23 ஏப்ரல் 2020

சுகர்னோ எனும் சுக கர்ணன்

இந்தோனேசியா பார்த்த மாபெரும் தலைவர்களில் தலையாய மகனாக விளங்குபவர் சுகர்னோ (Sukarno). 1945-ஆம் ஆண்டில் இருந்து 1967-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியாவின் அதிபராகப் பதவி வகித்தவர். இந்தோனேசியாவின் முதல் அதிபர்.


Jawaharlal Nehru’s visit to Indonesia, 10 June 1950

இவருக்கு மகாபாரதத்தில் வரும் கர்ணனின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த உண்மை பலருக்கும் தெரியாது. அதிபர் சுகர்னோவின் தந்தையார் ராதன் சுகமி (Raden Soekemi). இவர் கர்ணனின் சிறப்புகளில் ஈர்க்கப் பட்டவர்.

அதனால் தன் மகனுக்கு சுகர்னோ என்று பெயர் வைத்தார். Sukarno எனும் சொல்லைப் பிரித்தால் Su Karna என்று வரும்.
இந்தோனேசிய மொழியில் Su என்றால் சுகம். Karna என்றால் கர்ணன். மகாபாரதக் கதாபாத்திரம். அந்த வகையில் சுக கர்ணன் எனும் பெயர் சுகர்னோ ஆனது. 
 
15 வயதில் சுகர்னோ
யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாதவன் கர்ணன். இப்போதும்கூட நாம் கொடையின் சிறப்பைப் பற்றி சொல்லும் போது கர்ணனைத் தான் குறிப்பிட்டுச் சொல்கிறோம். அந்த அளவுக்குத் தானம் செய்வதில் சிறந்து விளங்கியவன் கர்ணன். மகாபாரதத்தில் அனைவராலும் விரும்பப் பட்டவன் கர்ணன்.

இந்தோனேசியாவில் பலருக்கும் பிடித்தது வாயாங் கூலிட் (Wayang Kulit Jawa) எனும் நிழல் பொம்மலாட்டம். அதில் மகாபாரதம் பற்றி கதைச் சொல்லும் வழக்கம் இருந்தது. அதில் கர்ணன் முதன்மையான கதாபாத்திரம். அந்த வகையில் கர்ணன் எனும் கதை மாந்தர் இந்தோனேசியாவில் சிறப்புப் பெற்று இருக்கிறார். 



(Ida Ayu Nyoman Rai)

அதிபர் சுகர்னோவின் தாயாரின் பெயர் இடாயூ நியோமான் ராய் (Ida Ayu Nyoman Rai). இவர் பாலித் தீவைச் சேர்ந்த ஓர் இந்து.

சுகர்னோ பன்மொழித் திறமையாளர். ஜாவா மொழி, பாலி மொழி, சுந்தானிய மொழி, டச்சு மொழி, ஆங்கில மொழி, அரபு மொழி, இந்தோனேசிய மொழி, ஜெர்மன் மொழி, ஜப்பானிய என பல மொழிகள் தெரிந்தவர்.

சுகர்னோ பிறப்பு: 06 ஜுன் 1901; மறைவு: 21 ஜுன் 1970. வயது 69. ஜாவா சுரபாயாவில் பிறந்தார். ஜகார்த்தாவில் இறந்தார்.

சுகார்னோவின் தனிப்பட்ட வாழ்க்கை சற்றே மலைப்பைத் தருகிறது. ஒன்பது முறை திருமணம் செய்து கொண்டவர். அது அவரின் சொந்த வாழ்க்கை. ஆனால் அவர் அவர் இந்தோனேசிய மக்களுக்குச் செய்த நல்லவற்றை நினைத்துப் பார்ப்போம். 




சோசலிசச் சித்தாந்தத்தில் அதிகமாய் ஈடுபாடு கொண்டவர். அதனால் சீனா, ரஷ்யா, யூகோசுலோவியா நாடுகளுடன் நெருக்கமாகவே இருந்தார்.

1960-ஆம் ஆண்டு அவருக்கு ரஷ்ய அரசாங்கத்தின் லெனின் அமைதிப் பரிசு வழங்கப் பட்டது. உலகளாவிய நிலையில் இவருக்கு 26 கௌரவ டாக்டர் பட்டங்கள். உலகப் புகழ் அமெரிக்காவின் கொலாம்பியா பல்கலைக்கழகம்; மிச்சிகன் பல்கலைக்கழகம் போன்றவை டாக்டர் பட்டம் வழங்கி இருக்கின்றன.

மூன்று நூல்கள் எழுதி இருக்கிறார்.

1. Sukarno: An Autobiography;

2.Indonesia Accuses!

3. To My People



(Megawati Sukarnoputri)

இவரின் மனைவி மார்களின் பெயர்கள்.

1. சித்தி எத்தாரி Siti Oetari (1920)
2. இங்கிட் கர்னாசே Inggit Garnasih (1923)
3. பத்மாவதி Fatmawati (1943)
4. ஹர்த்தினி Hartini (1954)
5. கார்த்தினி மனோப்போ Kartini Manoppo (1959–1968);
6. ரத்னா தேவி Ratna Dewi (1962)
7. ஹர்யாத்தி Haryati (1963–1966);
8. யூரிகா சங்கர் Yurike Sanger (1964–1968);
9. ஹெல்டி ஜாபார் Heldy Djafar (1966–1969).  




சுகர்னோவின் மூன்றாவது மனைவியார் பெயர் பத்மாவதி (Fatmawati). இவர்களுக்குப் பிறந்தவர் மெகாவதி சுகர்னோபுத்ரி (Megawati Sukarnoputri). இவர் 2001-ஆம் ஆண்டில் இருந்து 2004-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியாவின் ஐந்தாவது அதிபராகப் பதவி வகித்தவர்.

சுகர்னோவின் ஆறாவது மனைவியார் பெயர் ரத்னா சாரி தேவி (Ratna Sari Dewi). இவர்களுக்குப் பிறந்த மகள் கார்த்திகா சாரி தேவி (Kartika Sari Dewi).

சுகர்னோவின் இதர பிள்ளைகள்: ருக்குமணி (Rukmini); ரச்சியமாவதி (Rachmawati);   சுக்மாவதி (Sukmawati); சூர்யவான் (Suryawan); கரினா கார்த்திகா (Karina Kartika); சுகர்னோ புத்ரா (Sukarnoputra); கம்பீரவதி (Gembirowati); ரத்னா ஜுவாமி (Ratna Juami); கார்த்திகா (Kartika).

சுகர்னோ டச்சுக்காரர்களின் காலனித்துவ ஆட்சியை எதிர்த்து இந்தோனேசியா சுதந்திரத்திற்காகப் போராடியவர். பத்தாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தவர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் இந்தோனேசியாவை ஆக்கிரமித்த போது தான் சுகர்னோ விடுதலையானார்.




1965-ஆம் ஆண்டில் நடந்த ஓர் இராணுவப் புரட்சியில் புதிய அதிபராகச் சுகார்த்தோ பதவி ஏற்றார். சுகர்னோ பதவி இழந்தார். தம்முடைய இறுதிக் காலம் வரையில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்தியப் பிரதமர் நேருவின் நெருங்கிய நண்பராக இருந்தவர். தவிர யூகோசுலாவிய அதிபர் ஜோசிப் தித்தோ (Josip Tito); கானா அதிபர் குவாமே நிக்ரூமா (Kwame Nkrumah); எகிப்திய அதிபர் காமல் நாசீர் (Gamal Nasser)போன்றவர்களிடமும் நெருக்கமான நட்புறவு கொண்டவர்.

1963-ஆம் ஆண்டில் மலேசியா உருவான போது மலேசியாவைப் பகைத்துக் கொண்டவர் (Indonesia–Malaysia confrontation - Konfrontasi). 1964 ஆகஸ்டு மாதம் ஜொகூர் பொந்தியான், லாபீஸ் பகுதிகளில் இந்தோனேசியப் படைகளைத் தரை இறக்கி மலேசியாவில் அமளி துமளிகளை ஏற்படுத்தியவர்.

அதுவே மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே மோதல்களை உருவாக்கிக் கொடுத்தது. பின்னர் அமைதியானது.

சுகர்னோ மனுக்குலம் பார்த்த வித்தியாசமான விடுதலைப் போராட்டவாதி. ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகப் போராடியவர். உலகத் தலைவர்களில் மாறுபட்ட சிந்தனைவாதி.

புரட்சிகரமான எண்ணங்கள். துணிகரமான முயற்சிகள். விடுதலைப் போராட்டச் சிந்தனைகளில் சமூகச் சீர்த்திருத்தங்கள். அணி சேராக் கொள்கையில் பிடிவாதமான போக்கு. இவை அனைத்தும் அவரிடம் மலர்ந்த நளினமான நினைவுகளின் மந்திரக் கோல்கள்.

குறிப்பு: ராதா என்பது பெண்பால். ராதன் என்பது ஆண்பால். சுகர்னோ, பாண்டுங் தொழில்நுட்பக் கல்லூரியில் (Technical Institute Bandung) படித்தவர்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
23.04.2020




பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்:

Periasamy Ramasamy : மேலும், கேட்போர் கவனம் முழுதும் தம் பக்கம் மட்டுமே ஈர்க்கச் செய்யும் வகையில் உரை (oratory skill) நிகழ்த்துவதில் உலகில் தலைசிறந்த தலைவர்கள் எனக் கொண்டாடப் பெறும் ஆப்ரஹாம் லிங்கன், நேரு, ஜோசப் ஸ்டாலின், கென்னடி, போன்றோர் வரிசையில் சுகர்னோவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Muthukrishnan Ipoh : அதில் ஹிட்லர், கோலாபஸ் போன்ற நாஜி பீரங்கிகளையும் சேர்க்க வேண்டும் ஐயா... இவர்கள் இல்லாமலா...

Periasamy Ramasamy >>> Muthukrishnan Ipoh : உண்மை.... உண்மை the great orators வரிசையில் இடம் பிடித்தவர்கள். அவர்கள் பேசினால் படித்தவர்கள் பாமரர்கள் என்று எல்லாருமே மகுடிக்கு மயங்கிய நாகம் போலத்தான்.

Jeya Balan : தெரியாத தகவல் புதியதாகத் தெரிந்துக்கொண்டேன். நன்றிங்க. ஐயா!

Maha Lingam : GIPHY

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா...

Sheila Mohan : சிறப்பான வரலாற்று கட்டுரை... நன்றிங்க சார்...

Muthukrishnan Ipoh :
நன்றி... நன்றிங்க...


Kumar Murugiah Kumar's : அருமை ஐயா! பகிர்வுக்கு நன்றி!

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... நன்றி

KR Batumalai Robert : சிறப்பு அண்ணா.

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... நன்றிங்க

Vasanthi Mohanakumar : நன்றி ஐயா

Muthukrishnan Ipoh :
இனிய வாழ்த்துகள்


Melur Manoharan : "அருமையான" வரலாற்று தகவல் ஐயா...! "வாழ்த்துகள்"...!

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... இனிய வாழ்த்துகள்...

Sugaanraj Thiagarajan: This should be enshrined as one of the most significant piece of writing sir! Great work and effort on it. my salutations .

Senthil Kumari Nagusamy : தெரியாத வரலாற்று தகவல்களைத் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி

Sharma Muthusamy

Maha Lingam

Thanabaal Varmen : ஒரு வரலாற்று உண்மையை அறிந்து கொண்ட மகிழ்ச்சி; வாழ்த்துகள்.

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி ஐயா

Janarthanam Kumurasamy : நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Vejaya Kumaran: subhatirai

Khavi Khavi : சுத்தமான மதுரையே பின்னாளில் சுமதுரையாக... மெல்ல சுமத்ராவாக மருவியதாகவும் படித்திருக்கிறேன் ஆசிரியரே. சுகமான கர்ணனே, சுகர்ணன் ஆக, இந்தோ மொழியில் சுகர்னோ என்று பதிந்துவிட்டது. நன்றி..

Muthukrishnan Ipoh :
சுகர்னோவின் மனைவி பிள்ளைகளின் பெயரிலும் தமிழ் சமஸ்கிருதச் சொற்கள் கலந்து உள்ளன... கவனித்தீர்களா...


Ravi Purushothaman : சுமத்ரா.... இராமயணத்தில் வரும் சுமித் ரா ? சுமித்ரை

Muthukrishnan Ipoh : நல்ல தகவல்... நன்றிங்க...

Maha Lingam : நன்றி..ஐயா.. நல்லதோர் படைப்பு.. வாழ்த்துகள்.. அவரைப் பற்றி பல தெரியாத புரியாத கேள்விக்கு விடயம் கொடுத்ததற்கு நன்றி... வாழ்க நலமுடன் பல்லாண்டு.. தொடர்க தங்களின் தமிழ் தொண்டு...

Muthukrishnan Ipoh: நன்றி... மகிழ்ச்சி... இனிய வாழ்த்துகள்

Sugaanraj Thiagarajan : 💯

Vani Yap இந்தோனேசியாவின் அதிபர் சுகர்னோ என்பது பலருக்கும் தெரிந்து இருந்தாலும், அவரைப் பற்றிய பல சுவாரசியமான விசயங்கள் தெரிய வந்துள்ளது... உங்களின் கட்டுரையின் வழி. சிறப்பு.. நன்றி

Maha Lingam >>> Vani Yap உண்மைமா.

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி... இனிய வாழ்த்துகள்

Thayalan Avalai

Poovamal Nantheni Devi : தெரியாத தகவல். தெரிந்து கொண்டேன். வரலாறு சிறப்பு

Muthukrishnan Ipoh இனிய வாழ்த்துகள்

Chandran Panakaran

Rajah Poomalai

Anusha Rathnam


Steven Siva: Nandringa Sir

Sai Ra : Arumai. 🙏

Muthukrishnan Ipoh : மகிழ்ச்சி...








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக