27 ஜூன் 2017

உங்கள் திறமை

ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்குத் தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. 





அந்த குரங்கிடம் தன் தோகையைக் காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில்.

அதற்கு குரங்கோ, "மயிலே! இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். ஆனால் அந்தக் குயிலைப் பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கிறது. 


அழகாக பாடி மனிதர்களைச் சந்தோசப் படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலைக் கேட்டு மகிழ்கின்றனர். 

அவர்களைச் சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்தக் குயிலே இறைவனின் அற்புதப் படைப்பு" என்றது.

இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்குச் சென்று கத்தத் தொடங்கியது. அதன் கர்ண கொடூரச் சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்துத் தோப்புக்குள் விரட்டினார்கள் .

நீதி: பிரபுதேவாவால் பாலசுப்பிரமணியம் போல பாட முடியாது. பாலசுப்பிரமணியத்தால் பிரபுதேவா போல ஆட முடியாது.  

உங்கள் திறமையைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால் போதும். அடுத்தவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்பட தேவையே இல்லை.

ஐயோ பாவம்

வயதான ஒரு தாத்தாவின் மீது ஒரு சுவர் சரிந்து விழுந்தது. அவர் இறந்து விட்டார். சுவரைக் கட்டிய கொத்தனார் மீது வழக்கு போடப் பட்டது. அவன் சொன்னான் ’என் மீது தவறு இல்லை. மண்ணையும் சிமெண்டையும் குழைத்தவன் தான் சரியாகக் குழைக்கவில்லை’


மண்ணைக் குழைத்தவன் மீது வழக்கு போடப் பட்டது. அவன் சொன்னான் ’நான் தவறு செய்யவில்லை. தண்ணீர் ஊற்றும் பானை வாய் அகலம். அதனால் தவறு நடந்து விட்டது’ என்றான்.

பானைக்காரன் மீது வழக்கு போடப் பட்டது. அதற்குப் பானைக்காரன்  சொன்னான் ‘நான் பானையை ஒழுங்காகத் தான் செய்தேன். அப்போது ஒரு நாட்டியகாரி அந்த வழியாகப் போனாள். அதனால் தான் பானை இப்படி ஆகிவிட்டது’ என்றான்.

நாட்டியக்காரி மீது வழக்கு போடப் பட்டது. அதற்கு அவள் ‘நான் ஒரு வண்ணானிடம் துணி துவைக்க கொடுத்து இருந்தேன். அதை வாங்கத் தான் அந்த வழியாகப் போனேன்’ என்றாள். 


வண்ணான் மீது வழக்கு போடப் பட்டது. வண்ணான் சொன்னான் ’நான் சலவை போடும் கல்லின் மீது ஒரு முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவர் தான் காரணம்’ என்றான்.

முனிவரிடம் போய் கேட்டார்கள். பாவம் அவர். அமைதியாகத் தியானத்தில் இருந்தார். ’இந்த ஆள்தான் காரணம்’ என்று சொல்லி அவரைக் கொன்று விட்டார்கள்.

யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டனை அனுபவிக்கும் காலம் இது. அதற்குப் பெயர் தான் பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.

26 ஜூன் 2017

இருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா

1950களில் மலேசியத் தந்தை துங்கு அவர்கள் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் மலாயா பல்கலைக் கழகத்தில் டாக்டர் இராம சுப்பையா என்பவர் தமிழ்மொழிப் பேராசிரியராக இருந்தார். 
 

இவரும் அப்போதே 60 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஓர் இருமொழிச் செயல் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அவர் கொண்டு வந்த திட்டம் அப்போதைக்கு நல்ல ஒரு திட்டம் தான். இல்லை என்று சொல்லவில்லை. தூர நோக்குப் பார்வையில் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அப்போதைக்கு அவரின் தலையாய நோக்கம்.

அப்போதைக்கு நல்ல ஒரு தூரநோக்குச் சிந்தனை. அப்போதைக்கு வேறு ஒரு கோணத்தில் அவர் பார்த்து இருக்கிறார். தப்பாகச் சொல்லவில்லை.

இருந்தாலும் டாக்டர் இராம சுப்பையாவின் அந்தத் திட்டம் 1950ஆம் ஆண்டுகளில் அப்படியே அமலாக்கம் செய்யப்பட்டு இருந்தால் இன்றையச்  சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஓர் உறுதியற்ற நிலை ஏற்பட்டு இருக்கலாம். 

 

பதற்றத்தின் தடுமாற்றங்களையும் பார்க்க நேர்ந்து இருக்கலாம். ஒரு மொழியின் உயிர்ப் போராட்டத்தில் ஊஞ்சலாடும் ஒரு சமூகத்தையும் பார்க்க வேண்டி வந்து இருக்கலாம்.

டாக்டர் இராம சுப்பையா சொன்ன வழியில் போய் இருந்தால் மலேசியத் தமிழர்களின் அடையாளம் சன்னமாய்த் தேய்ந்து போய் இருக்கலாம். இது என் கருத்து. 

அந்தத் தாக்கத்தினால் தமிழர்களின் சமூக அமைப்புகளும் அடையாளம் குன்றி ஒரு தொய்வு நிலையைக் கண்டு இருக்கலாம்.

50 ஆண்டுகள் என்பது வளரும் நாடுகளில் பெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு கால வரையறை.




நாம் கண்மூடித்தனமாக எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாளைய பின்னாளில் நமக்கு மட்டும் அல்ல நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் பாதகங்களை உருவாக்கலாம். சரிங்களா. அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும்.

ஆக இந்த மாதிரி ஒரு நொய்மையான விவகாரத்தில் காலை எடுத்து வைத்து விட்டால் அப்புறம் பின் வாங்கவே முடியாதுங்க. 

சுருங்கச் சொன்னால் நம்முடைய தமிழ்ப் பள்ளியின் உரிமைகளை நாம் நிரந்தரமாக இழக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.

என்னுடைய பணிவான வேண்டுகோள் இதுதான். என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது. அதே போல என் மொழிக்கு ஏற்படப் போகும் ஓர் அவலத்தை எடுத்துச் சொல்லவும் உரிமை இருக்கிறது.

நினைவில் கொள்வோம். முதலாவதாக நம் தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளை முதலில் காப்பாற்றினால் தான் பின்னர் தமிழ் மொழியையும் காப்பாற்ற முடியும்.


அடுத்து எதிர்காலத்தில் நம் சந்ததியினரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. 

தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி இனி மெல்லச் சாகும்.

என் தமிழ்ச் சமுதாயமே தயவு செய்து தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாம். 

தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில மொழி, தேசிய மொழி ஆகிய இரு மொழிகளும் எப்போதும் போல தனிப் பாடங்களாக இருக்கட்டும். 

மற்றப் பாடங்கள் அனைத்தும் தமிழ் மொழி போதனா மொழியில் இருக்கட்டும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

25 ஜூன் 2017

வேலுநாச்சியார்

ஆயிரம் ஆயிரம் சாதனை மங்கைகளை தமிழரின் வரலாறு பார்த்து பிரமிப்பு அடைந்து இருக்கிறது. ஆனால் வேலு நாச்சியார் போல ஒரவீர மங்கையைப் ார்த்ு இல்ல. வீரம் என்றால் சாான்ய வீரம் அல்ல. மாபெரும் ண் பார்த் வீழ்த்திய வீரம்.



இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்த ஊர். வேலுநாச்சியாரின் தந்தையார் முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ார்கள். இ இந்தக் காலத்திும் சி அந்தக் காலத்ிலும் சி மிகச் சியான பழமொழி. சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.




வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவை அனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டி தான்.

அவருக்குப் பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறு கொண்டும் வேல் கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை.

1746-ஆம் ஆண்டு. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் வேலு நாச்சியாரை மணமுடித்தார். வேலுநாச்சியார் சிவகங்கைக்குக் குடிபுகுந்தார்.




சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கை தான்.

ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டது இல்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்து விடுவான். சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க் கலைகள் தெரிந்தவர்.

வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாகப் போர்ப் படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.




நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீன ரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கித் தன் கட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டான் நவாப்.

ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர்.

ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை.

வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப் பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.




திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்து விட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்தில் இருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.

இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப் படைகளை சிதறி ஓடச் செய்தார்.

இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டும் என்பது தான் அவரது ஒரே இலக்காக இருந்தது. ஆனால் தளபதிகளாய் இருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபைப் பழிவாங்க முடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும்.




அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்து விட்டன.

வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். 

காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.



பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையில் இருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டும் அல்ல விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார்.

ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளில் இருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான்.

'வேலு நாச்சியார் வரவில்லையா?'' என்று ஹைதர் அலி கேட்க தன் தலைப் பாகையை கழற்றினான் ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.

தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர்.

வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது.

ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப் படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால் தான் சிவகங்கையை மீட்க முடியும்.




வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும் இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும்.

வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது.

இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப் பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது.

தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்குச் சாட்சியாக இன்றும் இருக்கிறது.

- அனுப்பி உதவியவர்: ஜெகநாதன்

மலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும்

ஒரு தகப்பன். அவனுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பிள்ளையை ஊட்டி ஊட்டி வளர்க்கிறான். சாப்பிட்ட மிச்சம் மீதைக் கீழே கொட்டுவதற்குத் தங்கத் தட்டுகள். வாரிப் போட வெள்ளிக் கரண்டிகள். மற்றொரு பிள்ளை தன் சொந்த உழைப்பினால் உழைத்து உழைத்து உயர்ந்து போய்… இப்போது செல்வச் செழிப்பில் சீமானாய் வாழ்கின்றது. 
 

மற்றொரு பிள்ளையைத் தகப்பன் கண்டு கொண்டதே இல்லை. பார்த்தும் பார்க்காதது மாதிரி போய் விட்டார். அந்தப் பிள்ளை தீய வழிகளில் செல்கிறது. தீய நோக்கத்தில் செயல் படுகின்றது. இப்போது துயர வாழ்க்கையின் எல்லைக்கே ஓடித் திரும்பிப் பார்க்கின்றது. சொல்லில் மாளா துயரங்களில் சிக்கித் தவிக்கின்றது.

அந்தக் கடைசிப் பிள்ளையை அரவணைத்துச் சென்று இருந்தால்… அந்தப் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருந்து இருக்கும் இல்லையா. அந்த வகையில் அந்தக் கடைசிப் பிள்ளை தான் இப்போதைக்கு நான் சொல்ல வரும் மலேசிய தமிழன் எனும் மலேசியத் தமிழர்கள். புரியும் என்று நினைக்கிறேன்.

அடிபட்டு மிதிபட்டு அவதிப் பட்டு

அந்த மலேசியத் தமிழர்களில் சிலர் தான் இப்போதைக்குக் குண்டர் கும்பல் கலாசாரத்தில் அடிபட்டு மிதிபட்டு அவதிப் பட்டு அல்லல் படுகின்றனர். 
 

இந்தக் குண்டர் கும்பல்கள் எல்லாம் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தக் காளான்கள் இல்லை. காலம் காலமாக இவர்களை வைத்துத் தான் சில அரசியல் தலைகளும் பல சமூகத் தலைவர்களும் கோலோச்சிக் கோலம் போட்டனர். அந்தக் கோலத்திற்குள்ளே ஒரு செடி நட்டு அதற்குத் தண்ணீர் ஊற்றி உரம் போட்டுச் செழிக்க வைத்து விட்டனர்.

சட்டத்தைக் கட்டிக் காக்க வேண்டிய சிலரும் இவர்களை வைத்துத் தான் அப்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர். இப்போது வாழ்ந்து கொண்டும் வருகின்றனர். மன்னிக்கவும். இது மறுக்கப்பட முடியாதா உண்மை.

சரி. தலைப்பிற்கு வருவோம். மலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும்... இந்தச் சொற்கள் அதீதிய வேதனைச் சொற்கள். அந்தச் சொற்களை இப்போதைக்குச் சற்றே… கொஞ்ச நேரம் தள்ளி வைப்போம். அப்புறம் அசை போட்டுப் பார்ப்போம். அதற்கு முன்…

இப்போதைக்கு ஒரு சர்ச்சை. மலேசியத் தமிழ் ஊடகங்களில் சிக்கித் தவிக்கும் ஒரு சிக்கலான சர்ச்சை. மலேசியத் தமிழர்களைத் தற்காலிகமாகக் கிரங்கடிக்கும் ஒரு சர்ச்சையான சிக்கல்.
 

அதாவது தமிழ்ப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரம். பழைய குண்டரியத்தின் புதிய நேரலைகள். அண்மைய காலங்களில் அதைப் பற்றி அநாகரிகமான சொல்லாடல் விரசங்கள். தேவையற்ற சொல் சரசங்கள். கேட்கும் போது வேதனையாகவும் இருக்கிறது. அசை போடும் போது அசிங்கமாவும் இருக்கிறது. என்ன செய்வது. பொறுத்துக் கொள்வோம். வேறு வழி இல்லை.

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை

மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரம்... நாடறிந்த தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறியதாக ஊடகச் செய்திகள். அப்படிச் சொல்லவே இல்லை என்பது அவரின் மறுப்புச் செய்திகள்.

அவருக்கு எதிராகத் தமிழ் அமைப்புகளுடன் அரசு சாரா இயக்கங்களின் கண்டனக் கூற்றுகள். கிள்ளான் போலீஸ் நிலையத்தில் புகார்கள். மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. 
 

இது எந்த அளவிற்கு உண்மை. எரிகிற வீட்டில் எண்ணெய் ஊற்றுவது நம்முடைய நோக்கம் அல்ல. மலேசியப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரத்தைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். தொடர்ந்து படியுங்கள். அதற்கு முன்… இன்னும் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தக் குண்டர் கும்பல் கலாசாரம் சீனாவில் இருந்து கப்பலேறி வந்த கலாசாரம். அங்கே இருந்து இங்கே வந்து இங்கே இருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குத் துணை போன கலாசாரம். அப்போது இந்திய இளைஞர்களை மிரட்டி உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டு வாலாட்டியக் கலாசாரம்.

இப்போது இந்தியர்களைத் தலைவர்களாகக் கொண்டு இந்தியச் சமுதாயத்தையே சீரழித்துக் கொண்டு வரும் கலாசாரம். தந்தை பெரியரால் ஒழிக்கப் பட்ட சாதி சமயம் எப்படி உரம் போட்டு மீண்டும் வளர்க்கப் பட்டதோ அதே போல குண்டர் கலாசாரமும் வளர்ந்து விட்டது.

ஆழ விருச்சகம் போல வேர் ஊன்றி பயம் இன்றி வளர்ந்து இருக்கிறது. ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்ல முடியாது. காலம் இன்னும் கரையவில்லை.

தமிழர்ச் சமுதாயத்தின் தலையாயப் பிரச்சினை

மலேசியத் தமிழர்களிடையே இந்தக் குண்டர் கும்பல் கலாசாரம் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. அந்தப் பிரச்சினை இப்போதைக்கு தமிழர்ச் சமுதாயத்தின் தலையாயப் பிரச்சினை. இந்திய இளைஞர் சமுதாயத்தின் மலையாயப் பிரச்சினை. மிக உன்னதமான பாரம்பரியத்திற்குச் சவால் விடும் பிரச்சினை. மிகப் புனிதமான ஒரு நாகரிகத்தை ஓரம் கட்டும் தேவையற்றப் பிரச்சினை.
 

1970 – 1980களில் இந்தியர்களிடம் அதிகம் காணப்படாத அந்தக் கலாசாரம் இப்போது எந்த கட்டத்தில் இருக்கிறது தெரியுமா… இந்தியர்களைக் கண்டாலே மற்ற சகோதர இனத்தவர்கள் சற்றே ஒதுங்கிச் செல்லும் ஒரு கட்டத்தில் வாழ்ந்து வருகிறது.

2014இல் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் மலேசியாவில் 218 குண்டர் கும்பல்கள் உள்ளன. அவற்றில் 49 குண்டர் கும்பல்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. அந்த 49 குண்டர் கும்பல்களில் 33 கும்பல்கள் இந்தியர்களின் ஆதிக்கத்தில் செயல்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். ஓப்ஸ் சந்தாஸ் 1 எனும் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.
 
இனம்
மக்கள் தொகை
குண்டர் கும்பல் ஈடுபாடு
மலாய்க்காரர்கள்
65%
5%
சீனர்கள்
27%
20%
இந்தியர்கள்
7%
72%
சபா மாநிலத்தவர்
1%
1%
சரவாக் மாநிலத்தவர்
1%
2%

மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் 7% தான். இருந்தாலும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் 72%. இது அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள். அவற்றை மறுக்க முடியுமா அல்லது மறைக்கத் தான் முடியுமா…
 

அண்மைய காலமாக நம் நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவங்கள். நினைவு கூர்வோம். அவற்றின் பின்னணியில் கூலிக் கொலையாளிக் கும்பல்கள் இருக்கலாம் எனும் சந்தேகங்கள். தனிப்பட்ட விவகாரங்களில் வஞ்சம் தீர்க்கும் நகர்வுகள். கூலி கொலையாளிகள் ஏவப்பட்டு இருக்கலாம் எனும் சாத்தியங்கள். அவற்றை அரச மலேசிய போலீஸ் படையினர் மறுக்கவும் இல்லை.

மக்கிப் போன மனித உயிரின் விலை

குறிப்பிட்ட ஒரு சின்னப் பெரியத் தொகைக்கு மற்றவர்களைச் சர்வ சாதாரணமாகச் சுட்டுக் கொல்லும் ஒரு கலாசாரம். எந்தப் பின்னணியையும் பார்க்காமல் பணத்திற்காகச் சுட்டுக் கொல்லும் ஈவு இரக்கமற்ற கலாசாரம். இதை எல்லாம் பார்க்கும் போது மனித உயிரின் விலை ரொம்பவுமே மக்கிப் போய் விட்டதாகத் தெரிகின்றது.

இந்தக் கூலிக் கொலையாளிகள் குறைந்த எண்ணிக்கையில் செயல்பட்டு வரலாம் என்று மலேசியப் போலீஸ் படை துணைத் தலைவர் டான்ஶ்ரீ நோர் ரஷீட் இப்ராஹிம் கூறி இருக்கிறார். இங்கே இன்னும் ஒரு முக்கியமான விசயம். தெரிந்து கொள்ளுங்கள். கூலிக் கொலையாளிகளில் பிடிபட்டவர்களில் பெரும்பாலோர் இந்தியர்களாகவே இருக்கின்றனர். அதுதான் வேதனையிலும் வேதனையான விசயம்.
 

இந்தியர் சம்பந்தப்பட்ட குண்டர் கும்பலின் செயல்பாடுகள் நாட்டிற்குப் பெரும் மிரட்டலாக விளங்கக் கூடும். அது போலீசாரின் கணிப்பு. அதே சமயத்தில், ஒட்டு மொத்தமாக இந்திய இனத்தவர் மட்டுமே குண்டர் கும்பல் செயல்களில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று கூறுவதும் சரி அல்ல. இது நம்முடைய கணிப்பு.

இதைத் தவிர ஒவ்வோர் ஆண்டும் 5000க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் கைது செய்யப் படுகின்றனர். அவசரகாலச் சட்டத்தின் கீழ் குண்டர் கும்பல் குற்றத்திற்காக விசாரணை இல்லாமல் தடுத்து வைக்கப் படுகின்றனர்.

பந்திங் டத்தோ சோசிலாவதி கொலை

இந்திய இளைஞர்கள் குற்றங்களைச் செய்வதற்கு என்ன காரணம். அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை ஒரு காரணம் என்று சொல்ல முடியுமா. கண்டிப்பாக முடியாது. இதற்கு ஓர் எடுத்துக் காட்டு.

2010ஆம் ஆண்டு பந்திங்கில் நடந்த டத்தோ சோசிலாவதி கொலை. அதில் சம்பந்தப் பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள். அவர்களுக்குப் பணம் இல்லையா. படிப்பு இல்லையா. சிந்திக்கும் ஆற்றல் இல்லையா. அல்லது சீர்தூக்கிப் பார்க்கும் திறன் தான் இல்லையா. எல்லாமே இருந்தன. இத்தனை இருந்தும் கொலை நடந்து இருக்கிறது. 
 

சான்றோர் பழிக்கும் பாவச் செயல்களுள் ஒன்றான படுகொலை நடந்து இருக்கிறது. இதற்குக் காரணம் தான் என்ன. பசியா... பட்டினியா... வேலை இல்லாமையா... அல்லது இனவாதமா... இவற்றுள் எதுவுமே இல்லை. ஆனால் கொலை நடந்து இருக்கிறது. ஏன். சம்பந்தப் பட்டவர்கள் அனைவருமே இந்தியர்கள். எப்படி… அதுவும் ஒரு புதிரே…

வறுமையிலும் செம்மையுடன் வாழ வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. சான்றோர் வகுத்த வாழ்வியல் கொள்கை. இருந்தாலும் செம்மையில் வறுமையின் மனதோடு வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்வது ஒரு சிலரின் சாவியல் கொள்கை.