09 அக்டோபர் 2020

மலாயா தமிழர்கள் மலேசிய மண்வாசனைகள்

மலையூர் மண்ணை மாண்புறச் செய்த மலாயா தமிழர்களுக்கு முதல் வணக்கம். முதல் மரியாதை. அதே வேளையில் இந்தக் கித்தா தோப்பு கிளிகளுக்கும் வணக்கம். வாழ்த்துகள்.

இந்த மாந்த ஜீவன்களே இந்த நாட்டின் மறக்க முடியாத ஜீவநாடிகள். வரலாறு இல்லாதவர்களின் பார்வையில் வந்தேறிகள். ஆனால் உண்மையிலேயே இவர்கள் தான் அசல் மைந்தர்கள். அசல் மண்வாசனைகள்.

இந்த வாயில்லா பூச்சிகளுக்கு மரியாதை செய்வோம். இவர்களினால் தான் நாம் இந்த மலைநாட்டு மண்வாசனையைச் சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம். நம் இனத்தின் மூத்த மாந்தர்களுக்கு மூத்த மரியாதை.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
09.10.2020
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக