19 பிப்ரவரி 2017

தமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு






தமிழ் தாத்தா தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் சென்னையில் வாழ்ந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. தமிழகம் முழுவதும் சிதறிக் கிடந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களைத் தேடி எடுத்து பதிப்பித்த பெருமைக்குரியவர் தமிழ் தாத்தா உ.வே.சா.

அழிந்து கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களையும், மூவாயிரத்துக்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் கால்நடையாக ஊர் ஊராக அலைந்து சேகரித்து ஆவணப் படுத்தினார்.




1903ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக் கேணியில் 20 ரூபாய் வாடகையில் ஒரு வீட்டில் வசித்தார். அந்த வீட்டையே பின்னர் விலைக்கு வாங்கி தனது ஆசிரியர் நினைவாக வீட்டுக்கு ‘தியாகராச விலாசம்' என்று பெயர் வைத்தார். 


திருவல்லிக் கேணியில் உ.வே.சா வசித்த வீடு அவரது உறவினர்களின் பராமரிப்பில் இருந்தது. பின்னர் இந்த வீடு விற்பனை செய்யப் பட்டது.

கடந்த 2012 செப்டம்பரில் வீட்டின் உள்பகுதி இடிக்கப் பட்டது. அதற்கு பத்திரிகைகள், தமிழறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். 

கட்டிட இடிப்புப் பணி தடைபட்டது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள் அழிந்து விடாமல் அவற்றைத் தொகுத்து அச்சிட்டு நூல்களாக்கிய உ.வே.சா. சென்னையில் வாழ்ந்த வீட்டை தமிழக அரசு அவரது நினைவு இல்லமாகப் பராமரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழறிஞர்கள் பலரும் முன்வைத்தனர். 

இருந்தாலும் அண்மையில் அந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. இதனால் தமிழறிஞர்களும், அரசியல் தலைவர்களும் வருத்தமடைந்து உள்ளனர். உ.வே.சாமிநாத ஐயரின் பங்கு இல்லாமல் புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் காப்பியங்கள் நமக்குக் கிடைத்து இருக்காது. 

பேருந்து, ரயில் போக்குவரத்து வளர்ச்சி பெறாத காலத்தில் ஊர் ஊராக நடந்து சென்று தமிழ் நூல்களை திரட்டித் தொகுத்தவர் உ.வே.சா.

இருந்தாலும் 2014 டிசம்பரில்... தமிழ் அன்னைக்குப் பூச்சரம் கட்டிய உ.வே.சாமிநாத ஐயரின் வீடு இடிக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை. தமிழகமா தமிழைக் காக்கப் போகிறது.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
தேடுங்கள் கிடைக்குமென்றார் 

 
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) -கேளுங்கள்



 

ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் 
இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
எல்லா உயிரையும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே (2) -கேளுங்கள்

ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே  (2)
பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே
இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே  (2)
இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -கேளுங்கள்

தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா  சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின்
எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு
ஒன்றாக பதிந்து விட்டார்
அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு
ஆண்டவன் தொண்டு என்றார்

முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
யோவான்  என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே
ஞானஸ்தானமும் பெற்றாரே
துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே (2)
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே
முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே.

ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே
தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே (2)
சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே -கேளுங்கள்

18 பிப்ரவரி 2017

இறைவனிடம் கையேந்துங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
 



இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்

ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்

சம்சாரம் என்பது வீணை

திரைப்படம்: மயங்குகிறாள் ஒரு மாது
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: விஜய பாஸ்கர்



சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
என் வாழ்க்கை திறந்த ஏடு
அது ஆசைக்கிளியின் கூடு
பல காதல் கவிதை பாடி
பரிமாறும் உண்மைகள் கோடி
இது போன்ற ஜோடி இல்லை
இது போன்ற ஜோடி இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
தை மாத மேக நடனம்
என் தேவி காதல் நளினம்
இந்த காதல் ராணி மனது
அது காலந்தோறும் எனது
இதில் மூடும் திரைகள் இல்லை
இதில் மூடும் திரைகள் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை

08 செப்டம்பர் 2016

இந்தியாவில் இன்ரா இரத்தம்



மனிதர்களின் இரத்தம் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படும். அவை ஏ, பி, ஓ, ஏபி. (A, B, O, AB) ஆனால் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சூராட் எனும் இடத்தில் நோயாளி ஒருவருக்கு ஒரு புது வகையான இரத்தம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

அந்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவருடைய இரத்தம் வழக்கமாக உள்ள நான்கு வகையிலும் சேரவில்லை. அதனால் அந்த இரத்த வகைக்கு ‘இன்ரா – INRA’ எனப் பெயரிட்டு உள்ளனர். Lok Samparn Raktdan எனும் மருத்துவக் கூடத்தில் ஆய்வுகள் செய்யப் பட்டன. Dr Sanmukh Joshi, Dr Kinjal Mendpara and Dr Ankit Sheldiya ஆகிய இந்திய மருத்துவர்கள் ஆய்வுகள் செய்தனர்.


‘இன்ரா – INRA’ என்ற பெயரில் முதல் இரண்டு எழுத்துகள் இந்தியாவைக் குறிக்கும். மற்ற இரண்டு எழுத்துகள் அந்த நபரைக் குறிக்கும். இந்த நிலையில் அந்த நபரின் இரத்த மாதிரி உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கீகாரமும் கிடைத்து உள்ளது.


இதில் ஒரு பெரிய வேதனையான செய்தி. அந்தப் புதுவகையான இரத்தம் கொண்ட அந்த நபர் யாருக்கும் இரத்த தானம் செய்ய முடியாது. மற்றவரிடம் இருந்து இரத்தம் பெறவும் முடியாது. உலக அளவில் இதுவரை இவரோடு சேர்த்து ஏழு பேருக்கு இந்த மாதிரி புதுவகையான இரத்தம் இருப்பது கண்டு அறியப்பட்டு உள்ளது. இப்படி அரிதான இரத்தம் கொண்ட மனிதர்களை COLTOL என்று மருத்துவ உலகம் அழைக்கிறது.


இன்னொரு வகை அரிய இரத்தம் உள்ளது. அதன் பெயர் பாம்பாய் இரத்தம் (Bombay Blood). உலகில் 10,000 பேரில் ஒருவருக்கு இந்த வகை இரத்தம் உள்ளது.


சான்று: http://www.india.com/news/india/new-blood-group-found-in-india-gujarat-doctors-verify-sample-with-who-1456095/