09 பிப்ரவரி 2015

விண்டோஸ் 10


தினக்குரல் மலேசியா 08.02.2015 ஞாயிறு மலர்

செலாயாங் சூரியா, கோலாலம்பூர்

கே: மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 9-ஐ அறிமுகம் செய்யாமல் ஏன் விண்டோஸ் 10-ஐ அறிமுகம் செய்கிறது. அதாவது, விண்டோஸ் 9-க்குப் பதிலாக விண்டோஸ் 10 வருகிறதாம். எப்போது வருகிறது. என்ன விஷேசங்கள்? ஏன் இந்தக் குளறுபடி?


ப: பரவாயில்லையே. கணினி சம்பந்தமாக ‘லேட்டஸ்டாக’ ரொம்பவும் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள். அதற்கு முன், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான செய்தி. விண்டோஸ் 7-ஐப் போல விண்டோஸ் 8 வெற்றி பெறவில்லை என்பதே அந்தச் செய்தி.  


விண்டோஸ் 7-இன் புதிய பயன்பாட்டுச் செயலிகள் (Applications), விண்டோஸ் முறைமையின் புதிய இயக்கம் (Windows System); பயன்பாட்டுச்செயலியின் மென்பொருட்களின் (Application Software) ஒத்திசைவு போன்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினால், மக்கள் விண்டோஸ் 8-க்கு மாறிக் கொள்ளவதில், சற்று தயக்கம் காட்டி வந்தனர்.

ஓர் ஆள் இரண்டு ஆள் இல்லீங்க. பல மில்லியன் கணக்கான மக்கள், விண்டோஸ் 8-க்குப் புலம் பெயரவில்லை. என்னையும் சேர்த்து. ஆக, ஒரு கட்டத்தில், விண்டோஸ் எக்ஸ்.பி.-யை விட்டு வெளியேற நினைத்தவர்கள் கூட, விண்டோஸ் 7 முறைமைக்கே தங்களை மாற்றிக் கொண்டு வந்தனர். விண்டோஸ் 8-க்குப் போகவே இல்லை.




ஆரம்பத்தில் விண்டோஸ் 8-இல் சில பல பிரச்சினைகள். அவற்றை நிவர்த்தி செய்வதற்காக, அவசரம் அவசரமாக விண்டோஸ் 8.1 வெளியாக்கினார்கள். அதில் எளிமையான பல புதிய புதிய வசதிகள். இந்த நிலையில் விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1, விண்டோஸ் 8.2-ஐ எப்படியாவது சரிகட்ட வேண்டும் என்று, விண்டோஸ் 9-ஐ உருவாக்கினார்கள். விண்டோஸ் 9-ஐ உருவாக்கத் தொடங்கியதும், அதைப் பற்றி பத்திரிக்கைகளில் பலப்பல செய்திகள். பலப்பல வதந்திகளும் ஒட்டி வந்தன.

பொதுமக்களும் நிறுவனங்களும் பார்த்தார்கள். அதுதான் விண்டோஸ் 9 வருகிறதே. அப்புறம் ஏன் விண்டோஸ் 8-ஐ வாங்க வேண்டும் என்று, விண்டோஸ் 8-ஐ வாங்குவதைத் தற்காலிகமாக ஒத்திப் போட்டார்கள். தவிர, விண்டோஸ் 7-க்கு, 2020 ஆம் ஆண்டு வரை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு (சப்போர்ட்) வேறு கிடைக்கிறது. அப்புறம் என்ன அவசரம். ஒரு நல்ல நாள் பார்த்து, விண்டோஸ் 9-க்கு புதுமனை புகுவிழா போகலாம் எனப் பல நிறுவனங்கள் முடிவெடுத்தன. 




அதற்கும் காரணங்கள் உள்ளன. கணினியின் பிரதான இயக்க முறைமைகளை (Operating System) அடிக்கடி மாற்றிக் கொண்டு இருந்தால், ஆயிரக் கணக்கில் ஊழியர்களை வேலைக்கு வைத்து இருக்கும் நிறுவனங்களின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு வந்தது.

ஆகவே தான், அந்த நிறுவனங்கள் பொறுமையாக அமைதியாக இருந்தன. விண்டோஸ் 8-க்குப் போகாமல், விண்டோஸ் 9-க்குப் போகத் தயாராக இருந்தார்கள். இந்தக் கட்டத்தில்தான் விண்டோஸ் 9 வராது. விண்டோஸ் 10 தான் வரும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனமே அறிவித்தது.

சரி. விண்டோஸ் 9-க்குப் பதிலாக விண்டோஸ் 10 ஏன் வருகிறது என்கிற உங்கள் கேள்விக்கு வருகிறேன். 



9 என்கிற எண் இருக்கிறதே, அது ஜப்பானியர்களுக்குப் பிடிக்காத ஓர் எண். ஏன் என்று என்னைக் கேட்க வேண்டாம். இருந்தாலும் பாருங்கள், இலக்கமுறையில் (Digital) இவர்கள்தான் ஒரு புரட்சியை உருவாக்கியவர்கள்.

கணினித் தொழில்நுட்பத்திற்கு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர்கள். அவர்களிடமும் சில ஐதீகங்கள், சில அலர்ஜிகள் இருந்தன. இந்தப் பக்கம் பார்த்தால் நம்ப தமிழர்கள் மட்டும் என்னவாம். சாதி, சடங்கு, சம்பிரதாயம், சாத்திரம் என்று ஒரு பெரிய ’லிஸ்ட்’டையே போட்டு வைத்துவில்லையா. அந்த மாதிரிதான் அங்கேயும்.

ஜப்பானில் 99 புள்ளி 182 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் மனசை நோகடிக்கக் கூடாது என்பதற்காகத்தான், விண்டோஸ் 9-க்குப் பதிலாக விண்டோஸ் 10 வருகிறது. இந்த விளக்கம் போதுங்களா.

25 ஜனவரி 2015

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார்

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான்.

பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை.

வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான்.

ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்துவிடுவான். சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர்.

வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.

நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர்.

ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.

இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும்.

அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.

வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.

பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான்.

'வேலு நாச்சியார் வரவில்லையா?'' என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும்.

வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும்.

வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது.

தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

- அனுப்பி உதவியவர்: ஜெகந்நாதன்

27 டிசம்பர் 2014

கிளியோபாட்ரா ஓர் அழகு ஓவியம்


வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கழுதைப் பாலில்  குளிப்பாள். உடல் மினுமினுப்புக்காக கடல் முத்துக்களை காடியில் (vinegar)  கரைத்துக் குடிப்பாள். அவளைப் பற்றி பலப்பல கதைகள். அவள் பேரழகி மட்டும் அல்ல. ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் வாழ்ந்தவள்.

கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாற்றையே மாற்றி அமைத்தவள். போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து  கொண்டு இருக்கின்றன. நாமும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.

வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்  குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில்  கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால்  மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து  கொண்டிருக்கின்றன. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=12#sthash.cVjskS9z.dpuf
வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்  குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில்  கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன் டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால்  மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ந்து  கொண்டிருக்கின்றன. - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=12#sthash.cVjskS9z.dpuf
வரலாற்று பேரழகிகளின் பட்டியலில் இன்றுவரை, முதல் இடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. மறைக்க முடியாத மறுக்க முடியாத ஓர் அழகு ஓவியம். கிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை. வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா. 

http://www.newyorker.com/wp-content/uploads/2013/06/cleopatra-liz-taylor-580.jpg

எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமி என்பவர்கள் தங்களை கிரேக்கர்கள் எனக் கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12ஆம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா,  தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். 

தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை  எடுத்து எகிப்து மொழியை கற்றுக் கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.

வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை சாதிக்கும் உறுதி. இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம். 11  மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.

14 வயதாகும்போதே தந்தையுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18-வது வயதில் அரசியானாள்.  எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்த முடியாது. 

http://www.painting-history.com/imgs/clive_cleopatra.jpg

இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13ஆம் தாலமியை திருமணம் செய்து கொண்டாள். எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டை நாடுகள் எகிப்து  மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில்  வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.

இந்நிலையில் மர்மமான முறையில் 13ஆம் தாலமி கொல்லப் பட்டார். கிளியோபாட்ராதான் கொன்றதாகக் கூறப் படுகிறது. அதன் பின்னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது ரோமானியர்களுக்கு பிடிக்கவில்லை. இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது. அதிகாரப் போராட்டத்தில் சீசர் கொல்லப் பட்டார். ஆட்சியைப் பிடிப்பதில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் மோதல். இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்தாள் கிளியோபாட்ரா. உடனடியாக எகிப்துக்கு தப்பினாள்.

சற்றும் தாமதிக்காமல் தொடர்ந்தது அவளது அடுத்த காதல் அத்தியாயம். தனது சாகசத்தால் ரோம பேரரசின் அதிகாரத்தைக் கைப்பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்து கொண் டாள்.

இந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது. கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர்  எகிப்து மீது போர் தொடுத்தார். இதில் பரிதாபமாகத் தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார். கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறை பிடிக்கப் பட்டனர்.

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம் கொண்ட நல்ல பாம்பை கடிக்க  வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.

வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்க மாட்டாள்  என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிரிஸ்டோபர் செபர் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். ‘‘பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை.

சற்று நேர மரணப் போராட்டம் உண்டு. இதனால் உடல் அலங்கோலமாகி முகம் விகாரமாகிவிடும். கிளியோபாட்ரா அதை விரும்பவில்லை. அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. விஷத் தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கசாயம் அது. 


கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள்’’ என்கிறார்  செபர். எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து, இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவின்  வாழ்வு மட்டுமல்ல, மரணமும் புதிரும் மர்மமாகவே இருக்கிறது இன்று வரை.

இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இவள் பிறக்கும் போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே பெயர் சூட்டப்பட்டு பிறந்தவள். முன்பு வாழ்ந்த அந்த ஏழு பேருக்கும் கிடைக்காத பேரையும், புகழையும் இவள் மட்டும் எப்படிப் பெற்றாள். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என்கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள். வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில் அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன.

உதாரணமாக, வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. 


தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான வாசனைகளைக் கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள். எது எப்படியோ ஓர் அழகு ஜீவனை அநியாயமாகக் கொன்று விட்டார்கள். என்ன செய்வது. விதியின் கைகள் எழுதியே செல்லும்.