06 அக்டோபர் 2015

திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறந்த நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் எனும் காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் காவியம். இந்த நூலை இயற்றியவர் திருவள்ளுவர். அனைவருக்கும் தெரியும். இந்தத் திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்...
  • திருக்குறளில் ‘தமிழ்‘ எனும் சொல் பயன்படுத்தப் படவில்லை
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133
  • திருக்குறள் அறத்துப் பாலில் உள்ள குறட் பாக்கள் - 380
  • திருக்குறள் பொருட் பாலில் உள்ள குறட் பாக்கள் - 700
  • திருக்குறள் காமத்துப் பாலில் உள்ள குறட் பாக்கள் - 250
  • திருக்குறளில் உள்ள மொத்த குறட் பாக்கள் - 1330
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர்களை கொண்டது.
  • திருக்குறளில் உள்ள சொற்கள் -  14,000
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை - குன்றிமணி
  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள
  • திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து - னி
  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ளீ,ங
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
  • திருக்குறளை உரை ஆசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் - பரிமேலழகர்
  • திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - ஒன்பது.
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்று உள்ளது.
  • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்று உள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் ஆளப்பட்டு உள்ளது.
  • திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்து உள்ளனர்
  • நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

பெண் கொசுக்கள்

பெண்  கொசுக்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை
***********************************************************

• சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
• தர்பூசணி, தட்டும் போது “ஹாலோ” சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
• 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
• சகாரா பாலைவனத்தில் பனி மழை... 1979 பிப்ரவரியில் பெய்தது. 
• திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், பழம் வெடிக்கும்.
• கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும் ஒரே மனித உறுப்பு.
• எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகளைப் போல வேறு விதமாக இருக்கும்.  
• வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
• புது பேனாவை எழுதக் கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
• வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
• கை கடிகார விளம்பரத்தில் காட்டப் படும் 10:10 புன்னகையைக் குறிக்கும்.
• நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
• லியானார் டா வின்சி ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதுவார்.
• மறு கையால் வரையவும் செய்வார்.
• குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர்.
• 2 - 6 வயதில் தான் மூட்டுகள் வளர்கின்றன.
• ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும்.  இரத்தம் குடிக்கும். ஆண் கொசுக்கள் பூக்களில் இருந்து மகரந்தத்தைத் தான் குடிக்கும்
• கொசுக்களிலும் பெண்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை... போங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு...

விடியல் காலையில்


கடலில் ஒரு கப்பல் கவிழ்ந்தது. பயணித்தவர்கள் அனைவரும் காணாமல் போய் விட்டனர். அதில் ஒருவன் ஆள் அரவமற்ற ஒரு தீவுக்குள் வந்து சேர்ந்தான்.

அந்த மனிதன். தாவரங்களைச் சாப்பிடான். தட்டுத் தடுமாறி ஒரு குடிசையைக் கட்டிக் கொண்டான்.

சிக்கி முக்கிக் கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினான். சமையல் செய்தான்.

கடவுளுக்குத் தன் மேல் கொஞ்சமாவது கருணை இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைந்தான்.

ஒருநாள் காய் கனிகள் பறிக்கச் சென்றான். திரும்பி வந்த போது அவனுடைய குடிசை பற்றி எரிந்து கொண்டு இருந்தது.

கடவுளே! உனக்கு கருணையே இல்லையா... அல்லது நீயே இல்லையா என்று கதறினான்.

சிறிது நேரத்தில் அவனைத் தேடி ஒரு கப்பல் வந்தது. அவனுக்கு ஆச்சரியம்!

நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டான்.

தீவில் இருந்து புகை வந்தது. அதைப் பார்த்து யாரோ அவசர அபய அழைப்பு அனுப்புகிறார்கள் என்று புரிந்து கொண்டோம் என்றார் கப்பலின் தலைவர்.

ஆக, இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் ஓர் உண்மை என்ன தெரியுமா...

சோதனைகள் என்பது பெரும்பாலும் நம்மைக் காப்பாற்றுவதற்காகவே வருகின்றன.

அப்படி நினைக்க வேண்டும். அப்படி நினைத்துப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

இன்று விடியல் காலையில் தூக்கம் வராமல் ஒரு சிலர் அலைமோதி இருக்கலாம்.

அவர்களுக்கும் இந்தக் கதை போய்ச் சேர்கின்றது. அந்த அவர்களில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.