன. இதை அவரே சொல்லி இருக்கிறார்.

தொடர்ந்தால் போல உடல் பயிற்சிகள். மன உளைச்சலைத் தரும் சோதனைகள். அதில் தூக்கத்தை இடையூறு செய்வதும் ஒரு பயிற்சி.

 

அளவுக்கு மிஞ்சிய உடல் அசதியில் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் போது விடியல் காலை மூன்று மணிக்கு எழுப்பி விடுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு ஓட்டப் பயிற்சிகள். அதன் பிறகு உடலை உறைய வைக்கும் குளிர் நீரில் நீச்சல் பயிற்சிகள்.

கூடவே மருத்துவர்கள் இருப்பார்கள். தாக்குப் பிடிக்க முடியுமா என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள். சோதனைப் பயிற்சிகளின் போது ஏமாற்று வேலைகள் எதுவும் நடக்க வாய்ப்புகள் இல்லை.

(தொடரும்)

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/S._Vanajah

2. http://www.spacefacts.de/bios/candidates/english/siva_vanajah.htm

3. https://tamizharmedia.com/2019/03/27/video-vanajah-subramaniam-who-almost-became-malaysias-first-astronaut/

25 ஆகஸ்ட் 2019

ஆண் பெண் மூளை - எது சிறந்த மூளை

உலகில் இரண்டு சாதிகள். ஒன்று ஆண் சாதி. மற்றொன்று பெண் சாதி. இந்த இருபாலரின் உடல் அமைப்பில் மட்டும் தான் வித்தியாசம். மற்றபடி இருவருக்கும் மூளை ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்; ஒரே மாதிரியாகத் தான் வேலை செய்யும். இது பொதுவான கருத்து. 



உலகின் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் அப்படித் தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படித் தான் நினைத்துக் கொண்டு கதை சொல்லிக் கொண்டும் இருக்கிறார்கள்.

வழி வழியாக வந்த தாத்தா பாட்டி காலத்துக் கதைக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்போம். அறிவியல் என்ன சொல்கிறது என்பதையும் கொஞ்சம் பார்ப்போம்.

உண்மையில் பார்க்கப் போனால் ஆண் பெண் இருவருக்கும் உடல் மட்டும் அல்ல. மூளையும் வித்தியாசப் படுகிறது. ஆச்சரியப்பட வேண்டாம். ஆய்வாளர்கள் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். 




பெண் மூளையை விட ஆணின் மூளை கொஞ்சம் பெரியது. ரொம்பவும் இல்லை. 10 விழுக்காட்டுப் பெரிசு. ஆனால் சிந்திப்பதில் வேலை செய்வதில் ஆண் மூளையைவிட பெண் மூளையே பெஸ்ட் என்றும் சொல்கிறார்கள்.

கணக்குப் பாடத்தில் ஆண்கள் கில்லாடிகளாக இருக்கலாம். தர்க்க ரீதியாக சிந்திக்கக் கூடியவர்களாக இருக்கலாம். ஆனால் மொழியில்; அது எந்த மொழியாக இருந்தாலும் பெண்களை மிஞ்ச முடியாது. இதுதான் ஆய்வாளர்கள் கண்டு அறிந்த உண்மை.

புத்திசாலித்தனத்தை நிர்வகிக்கும் மூளையின் ஒரு பகுதியில் ஆண்கள் அதிக சாம்பல் பொருளை (Grey matter) கொண்டு உள்ளனர்.

ஆண்கள் ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபடும் போது மற்றவர்களின் பேச்சைக் கேட்பது இல்லை. அல்லது சுற்றுப்புறத்தைக் கவனிப்பது இல்லை. ஒரு நேரத்தில், ஒரு செயலில் மட்டும்தான் ஆண்களால் கவனம் செலுத்த முடியும். 




இதனால்தான் வில்வித்தை, சுடும் போட்டி போன்ற கவனக் குவிப்புத் திறன் வேலைகளைச் செய்வதில் ஆண்கள் திறமையாக இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் பெண்களின் மூளைப் பகுதியில் அதிகமான வெள்ளைப் பொருட்கள் (White matter) உள்ளன. அதனால் தான் அவர்கள் எந்த ஒரு விசயத்தையும் 360 பாகை கோணத்தில் சிந்திக்க முடிகிறது.

ஒரே நேரத்தில் பல விசயங்களில் கவனம் செலுத்த முடிகிறது. ஒரே நேரத்தில் நாலைந்து வேலைகளை ஆண்களிடம் கொடுத்தால் அம்புட்டுத் தான். கடுப்பாகி விடுவார்கள்.

மூளைக் கட்டமைப்பில் பெரும்பாலும் ஆண்கள், மூளையின் இடது அரைக் கோளத்தை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். பெண்கள் இடது வலது என இரண்டு அரைக் கோளங்களையும் பயன்படுத்துவதில் கில்லாடிகள். இது இயற்கை பெண்களுக்கு வழங்கிய வரப் பிரசாதம்.




தாயின் வயிற்றில் இருக்கும் போது பெண் கருக்கள் 26-வது வாரத்திலேயே இடது வலது அரைக் கோளங்களை இணைக்கும் கார்பஸ் காலசோமை (Corpus callosum) உருவாக்கி விடுகின்றன. ஆண் கருக்கள் மிக தாமதமாகத்தான் அந்த உருவாக்கத்தைச் செய்கின்றன. அதனால் தான் ஆண்கள் இடது அரைக் கோளத்தை மட்டும் உபயோகிக்கk காரணமாகிறது.

ஆக பெண்ணின் மூளைக்கு 100 மார்க் கொடுத்தால் ஆணின் மூளைக்கு 90 மார்க் தான் கொடுக்கலாம் என்கிறார்கள். ஒரே சமயத்தில் பல வேலைகளைப் பெண்களின் மூளை செய்ய முடியும். அதற்காக ஆண்கள் சண்டைக்கு வர வேண்டாம். நான் என்றைக்கும் ஆண்கள் கட்சி. சரி. அதிலும் ஒரு சிக்கல் உள்ளது.

முதலில் சின்ன ஓர் எடுத்துக்காட்டு. ஒரு வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம். அப்போது தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம்; அந்த வாகனம் பயணிக்கும் கோணம்; அந்த  வாகனத்தின் போக்கில் ஏற்படப் போகும் மாற்றங்களை ஆண்களால் விரைவாகக் கணிக்க முடியும் என்கிறார்கள். 



அதற்கு ஏற்றால் போல் தங்களின் வாகனத்தைக் கட்டுப்படுத்த ஆண்களின் மூளையால் உடனடியாகச் செய்ய முடியும். இது எப்படி இருக்கு என்று கேட்க வேண்டாம். தொடர்ந்து படியுங்கள்.

ஆனால் பெண்களின் மூளை கொஞ்சம் தாமதமாகவே அந்தக் கணிப்புகளைக் கணிக்குமாம். இதற்கு ஆய்வாளர்கள் சொல்லும் காரணம்: பெண்களின் மூளை பல பணிகளை ஒரே சமயத்தில் செய்யும் ஆற்றலைப் பெற்றது.

ஒரு வாகனத்தைச் செலுத்தும் போது ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில் தான் உன்னிப்பாக இருக்கும். ஆனால் பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் தான் வாகனங்களைச் செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன.

இப்படி மூளை வித்தியாசப் படுவதால் தான் ஆணைப் பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

ஆணின் மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.




எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் ஓர் ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகத் தீர்வு காண்கிறது. இதனால் பிரச்சனைகள் உள்ள ஆண்கள் தனிமையில் தங்களின் தீர்வுகளை இனம் கண்டு கொள்கிறார்கள்.

ஆனால் பெண்கள் அப்படி அல்ல. அவர்களின் மூளை தனித் தனியாகப் பிரித்துப் பார்க்காது. யாராவது ஒருவரிடம் தங்களின் மொத்த பிரச்சனைகளையும் கொட்டி முடிக்க வேண்டும். பிரச்சனை தீர்ந்தாலும் சரி; தீராவிட்டாலும் சரி.

பிரச்சினைகளைச் சொல்லி முடிக்க வேண்டும். அதன் பின்னர் தான் அவர்களுக்கு நிம்மதி. ஆண்களின் மூளையின் வேகம் செயல் படுத்துவதில் அமைந்து இருக்கும். பெண்களின் மூளை குடும்பம், உறவுகள், நட்பு என  அந்தச் சூழலில் அமைந்து இருக்கும்.

பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களைக் கொண்டது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழி வளத்திற்கு உரியது. அதாவது வார்த்தைகளையும்; உரையாடலையும் ரசிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலைக் கொண்டு ஒருவரைத் துல்லியமாகக் கணக்குப் போடும் தன்மை கொண்டது.

ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அது வேறுவிதமாக செயல் படுகிறது. ஒரு விசயத்தைப் பெண் பேசுவது போல் ஆண்களால் விவரிக்க முடிவது இல்லை. 




ஒரு ஆண், அவன் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல் மொழியால் விவரிக்க முடிவது இல்லை. எதிராளியின் முகத் தோற்றத்தைக் கொண்டு அவர் மனதை புரிந்து கொள்ள முடிவதும் இல்லை.

ஓர் ஆணின் மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முதலில் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனால்தான் அவனுக்குப் பெண்ணின் கவர்ச்சிகளைப் பார்த்தால் மகிழ்ச்சி கிடைக்கிறது.

பெரும்பாலும் அழகான பெண்களை ஆண்கள் விரும்புவதற்கு ஆண்களின் மூளையே மூல காரணம். பெண்ணின் மூளை அப்படி அல்ல. பெண்ணுக்குப் பார்வை இன்பம் என்கிற ஒன்று இல்லை. மன்னிக்கவும் குறைவு. அதனால் பார்க்கும் பார்வையால் பெண்ணுக்கு மகிழ்ச்சி கிடைப்பது இல்லை. புரிந்து கொள்ளுங்கள்.

ஓர் ஆண் அழகாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் பெண்ணுக்கு இல்லை. அவளுக்கு ஓர் ஆணின் பேச்சு மூலமாகத் தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. பேசிக் கொண்டே இருக்கும் ஆண்களைப் பெண்களுக்குப் பிடிக்கிறது.

அதற்காக... தொன தொன என ரம்பம் போட்டு அறுக்க வேண்டாம். கிட்ட வந்தவள் அப்புறம் எட்டியே பார்க்க மாட்டாள். அமேசான் காட்டிற்கு ஓடியே போய் இருப்பாள்.

வீட்டில் பிரச்சனை என்றால் பெண்களின் மனம் வேலையில் கவனம் செலுத்துவதில் குறைந்துவிடும். வீட்டுப் பிரச்சினையிலேயே நிலைகுத்திப் போய் நிற்கும். ஆனால் ஆண்களின் பிரச்சினை வேறு. வேலையில் பிரச்சனை என்றால் ஆண்களின் மனம், பாச நேச உறவுகளில் அதிகமாகக் கவனம் செலுத்தாது.

தவிர பெண்கள் உரையாடும் பொழுது நீங்கள் கவனிக்கலாம். மறைமுக மொழிகளை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஆண்கள் அப்படி அல்ல. நேரடியாகப் பேசி ஒரு வழி பண்ணி விடுவார்கள்.




பெண்களின் முகத்திற்கு நேராக ஆண்கள் பொய் பேசினால் பெண்கள் அதைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதைக் கண்டுபிடிக்க முடிவது இல்லை. அதற்கும் காரணம் இருக்கிறது.

பெண்கள் பேசும் போது 70 விழுக்காடு மொழி; 20 விழுக்காடு உடல் மொழி; 10 விழுக்காடு வாய்மொழியைப் பயன்படுத்துவார்கள். ஆண்கள் அவர்களின் மூளையால் அந்த மாதிரி செய்ய முடியாது. உடல் மொழிக்குப் பெண்களிடம் ஆண்கள் பாடம் எடுக்க வேண்டும்.

ஆண், பெண் சிந்தனை வேறுபாடுகளைக் கண்டு பல சமயங்களில் நாம் ஆச்சரியப் படலாம். ஆண், பெண் அங்க அடையாளங்கள்; இனப் பெருக்கச் செயல்பாடுகளால் மட்டும் ஆண், பெண் வேறுபடுவது இல்லை. பிரச்னைகளைப் புத்திசாலித்தனமாகத் தீர்ப்பதிலும்; குணாதிசயங்களாலும் இரு பாலரும் மாறுபடுகிறார்கள்.

நரம்பியல் ஆய்வாளர் டேனியல் ஜி ஏமன் எழுதிய Unleash the power of the female brain எனும் புத்தகத்தில் ஆண், பெண் இருவருக்கும் சமமான அறிவு இருக்கலாம். ஆனால் இரு பாலரும் பிரச்னைகளைத் தீர்க்க தங்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்.

பெண்கள் அவர்களின் மூளையின் முன்பகுதியில் (Pre-frontal cortex) இருக்கும் செல்கள் மூலமாகத் தீர்ப்பு, திட்டமிடல் மற்றும் விழிப்புநிலை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் பணிகளைச் செய்கின்றன. இதனால் தான் அவர்கள் ஒருபொருளைத் தேடும் போது சரியான இடத்தைக் கண்டுபிடிப்பதில் பெண்கள் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.

ஆணுக்குத் தன்னுடைய பொருட்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளத் தெரியாது. பல சமயங்களில் தன்னுடைய பொருட்களைத் தொலைத்துவிட்டு வீடு முழுமைக்கும் தேடுபவர்களாக இருப்பார்கள்.

பெண்ணால் வண்ணங்களை மிகத் துல்லியமாக ஒரே சமயத்தில் பிரித்துப் பார்க்க முடியும். அதனால் தான் ஆடைகளைத் தேர்வு செய்யும் போது ஒரு பெண் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாள். ஆண்களுக்குப் பொதுவான வண்ணங்கள் மட்டுமே தெரியும்.

ஓர் ஆண் தன்னிடம் ஆசையாக நாலு வார்த்தை பேசவில்லையே என்று ஒரு பெண் புலம்புவதும் சகஜம். அதே சமயத்தில் ஒரு பெண் தன் பாலியல் தேவைகளைப் புரிந்து கொள்வது இல்லையே என்று ஓர் ஆண் நொந்து கொள்வதும் சகஜம்.

எது எப்படி இருந்தாலும் குடும்ப வாழ்க்கையிலும் சரி; காதல் வாழ்க்கையிலும் சரி; விரிசல் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம். மிக மிக முக்கியம்.

சான்றுகள்

1. https://www.nm.org/healthbeat/healthy-tips/battle-of-the-brain-men-vs-women-infographic

2. https://en.wikipedia.org/wiki/Neuroscience_of_sex_differences



பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்

 

Balamurugan Balu : வணக்கம்! சந்தேகமே இல்லை ஆண்கள் தான்!

Muthukrishnan Ipoh : சபாஷ்... சரியான போட்டி...

Kanna CK Kanna Ck >>> Muthukrishnan Ipoh : ஐயா... எது எப்படியோ... பழமொழி என்ன சொல்லுது?? பெண் புத்தி பின் புத்தி...

Muthukrishnan Ipoh >>> Kanna CK Kanna Ck : பெண்மையை மதித்து பெண்மையைப் போற்றும் நம் சமூகத்தில் பெண் புத்தி பின் புத்தி எனும் பழமொழி தவறான பார்வையில் பார்க்கப் படுகிறது. பெண்மையை இழிவு படுத்துவது போல அமைகிறது.

ஒரு குடும்பத்தில் கணவனுக்கு மந்திரியைப் போல இருந்து ஆலோசனைகள் சொல்லி துன்பங்களில் இருந்து காப்பவள் பெண்.

பெண் என்பவள் பின் வரும் நிலையை முன்கூட்டியே எடுத்துச் செல்லும் வலிமை பெற்றவள் எனும் பொருளை அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக அந்தப் பழமொழி உண்டானது.

அதாவது பெண்புத்தியானது பின்னால் வரும் கஷ்டங்களை ஆண்களுக்கு உணர்த்தும் புத்தியாகும்.

இதை உணர்த்தவே பெண்புத்தி பின்புத்தி என்று கூறி வைத்தார்கள்.

இதன் பொருள் நாளடைவில் மாறி மருவி விட்டது. ஆதலால் இது பற்றி இனி சர்ச்சைகள் வேண்டாம்.

Sathya Raman : இது ஆண்கள்,பெண்களை வம்பில் மாட்டி விடும் விவகாரமாச்சே சார். அவரவர் மூளை அவரவருக்கு உசத்தி பெருசு, ஆற்றல் மிக்கது. ஆனால் கேள்வி என்று வரும்போது போர் பரணியை அல்லவா ஏற்படுத்தும். பார்த்து சார் இன்று இதனால் உங்கள் மண்டை உருளாமல் இருந்தால் சரி. ம்ம்ம் என்னை கேட்டால் நான் என்னுடைய கோஷ்டிகளுக்குத்தான் ஆதரவு கொடுப்பேன்.

மா.சித்ரா தேவி : அதே அதே...

Sathya Raman >>> மா.சித்ரா தேவி : நிலைமை மோசமாகி விட்டால் அணி சேர்ந்து "அட்டேக்" பண்ண தயாராக இருங்கள் சித்ரா 😀

Muthukrishnan Ipoh : கட்டுரை அறிவியல் பூர்வமாக எழுதப்பட்ட கட்டுரை... பெண்களுக்கு பெண்கள் ஓடுப் போட்டலும் சரி அட்டேக் பண்ணினாலும் சரி... என்றைக்கும் ஆண்கள் ஆண்களே...

என்றைக்கும் என் கட்சிக்குத் தான் என் ஓட்டு.... இருந்தாலும்... ஆண்களைப் பற்றி சில முக்கியமான விசயங்கள்...

பெண் மூளையை விட ஆணின் மூளை கொஞ்சம் பெரியது. ரொம்பவும் இல்லை. 10 விழுக்காட்டுப் பெரிசு.

ஆண்கள் ஒரு வேலையில் தீவிரமாக ஈடுபடும் போது மற்றவர்களின் பேச்சைக் கேட்பது இல்லை.

ஒரு வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம். அப்போது தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம்; அந்த வாகனம் பயணிக்கும் கோணம்; அந்த வாகனத்தின் போக்கில் ஏற்படப் போகும் மாற்றங்களை ஆண்களால் விரைவாகக் கணிக்க முடியும் என்கிறார்கள்.

ஆனால் பெண்களின் மூளை கொஞ்சம் தாமதமாகவே அந்தக் கணிப்புகளைக் கணிக்குமாம். இதற்கு ஆய்வாளர்கள் சொல்லும் காரணம்: பெண்களின் மூளை பல பணிகளை ஒரே சமயத்தில் செய்யும் ஆற்றலைப் பெற்றது.

ஒரு வாகனத்தைச் செலுத்தும் போது ஒரு பாடலைக் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில் தான் உன்னிப்பாக இருக்கும்.

ஆனால் பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் தான் வாகனங்களைச் செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. 😃😃😃

Sathya Raman >>> Muthukrishnan Ipoh : ஆணின் மூளை அளவில் பெரிதாய் இருந்து என்ன பண்றது சார்? அது பலமாக, பதுவசாக இருக்கணுமே? பெண்களின் மூளை ஓரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் என்ற உண்மையைச் சொன்ன உங்களுக்கு ஒரு ஜே, ஜே. 😎 சார்.

நான்கூட இன்று காலையில் இட்லி சுட ஆரம்பித்து, மதிய சமையல், மாலை சிற்றுண்டி இடை இடையே வீட்டுக்கு ஒட்டடை அடித்து, திரைச் சீலைகள், படுக்கை விரிப்பு எல்லாம் துவைத்து "கையில் தான்" வீட்டை முழுதும் துடைத்து சுத்தம் செய்துன்னு என ஒரே நாளில் பல வேலைகள் இப்படி ஆண்களால் முடியுமா? அலட்டிக் கொள்ள மட்டுமே முடியும்...

Muthukrishnan Ipoh :
இந்தக் கொரோனாவிற்குக் கூட ஓர வஞ்சனை... கொரோனாவினால் இறப்பவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள்... கொரோனாவே பெண்களுக்கு சப்போர்ட் பண்ணும் போது... ஆண்கள் என்ன செய்வதாம்.. காசி இராமேஸ்வரம் போகலாம் என்றால் அதுவும் முடியாது... உலகம் பூராவும் லோக் டவுன்...

Parimala Muniyandy : இதில் என்ன சந்தேகம்... பெண் மூளைதான்.

Muthukrishnan Ipoh : பெண்களுக்குப் பெண்கள் தான் சப்போர்ட் செய்ய வேண்டும்...

Manickam Nadeson : அதை மூளை இருக்கிறவங்க கிட்ட கேக்கனும், என் கிட்ட கேட்டா நான் என்னான்னு சொல்லுவேன்????

Magendran Rajundram : பெண் புத்தி பின் புத்தி என்பதற்கு உண்மையான விளக்கம் பலருக்கு தெரிவது இல்லை. நானே தாமதமாக தான் சில வருடங்களுக்கு முன் தெரிந்துக் கொண்டேன். பின்னர் நடக்கப் போவதை அறிந்துக் கொள்ளும் திறன் பெண்களின் தனிச் சிறப்பு.

இதற்கு உதாரணமாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் ’போகாதே போகாதே என் கணவா’ பாடலைச் சொல்லலாம். ராமாயணத்தில் வாலி ராமரிடம் போர் புரிய செல்வதற்கு முன் தாரா அவனை எச்சரித்த பகுதியை சொல்லலாம்.

இதில் படித்த பெண் படிக்காத பெண் என்ற வேறுபாடு இல்லை. ஆண்களின் ஈகோ பெண்களின் பேச்சை கேட்காமல் செய்து விடுகிறது. லாஜிக் என்ற ஒன்று வேறு தடையாக இருக்கும். ஆனால் பெண்களின் கணிப்பு பல நேரங்களில் உண்மையாகவே இருக்கும்.


23 ஆகஸ்ட் 2019

Zakir Naik assests in Mumbai

Pradeep Thakur, Times of India, Mar 22, 2019

Probe against absconding Zakir Naik has revealed his undisclosed assets worth over Rs 193 crore including investments in 20 flats in Mumbai and Pune besides bank deposits by diverting funds and donations received from Islamic countries meant for “welfare of Muslims”.


The ED on Friday arrested his close aide Najmudin Sathak, a jeweller, who assisted Naik in money laundering and organising funds of “dubious origins” from Dubai to the tune of Rs 79 crore for production and broadcasting incriminating videos allegedly spreading “hatred and radicalization”.

The agency, which is likely to file a chargesheet in the case soon, has already attached assets worth Rs 51 crore, including multiple properties and mutual funds worth Rs 9.41 crore. Another close associate Aamir Gazdar was earlier arrested in the case for aiding Naik in money laundering.

The ED, in a status report prepared on Naik, said that the preacher had used his Islamic Research Foundation, meant for social welfare of the Muslim community, to organise dubious donations and diverted the proceeds in purchasing properties.

The accused raised donations of about Rs 65 crore from UAE, Saudi Arabia, Bahrain, Kuwait, Oman, besides India between 2004 and 2017. The agency has tracked Rs 49 crore received from unexplained sources in Dubai which he further used to book at least 20 flats in Mumbai and Pune.


The ED probe revealed that nine flats were booked in Fatima Heights and Aafiyah Heights in Mumbai worth over Rs 13 crore in the name of his wife and son and 11 flats booked in Engracia at Pune. “The booking amounts were paid by routing of unexplained fund received by Naik through the bank accounts of his wife, son and niece,” a source said.

The transaction trail also revealed Naik’s investment of Rs 13 crore in three properties located at Belvedere Road, Mazgaon, Mumbai. The money in this case was routed through the bank accounts of his mother, father and sister. The source of funds remained unexplained, according to ED.

Najmudin Sathak, who is now in ED custody, assisted Naik in organising funds of ‘dubious origins’ from Dubai to fund production and broadcasting of incriminating videos allegedly intended to spread communal hatred and radicalisation of the Indian society, the ED probe says.

Sathak is also a director in the Global Broadcasting Corporation which was owned by the Peace TV channel run by Naik. Peace TV was broadcasting Naik’s speeches from UAE for Middle East and Africa. The funds were routed through Global Broadcasting Corporation (GBC), Dubai. 


“An amount of Rs 79 crore was received from GBC to Harmony Media Pvt Ltd which was responsible for production of all contents for the Peace TV. Naik’s sister and another close aide Aamir Gazdar were directors in Harmony Media,” according to ED probe.

“The source of funds remitted by GBC to Harmony Media is suspicious as there were no advertisements run on this channel and Sathak has also not submitted any details of the same,” a senior ED official said. Both GBC and the Harmony Media were controlled by Naik through his aides.


“It was also learnt during investigation that these videos were also exported to UK by Sathak for uploading the same on Peace TV channel from UK. There was no monetary transaction in respect of videos exported to UK, which further raises suspicion,” sources said.

Source: https://timesofindia.indiatimes.com/india/zakir-naik-diverted-rs-193cr-islamic-funds-for-buying-flats-mutual-funds-ed-probe/articleshow/68526448.cms