01 ஜூலை 2022

சீதாபதி நடேசன் மலேசியக் கல்வியாளர்

நாடறிந்த கல்வியாளர். நடமாடும் கல்விக் களஞ்சியம். சமூகச் சேவையாளர். நேதாஜியின் இந்திய இராணுவத்தில் விடுதலைப் போராட்டவாதி. தோக்கோ குரு விருது பெற்ற கல்வியாளர். இவரின் சேவை மலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கு அளப்பரியது.


12.12.1926-ஆம் நாள் புக்கிட் ரோத்தானில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த பின் தம்முடைய 17-ஆவது வயதில் சுபாஷ் சந்திர போஸ் நேதாஜி தொடங்கிய தேசிய இந்திய இராணுவத்தில் சேர்ந்தார்.

தாய்லாந்து வழியாக மியன்மார் சென்றார். போர் முனையில் இரு ஆண்டுகள். பின்னர் 1946-ஆம் ஆண்டு, மணிப்பூர் வழியாக இந்தியா சென்றார்.

1948-ஆம் ஆண்டு மீண்டும் மலாயாவிற்கு வந்தார். ஆசிரியர்த் துறையில் பயிற்சி பெற்றார். அவர் படித்த புக்கிட் ரோத்தான் பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார்.

1951-ஆம் ஆண்டு சகுந்தலா அம்மையாரை மணம் புரிந்து கொண்டார். பதவி உயர்வு கிடைத்தது.

சுங்கை ரம்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி; பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி; காப்பார் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி; ஆகிய பள்ளிகளில் பணியாற்றிய பின்னர் 1981-ஆம் ஆண்டு பதவி ஓய்வு பெற்றார்.

சிலாங்கூர் சுல்தானிடம் இருந்து பி.ஜே.கே. விருது; பேரரசரிடம் இருந்து பி.பி.என். விருது.

பணி ஓய்வுக்குப் பிறகும் கோலா சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள பாலர் பள்ளிகளில் கண்காணிப்பாளராகவும் சேவை செய்தார்.

ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார். எஸ்.ஆர்.டி. 5 எனும் எங்களுடைய ஆசிரியர்ப் பயிற்சியில் தமிழ் மொழி ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ் இலக்கணக் கடல் என்று நாங்கள் பெருமைப் படுகிறோம். அன்னாரின் ஆத்மா உயர் பெற்று நிலை பெற இறைஞ்சுகின்றோம்.

இவர் பனிக்கும் பூக்களில் மணக்கும் வாழ்வியல் களஞ்சியம்!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.07.2021




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக