26 நவம்பர் 2020

தமிழ் மலர் நாளிதழுக்கு 1000-ஆவது கட்டுரை

தமிழ் மலர் நாளிதழுக்கு அடியேன் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் எழுதும் 1000-ஆவது கட்டுரை இன்று 2020 நவம்பர் 26-ஆம் தேதி வெளியீடு காண்கிறது. மூன்றரை ஆண்டு கால உழைப்பு. இரவு பகல் என்று பார்க்காமல் ஒவ்வொரு நாளும் 8 மணி நேர உழைப்பின் பிரதிபலிப்பு.

முதல் கட்டுரை 2016 ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி ’மலேசியப் பள்ளிகளில் குண்டர் கும்பல் கலாசாரம்’ எனும் தலைப்பில் வெளிவந்தது.

500-ஆவது கட்டுரை 2018 டிசம்பர் 17-ஆம் தேதி ‘அந்தோன் பாலசிங்கம்’ எனும் தலைப்பில் வெளிவந்தது. இன்றைய கட்டுரை ’தாகித்தி தீவில் தவித்த கன்னிகள் - மூன்றாம் பாகம்'. 1000-ஆவது கட்டுரை.

மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் ஒரு காலச்சுவடு. எல்லாப் புகழும் தமிழ் மலர் பத்திரிகைக்குச் சமர்ப்பணம். என் எழுத்துகளுக்கு உயிரூட்டி மெருகூட்டி வரும் தமிழ் மலர் நாளிதழின் ஆசிரியர்கள்; நிர்வாகத்தினர்; பணியாளர்கள்; அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய வாழ்த்துகள். இருகரம் கூப்பிச் சிரம் தாழ்த்துகிறேன்.

மலேசியத் தமிழ் நாளிதழ்கள் தினக்குரல்; தினத்தந்தி; புதிய பார்வை, மலேசிய நண்பன், தமிழ் நேசன் நாளிதழ்களுக்கும்; மயில் இதழ்; சுட்டி மயில்; தமிழ் ஓவியம்; விக்கிப்பீடியா, பேஸ்புக், புளோகர், இணைய ஊடகங்களுக்கும், 2,500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட 3,500 கட்டுரைகள்.

நினைத்துப் பார்க்கும் போது மலைப்பு திகைப்பு வியப்பு. அன்பான வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றிகள். இறைவன் அருள். தொடர்ந்து பயணிப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
26.11.2020





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக