27 மே 2019

ராகுல் சாங்கிருத்தியாயன்

வால்கா முதல் கங்கை வரை

ராகுல் சாங்கிருத்தியாயன் (ஏப்ரல் 9, 1893 - ஏப்ரல் 14, 1963) தன் வாழ்நாளில் 45 ஆண்டுகள் இந்தியா, நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், சோவியத் ரஷ்யா நாட்டுப் பயணங்களில் செலவழித்தவர்; பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர். 



புத்தத் துறவியாகி, அதன் பின்னர் மார்க்சியவாதி ஆனவர். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர்.

இருபது வயதில் எழுத ஆரம்பித்த சாங்கிருத்தியாயன் பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். இவர் எழுதிய நூல்களில் பிரபல: வால்கா முதல் கங்கை வரை எனும் வரலாற்றுப் புனைவு நூலாகும். 



வால்கா முதல் கங்கை வரை வரலாற்றுப் புனைவு நூலாகும். கி.மு. 6000-இல் தொடங்கும் இந்த நூல் கி.பி. 1942-இல் முடிகிறது. இந்த நூல் ஞான முத்தையா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு, மலையாள மொழிபெயர்ப்புகள்:

1. பொதுவுடமைதான் என்ன?
2. வால்காவில் இருந்து கங்கை வரை
3. சிந்து முதல் கங்கை வரை



சாங்கிருத்தியாயன் 1893-ஆம் ஆண்டு கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் முதல் குழந்தையாகப் பிறந்தவர்.

இவரின் இளம் வயதிலேயே இவரின் பெற்றோர்கள் இறந்து விட்டார்கள். அதனால் இவர் தன் பாட்டியால் வளர்க்கப் பட்டார்.

சாங்கிருத்தியாயன் ஆரம்பப்பள்ளி வரை தான் படித்தவர். ஆனால் தன் வாழ் நாளில் பல்வேறு மொழிகளைத் தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய் விளங்கினார். 



இவர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்றாகும். அத்துடன் இந்தி, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம் போன்ற இந்திய மொழிகளும்; சிங்களம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி ஆகிய பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார். புகைப்படக் கலையையும் படித்து இருந்தார்.

1958-ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக சாகித்திய அகடெமி விருது அவருக்கு வழங்கப் பட்டது. 1963-ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப் பட்டது. சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்திய த்ததுவவியல் பேராசிரியராய் நியமித்தது. 



*இராகுல் சாங்கிருத்தியாயன் பெயரால் வழங்கப்படும் விருதுகள்*

1. மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது - இந்திப் பயண இலக்கியப் பங்களிப்பு. 



2. மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது - சுற்றுலா ஆராய்ச்சி தொடர்பான இந்திப் புத்தகங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக