14 நவம்பர் 2019

இவன் என்ன நினைப்பான் - இன்றைய சிந்தனை - 14.11.2019

இவன் என்ன நினைப்பான்... அவன் என்ன நினைப்பான் எனும் நினைப்பிலேயே பலரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். எவன் என்ன நினைத்தால் என்னங்க. அவனா உங்களைத் தேடி வந்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சோறு போடப் போகிறான். 


உண்மையில் ஒரு பயலும் உங்களைப் பற்றி நினைக்கிறதே இல்லை. அவன் அவனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள்.

பொதுவாகவே எவன் ஒருவனால் தன்னுடைய பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லையோ... அப்போது தான் அடுத்தவன் மீது அதிகமாகக் குறை காண ஆரம்பிக்கிறான். புரியுதுங்களா. இதுதான் உண்மை.

தன்னுடைய பிரச்சினையைத் திசை திருப்புவதற்காக அடுத்தவர் மீது அடிக்கடி குறை காண்பான். அதைப் பூதக் கண்ணாடி வைத்து பெரிதாக்கி உலகம் பூராவும் விளம்பரம் செய்வான்.

உண்மையில் யார் ஒருவர் அடுத்தவர்களின் மீது சதா குறை காண்கிறார்களோ அவர்களிடம் தான் அதிகமாகக் குறைகள் இருக்கும்.

தங்களுடைய குறைகளையும் தவறுகளையும் மறைப்பதற்காகத் தான் மற்றவர்கள் மீது அடிக்கடி குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது ஒரு வகையான நோய்.

ஆக அப்படிப்பட்ட மனநோய் பிடித்தவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். நீங்கள் பாட்டிற்கு உங்கள் வேலையைச் செய்யுங்கள். வேலை வெட்டி இல்லாமல் குரைக்கும் நாய்கள் கடிப்பது இல்லை. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
14.11.2019






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக