02 ஏப்ரல் 2020

கொரோனா வைரஸ்: மறுபடியும் கரடியின் பித்தநீர்

கொரோனா நோயினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கரடியின் பித்தநீரை மருந்தாகப் பயன்படுத்தலாம். சீனா அனுமதி வழங்கி உள்ளது. அதே சமயத்தில் வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறி விட்டது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.



கரடியின் பித்தநீர் (BEAR BILE), ஆட்டின் கொம்பு (GOAT HORN) மற்றும் மூலிகைகள் அடங்கிய ஊசி மருந்திற்குப் பெயர் டாங் ரே குவிங் (Tan re Qing).

இந்த மூலிகை ஊசியைப் பயன்படுத்தலாம் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (National Health Commission) ஒப்புதல் வழங்கி உள்ளது.

ஆனால் இந்தக் கலவைக்கு மருத்துவ குணம் உள்ளது என்பது இதுவரையிலும் நிரூபிக்கப் படவில்லை. சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தில் கரடியின் பித்தநீர் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கரடியின் பித்தநீர் கல்லீரலில் சுரக்கிறது. அந்த நீர் பின்னர் கரடியின் பித்தப் பையில் இருந்து சேகரிக்கப் படுகிறது.


கரடியின் பித்த நீரில் உர்சோ டிஆக்சி கோலிக் அலிலம் (ursodeoxycholic acid) உள்ளது. மனிதர்களின் பித்தப்பைக் கற்களைக் கரைக்கும் தன்மை இந்த அமிலத்திற்கு உள்ளதாகச் சீனர்கள் நம்புகின்றனர்.

மனிதர்களின் கல்லீரல் நோய்களையும் கரடியின் பித்த நீர் குணப் படுத்துவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் கொரோனா நோய்களைத் தீர்க்குமா. தெரியவில்லை.

சீனப் பாரம்பரிய மருந்து தயாரிப்பாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, சீனா முழுவதும் சுமார் 20,000 கரடிகள் கொடூரமான முறையில், சிறிய சிறியக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளன.

சீனாவில் கரடிகளைக் கூண்டுக்கள் அடைத்து வைத்து அவற்றின் பித்தநீர் எடுப்பது அங்கே நீண்ட நாள் வணிகத் தொழில்.




அந்தத் தொழிலுக்கு பித்தநீர் பண்ணை (Bile farming) என்று சொல்கிறார்கள். சீனாவில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட பண்ணை வணிகம்.

பெரும்பாலும் ஆசியக் கரடிகள் (Asiatic Black Bear) பலிக்கடா ஆகின்றன. மேலும் சட்டவிரோதமாக செயல்படும அனைத்துலகச் சந்தையில் கரடியின் பித்தநீர் அதிக விலையில் விற்கப்படுகிறது.

இன்னும் ஓர் அதிர்ச்சியான செய்தி. ஒரு வாரத்திற்கு முன்னர் தான் உணவுக்காக வனவிலங்குகளை விற்பது சீனாவில் தடை செய்யப்பட்டது. சொல்லி ஒரே வாரம் ஆகவில்லை. அதற்குள் மனசு மாறி விட்டது.




What is Bear Bile Farming? Commercial 'bear bile farming' began in China in the 1980's. It is a cruel farming system designed to extract bile from the gallbladders of living bears. Previous to this, bears were hunted in the wild for their gallbladder bile, which is used in traditional Chinese medicine.

(கரடியின் வயிற்றில் ஓட்டைப் போட்டு பித்த நீர் எடுக்கப் படுகிறது... கீழே உள்ள படத்தில்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Athiletchumy Ramudu: இது மனித ஜென்மமா இல்ல வேற எதாவதா?? இதயம் அல்லது மனசாட்சி இது எதுவும் இல்லையா??

Athiletchumy Ramudu >>> Muthukrishnan Ipoh: இந்த உயிரினங்களை இப்படி கொடுமை படுத்தி அவங்க வாழனும்னு அவசியமே இல்லையே!!!கடவுளே!!!

Muthukrishnan Ipoh >>> Athiletchumy Ramudu: அதைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதாகவும் தெரியவில்லையே... தாங்கள் மட்டும் உயிர் வாழ்ந்தால் போதும்... அவர்களின் உயிர் அவர்களுக்குப் பெரிது... மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன நிலைமையில் ஓர் இனம்... என் செய்வது?

Muthukrishnan Ipoh: தெரியலீங்க... அதுதான் எனக்கும் சந்தேகமாக இருக்கிறது... இதை எல்லாம் செய்வதற்கு கல்லால் ஆன மனசு வேண்டும்... நம்மிடம் அந்த மாதிரி மனசு இல்லையே... அதனால் தான் ஆதங்கப் படுகிறோம்...

Sathya Raman: இந்த மருத்தவ உலகம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது? ஒரு நோய்க்கு நிவாரணம் ஒரு மிருகத்திடமிருந்து தான் பெற வேண்டுமா? என்ன கொடுமை சார் இது? எவ்வளவு பட்டாலும், எத்தனை இடர்கள் சந்தித்தாலும் இந்த சீனா அதிலிருந்து பாடம் கற்று திருந்துகிற மாதிரி தெரியவில்லையே?. "கரடியின் பித்த நீரா "படிக்கும் போதே குமட்டுகிறது. இத்தகைய ஆய்வுகளுக்கு கூட உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்க கூடவே கூடாது.

Muthukrishnan Ipoh: உலக சுகாதார நிறுவனம் எப்போதோ தடை விதித்து விட்டது. உணவுக்காக கட்டுப்படுத்தப் பட்ட வனவிலங்குகளை, அதாவது அருகிவரும் உயிரினங்களை இறக்குமதி ஏற்றுமதி செய்வது உலகளாவிய நிலையில் தடை செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் மருத்துவக் காரணங்களுக்காக அந்த விலங்குகளை வளர்க்கலாம். அவற்றின் உறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அங்கே தான் சட்ட அமலாக்க விரிசல்...

கரடியின் பித்த நீர் பற்றி ஒரு கட்டுரை தயாரிக்கிறேன்... கரடிகளை எப்படி கொடுமைப் படுத்துகிறார்கள்... பாவம் அந்தக் கரடிகள்... அதில் முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

Periasamy Ramasamy: இரத்தத் திலகம் திரையிலேயே நமது நடிகர் திலகம் சொன்னாரே "எதையும் தின்னும் இனம்" என்று ...

Muthukrishnan Ipoh: ஆமாம் ஐயா... நினைவில் வருகிறது...

Nahdan Narayansamy: என்ன கொடுமை சார் இது....

Muthukrishnan Ipoh: பாவம் அந்தக் கரடிகள்...

Nahdan Narayansamy: கரடியின் பித்த நீரையும் விட்டு வைக்க வில்லை அந்த நரி தந்திர வாதிகள்....

Muthukrishnan Ipoh: எதைத் தான் விட்டு வைத்தார்கள்... அவர்களிடம் தான் பணமும் ஒட்டிக் கொள்கிறது...

Jainthee Karuppayah: கரடியா....ஐயோ.... வலிக்கிறது... நல்ல வேளை சீனாவில் நான் பிறக்கவில்லை... தப்பித்தேன்... 🐷 யிலிருந்தும் 🐄 இன்சுலின் எடுக்கிறார்கள்... அருவருப்பான நாடு.. ரொம்ப வெறுப்பு ...சார்

Poovamal Nantheni Devi: சீனா இன்னும் என்ன அநியாயம் எல்லாம் நடக்குமொ???

Muthukrishnan Ipoh: பொதுவாகவே அண்மைய காலங்களில் உலகை உலுக்கிய வைரஸ் நோய்களுக்குக் காரணம் வௌவால்கள் தான்... அந்த வௌவால்களையே பல ஆண்டுகள் சீனாவின் குகைகளில் ஆய்வு செய்து இருக்கிறார்கள்...














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக