06 செப்டம்பர் 2019

ஜாகிர் நாயக்: மலேசியாவுக்கு என்ன நன்மை

சமயப் போதகர் ஜாகிர் நாயக் இந்தியாவில் பிறந்தவர். அவருக்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிடத் தகுதி (Permanent Resident) எந்த அடிப்படையில் வழங்கப் பட்டது என்று கேள்வி எழுப்புகிறார் மூத்த அரசியல்வாதி ரயிஸ் யாத்திம்.


”ஜாகிர் நாயக்கினால் மலேசியாவுக்கு கிடைத்த நன்மை என்ன? இங்கு உள்ள முப்திகளால் கொடுக்க முடியாத எதை அவர் இங்கு கொடுத்தார். இது தொடர்பாக இதுவரையிலும் சரியான விளக்கம் மக்களுக்கு வழங்கப் படவில்லை.”

”ஜாகிர் நாயக் இங்கு வந்து சிலரை இஸ்லாத்துக்கு மதம் மாற்றினார். அதற்காக நிரந்தர வசிப்பிடத் தகுதி அவருக்கு வழங்கப் பட்டதா அல்லது மலேசியரிடம் இல்லாத சமய அறிவு அவரிடம் இருக்கிறதா? ஒரு திட்ட வட்டமான காரணம் இதுவரையிலும் தெரிவிக்கப் படவில்லை.”


(We put the law behind us in terms of someone with PR coming in, without it being explained to the people what is the benefit gained (from doing so) that our muftis can't give. Is it just because he converted to Islam certain people, or is there knowledge that Malaysians don't have?)

‘வயல் காட்டில் ஓர் எருமை கத்துவது’ போல உள்ளது. (It's like a 'buffalo mooing in a field)

(சான்று: https://www.malaysiakini.com/news/490612)

நெகிரி செம்பிலான் மாநில முதல்வராக (1978 - 1982) இருந்தவர் ரயிஸ் யாத்திம். ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் (1974 -2013). மலேசிய அமைச்சரவையில் நீண்ட கால அமைச்சர். மலேசியாவின் மூத்த அரசியல்வாதி. தற்சமயம் பெர்சத்து கட்சியின் தலைவர். 


ஜாகிர் நாயக்கிற்கு எப்படி நிரந்தர வசிப்பிடத் தகுதி கிடைத்தது என்பதற்குச் சரியான விளக்கம் தரப்பட வேண்டும். அவர் மலேசியாவிற்கு வரும் போது இந்த நாட்டில் முதலீடுகள் செய்வதற்காக எதைக் கொண்டு வந்தார் என்றும் ரயிஸ் யாத்திம் கேள்வி எழுப்பினார்.

கடந்த மாதம் கிளந்தானில் சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜாகிர் நாயக்  சீனர்களையும் இந்தியர்களையும் சிறுமைப் படுத்திப் பேசினார். அதனால் நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

மேலும் அவர் சொன்னார். ”இந்தச் சர்ச்சைகள் அடங்க வேண்டும் என்றால் ஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும்.” இதற்கு முன்பும் அவர் கூறி இருந்தார். அதையே மீண்டும் வலியுறுத்தினார்.


”ஜாகிர் நாயக்கிற்கு இந்தோனேசியாவில் வரவேற்பு இல்லை. இந்தியா சென்றால் அவர் வழக்கு விசாரணைகளை எதிர்நோக்க வேண்டி வரும். சவூதி அராபியாவும் அவரை நிராகரித்து உள்ளது. ஆனால் நாம் அவரை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். ஜாகிர் நாயக் இங்கு இருந்து செல்வதே நாட்டுக்கு நல்லது” என்கிறார் ரயிஸ் யாத்திம்.

ஜாகிர் நாயக்கிற்குப் புகலிடம் வழங்குவதைச் சவூதி அரேபிய அரசாங்கம் நிராகரித்து இருப்பதாக உறுதிபடுத்தப் படாத அறிக்கை ஒன்றை ரயிஸ் யாத்திம் மேற்கோள் காட்டி உள்ளார்.

(Rais was citing an unverified report that the Saudi Arabian government had rejected asylum for Zakir.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக