31 ஆகஸ்ட் 2019

மலாயா தமிழர்கள் வந்தேறிகள் அல்ல

(சஞ்சி தமிழர்கள் நூலில் இருந்து)

ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்த மலாயாத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.




மலாயா தமிழர்கள் இந்த மண்ணில் சில பல நூறாண்டுகளுக்கு முன்னரே தடம் பதித்து விட்டார்கள். இது எவராலும் மறுக்க முடியாத ஒரு வரலாற்று உண்மை. உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத உண்மை.

என்ன தான் வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; எப்படித்தான் வரலாற்றுப் படிமங்களை மறைத்துப் போட்டாலும்; மலாயாத் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் காலாகாலத்திற்கும் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். 



1910-ஆம் ஆண்டில் மலாயா ரப்பர் தோட்டத்தில் 
ரப்பர் விதைகள் பயிர் செய்யப் படுகின்றன
Source: Kleingrothe, Carl Josef, 1864-1925; 
Royal Netherlands Institute of Southeast Asian and Caribbean Studies.

அந்த உண்மைகள் காலா காலத்திற்கும் நிரந்தரமாகிப் போன உண்மைகள். அவையே வரலாறு சொல்லும் சத்தியமான உண்மைகள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் திரைகடல் தாண்டி திரவியம் தேடி மலையகத்திற்கு வந்து இருக்கிறார்கள். வணிகர்களாக வந்தார்கள். வணிகம் பார்த்தார்கள். வாழ்ந்தும் காட்டினார்கள். தங்கள் வாழ்க்கையைச் செம்மைப் படுத்திக் கொண்டார்கள்.

வந்த இடத்தில் நியாயமான முறையில் பொன்னையும் பொருளையும் தேடிக் கொண்டார்கள். தேடியது கிடைத்ததும் வந்த வழியாகப் பலர் திரும்பிச் சென்றார்கள். வந்தவர்களில் சிலர் உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். 



மலாயா ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1913. 
சேகரித்த பாலை தொட்டியில் ஊற்றுகிறார்கள்
Source: Carter, Marina; Torabully, Khal (2002). 
Coolitude: An Anthology of the Indian Labour Diaspora.

அப்படியே உள்ளூர்த் தன்மையில் ஐக்கியமாகிப் போனார்கள். கால ஓட்டத்தில் அங்க அடையாளங்கள் மறைந்து கரைந்தும் போனார்கள்.

அப்படி மலாயாவுக்கு முதன்முதலில் வந்தவர்களின் முதன்மை நோக்கம் வணிகமாக இருந்து இருக்கிறது. புலம்பெயர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் அவர்களிடம் அப்போது இல்லை. வணிகம் செய்து கொஞ்சம் காசு பார்த்துவிட்டுப் போவோம் என்கிற எண்ணத்துடன் தான் அவர்கள் வந்து இருக்கிறார்கள். ஒன்று மட்டும் உண்மை.

அவர்கள் வந்த இடத்தில் யாரிடமும் கையேந்தவும் இல்லை. பஞ்சம் பிழைக்க தஞ்சம் கேட்கவும் இல்லை. வணிகம் செய்வதே முதல் நோக்கமாக இருந்து இருக்கிறது. வணிகம் செய்து வளமை பெறுவதே அவர்களின் தலையாய நோக்கமாகவும் இருந்து இருக்கிறது.

மலாயாவாழ் தமிழர்களும் வந்தேறிகள் அல்ல. அப்படி சொல்வது தப்பு. வரலாற்றை நன்றாகப் படித்துத் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் பக்குவம் வேண்டும். வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் நல்ல எண்ணமும் வேண்டும். வரலாற்றை முறையாகப் படிக்காமல் அறியாமையில் சொல்வது மிகவும் தப்பு. 



மலாயா ரப்பர் தோட்டத்தில் வெளிக்காட்டு வேலை
Rubber Plantation in Malaya in 1911; 
Pathe film La Cultivation du Caoutchouc en Malaisie

பூர்வீக மக்கள் வாழ்ந்த இடத்தில் தமிழர்கள் சமூக அமைப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தப் பூர்வீக மக்களுக்கு வாழ்வியலின் வளமையைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். அந்தச் சமூக அமைப்புகளில் எப்படி சிறப்பாக வாழ்வியலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போய் இருக்கிறார்கள்.

இதற்குச் சான்றுகள் தேவை இல்லை. வரலாறே ஒரு சான்றாக நிலைத்து நிற்கின்றது. மிகச் சரியான சான்றுகளுடன் இந்த மலாயா தமிழர்களின் வரலாற்று ஆவணத்தை முன்வைக்கிறேன்.

கலிங்கர்கள் வழி வந்த தமிழர்களின் முதல் புலம்பெயர்வு அசோகர் காலத்தில் தொடங்கி இருக்கிறது. இதை மீண்டும் வலியுறுத்த வேண்டி உள்ளது.


பேஸ்புக் அன்பர்களின் கருத்துகள்

Vejaya Kumaran inthe warelaatru puttagam wendum aiyaa.yenna vilai.mugavari vendum.

Muthukrishnan Ipoh நன்றிங்க...நூலை எழுதி முடித்து விட்டேன்... 286 பக்கங்கள்... அச்சகத்தில் கொண்டு போய் கொடுக்க வேண்டிய இறுதிக் கட்டம்... நூல் வெளியானதும் பேஸ்புக் வழியாக அறிவிக்கிறேன் தம்பி... தங்களின் ஆதரவிற்கு மீண்டும் நன்றி...
Ranjanaru Ranjanaru Pokkisham Anna ...Mahateerar irukkum varaikkum ...nam varalaarai moodi maraikkattaan ...muyaluvaar ..
Muthukrishnan Ipoh மலேசிய இந்தியர்களின் வரலாற்றை எவராலும் மறைக்க முடியாது தம்பி... அனைத்துலக நூலகங்களிலும் பழஞ்சுவடி காப்பகங்களிலும் மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன. மீட்டு எடுப்பது அரிய முயற்சி... இருப்பினும் மீட்டு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம்.


Nagappan Arumugam கூலிக்கு வேலை செய்தவர்களைத் தியாகி என்பது எந்த வகைக் கணக்கில் சேரும்? நாம் இந்த நாட்டின் குடிமக்கள். இதன் அடிப்படையில் நமது கோரிக்கைகள் இருக்க வேண்டும்.

Kumaravel Muthu Goundan Nagappan Arumugam சரியாகச் சொன்னீர்கள் அய்யா..... காட்டைத் திருத்தினோம், ரோடு போட்டோம், ரயில் பாதை அமைத்தோம் என்று இன்னும் எத்தனை தலை முறைகளுக்குத்தான் நாம் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறோம்.

அப்படிப் பார்த்தால் சீனர்கள் நம்மை விட இந்நாட்டின் வளர்ச்சிக்குப் அதிகம் பாடு பட்டிருக்கிறார்கள். இந்நாட்டின் குடி மக்கள் என்று நம் அடிப்படை உரிமைக்குப் போராடும் குணம் தான் இன்று நமக்குத் தேவை.

அமெரிக்க நாடு புலம் பெயர்ந்த பல நாட்டு மக்கள் வாழும் நாடு. அந்நாட்டின் குடி மக்கள் அனைவரும் ”அமெரிக்கர்” எனும் ஒரே இனம் எனும் அடையாளத்தை வைத்துக் கொண்டு பொருளாதாரத்தில் இன்று உலகையே தங்களின் கைப் பிடியில் வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

Sheila Mohan வணக்கம் சார்.. பொக்கிஷமான கட்டுரை... நமது முன்னோடிகளின் தியாகம் மனம் நெகிழ்கிறது...

Sathya Raman மலாயாவிற்கு ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு மாராடிக்க அழைத்து வரப்பட்ட நம் முன்னோர்கள் ஒப்பற்ற உழைப்பையும், உதிரத்தையும் இந்த நாட்டிற்காக கொடுத்து இருக்கிறார்கள்.

தமிழினம் என்றுமே மறக்கவியலாத பட்டயம் கூறும் பதிவுகளை நீங்களும் சலிக்காமல், தளராமல் இந்த சமுதாயத்திற்கு செய்தி சொல்லி வருவது இந்த முகநூல் வாசகர்கள் பெற்ற பேறு சார்..🙏🙏🙏

நம் வரலாற்றை பின் நோக்கி பார்த்தால் பெரும்பாலும் மிஞ்சுவது கண்ணீரும், காயங்களும் தான். அன்றைய மலாயா இன்று மலேசியாவாக மலர்ச்சியுடன் மிளிர்ந்து நிற்பதற்கு இன்று இந் நாட்டில் எங்கும் நிரம்பி வழியும் பங்களாதேசியோ, இந்தோனிசியர்களோ, மியான்மார்காரர்களோ இல்லை. 
சாட்சாத் இன்னமும் எல்லா [நியாயமான] உரிமைகளையும் விட்டுக் கொடுத்து, கொடுத்து நிற்கும் தமிழர்களே. அந்நிய தொழிலாளர்களை விட சிறுபான்மை இனமாக மற்ற இனத்தவர் மத்தியில் இளிச்சவாயர்களாக ஏமாந்து நிற்கிறோம், வருகிறோம் என்பதே சத்தியமான உண்மை.

மற்ற நாட்டுக்காரர்களைவிட நம் கண்களுக்கு இன்னமும் சுண்ணாம்புகளே தடவப் படுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. நாடு சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இந் நாட்டு இந்தியர்களுக்கு எதிராக அடிமை விலங்கு முற்றிலுமாக அகற்றப் பட்டதா?

நமக்குரிய அங்கீகாரம் கெஞ்சி, கூத்தாடாமல், போராடாமல் கிடைக்கிறதா? இந்நாட்டை வளப்படுத்திய இனத்தை வஞ்சிக்கப்பட வைக்கக் கூடாது என்ற எண்ணம்தான் எழுகிறதா? உண்மையான உழைப்புக்கு இன்னொரு பெயர் இந்தியர் என்ற நன்றி உணர்வு தான் இருக்கிறதா?

ஆபிரகாம் லிங்கனும், நெல்சன் மண்டேலாவும், சுபாஷ் சந்திர போஸ்சும் மீண்டும் பிறந்து வந்துதான் உண்மையான சுதந்திர காற்றையும், சுபிட்ச நிலையையும் உருவாக்க வேண்டுமா என்ன?

"விதைகள் கீழ் நோக்கி விதைத்தாலும், விருட்சமாக மேல் நோக்கியே வளரும்". விழுந்தால் விதை என்று நினைத்துக் கொள்வோம், வளர்ந்தால் விருட்சம் என எண்ணிக் கொள்வோம்".

புரட்சியாளன் வெற்றி பெற்றால் அவன் போராளி. அதே போல் இந்த நாட்டில் சராசரி தேவைகளையே போராடியே கேட்டு பெறும் நிர்பந்தத்தில் நிற்கும் நாமும் வழக்கம் போல் அடுத்தவருக்காக விளக்கை ஏற்றுவோம். அப்படி ஏற்றும் போது நம் பாதையும் வெளிச்சமாகும் என்று நம்புவோம்.



Mohan Ramasamy Sathya Raman நாடு சுதந்திரம் அடைந்தது 62 ஆண்டுகள் ஆயினும், உன்மையான சுதந்திரம் ஓர் இனம் சார்ந்த மக்கள் தான் அனுபவித்து வருகின்றனர். எப்போது நமக்கு சம உரிமை வழங்கப் படுதோ அன்று தான் உண்மையான சுதந்திரம்.

Muthu K Kumar 1000 ஆண்டுகளுக்கு முன் கால் பதித்தான் கடாரத்தில் இது சோழனின் வரலாறு


Muthukallianna Gounder We the willing lead by the unknown are doing impossible for tho ungreatfuls. We have been doing so much for so little beatitude. Now we are qualified to do any thing for nothing, my friends. Oh, God, please lead our path.

மலேசிய தின வாழ்த்துகள் 2019

மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய மலேசிய இந்தியர்களுக்கு முதல் மரியாதை. 
 

மலைக் காட்டுப் பாதைகளில் இரத்தம் கொட்டி உயிர்களைச் சிந்தியவர்கள். மலைக் காட்டு மரங்களைக் கட்டி அணைத்து காசு மழை பொழியச் செய்தவர்கள். மலைக் காட்டு மிருகங்களுடன் மனித வாசம் பேசி மரித்துப் போனவர்கள்.

மலைக் காட்டுப் பாசா காடுகளில் பவித்திரம் பேசி மலேசியாவைப் பார் புகழச் செய்தவர்கள். அந்த வாயில்லா பூச்சிகளுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் மலேசிய தின வாழ்த்துகள்... வாழ்த்துகிறோம்.

பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்

 
Murugan Rajoo #கடந்த 5:ஆண்டுகளாய் ஒரே பதிவு.

சுதந்திரம் இனி நிரந்தரம் ஆக வேண்டும் இந்தியர்களுக்கு. எங்களுக்கு சலுகைகள்
வேண்டாம்...
உரிமைகள் தான் வேண்டும்
விழுகாடு ரீதியில் அல்ல
மண்ணின் மைந்தர்களாய்....

இனப்பாகுப்பாடு அற்ற சுதந்திரம்
இம்மியளவும் குறையாத
உரிமை.....
விழுகாடும் ஒதுக்கீடும்
எங்களுக்கு
விடுதலை கொடுக்காது...

தோட்டங்கள்
எம்மினத்திற்கு அடிமை
விலங்கிட்டது
நகரங்களில் நவீன கொத்தடிமைகளானோம்
சுதந்திரம் மட்டும் இன்னும்
கேள்விக்குறியாய்...

இருப்பதை கொடுப்பதை
வைத்து
நிறைவுக் கொள்ள
சுதந்திரம்
உணவோ உடையோ அல்ல
உரிமை....

என்ன செய்யவில்லை
நாங்கள்
வியர்வை சிந்தினோம்
உழைத்துக் கொடுத்தோம்
உதிரம் கொட்டினோம்
எங்களின்
தியாகங்களும் இங்கு
மறைக்கப்பட்டது வரலாற்றிலும் கூட....

எங்களின் அடுத்தத் தலைமுறைக்காவது உரிமையை கொடுங்கள்
சலுகை கருணையென
பிச்சைப் போடாதீர்கள்....

இருண்ட நாட்டில்
தீ குச்சியால்
சுதந்திரம் தேடுகிறோம்
தீ குச்சி ஒருநாள்
தீபந்தமாய் பற்றி எரியும்
சுதந்திர காற்று எங்களின்
சுவாசத்தின் உயிர்ப்பிப்பாகும்!!

"இனிய 62-ஆம் சுதந்திர தின வாழ்த்துக்கள்"

 
Kalai Selvam சகோதரர் முருகன் ராஜூவின் கவிதைக்கு மிக்க நன்றி நன்றி. உணர்வும் உணர்ச்சி மிக்க அனைத்து நமது மக்கள் உங்கள் கவிதை யை படித்தே ஆகவேண்டும்.
 
Santhanam Baskaran இனிய வணக்கம்.
மலேஷிய அன்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

 
Neela Vanam தம்பி முருகன் ராஜுவின்' மன ஆதங்கத்தை இப்பதிவின் மூலமாக அரிய முடிகிறது அவரின் கருத்துக்கு உடன் படுகிறேன். எதிர் காலத்தில் நம்மவர்களின் நிலமை எப்படி இருக்கும் ? பதிவுக்கு நன்றி

மாரியப்பன் முத்துசாமி வரலாற்று மாற்றி அமைத்தாலும்
நம் முன்னோடிகளை வாழ்த்தி வணங்குவோம்

 
Megana Megana 👍👍வாழ்த்துக்கள் சார்
 

Image may contain: 1 person, beard and closeup
மலேசியாவுக்காக பாடுப்பட்ட தியாகி

Varusai Omar மா.சித்ரா தேவி .ஏம்மா கண்ணூ... இந்த சந்தோசமான சுதந்திர நன்னாள்ளே உனக்கு இந்த ஓநாய் படம் தான் கிடைத்ததா?
உன் மீது எனக்கு கோபம் கோபமாக வருகிறது சித்ரா!?

 

No photo description available.
Mahdy Hassan Ibrahim வாழ்த்துகள் மலேசிய நண்பர்களுக்கு!
 
Sheila Mohan இனிய வணக்கம்
சார்.. சுதந்திர தின
நல்வாழ்த்துகள்...


Vanaja Ponnan இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
 
Krishna Raja சுதந்திரதின வாழ்த்துகள்
 
Varusai Omar காலம் காலமாக கடந்து வந்தபாதை தானே!?
நள்ளிரவில் விடுதலை கொடுத்தான் வெள்ளையன்.
ஆனால், கடந்த 60+2 ஆண்டுகள் கடந்தும் நம் நாட்டு இந்தியனுக்கு (அதை இ.வ. தமிழன் என வாசிக்க!) இன்னும் விடியலே கண்ணில் காணவில்லையே?
1955-இல் மலாயா நாட்டில் கால் பதித்த ஆண்டு.

பள்ளி மாணவப் பருவம்

துன்பம் போராட்டம். இளமையும் கடந்தது. வெரும் PR சிவப்பு அட்டையொடு.
மெத்தப் படித்திருந்தும் பேரும் புகழும் பெற்றிருந்தும், கையில் தொழில்? இல்லையே! கற்ற கல்விக்கும் திறனுக்கும் ஏற்ற வேலையுமில்லை, கூலியுமில்லை.
உயர்ந்த மனிதர்கள், தாழ்ந்த உள்ளங்கள்.

2010-களுக்கு பிறகு வந்தார் ஒரு மகராசன், ஆறாவது பிரதமராக.
இந்தியர்களிளின் வாழ்வில் சற்று வெளிச்சம். அதிலும், கிடைத்த சலுகை பணத்தை சில கேடு கெட்ட இந்தியத் தலைகள் (முதலைகள்?) மாமன் மச்சான் மைத்துனிகளுக்கு ஒதுக்கி குடித்துக் கும்மாளமிட்டு ஏப்பமிட்டார்கள் சாமானிய இந்தியன் அங்கே தெருக் கோடியில் கண்ணில் பெருக்கெடுத்து ஓடும் நீருடன் நெஞ்சில் பொங்கும் துயருடன்!

அதற்கு முன் வந்தார் ஒரு தானைத் "தல" இனிப்புத் தடவிய சொல்லாடலுடன்.

"அய்யா வாங்கோ அம்மா வாங்கோ.
கடனை உடனை வாங்கி எங்கிட்டெ கொட்டுங்கோ!
இனி உங்களை எல்லாம் கோடீஸ்வரர்களாக்குகிறேன்"

நம்மாளு தான் மூஞ்சீல எழுதி வச்சிருக்கே?
ஹும்ம்! அங்கேயும் அல்வாதான்னா, சூப்பர் அல்வா!
மகனும் தன் பங்குக்குகூகூகூ,
நம்பினார் கை விடப் பட்ட்ட்டார்ர்ர்!
நெஞ்சு கிழியிற சத்தம் தான்.
அவ்விடத்திலும் சூப்பபரா அல்வா மட்டுமில்லேபா! சிலருக்கு சங்கெதிட்டம்லெ!

இறுதியாக, 2011, ஓரந்தி மாலைப் பொழுதில், அலைபேசி அழைப்பு, "உங்கள் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப் பட்டது. உங்கள் பிரஜை விணண்ணப்பம் வெற்றி!"
அப்பாபாடாடா,
60 ஆண்டுகால ஏக்கம், கனவு நிறைவேறப் போகிறதா?
அப்படியே மண்டியிட்டு சிறு பிள்ளை போல் தேம்பித் தேம்பி அழுது ஓய்ந்தேன்!

இறுதியில் 14.02.2012-இல்; பல்லாயிரக் கணக்காணோர் சூழ, பல்லூடகங்கள் சாட்சியாக அன்றைய பிரதமர் டத்தோ நஜீப் அப்துல் ரஜாக் கைகளால் அந்த அங்கீகாரம் கைகளில் கிடைத்த போது, 60 ஆண்டு கால காத்திருப்பு, காலம் கடந்து 63 அகவையில், நிறைவடைந்தது!

அன்றிரவே காணொலிகளில் தலைப்புச் செய்தி, மறுநாள் 13.02.2012-இல் அனைத்து பத்திரிக்கைகளிலும், (தமிழ், மலாய், சீன, ஆங்கில நாளேடுகளில் தலைப்புச் செய்தியானேன்!

ஒரு நாளேடு, நான் எழுதிக் கொண்டிருந்த நண்பனின் "ம. நண்பன்" 2013-ஆம் ஆண்டு நாட்காட்டியில் என்னைப் பதிப்பித்து பெருமைப் படுத்தி விட்டார்கள்.

இவை அனைத்தும் என் வாழ்வின் துயரமான பக்கங்கள். சத்தியமான உண்மைகள்.!


Muthukrishnan Ipoh ஐயா... உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியின் பதிவு மனதைக் கலங்கச் செய்து விட்டது... சற்று நேரம் விக்கித்துப் போனேன்... இறுதியில் ஒரு மகிழ்ச்சியான செய்தி... எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பீர்கள்... நினைத்துப் பார்க்கிறேன்... மனம் கசிகின்றது...

ஐயா... தங்களின் பதிவை என் வலைத் தளத்திலும் பதிவு செய்து இருக்கிறேன்... 

 
Varusai Omar Muthukrishnan Ipoh

தோழர் முத்து, உங்கள் பரிவிற்கும் அன்புக்கும் நன்றி தோழர்!

இன்னும் நிறைய இருக்கு முத்து.

சங்கநதியில் 1955/56-களில் வசித்த காலை, கம்யூனிசத் தாக்குதல்களை நேரில் கண்டது மட்டுமல்ல... மறுநாள் காலை பள்ளி செல்ல துன் V.T. சம்மந்னார் வீட்டைக் கடந்து Sg.Siput main வீதியில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் சுட்டுக் கொல்லப்பட்ட சடலங்களைக் கிடத்தி வைத்திருப்பார்கள்.

அதையும் தினம் கடந்து, ரயில்வே ஸ்டேசன் தண்டவாளம் கடந்து தான் பள்ளி!
மலைக் குன்று. சுற்றிலும் ஆஸ்திரேலிய போர்ப் படை!
அதை மற்றொரு தரம் மதிவிடுகிறேன் நண்பா.
துன்ப காலங்களில் பட்டதாரியாவது மண்ணாவது, டாக்ஸி ஓட்டினேன்
தலைநகர் ஏர்போர்ட்டில்...


Muthukrishnan Ipoh Varusai Omar நிறைய வரலாற்றுத் தடங்கள்... அதிர்ச்சி... ஆச்சரியம்... ஒரு நூல் எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள் ஐயா... என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன்...

Varusai Omar இயற்கையாகவே நான் போராட்ட வாதி முத்து. என் தந்தையார் சொல்வார்கள். அவன் முற்போக்குவாதி. யார் சொன்னாலும் கேக்க மாட்டானே!

தந்தையின் சர்ட்டிபிகேட்! ஹஹஹாஹாஹா!
எப்பிடீ? ஹஹாஹாஹா

 
Vijikrish Krishnasamy Varusai Omar so sad to hear.
 

Varusai Omar Muthukrishnan Ipoh அனுபவங்கள் பலிச்சக்கால்..
நான் எழுதிய பழைய கதையின் தலைப்பு!

Varusai Omar Muthukrishnan Ipoh அந்த ஆசை எனக்கும் உண்டு. ஆனால், எனது கதை நறுக்களை இந்தியாவின் எனது முன்னாள் பேராசிரியர் தமது ஆய்வுப் படிப்பிற்காக (PhD.முனைவர்)... 
எனது தொகுப்புகள் என் மூத்த மைத்துனர் பாவலர் திலகம் பட்டர்வர் ஜைனுத்தீன் எழுத்து புத்தகங்களையும் திரும்பத் தருவதாகச் சொல்லி கொண்டு சென்றார்.

அவ்வளவுதான். தமிழ்நாட்டுக்காரன் பண்பாடு!
போனவன் போனான்டீடீடீயீயீ!
அவரது ஆய்வு; மலேசியா சிங்கையில் சிறுகதை கட்டுரைகள். ஹும்! எல்லாமே அம்போன்தா தோழர்.

Varusai Omar முத்து, துன் சம்மந்தன்/ உமா திருமணத்தில் என் தந்தையும் பெரியப்பாவும் சிலம்பம் ஆடினார்கள். எனது சிலம்ப ஆசிரியரும் என் தந்தைதான்.

Varusai Omar Muthukrishnan Ipoh 2013 நண்பனின் நாட்காட்டி படத்தை பதிவிட்டுள்ளேன். பிரதமருக்கு பொன்னாடை அணிவித்தேன். அதுதான் அவரது கழுத்தை அலங்கரிக்கிறது!

Varusai Omar ஒன்று சொல்ல விரும்புகிறேன் முத்து.
இந்த ராஜேந்திரன் பெருமாலூ, ஒரு கடைந்தெடுத்த...ஹீம் வேண்டாம் முத்து. தமிழில் கணினியில் அச்சேற்றி ஒன்றுக்கு இருமுறை நேரில் கொடுத்தும்.. தும் தும்தான். ஓவியம் வரையச் சென்ற இடத்தில் காணாமல் போனதாம்!!

Varusai Omar ஆனால் அதே கதை வேறு நாளேட்டில் அச்சானது வேறு கதை. பார்த்தீர்களா நண்பா? தமிழனுக்கு எதிரி ஜப்பான்/ ஆப்ரிக்காலே இருந்தா வாரான்?
நாம தான் பூனைய மடீலேயே கட்டீட்டூ அழரமே?


Krishnan ATawar Valtukal ayya


Krishna Raja சுதந்திரதின வாழ்த்துகள்



Sathya Raman  இன்றைய சூழலில் பல மனமாச்சாரியங்களையும், இடர்பாடுகளையும் எதிர்நோக்கி நிற்கின்ற இந்நாட்டு இந்தியர்கள் "மனித வாழ்வின் செல்வாக்கு தன்மானமே "என்ற சுய உணர்வோடு. சுயமரியாதையுடனும் வரும் காலங்களை எதிர் கொள்ள வேண்டுவதோடு கடந்த கால காயங்களை கடந்து செல்ல இந்த 62-ஆம் சுதந்திர தினம் நமக்கு சுகமாய் வழிகாட்டட்டும் . அன்பு உள்ளங்களுக்கு தேசிய தின வாழ்த்துக்கள்.🙏🌷 தமிழோடு வாழ்வோம், தமிழோடு வளர்வோம்

Kumar Murugiah Kumar's தமிழர் புகழ் உயிரோட்டம் உள்ள வரை வெல்லும்

Hamba Mu Umar Umar Romba nanri ayya

Sooriyaperumal Sooriya வேண்டும் விடுதலை

நாளை சுதந்திர தினமாம்
அடிமை நிலை விடுபட்ட தினமாம்...

"இந்தா எடுத்துபோ"

"வந்தேறிகள்"

கல்வியில்
சிறந்த அடைவுநிலை இருக்கட்டுமே
நாங்கள் வீசும் துறைதான்...

அரசாங்க பணியில்
பத்துதான்...
அதுவும் எங்கள் விருப்பம்...

தாய்மொழி பள்ளியிருக்கு...
கோயில் இருக்கு
சுதந்திரம் போதும்...

ஆமாம்
ஐம்பத்து ஏழுக்குப் பிறகு தானே பார்க்கிறோம்....!

மூவரும் கையொப்பமிட்டோமே...!
அது வெள்ளைக்காரனை ஏமாற்ற...

பாகுபாடு பார்க்க மாட்டோம் என்றது....?
அது உங்களை ஏமாற்ற

தேர்தல் வாக்குறுதிகள்...?
அது நாங்கள் வாழ...

எங்களுக்கு எப்போ சுதந்திரம்...?

அதான் கொடுத்திட்டாங்களே

கொடுத்தாங்க நீங்க
எப்போதுடா கொடுத்தீங்க...
எங்களின் உரிமை எங்கே..
எங்களுக்கும் வேண்டும் விடுதலை...

அதான் பேச்சு சுதந்திரமிருக்கு...

அதிலும் உங்களுக்குத் தானே
சுதந்திரம்

சரி..சரி...
மூவினமும் முக்கியம்
எல்லா வளமும் எல்லாருக்கும்...

ஐயையோ....
தேர்தல் வரப் போகிறது...

பெ.சா.

என்னடா
இப்படியெல்லாம் எழுதுகிறாய்
எகிறி குதிப்பார்கள்...

இதற்கேவா...?

குதிக்கட்டும் விடு
குறிப்பாக யாரையும் சொல்லவில்லை
எந்த சூழ்நிலையில்
சொல்லப்பட்டது என்று விளக்கிவிடலாம்...

எவ்வளவு இழிவு படுத்தினாலும்
மன்னிப்பு கேட்டால் சரியாகிடும்...
-சூரிய மூர்த்தி.


Sivan Koran மலேசியர்கள், இன்று அடித்துக் கொள்வோம் நாளை அணைத்துக் கொள்வோம்..... எந்த குடும்பத்திலும் நிலவும் உறவு முறை போல. வித்தியாசம் என்னவென்றால் மலேசியர்களான நாம் பல இனங்கள் பல மதங்கள் கொண்ட பெரிய குடும்பமாகும். நம் மலேசியா ஒரு சொர்க்க பூமியாக பிரார்த்தனை செய்வோம்.


Varusai Omar இது உங்களுக்காக முத்து!

சுதந்திரக் காற்று!
சுதந்திரக் காற்று
எங்கள் மூச்சு, ஒற்றுமை உணர்வு
எங்கள் பேச்சு.

எந்தையர் வழியில் ஏற்றமிகு துங்கு,
அவருக்கிணையாய் அருமை சம்பந்தனார்

இனியவராம் எம் டான் சியூ சின்னும்
இணைந்தே பெற்றனர் இன்ப சுதந்திரம்.
மலர்ந்தனர் மக்கள், மகிழ்ச்சியில் திளைத்தனர்,
அடிமைத் தளையை அறுத்தேயெறிந்தனர்.

மலைவளம் - கனிவளம் பல்கிப் பெருகிட,
நீர்வளம் - நிலவளம் செழித்தே ஓங்கிட
ஆலைகள் சாலைகள் அழகு பூஞ்சோலைகள்
விண்ணுயர் இரட்டை கோபுரம் காணீர்!!!

பெரியதொரு பாலம் பினாங்குத் தீவில்,
KLIA வான்வெளி வாசலாம்.
கப்பல் கப்பலாய்
கடலினில் உலாவரும், காட்சியின் மாட்சியை காணீர், காணீர்!!

இன்னும் சொல்ல எத்தனை யுண்டு?
அனைத்தும் நீங்கள் அனைவரும் அறிந்ததே!
கீழை நாடென கேலி பேசிய வேற்று நாட்டவர்
வியந்தே பார்க்கிறார்.

பார்த்தவர் வியக்கும் வண்ணம் எங்கள்
பார்புகழ் நாட்டை வளர்த்தவர்...மகாதீர்...!!
நேர்வழி இனங்கள் நிலைபெற வாழ
நிலைபெரும் வாழ்வை தந்தவர் வாழி!

ஒற்றுமை உணர்வொடு உயர்ந்திட உழைப்போம்
நாடும் நாளும்,
நம்மினிய மக்களும்
நலமாய் வாழ
இறைவனைத் தொழுவோம்..!!
--A. வருசை ஒமார்.😜😝😃😊😄😍 

சரஸ்வதி வீரப்புத்திரன் மலேசிய நாட்டில் ஒவ்வொரு மண்ணும் நம் தமிழர்களின் வியர்வை, இரத்தம், கண்ணீர் சரித்திரம் என்றுதான் சொல்லும் சார்.

ஒன்றா இரண்ட அவர்கள் பட்ட துன்பங்கள்...

இன்று நாம் சுதந்திரமாக வாழ்வது அவர்கள் நமக்கு அளித்த வாழ்வு
என்றென்றும் அவர்களை வணங்க கடமை பட்டிருக்கிறோம்...
 
 



30 ஆகஸ்ட் 2019

நுரையீரல் எப்படி வேலை செய்கிறது - 2


நுரையீரல் என்று சொல்வதை விட நுரையீரல்கள் என்று சொல்வதே சரி. ஏன் என்றால் நமக்கு இரு நுரையீரல்கள் உள்ளன. இருதயத்திற்கு இடவசதி அளிப்பதற்காக இடது நுரையீரல் சற்றுச் சின்னதாக இருக்கும். வலது நுரையீரல் கொஞ்சம் பெரிதாக இருக்கும். இயற்கையின் மருத்துவப் படைப்பில் இதுவும் ஓர் அதிசயம்.



நுரையீரல்கள் உடலில் உள்ள ஒரு வகையான திரவத்தில் மிதந்து கொண்டு இருக்கும். அதுவும் இயற்கையின் ஒரு பாதுகாப்பு அம்சமே.

நம் உடலில் உள்ள உறுப்புகளில் தண்ணீரில் மிதக்கக் கூடிய ஒரே உறுப்பு இந்த நுரையீரல்கள் தான். வேறு எந்த ஓர் உறுப்பும் தண்ணீரில் மிதக்காது. இந்த நுரையீரல்களை 12 ஜோடி விலா எலும்புகள் பாதுகாக்கின்றன. இதுவும் மற்றும் ஒரு பாதுகாப்பு அம்சமே. சரி.

நுரையீரல் எப்படி வேலை செய்கிறது என்று சொல்லிவிட்டு வேறு எங்கேயோ போவதாக நினைக்க வேண்டாம். பாலை எப்படி கறப்பது என்று தெரியாமல் பசு மாட்டை விலை பேசலாமா என்று பாட்டி சொன்னதாக நினைவுகள்... (மெலிதாக ஒரு புன்னகை).

வரிப்பந்து என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. டென்னிஸ் (tennis) என்பதற்கான தமிழ்ச் சொல். ஒரு வரிப்பந்து மைதானம் எவ்வளவு பெரிதாக இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். அந்த மாதிரி அதே அளவு தான் நம்முடைய நுரையீரலும்... மலைக்க வேண்டாம். நம்புங்கள்.





மனித நுரையீரலைப் பிரித்துப் பிரித்துப் போட்டால் ஒரு வரிப்பந்து மைதானம் அகலத்திற்குப் பிரித்துப் போடலாம். அவ்வளவு ஆயிரக் கணக்கான அடுக்குகள் நம் நுரையீரல்களில் உள்ளன. ஆனால் இது எல்லாம் நமக்குத் தெரிவதே இல்லை.

நம் உடலுக்குள் போகும் எல்லா உயிர்க் காற்றையும் நுரையீரல் பயன் படுத்தாது. அதாவது நாம் சுவாசிக்கும் காற்றில் 20% ஆக்சிஜன் எனும் உயிர்க் காற்று. அந்த 20%-இல் வெறும் 5%-ஐ மட்டுமே நுரையீரல் பயன் படுத்திக் கொள்ளும். மிச்சக் காற்றை வேண்டாம் என்று சொல்லி அப்படியே வெளியே தள்ளி விடும்.

நம் உடம்பு ஒரு பெரிய குப்பைத் தொட்டி. கண்ட கண்ட அழுக்குகள் எல்லாம் நம் உடம்பில் தேங்கிக் கிடக்கின்றன. பட்டியல் போட்டுச் சொன்னால் நம் மீதே நமக்கு வெறுப்பு வரும். பார்க்கிறதை எல்லாம் விட்டு வைக்காமல் வளைச்சு அடிச்சு சாப்பிட்டால் அப்புறம் எப்படிங்க...

இதில் பெரும்பாலோர் அசைவர்கள். ஒரு சிலர் மட்டுமே இட்லி தோசை சப்பாத்தி பிரியர்கள். ஆனால் உடலில் அசடுகள் தங்கும் விசயத்தில் சைவர்கள்; அசைவர்கள் எனும் பாகுபாடு இல்லை.  இரு பிரிவினருக்கும் ஒரே மாதிரியான கழிவுக் கசடுகள் தான்.

அப்படி நம் உடம்பில் தேங்கித் தங்கிப் போகும் கழிவுக் கசடுகளில் 30% மட்டுமே ஒன்றுக்கும் இரண்டுக்குமாய்க் கழிந்து போகின்றன. மிச்சம் 70% கழிவுகளின் நிலை என்ன. அங்கேதான் நம்முடைய நுரையீரல் ஐயா வந்து நிற்கிறார்.

அவர் தான் அந்தக் கழிவுக் கசடுகளை அழகாகப் பொட்டலம் கட்டி கெட்டக் காற்றாக வெளியே வீசி விடுகிறார். சுவாசிப்பதன் வழியாக உடலின் 70% கசடுகள் அப்புறப்படுத்தப் படுகின்றன.

நுரையீரல் ஐயா இல்லை என்றால் நம் நிலைமை என்னவாகும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.




அப்புறம் இன்னும் ஒரு முக்கியமான விசயம். ஆண்கள் சுவாசிப்பதற்கும் பெண்கள் சுவாசிப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ரொம்பவும் இல்லை. கொஞ்சம் தான்.

பெண்களும் சின்னப் பிள்ளைகளும் கொஞ்சம் வேகமாகச் சுவாசிப்பார்களாம். ஆண்கள் கொஞ்சம் மெதுவாகச் சுவாசிப்பார்களாம். நான் சொல்லவில்லை. மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள்.

பாருங்கள். சுவாசிப்பதிலும் யோசிப்பதிலும் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. சரி.

மனித நுரையீரல்களின் எடை என்ன தெரியுங்களா? ஏறக்குறைய 1.3 கிலோ கிராம். மனித நுரையீரல்கள் தான்.

மனித நுரையீரல்கள் ஐந்து லிட்டர் காற்றை ஈர்த்து வைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை. அதே சமயத்தில் ஒரு திமிங்கலத்தில் திறன் எவ்வளவு தெரியுங்களா? மயக்கம் போட்டு விழாமல் இருந்தால் சரி.

5000 லிட்டர்கள். ஆதாவது ஆயிரம் மனிதர்களுக்குச் சமமான சுவாசக் காற்றை திமிங்கலத்தின் நுரையீரல் ஈர்த்து வைத்துக் கொள்ளும். இந்த விசயத்திலும் எந்த விசயத்திலும் மனிதர்களைத் திமிங்கிலத்துடன் ஒப்பிடுவது சரியாகாது.

மனிதனின் சராசரி எடை 70 கிலோ என்றால் திமிங்கிலத்தின் சராசரி எடை 190 டன்கள். சரி. நுரையீரல் 3-ஆம் பகுதியுடன் சந்திக்கிறேன். நன்றி.

நுரையீரல் எப்படி வேலை செய்கிறது - 1

மனித உடலின் இயக்கத்திற்கு உயிர்க் காற்று (பிராணவாயு அல்லது உயிர்வளி) தேவை. உயிர்க் காற்றை ஆங்கிலத்தில் ஆக்சிஜன் (oxygen) என்று அழைப்பார்கள். உயிர்க்காற்று இல்லாமல் மனிதன் மட்டும் அல்ல. வேறு எந்த ஓர் உயிரும் உயிர் வாழ முடியாது.

நாம் சுவாசிக்கும் காற்றில் இருந்து உயிர்க் காற்றை நுரையீரல் (Lung) பிரித்து எடுக்கும் வேலையைச் செய்கிறது. அது மட்டும் அல்ல. இரத்தத்தில் உள்ள கரியமிலக் காற்றையும் உறிஞ்சி எடுத்து விட்டு அந்த இடத்தில் உயிர்க் காற்றை நிரப்பும் வேலையையும் செய்கிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடுகிறோம். இந்த விசயம் பலருக்கும் தெரியாது. ஏன் என்றால் யாரும் ஓன், டூ, திரி, போட்டு எண்ணிக் கொண்டு இருக்க மாட்டார்கள். மூச்சு விடுவதையே சிலர் மறந்து போய் இருப்பார்கள்.

சராசரியாக ஒரு மனிதர் ஓய்வு நிலையில் இருக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் 7 - 8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார். அதாவது ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் காற்று. அதாவது 388 கன அடி காற்று. (388 cubic feet) காசு கொடுக்காமல் வாங்கிய காற்று. அதனால் கவலைப் படாமல் படியுங்கள். (கோபம் வேண்டாமே).

ஒரு பெரிய மினரல் பாட்டிலின் அளவு 1 லிட்டர். அப்படிக் கணக்குப் பண்ணிப் பார்த்தால் நாம் ஒவ்வொரு நிமிடமும் 7 - 8 பெரிய மினரல் பாட்டில் காற்றைச் சுவாசிக்கிறோம்.... ஒவ்வொரு நிமிடமும்... 

ஒரு நாளைக்கு 11,000 பெரிய மினரல் பாட்டில் காற்று. இப்படி நாம் உள்ளே இழுக்கும் காற்றில் 550 பெரிய மினரல் பாட்டில் ஆக்சிஜன் காற்று இரத்தத்தில் கலக்கிறது. சரிங்களா. 

ஆக நாம் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் நம் இரத்தத்தில் 19 புள்ளி 5 விழுக்காட்டு உயிர்க் காற்று இருக்க வேண்டும். இது பெரிய விசயம் இல்லை.

ஏன் என்றால் நம் உடலுக்குள் போகும் உயிர்க் காற்றில் ஏறக்குறைய 20 விழுக்காட்டை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம். மிச்சத்தை வேண்டாம் என்று சொல்லி மீண்டும் வெளியே தள்ளி விடுகிறோம்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய செயலிழப்பு

நிர்வாக அமைப்பைக் கண்காணிக்கும் நால்வரிடம் விசாரணை

அண்மையில் தொழில்நுட்ப பாதிப்பால் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் சேவைகள் செயல் இழந்தன. அதைத் தொடர்ந்து இதில் சதி வேலை நடந்து உள்ளதா என்பதைக் கண்டறிய காவல் துறை விசாரணையை முடுக்கி உள்ளது.

காவல் துறையினர் விசாரணக்கு நால்வரை அழைத்து இருப்பதாக கே.எல்.ஐ.ஏ. விமான நிலைய உதவி தலைமை ஆணையர் ஸுல்கிப்ளி அடாம் ஷா கூறி இருக்கிறார். 

தமிழ் மலர் - 30.08.2019
கே.எல்.ஐ.ஏ. மற்றும் கே.எல்.ஐ.ஏ.2 ஆகிய இரு விமான நிலையங்களில் ஒட்டு மொத்த நிர்வாக அமைப்பைக் கண்காணிக்கும் பிரிவை அந்த நால்வரும் நன்கு தெரிந்தவர்கள். அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

இதைப் பற்றி விசாரணை நடத்துமாறு ’எம்.ஏ.எச்.பி.’ என்பப்படும் விமான சேவை நிறுவனத்தின் உயர்நிலை தலைமை நிர்வாகி காவல் பிரிவில் புகார் செய்ததை அடுத்து இந்த விசாரணை தொடங்கி உள்ளது.

இதில் சதி மறைந்து உள்ளதா? தீய நோக்கத்துடன் இது செய்யப்பட்டு உள்ளதா?

ஏற்கனவே இது ஒரு சைபர் தாக்குதல் என்று இதற்கு முன்னர் ஆரூடம் கூறப் பட்டது. இதைப் பற்றி கருத்து உரைத்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், யாரும் ஆரூடங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன்னதாக பேசியிருந்த எம்.ஏ.எச்.பி. தலைமை செயலதிகாரி ராஜா அஸ்மி ராஜா நஸ்ருடின் இந்தச் சம்பவத்தில் தீய நோக்கச் சாத்தியங்கள் உண்டு என்று கூறி இருக்கிறார்.

அண்மையில் இந்தத் தொழில்நுட்ப பாதிப்பினால் விமான நிலையத்தின் பல சேவைகள் முடங்கின. பயணிகள் பரிதவித்தனர். பல விமானப் பயணங்கள் தாமதமாயின.