26 மார்ச் 2020

கொரோனா 2020 மலேசியா: இரண்டு வயது பாலகன் பாதிப்பு

பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்று சொல்வார்கள். அது போல கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இரண்டு வயது பச்சிளம் பாலகனுக்கும் தொடர் பாதிப்புகள். ஏற்கனவே அந்தச் சிறுவனுக்கு இரத்தப் புற்று நோய்.

குபாங் கிரியான் மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையில் கீமோதெரபி (chemotherapy) சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. 



சில தினங்களுக்கு முன்னர் அவருடைய இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்க்கும் போது கொரோனா கோவிட் 19 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை மலேசியப் புற்றுநோய்க் குழந்தைகள் ஆதரவு சங்கம் (Pesona) அறிவித்து உள்ளது. சோதனை மேல் சோதனைகள் வரும். உண்மைதான்.

அந்தச் சிறுவன் குணமடைய மக்கள் பிரார்த்தனை செய்வார்கள் என்றும்; அந்தச் சிறுவன் தன் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்றும் அந்தச் சங்கம் நம்பிக்கை தெரிவிக்கிறது.

கோத்தா பாருவில் உள்ள ராஜா பெரம்புவான் ஜைனாப் மருத்துவமனையில் அந்தச் சிறுவன் புற்று நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருடன் நெருங்கிப் பழகிய ஒருவரிடம் இருந்து வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவ அதிகாரிகள் சந்தேகப் படுகிறார்கள்.

அந்தச் சிறுவன் நலம் பெற வேண்டும். கொரோனா தாக்கத்தில் இருந்து மீட்சி பெற வேண்டும். வேண்டுகிறோம். பிரார்த்தனைகள் செய்வோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக