08 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள்: மூன்றாவது அலை 1786

மலாயாவில் தமிழர்களின் மூன்றாவது இடம்பெயர்வு 1786-ஆம் ஆண்டில் பினாங்கில் தொடங்கியது. காடுகள் துப்புரவு. சாலைகள், வடிகால்கள், பொது கட்டிடங்கள்; பொது உள்கட்டமைப்புப் பணிகளுக்கு முன்னோடிகளாக விளங்கினர்.

Third wave migration of Tamils to Malaya started in 1786 Penang. They provided the necessary labour for public infrastructure works as clearing jungles, construction of roads, drains and public buildings.

கரும்பு, காபி, கொக்கோ, கித்தா மரங்கள் பயிர் செய்வதற்காகத் தமிழர்கள் கொண்டு வரப்படவில்லை. காடுகளை வெட்டிச் சமப்படுத்தி மனிதர்களுக்கு ஏற்ற வகையில் குடியிருப்பு பகுதிகளை உருவாக்குவதற்காகக் கொண்டு வரப்பdடார்கள்.

அப்படி வந்த தமிழர்கள் தான் பினாங்கு தீவின் காடுகளை அழித்தார்கள். ரோடுகளைப் போட்டார்கள். மனிதர்கள் நடமாடும் அளவிற்கு நல்லது செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். அவர்கள் அமைத்துக் கொடுத்த சாலைகளில் தான், இப்போது பலரும் சொகுசாய்க் கார் ஓட்டி சொகுசாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  

ஒரு நாட்டின் காடுகளை அழித்து அந்த நாட்டை ஒரு சொர்க்க பூமியாக மாற்றிய அந்த தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்கள். வெட்கமாக இருக்கிறது. அப்படிச் சொல்பவர்களுக்கு கைலாஷ் நாட்டின் அதிபர் நித்தியானந்தா மொழியில் சொன்னால் நோ சூடு. நோ சொரணை. நோ நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.10.2020

1. Ooi, Keat Gin. Disparate Identities: Penang from a Historical Perspective, 1780–1941. Universiti Sains Malaysia.

2. Souza, George Bryan (2014). Hinterlands and Commodities: Place, Space, Time and the Political Economic Development of Asia over the Long Eighteenth Century.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக