21 ஆகஸ்ட் 2021

தீண்டாமைக் கொடுமையில் திருவாங்கூர் தமிழ்ப்பெண்கள்

தமிழ் மலர் - 21.08.2021

பார்ப்பதும் தீட்டு. பழகுவதும் தீட்டு.
தொடுவதும் தீட்டு. படுவதும் தீட்டு.


இப்படி ஒரு தீண்டாமைக் கொடுமை முன்பு காலத்தில் இருந்தது. எங்கே… உலகத்திற்கு உத்தமம் பேசிய அக்கரை மண்ணில் தான். இப்போது அந்தக் கொடுமை இல்லை. புதைத்து விட்டார்கள்.


இருந்தாலும் அங்கே இங்கே சில பல இடங்களில், அரசல் புரசலாகத் தேய்த்துக் கொண்டு முளைத்துக் கொண்டு தான் இருக்கிறது. அதையும் பார்த்து உத்தமச் சீலர்கள் புன்னகை பூத்துக் கொண்டுதான் வருகிறார்கள் போகிறார்கள். வெள்ளை வேட்டியை இழுத்து இடுப்பில் இறுக்கமாய்க் கட்டிக் கொள்கிறார்கள். பெருச்சாளிக்கு எட்டு முழம் வேட்டி கட்டினால் எப்படி இருக்கும். கற்பனை செய்து கொள்ளுங்கள்.

தீண்டாமைக்குச் செக்கு இழுத்த சிறுநில மன்னர்கள் இருந்தார்கள். அரசு முத்திரை குத்தி அரச மரியாதை வழங்கிய சமீன்தாரர்கள் இருந்தார்கள். பட்டுப் பீதாம்பரம் வீசிய பசப்புச் செம்மல்கள் இருந்தார்கள். சாமியின் பெயரைச் சொல்லி சிறிசு பெரிசுகளைச் சீரழித்த பெரிய மனுசர்களும் இருந்தார்கள். மன்னிக்கவும்… இருந்தன. சின்ன ஒரு மரியாதை கொடுப்போம்.

அந்த மாதிரி வக்கிரம் படைத்தவர்களைப் பற்றி எழுதுவதற்கு மனசு வரவில்லை. என்ன செய்வது. தமிழர்களின் வரலாற்றைத் தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆக எழுதியே ஆக வேண்டும் என்கிற ஒரு கட்டாய நிலை. அதனால் எழுத வேண்டி உள்ளது.


ஒரு காலத்தில் தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்த ஒவ்வொரு தமிழர்ப் பிரிவினர் மீதும் ஒரு வகையான அடக்குமுறை திணிக்கப் பட்டது. உயர்ச் சாதி என்று சொல்லிக் கொண்டவர்கள் போட்ட அத்துமீறிய சடங்குச் சம்பிரதாயங்கள். ஏராளம் ஏராளம்.

அந்த உயர்ச் சாதியினரிடம் தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்த மாதிரியான ஆடைகளை உடுத்த வேண்டும். அவர்களுக்கு எப்படி மரியாதைகள் செய்ய வேண்டும். எவ்வளவு தூரம் தள்ளி நிற்க வேண்டும். இவை எல்லாம் தமிழர்கள் மீது சொல்லாமல் எழுதி வைக்கப்பட்ட ஒடுக்கு முறைத் திணிப்புகள்.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் தமிழர்களைச் சாதி சாதியாகப் பிரித்து வைத்து இருந்தார்கள். அவன் அந்த சாதி. இவன் இந்த சாதி. நான் பெரியவன். நீ சின்னவன் என்று சூடம் கொளுத்தி சாம்பிராணி வேறு போட்டுக் காட்டினார்கள்.

’சாதியைச் சாக்கடையில் வீசு’ என்று சொன்னவர்களுக்குச் சவுக்கடி கொடுத்தார்கள். சவர்க்காரத் தொட்டிகளில் போட்டு அமுக்கிக் குளம் குட்டைகளில் தூக்கி வீசியும் இருக்கிறார்கள்.


சரி. இந்தச் சாதிச் சடங்குகள் எப்படி வந்தன. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆரியர்கள் இந்தியாவிற்குள் காலடி வைத்த காலக் கட்டத்தில் இருந்து அந்தச் சடங்குச் சம்பிரதாயங்கள் தொடங்குகின்றன. இந்திய வரலாற்றை ஆழமாகப் படித்தால் தெரியும்.

ஆரியர்கள் யார்? அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள். தொடர்ந்து படியுங்கள். சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஆரியர் எனும் சொல் ஈரானிய மொழிச் சொல். ஆர்யா (Arya) எனும் சொல்லில் இருந்து மருவி வந்தது. இந்தச் சொல்லை ரிக் வேத நூலிலும் பார்க்கலாம். 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆர்யா எனும் சொல் பயன்பாட்டில் இருந்து வந்து இருக்கிறது.

(சான்று: https://ta.wikipedia.org/s/o2d)

தவிர இந்த ஆர்யா எனும் சொல் அய்ரிய (Ayrya) எனும் ஈரானிய மொழிச் சொல்லுடன் இணைந்து வரும் சொல்லாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி நாசிகளின் இனவாதக் கொள்கையில் ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது.

(Gershevitch, Ilya (1968). "Old Iranian Literature". Handbuch der Orientalistik, Literatur I. Leiden: Brill. பக். 1–31)


ஆரியர்கள் என்பவர்கள் துருக்கி, ஈராக், ஈரான் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் புலம் பெயர்ந்தவர்கள். இவர்களின் பூர்வீகம் ரஷ்யா. அங்கு இருந்த சைபீரியா பனிப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்தார்கள். சைபீரியா பூர்வீக மக்களுடன் பிரச்சினை. தவிர்க்கப் பட்டார்கள். அதனால் புலம் பெயர்ந்தார்கள்.

(Aryans originated in the southwestern steppes of present-day Russia or Scandinavia, or at least that in those countries the original Aryan ethnicity had been preserved.)

ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து அப்படியே ஐரோப்பாவில் வலது காலை எடுத்து வைத்து ஈரானில் இடது காலை வைத்தார்கள். கடைசியில் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்தார்கள்.

(சான்று:https://en.wikipedia.org/wiki/Aryan_race#19th-century_physical_anthropology


சிந்து சமவெளியின் சிந்து பைரவிகள் பாடிய சிந்து மக்களைத் தங்களின் ஆன்மீகப் பாதையில் ஈர்த்துக் கொண்டார்கள். சங்கீத அரகோணத்தில் சிந்து மக்களும் காம்போதிகளாக மாறிப் போனார்கள் என்று கூட சொல்லலாம். தப்பில்லை. அங்கு வாழ்ந்த வெள்ளந்திச் சிந்து மக்களைத் தொழிலுக்கு ஏற்றவாறு பிரித்து வைத்தார்கள்.

அந்தப் பிரிவினைக் கோலம் தமிழ்நாட்டில் இருந்து கப்பலேறி இங்கேயும் வந்தது. இப்போது இந்த மலைநாட்டிலுகூட சில இடங்களில் காம்போதி ராகங்களை இசைத்துக் கொண்டு இருக்கிறது.

இங்கே கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் சமயங்களில் சில இடங்களில் சாதிக்குச் சுண்ணாம்பு அடித்து அழகு பார்க்கிறார்கள். சின்ன ஒரு கொசுக்கடி. சின்ன ஒரு மௌனராகம். அவ்வளவுதான். விடுங்கள்.
 
ஒரு காலக் கட்டத்தில் தமிழர்கள் மீது எண்ணற்ற அடக்கு முறைகள். எல்லாம் தமிழகத்தில் நடந்தவைதான். அந்த மாதிரியான சாதியக் கொடுமைத் தடங்களில் ஒன்றுதான் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் நடந்த தோள் சீலைப் போராட்டம்.


தமிழ்ப் பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது. திறந்த மார்புடன் நடக்க வேண்டும். மூஞ்சுறு முகாரிகளின் ஓர் அடக்குமுறை.

அன்றைய கேரளப் பகுதியான தென் திருவிதாங்கூர், தமிழக எல்லைப் புறங்கள், கன்னியாகுமரி பகுதிகளில் அந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. அங்கு வாழ்ந்த தமிழர்கள் ஆதிக்க வர்க்கத்தினரின் கடுமையான ஒடுக்கு முறையில் தனித்துப் பிரித்து வைக்கப் பட்டனர்.

எத்தனை அடி தூரத்தில் நின்று பேச வேண்டும் என்று கணக்கு வேறு போட்டு வைத்து இருந்தார்கள். பாருங்கள். தீண்டாமையை எப்படி எல்லாம் போற்றி போற்றி வளர்த்து இருக்கிறார்கள்.

தமிழர்களில் ஒரு பிரிவினர் கண்ணில்படக் கூடாத சாதி மக்கள் என்றும் தூற்றப் பட்டு இருக்கிறார்கள். நாம் பிறந்து வளர்ந்த இந்தப் பூமியில் எங்கேயும் இப்படி ஒரு கொடுமை நடந்து இருக்குமா. தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

முன்பு கலத்தில் பெந்தோங்; கோலா கிள்ளான்; சுங்கை பட்டாணி; நிபோங் திபால்; பாகன் செராய்; தஞ்சோங் மாலிம், சிகாமட் போன்ற இடங்களில் சாதி சடங்குகள் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து இருக்கின்றன. ஆனால் இப்போது இல்லை. ஐஸ்கிரீம் கம்பெனி ’பேங்க்ரப்’ ஆகிவிட்டதாம்.


இந்திய மண்ணில்தான் தீண்டாமைக்கு முதல் மரியாதை வழங்கபட்டு உள்ளது. ஆக, வரையறுக்கப்பட்ட இந்தத் தீட்டுத் தூரத்தை எவரேனும் மீறினால் அவர்களுக்குக் கடுமையான தண்டனையும் கொடுக்கப் பட்டது.

அப்பேர்ப்பட்ட இட்லர்கூட வேண்டாத யூதர்களை விசம் கொடுத்துதான் கொலை செய்து இருக்கிறான். தூய தமிழில் சொன்னால் ஊதாப்பூ ஊதர்கள். அவர்கள் இத்தனை அடி தூரத்தில் நின்றுதான் பேச வேண்டும் என்று இட்லர் சட்டம் போட்டது இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் நடந்து இருக்கிறது.

ஒரு காலக் கட்டத்தில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்து ஆட்சியின் கீழ் இருந்தன. அங்கு சாணார் எனும் ஒரு தமிழ்ப் பிரிவினர் இருந்தனர். அந்தப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப் பட்டது.

இவர்கள் மார்பகத்தைத் திறந்து போடுவதுதான் உத்தமம்; உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று திருவாங்கூர் நாடு ஒரு சட்டத்தையும் போட்டது.

சாணார், பள்ளவர், ஈழவர், முக்குவர், புலையர் போன்ற பிரிவினர் தமிழர்ச் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப் பட்டார்கள். அந்த வகையில் 18 சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டது. 


அணியக் கூடாது என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். மேலாடை அணிவது பெரும் குற்றம். திறந்த மேனியோடுதான் நடமாட முடியும். மனுதர்மம் அப்படிச் சொல்வதாக ஒரு சாணக்கியச் சட்டத்தை எடுத்துப் போட்டு, அதைச் சம்பிரதாயச் சட்டமாக மாற்றியும் காட்டினார்கள்.

தமிழர்ச் சமூகத்துப் பெண்கள் தங்கள் மார்பகத்தை எப்பொழுதும் திறந்து காட்டி மரியாதை செய்ய வேண்டும் என்று உயர்ச் சாதியினர் பிடிவாதமாக இருந்தனர். அந்த வகையில் குழந்தையில் இருந்து இறக்கும் நிலையில் இருக்கும் பாட்டிமார்கள் வரை அந்த மரியாதைக்கு கட்டுப்பட்டாக வேண்டும்.

ஒரு பெண் எவனுடைய மனைவியாகவும் இருக்கலாம். எவனுடைய மகளாகவும் இருக்கலாம். எவனுடைய சகோதரியாகவும் இருக்கலாம். எவனுடைய அம்மாவாகவும் இருக்கலாம். இல்லை பாட்டியாககூட இருக்கலாம். பிரச்சினை இல்லை.

ஆனால் மார்பகத்தைக் காட்டிக் கொண்டு தான் போக வேண்டும். வர வேண்டும். மார்பகத்தை மூடி வைக்கக் கூடாது. என்னே ஒரு மனுதர்மச் சட்டம். என்னே ஓர் அக்கப்போர். நான் சார்ந்த இந்து சமயத்தில் இப்படி எல்லாமா நடந்து இருக்கிறது. நம்பவே முடியவில்லை.


இந்த அசிங்கத்தை, இந்த அவமானத்தை, இந்த அவலத்தை, இந்த அடக்குமுறையைத் தமிழ்ப் பெண்கள் பலரும் எதிர்த்தனர். தங்களின் மார்பகத்தை அடுத்தவரின் பார்வையில் இருந்து மறைக்கப் பெரிதும் போராடி வந்தார்கள். தாங்க முடியல. அதனால் பல தமிழ்க் குடும்பங்கள் கிருத்துவ மதத்திற்கு மதம் மாறின.

பாவம் அந்தப் பெண்கள். மேலாடை அணியாமல் கூனிக் குறுகி வாழ்ந்து வந்தார்கள். அந்த அடக்கு முறையை எதிர்த்துப் போராட்டம் செய்தார்கள். அந்தப் போராட்டம் தான் தோள் சீலைப் போராட்டம். பல பத்து ஆண்டுகள் போராட்டம் செய்தார்கள். கடைசியில் வெற்றியும் பெற்றார்கள்.

இந்தத் தோள் சீலைப் போராட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

இப்படி எல்லாம் நடந்து இருக்கின்றது இப்படி எல்லாம் தமிழர்கள் அவதிப்பட்டு இருக்கின்றார்கள் என்பதை நம் பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி அறிந்து தெரிந்து கொள்வதுதான் பாதிக்கப்பட்ட நம் தமிழ்ப் பெண்களுக்கு நாம் செய்யும் ஒரு கைமாறு ஆகும்.


18-19-ஆம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் நாட்டில் தீண்டாமை, காணாமை, நடவாமை போன்ற கோட்பாடுகள் ஆழமாகப் பதிந்து இருந்தன. சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன் ஓர் ஆரியனிடம் இருந்து 36 அடி தொலைவில் நிற்க வேண்டும்.

புலையர் இனத்தைச் சார்ந்த ஒருவன் ஓர் ஆரியனிடம் இருந்து 96 அடி தள்ளி நிற்க வேண்டும்.

புலையன் ஒருவன் நாயர் இனத்தைச் சேர்ந்தவனிடம் இருந்து 60 அடி அப்பால் நிற்க வேண்டும்.

புலையன் இனத்தைச் சேர்ந்த ஒருவனை அப்படியே அந்த மேல்சாதிக்காரனைப் பார்க்க நேர்ந்தால் அந்த மேல்சாதிக்காரன் தீட்டுப் பட்டவனாகக் கருதப் படுவான்.

அப்படித் தீட்டுப் பட்டவன் ஆற்றில் அல்லது குளத்தில் மூழ்கி நீராட வேண்டும். தன்னைச் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வேதனையான செய்தி. திருவிதாங்கூர்ப் பகுதிகளில் வாழ்ந்த சாணார் சமூக மக்களின் உழைப்பின் விளைச்சல்; அதிகார வர்க்கத்தினரால் சுரண்டப் பட்டது.

அவர்களுக்குக் கூலி மறுக்கப்பட்டது. அடிமைகளை விடக் கேவலமாக நடத்தப் பட்டனர். அரசுக்கும் ஆதிக்கச் சாதிகளுக்கும் அடங்க மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள்.

அது மட்டும் இல்லை. உழைக்கின்ற சாணார் சமூக மக்கள் குடை பிடிக்கக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. மாடி வீடு கட்டக் கூடாது. தங்க நகைகள் அணியக் கூடாது.

பெண்கள் தங்களுடைய மார்புகளை மேலாடைகளால் மறைக்கக் கூடாது. முழங்காலுக்குக் கீழே உடை உடுத்தி மறைக்கக் கூடாது. பசு மாடுகளை வளர்க்கக் கூடாது.

இப்படி ஏகப்பட்ட கூடாதுகள். இந்தக் கூடாதுகளைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் கூடுதலாகத் தெரிந்து கொள்வோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.08.2021

பேஸ்புக் பின்னூட்டங்கள்:

Elangkumaran Jeevan >>>> Muthukrishnan Ipoh: I have given mine in English. If you really into feedbacks and not language, please read it and respond🙏🏽

Nagah Rajan >>>> Muthukrishnan Ipoh: நன்றி ஐயா 🌹

Vejayakumaran: ஓம் நமசிவாய

Khavi Khavi: #ஆரிய குடியேற்றம் தென்னிந்திய கரைகளை கடந்த தருணம், அங்கே ஆற்றுப் படுகைகளில், மலை அடிவாரங்களில், குகைகளில் குடில்களை அமைத்து தங்களின் ஆன்மீகப் பணிகளை மேற்கொண்டிருந்த முனிவர்கள், வேத விற்பனர்களிடம் தஞ்சமடைந்து, இவர்களின் சேவகர்களாகி, மெல்ல ஆகம வழிப்பாட்டு முறைகள், மந்திரங்கள், மற்ற பல சாங்கிய சம்பிரதாயங்களைக் கற்று பின் மெல்ல, அங்கிருந்த பெருங்கோயில்களின் மூலப் பொறுப்புகளைக் கைவசப் படுத்தியதாக இணையத்தில் படித்த நினைவு.

பார்ப்பணர்களாகத் தங்களை அடையாளப் படுத்தி கொண்டனர். வெளிர்த் தோல், பழுப்பு நிற கேசம் மற்றும் விழிகள் என இவர்களின் மரபு இன்றும், இன்னும் பாரத மண்ணின் படைப்போடு இரண்டற கலந்துவிட்டு இருக்கிறது..

Nages Nages >>>> Aiya Muthu Krishnan: I read your article, but I think it is biased, not fully facts based and bounded with emotional, in my opinion. Opinions may differ. Maybe you can verify further.
1. Arya race is Myth.
2. Are the so called Uyar Jatis are not Tamils?
3. in Manusmriti, which verse?
4. You mentioned breast tax but why never mentioned Xenddi tax?
5. etc Misleading Article by Aiya Muthu Krishnan?
https://sivasiddhi.blogspot.com/.../misleading-article-by...
Misleading Article by Aiya Muthu Krishnan?
SIVASIDDHI.BLOGSPOT.COM

Nages Nages >>>> Elangkumaran Jeevan: I agree with you sir. The tax and oppression were part of the slavery system practiced in Kerala. The so-called historians hide this part and came up with propaganda on blaming the Hindu varna system/ Brahmin and Arya. This kind of slavery is practiced throughout of world...

Bobby Sinthuja: ஐயா, சிறப்பான ஆய்வு பதிவுகள்.

Ravi Purushothaman: மாப்ளா கலவரம் பற்றி ஏதும் செய்தி உண்டா ஐயா?

Alagumani Mathivanan: நன்றி ஐயா

கொடுமுட்டி பால் பேக்கர்: இதில் இருக்கும் புகைப்படம் இலங்கை நாட்டை சேர்ந்தது. தவறான ஓரு ஆய்வு

Muthukrishnan Ipoh: அன்பர்களின் பதிவுகளுக்குப் பின்னர் பின்னூட்டங்கள் வழங்குகிறேன். நன்றி.

Muthukrishnan Ipoh >>>> Nages Nages இந்தக் கேள்விகளை எழுப்பியவர் மானுடவியல், மரபியல் ஆகிய துறைகள் சார்ந்த தெளிவு அல்லது புரிதல் இல்லாத வகையில் கேள்விகளை முன் வைத்து இருக்கின்றார்.

இதனை அவர் தெளிவு படுத்திக் கொள்ள அவர் பல நூல்களைப் படிக்க வேண்டாம். தற்போதைக்கு ஒரே ஒரு நூலை அவர் படிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Early Indians எனும் ஆங்கில நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. நூல் பெயர்: ஆதி இந்தியர்கள். அமேசான் வலைத்தளத்தில் வாங்கி வாசிக்கலாம்.

தங்களால் பதில் கூற முடியவில்லை என்றால் உடனே ஆங்கிலேயர்கள் நம்மை முட்டாள்கள் ஆக்கி விட்டார்கள் என சொல்வதும் ஓர் அறியாமையின் வெளிப்பாடு தான்.

மனித இனத்தின் மரபியல் சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டு மிகப் பெரும் துறையாக வளர்ந்து பல செய்திகளை உலகுக்கு அளித்து விட்டது.

இன்னமும் ஒரு சிறிய வட்டத்திற்கு உள்ளேயே இருந்து தனக்குத் தெரிந்ததை மட்டுமே பேசிக் கொண்டு இருப்பது என்பது ???? இந்த நூலை முதலில் வாசித்துப் பாருங்கள்.

சாதியின் பெயரால் கடந்த நூற்றாண்டுகளில் சில சமூகத்துப் பெண்கள் இந்திய சூழலில் பட்ட அவமானங்களும் துன்பங்களும் இப்படி மலேசியாவிலும் வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும்.

Sukavarman Sukavarman: இதற்கு முற்று புள்ளி வைத்த பெண் அவரைதெரியுமா

Malathi Nair: Anna 1st time hearing such story in Thiruvendram.

Mu Ta Neelavaanan Muthuvelu:
அதிகார வர்க்கம், அப்பாவி ஏழை மக்களை
வாட்டி வதைத்த கொடுமை.

Alagumani Mathivanan: எவ்வளவு கொடுமை

Senthil Kumar: தற்போது

Nadarajah Nagu: பெருங்கொடுமை

Raja Sundarrajan: பெண்கள் தங்கள் மார்பை மறைக்க வேண்டும் என்றால் மார்பின் அளவைப் பொறுத்து வரி செலுத்தினால் மார்பு சீலை அணியலாம். இதற்கு முலைவரி சட்டம் என்று பெயர்.



 




 

18 ஆகஸ்ட் 2021

தமிழ் நெஞ்சர் பி.கே. குமார் மறைவு

தமிழ் மலர் - 18.08.2021

காலம் மாறுகிறது. ஞாலம் மாறுகிறது. மனிதர்களும் மாறுகிறார்கள். மறைந்தும் கரைந்தும் போகிறார்கள். மறைந்து போகும் மனிதர்களில் நாலு நல்லது செய்தவர்களும் நிறைந்து வாழ்கிறார்கள். அவர்களில் நமக்கு வேண்டியவர்களும் இருக்கிறார்கள். தெரியாதவர்களும் இருக்கிறார்கள். நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் நடுங்குகிறது.


என்ன செய்வது. போக வேண்டிய நேரம். முடியாது என்று சொல்ல முடியாது. மேலே இருந்து வரும் அழைப்பை எவராலும் தடுத்து நிறுத்தவும் முடியாது. ஆண்டவன் கிழித்த கோட்டைத் தாண்டிச் செல்லவும் முடியாது.

மாற்றங்களின் கால வெள்ளத்தில் கொரொனா ஒன்றே மாறாதது என்பது போல திரும்புகிற திசைகளில் எல்லாம் கொரோனா. கொரோனா. எத்தனையோ உயிர்களைக் காவு கொண்டு வருகிறது. தெரிந்தவர் தெரியாதவர்; அறிந்தவர் அறியாதவர் என்று எத்தனையோ உயிர்கள் மறைந்து வருகின்றன.

அந்தப் பாவனையில் மலேசியத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான மாண்புமிக்க ஒரு தமிழரையும் இழந்து நிற்கிறோம். காலம் செய்த கோலம். தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்து கொண்டு இருந்த பி.கே. குமார் எனும் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்.

17.08.2021-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு, ஈப்போ தனியார் மருத்துவமனையில் இறைவனடி சேர்ந்தார்.


பி.கே. குமார் ஒரு சமூக ஆர்வலர். தொழில்துறை முனைவர். வணிக வள்ளல். மலேசிய நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும்; தமிழ் இன வளர்ச்சிக்கும்; தமிழ்ப் பாரம்பரிய விழிப்பு உணர்வுகளுக்கும் துடிப்புடன் செயல்பட்டு வந்தவர். மலேசியாவில் பல நூறு தமிழர் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து தனிமனிதராக நிகழ்த்திக் காட்டியவர்.

மலேசியாவில் தமிழ்ப் பாரம்பரிய உணவு முறை மறக்கப்படக் கூடாது என்பதற்காக, 2019-ஆம் ஆண்டு இறுதி வாக்கில், பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளில் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தியவர்.

மற்றவர்களின் கையை எதிர்ப்பார்க்காமல் தன் சொந்தச் சேமிப்பில் இருந்து சில பல ஆயிரங்களைச் செலவு செய்தவர்.

தமிழர்க் கலாசார உணர்வுகள் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக நாடு தழுவிய நிலையில் பல நூறு தமிழர்க் கலை விழாக்களை நடத்தியவர்.


மலேசியத் தமிழர்களுக்கு, குறிப்பாக ஈப்போ புந்தோங் வாழ் தமிழ் மக்களுக்காக மறுமலர்ச்சித் திட்டங்கள் உருவாக வேண்டும் என்று அயராது உழைத்தவர். அரும்பாடு பட்டவர்.

தேசிய அளவில் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளை ஈப்போவில் முதன்முதலாக நடத்தியவர். ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழாவை பேராக் மாநில அளவிலும் நடத்திக் காட்டியவர். அவர் அரசியல்வாதிகளையும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆன்மீகவாதிகளையும் எதிர்ப்பார்க்கவில்லை.

மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்காகச் சொந்தப் பணத்தைச் செலவு செய்தவர். பல இலட்சங்களைத் தாண்டிப் போகலாம். அவர்தான் பி.கே.குமார். ஈப்போ வாழ் மக்களுக்கு நன்கு தெரிந்தவர். பலருக்கும் நெருங்கிய தோழர்.

அதையும் தாண்டிய நிலையில் அவர் ’மலேசியம்’ புலனத்தின் நீண்ட கால அன்பர். சலிக்காமல் சளைக்காமல் நல்ல நல்ல பதிவுகளைத் தமிழர்களுக்காகப் பதிவு செய்து வந்தவர்.


அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தி கொள்ள இறைஞ்சுகின்றோம்.

பி.கே.குமார் 1956 ஏப்ரல் 29-ஆம் தேதி பிறந்தவர். வயது 65. மனைவி முத்து ராசாத்தி. மகன் ஜெயக்குமார். மருமகள் யோகேஸ்வரி தேவி. மகள் தாமரைச் செல்வி. மருமகன் இரா. மாறன். பேரப் பிள்ளைகள்: ஜெ. புவனேந்திர குமார், ஜெ. ஆதீஸ்வரி, மா. சுருதி.

பி.கே.குமார், நாடறிந்த சமூகச் சேவையாளர். பேராக் இந்திய வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர். மலேசியத் தமிழர் சங்கத்தின் துணைத் தலைவர். மலேசியத் தொழில் முனைவர் மையத்தின் தலைவர். ஈப்போ செகதாரியஸ் தங்கும் விடுதி; குமார் வணிக வளாகம் ஆகிய நிறுவனங்களின் தோற்றுநர்.

1990-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தமிழர் மாநாடுகளின் தலைவர். 1996-ஆம் ஆண்டு தொடங்கி 2003-ஆம் ஆண்டு வரை சுங்கைபாரி அரசினர் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர். ஈப்போ வள்ளலார் அன்பு நிலையத்தின் காப்பாளர். இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

எப்போதுமே எதையாவது புதுமையாகச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத் துடிப்பில் நகர்ந்து கொண்டே இருந்தவர். இருபத்து நான்கு மணி நேரமும் வணிகம், வியாபாரம், வர்த்தகம் என்று பேசிக் கொண்டே இருப்பார்.


கடைகளில் அமர்ந்து சாப்பிடும் போதுகூட வணிகம் பற்றித்தான் பேசுவார். சமயங்களில் எனக்கே சலிப்பு ஏற்பட்டு மறைமுகமாகத் தொட்டுக் காட்டியதும் உண்டு. ‘என்னங்க குமார். இங்கேயுமா வணிகம் வர்த்தகம்... சாப்பிடுங்க’ என்று கடிந்து கொண்டதும் உண்டு.

1970-ஆம் ஆண்டுகளில் சிப்பாங் லொத்தியான் தமிழ்ப்பள்ளியில் அடியேன் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்த காலம். அப்போது பி.கே.குமாரின் தந்தையார் பாலகுருசாமி, சிப்பாங் சுங்கை பீளேக் நகரில் ஒரு சின்ன மளிகைக் கடை வைத்து இருந்தார்.

அந்தக் கடைக்குச் சமயங்களில் போவது வழக்கம். இருப்பினும் என்னுடைய மாணவர் பன்னீர்செல்வம் என்பவரின் மூலமாக பி.கே.குமார் அறிமுகம் ஆனார்.

அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் நேசன் நாளிதழின் சிறுவர் அரங்கம் பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்தேன். மாணவர்களின் படைப்புகளைத் திருத்தி வெளியிட்டு வந்தேன். அந்த வகையில் பி.கே. குமாரின் எழுத்துகளைத் திருத்தி பிரசுரிக்கச் செய்தேன். தொடர்ந்து கதைகள் கட்டுரைகள் எழுதினார். அப்போதே பி.கே.குமார் ஓர் எழுத்தாளராகி விட்டார்.


பின்னர் தொடர்பு இல்லாமல் போனது. நானும் ஆசிரியர் தொழிலைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டுப் பத்திரிகைத் தொழிலுக்கு வந்தேன். பின்னர் 40 ஆண்டுகள் கழித்து ஈப்போவில் என் மனைவியைச் சந்தித்து என்னைப் பற்றிக் கேட்டு இருக்கிறார்.

ஒருநாள் வீடு தேடி வந்தார். மாணவன் எனும் பாவனை தோழன் என்று மாறியது. அடிக்கடி வெளியே உணவகங்களுக்கு ஒன்றாகச் சாப்பிடப் போவோம். தட்டுப்படும் போது கைச்செலவிற்கு உதவி செய்து இருக்கிறார். மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதல் அழைப்பு வந்து சேரும். அவர் ஏற்பாடு செய்த சில நிகழ்ச்சிகளில் நீதிபதியாகவும் சேவை செய்து உள்ளேன். கடைசியாக பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான கலைநிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் சிறந்த தமிழாசிரியரைத் தேர்வு செய்யும் பொறுப்பு. பாரபட்சம் இல்லாமல் தேர்வு செய்தோம்.

1977-ஆம் ஆண்டில் ‘திராவிட மாயை’ எனும் நூலை பி.கே. குமார் எழுதி இருக்கிறார். அண்மையில் மேலும் ஒரு நூல். அதன் பெயர் ’வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம்’. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உரிமையுடன் போய் கேட்க வேண்டும். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். வாய்ப்புகளைத் தேடி நாம்தான் போக வேண்டும்.


வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இதைச் செய்யவில்லை; அதைச் செய்யவில்லை; எதையும் செய்து கொடுக்கவில்லை என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும். அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உரிமையுடன் போய் கேட்க வேண்டும். இப்படிச் சொன்னவர் தான் பி.கே.குமார்.

கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் பள்ளிகளுடன் தொடர்பில் இருந்தவர். தொய்வு இல்லாமால் தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வந்தவர். நாடளாவிய நிலையில் பல தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசி வந்தவர்.

அவரின் பார்வையில், கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம், சுற்றுப்புறச் சூழல் முற்றிலும் மாறி இருக்கிறது. மாறி விட்டது. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்; மிகத் திறமையான தலைமைத்துவம் மிக்க தலைமையாசிரியர்கள்; தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள்; சமூக ஆர்வலர்கள்; அரசு சார்பற்ற இயக்கங்கள்; முன்னாள் மாணவர் சங்கங்கள்; தமிழ்ப்பள்ளி வாரிய அமைப்புகள்; இந்தத் தமிழ் நெஞ்சங்களின் வற்றாத ஆதரவுக் கரங்கள் தமிழ்ப்பள்ளிகளை நோக்கி திசை திரும்பி உள்ளன என்று சொல்கிறார்.


தமிழ் ஊடகங்களும் அசராமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல், தங்களால் இயன்ற பணிகளையும் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்பட்டது அல்ல. அது போல இந்தச் சாதனைகளும் ஒரே நாளில் நடைபெற்றவை அல்ல. இப்படிச் சொன்னவர் பி.கே.குமார்.

மலேசியாவில் உள்ள பல தமிழ்ப்பள்ளிகளில் தமிழர்களின் பாரம்பாரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சாரும். விளையாட்டுகள் மட்டும் அல்லாமல் மனக் கணக்கு விளையாட்டுகளையும் அறிமுகம் செய்து இருக்கிறார். இந்த விசயம் மலேசியாவில் பலருக்கும் தெரியாது.

அந்த வகையில் தமிழ்ப்பள்ளிகளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறார். போற்றுகிறேன் அன்பரே.

வணிகம் செய்ய விருப்பம் வந்து விட்டால், அச்சம் சந்தேகங்களை விட்டு ஒழித்து விட வேண்டும். மனத் தடைகளை முதலில் அகற்றிவிட வேண்டும். வணிகம் செய்ய அடிப்படைத் தேவை துணிச்சல். நம்மால் முடியும் என்கிற துணிச்சல். மனத் தடைகளை நீக்குங்கள். தெளிவுடன் இருங்கள். எந்த வியாபாரம் செய்தாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் விருப்பப் பட்டே செய்யுங்கள்.


விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்தத் தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியும். முன்னேற்றம் தானாகவே வந்து சேரும் என்று அடிக்கடி சொல்லி வந்தார்.

பல்லின சமுதாயத்தினர் வாழும் மலேசிய நாட்டில் சகோதரத் துவத்துவம் மிகவும் முக்கியமானது. அந்தச் சகோதரத் துவத்துவத்தை நல்லிணக்கம் மூலமாகத் தான் கட்டிக் காக்க முடியும்.

அதே சமயத்தில் பல இனங்களுக்கு இடையில்  ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும். பல இனங்களை ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் செல்வர் பி.கே. குமார் அறைகூவல் விடுத்து வந்துள்ளார்.

அரசியல்வாதிகள் அவர்கள் பங்கிற்குச் சமூகச் சேவைகள் செய்தாலும் அரசியல் துறையில் சாராதவர்களும் சமூகச் சேவைகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்குக்கும் நல்லதைச் செய்வதைத் தங்களின் தலையாயச் சமூகப் பணியாகக் கருத வேண்டும். 


போட்டி விளையாட்டுக்களின் வழி இளம் சமுதாயத்தினர் விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். இனங்களுக்கு இடையிலான சமூகப் புரிந்துணர்வை வளர்க்க முடியும்.

எதிர்காலத் தலைமுறையினரிடம் இன வேறுபாடுகளைத் தவிர்க்க வேண்டியது இந்தக் காலத்துத் தலைமுறையினரின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் பி.கே. குமார் வலியுறுத்தி வந்தார்.

ஒருநாள் மாலை வேலை. மலேசியாவில் உள்ள தமிழர்களுக்காக ஒரு கட்டுரை எழுதுங்கள். அதில் நான் சொல்லும் இந்தக் கருத்துகளையும் மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார். நானும் மறந்து விட்டேன்.

அவர் இறப்புச் செய்தி வந்ததும் அவர் கேட்டுக் கொண்டதும் நினைவிற்கு வந்தது. அவர் போய் விட்டார். இருந்தாலும் அவர் சொன்ன கருத்துகள் இங்கே மீண்டும் உயிர் பெறுகின்றன.

பி.கே.குமார் கடைசியாக என்னிடம் சொன்னது. பதிவு செய்கிறேன். மலேசிய வாழ் அனைத்து இந்திய மாணவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இப்போதைக்கு உங்களின் பங்கு ஒன்றே ஒன்று தான். படிப்பது மட்டுமே. அதை மட்டும் சரியாகச் செய்யுங்கள்.


கஷ்டமோ நஷ்டமோ; எப்பேர்ப்பட்ட துன்பங்கள் வந்தாலும் படிப்பதை மட்டும் தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள். உதவி செய்ய பலர் இருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள்.

மலேசியாவின் மூன்று தலையாய இனங்கள். அவற்றில் அரசியல் செல்வாக்கு ஒரு புறம்; பொருளாதாரச் செல்வாக்கு இன்னொரு புறம். அந்த வகையில் எதிர்காலத்தில் நாம் பற்பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அப்போது கல்வியின் வலிமையைக் கண்ணியமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மலேசியத் தமிழர்களாகிய நாம் இந்த விநாடி வரையில் சலிக்காமல் சளைக்காமல் நம் தமிழ் மொழி உரிமைகளுகாகத் தொடர்ந்து போராடுகிறோம். போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கு முறையான அங்கீகாரம் உள்ளது. அந்த அங்கீகார உரிமையை நாளிதழ்கள் வழியாகவும்; ஊடகங்கள் வழியாகவும் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்கிறோம். உலக அரங்கில் அந்த உரிமைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

வயிற்றில் சுமந்த வலி அம்மாவுக்குத் தெரியும். தோளில் சுமந்த வலி அப்பாவுக்குத் தெரியும். பக்கத்து வீட்டு பாப்பாத்திக்குத் தெரியுமா. அல்லது பசார் மலாம் பக்கிரிசாமிக்குக்குத் தெரியுமா. மீசையில் மண் ஒட்டினாலும் குற்றம். ஒட்டா விட்டாலும் குற்றம். அப்படிச் சொல்கிறவர்களிடம் நாம் மாற்றுக் கருத்துகள் சொல்ல முடியாது. அவர்களைத் தூக்கிப் போட்டுவிட்டு நாம் பாட்டிற்குப் போய்க் கொண்டே இருப்போம்.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற மேடை முழக்கம். அப்படிச் சொன்னவர்: பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்.


அதைக் கேட்டு ஆவேசம் அடைந்து கண்டக் குரல் எழுப்பினார் பி.கே.குமார். பத்திரிகை செய்தியாளர்களை அழைத்து கண்டனத்தைத் தெரிவித்தார். மறுநாள் பத்திரிகையில் அவரின் செய்திகள் வெளியாகின.

அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார். ரொம்பவும் தப்பு. ஆட்சேபம் தெரிவித்தார்.

அவருடைய மனத்தாங்கலையும் பதிவு செய்கிறேன். மலேசிய இந்தியர்களுக்கு அரசியல் வலிமையும் இல்லை. பொருளாதார வலிமையும் இல்லை. ஒரே ஒரு வலிமை தான் இருக்கிறது. அதுதான் கல்வி எனும் வலிமை. அதுவே மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்கால வலிமைக் கேடயம். அதுவே பி.கே. குமார் அவர்களின் மனவேதனை.


அன்பர்களே ஒரு தாழ்மையான வேண்டுகோள். நம் இனத்தில் பலரை இழந்து கொண்டு வருகிறோம். இந்தக் கொரோனா எப்போது ஓயும் என்று தெரியவில்லை. வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். கவனமாகப் பயணியுங்கள்.

பி.கே.குமார் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர். ஆகவே இரண்டு ஊசிகள் போட்டுக் கொண்டால் கொரோனா தாக்காது என்று தவறாகக் கருத வேண்டாம். கவனம். கவனம்.

மலேசியத் தமிழர்களை வணிக விரும்பிகளாக உருமாற்றம் காண வேண்டும் என்று கனவு கண்ட பி.கே.குமாரின் கனவுகள் நனவாக வேண்டும். பி.கே. குமார்... அன்பரே, அருமைத் தோழரே, தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை என்றைக்கும் மறவாது. ஓர் ஆசிரியரின் கண்ணீர் அஞ்சலிகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.08.2021


பேஸ்புக் பின்னூட்டங்கள்

M R Tanasegaran Rengasamy: ஆழ்ந்த இரங்கல். ஓம் சிவாயநம.

Mageswary Muthiah: ஆழ்ந்த இரங்கல்.

Kala Balasubramaniam:
Om Shanthi

Kanaka Ambal: ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் நமசிவாய

Mariamal Surinarayanan: Om Namasivaya

Jeeva Muthu: ஆழ்ந்த அனுதாபங்கள்..

Manimala Tamil: Om Namah Shivaya

Muniandy Andy: ஓம் நமச்சிவாய

Mageswary Muthiah: ஓம் நமசிவாய.

Francis Silvan: நல்ல மனிதர்... எனது தொலைகாட்சி நாடகத்தில் நடித்து இருக்கிறார்.. சமுகப் பற்றாளர்... எனது படைப்புக்களின் தீவிர ஆதரவாளர்...

Sarasvathy Arjunan: ஆழ்ந்த இரங்கல். ஓம் நம சிவாய 🙏🙏🙏

Barnabas: ஆழ்ந்த இரங்கல். சகோதரரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுகிறோம்.

Sara Rajah: ஓம் நமசிவாய

Parimala Muniyandy: ஆழ்ந்த இரங்கல்

வே சங்கர்: ஆழ்ந்த இரங்கல் ஓம் நமசிவாய

Arni Narendran: Om Shanthi - Condolences to bereaved family

Magentiran Nawamani: நல்ல மனிதர்

Maha Lingam: ஆழ்ந்த அனுதாபங்கள்.. ஓம் நமசிவாய..

Gunasegaran Karuppiah: தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை. வாழ்க அவர் நாமம். 🙏🏼

Letchumanan Nadason: ஆழ்ந்த இரங்கல்.

Sheila Mohan: அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் நமச்சிவாய...

Malathi Nair: Deepest condolances to bereaved family

Anbarasan Shanmugam: ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

Raghawan Krishnan: RIP the Great Soul

Chitra Ramasamy: ஆழ்ந்த இரங்கல். ஓம் நம சிவாய 🙏🙏🙏

Jeyabalan Ramasamy: ஆழ்ந்த இரங்கல் ஓம் நமச்சிவாய 🙏

Mani Kumar: நன்றாக பழகக் கூடியவர்... ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

MA Chandran: ஒரு நிகழ்ச்சி முடிந்து இவர் வீட்டுக்குப் போனபோது அனைவருக்கும் முகமலர விருந்தளித்து அனுப்பிய பண்பாடறிந்த தமிழர்.

’சினிமா மோகமும் திராவிட மாயையும்’ தலைப்பில் அவர் எழுதிய நூலைக் கேட்டேன். ’இப்போ கைவசமில்லை எப்படியும் உங்களுக்கு அனுப்புவேன்’ என்றார். அனுப்பாமலேயே மறைந்து விட்டார்.

ஒரு தமிழின பொழிப்பற்றாளர் மறைவு மிக வருத்தத்தைத் தருகிறது. அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆழந்தி இரங்கல். ம.அ.சந்திரன்

Parameswari Doraisamy: ஆழ்ந்த இரங்கல்

MP Tarah: எதையும் பெரிதா எடுத்துக் கொள்ளாதவர். யாருக்கும் தலை வணங்காதவர். நிறைய நல்ல நல்ல கட்டுரைகளை எழுதியவர். நல்ல மனிதர். பி. கே. குமார் அவர்கள்.

Mariamal Surinarayanan: தமிழ்ப் பள்ளிகள் இழந்துவிட்ட சிறந்த தமிழர்

Palar Thangamarimuthu: ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி

Gunaraj George: Shivaya Namaha

Prabagaran Praba: May be an image of one or more people and text that says 'ஆழ்ந்த இரங்கல்... கண்ணீர் "அஞ்சலி"'

Nyana Moorthy: ஓம் நமசிவாய

Ramayah Muru: ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரியன் குடும்பத்தினருக்கு.

Vimal Sandhanam: பார் வாழும் மட்டும் புகழ் நிலைக்கும். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Mohamedu Ali: உங்கள் கட்டுரை நன்று. சிறப்பான பதிவு. சார். என்னைத் தொடார்பு கொள்ளுங்கள். 0176837865. அலி. K.k. நன்றி.

Prabu Prabu: 🙏🙏🙏

Mohamedu Ali:
சிறப்பான பதிவு

Rajaletchumy Munusamy: 🙏🙏🙏

Thanabalen WaiRawan: ஆழ்ந்த இரங்கல் 🙏🏻ஓம் நம சிவாய🙏🏻 🙏🏻

Ayadorai Teresa: 🙏🙏🙏








 

15 ஆகஸ்ட் 2021

நாலு கட்டைப் பாடலில் நாகூர் ஹனிபா

தமிழ் மலர் - 15.08.2021

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை


சாகாவரம் பெற்ற ஒரு சாகித்திய சங்கீர்த்தனம். தில்லைத் திரவியத்தில் ஒரு திவ்வியப் பிரபந்தம். சாதி மதங்களைக் கடந்து போன ஒரு பவித்திர ஒப்பந்தம். இன்றும் ஒலிக்கும்; இனி என்றும் ஒலிக்கும். இறையருள் இருக்கும் வரையிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

என்னே ஒரு கணீர்க் குரல். என்னே ஒரு குரல் வளம். என்னே ஒரு கம்பீரத் தொனி. நாலு கட்டைப் பாடல். நாலு திக்கும் நர்த்தனமாடிய ஒரு மந்திரப் புன்னகை. எட்டுக் கட்டைப் பாடல்களினால் ஏழிசை மன்னர்களையும் கலங்கடித்த கம்பீரச் சாரீரம்.


சொல்லப் போனால் நாகூர் ஹனிபா ஒரு வைரம் பாய்ந்த கட்டை. விழுதுகளைத் தாங்கிய ஓர் ஆலமரம். சாய்ந்து நாளாகி விட்டது. வாழ்த்தலாம். வேறு எதையும் செய்ய முடியாது.

இந்தப் பாடலைக் கேட்கும் போது எல்லாம் நெஞ்சம் இனிக்கின்றது. கனக்கின்றது. ரசிக்கும் போது மணக்கின்றது. மலர்கின்றது. ரசித்த பின்னர் ருசிக்கின்றது. இசைக்கின்றது. வாழ்த்த வயது இல்லை. சிரம் தாழ்த்திக் கூப்புகிறேன்.

நாகூர் ஹனிபா சாதி சமயங்களைக் கடந்து போன ஒரு மாமனிதர். சடங்கு சம்பிரதாயங்களைத் தாண்டிப் போன ஒரு நல்ல மனிதர். அவரை வெறும் ஒரு பாடகனாக மட்டும் பார்க்கக் கூடாது. சமயத்தையும் தாண்டிச் சென்று சாதனை படைத்த ஒரு புனிதராகத்தான் பார்க்க வேண்டும். நாம் வாழும் காலத்தில் அவர் ஒரு சகாப்தம். மறக்க வேண்டாம்.


அவரின் அந்த இடத்தை நிரப்ப இன்னும் ஒருவர் அவ்வளவு விரைவில் வருவாரா. தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்கு இப்போதைக்கு எவரும் இல்லை. இனிமேல் வரலாம். அப்படி ஒருவர் வருவாரா என்பதும் ஒரு கேள்விக்குறி. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

’நாகூர் ஹனிபா தமிழ்நாட்டுத் திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டு சேர்த்த ஒரு தனிமனித வானொலி.’ இப்படிச் சொன்னவர் யார் தெரியுங்களா. அவர்தான் பெரும் புகழ் பெரியார். அப்படி ஒரு புக்ழாரம் செய்து உள்ளார்.

பொதுவாக தமிழ்ப் பாடல்களில் சுருதி, லயம், ராகம் இருக்கும். பாடல்களின் மும்மூர்த்திகள் என்று சொல்வார்கள். அதனால் தான் இசையில் சுருதி என்பதை மாதா என்றும்; லயம் என்பதை பிதா என்றும் அழைக்கிறார்கள். பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வதை லயம் என்பார்கள். சுருதி இல்லாமல் பாட்டுக்கு எப்படி மதிப்பு இல்லையோ; அதே போல் லயம் இல்லாமல் பாட்டிற்கும் மதிப்பு இல்லை.


ஆனாலும் நாகூர் ஹனிபாவின் பாடல்களில் அந்தச் சுருதி லயங்களை மிஞ்சிய உணர்ச்சிகள் இருக்கும். அந்த உணர்ச்சிகள் இப்போதும் சரி; இனி எப்போதும் சரி பிரளயங்களாக ஆர்ப்பரிக்கும். இது உண்மையிலும் உண்மை. ஒரு சத்தியமான உண்மை என்றுகூட சொல்லலாம். அப்பேர்ப்பட்ட அழுத்தமான உணர்ச்சிக் குமிழ்கள் அவரின் பாடல்களில் தொற்றி நிற்கும்.

இசை லயங்களில் மூன்று வகை உள்ளன. விளம்பித லயம்; மத்திம லயம்; துரித லயம். இந்த மூன்று லயங்களையும் நாகூர் ஹனிபாவின் சுரிதி லயங்கள் தனியாகவே தாண்டி நிற்பதைக் காணலாம். அவருடைய பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். நான் சொல்வது சரியாக இருக்கும்.

இன்னும் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன். ஒரு தாளத்தில் உள்ள அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை மீண்டும் போட்டு முடிப்பார்கள். அதை ஆவர்த்தம் என்று சொல்வார்கள். ஆவர்த்தம் என்பதை ஆவர்த்தனம் அல்லது தாளவட்டம் என்றும் சொல்லலாம்.


ஆதி தாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு இலகுவையும்; இரண்டு துருதங்களையும் போட்டு முடித்தால் ஓர் ஆவர்த்தனம் ஆகும். இந்த ஆவர்த்தன தாளவட்டங்கள் எல்லாமேநாகூர் ஹனிபாவின் பெரும்பாலான பாடல்களில் ஊன்றிச் செல்வதை நன்றாகப் பார்க்கலாம். சரி.

அழகிய தமிழ் மொழிக்கு அழுத்தமான எழுத்துக்ளை அழுத்திப் போட்டு அவற்றுக்கு மீசை வைத்தவர் பாரதியார். அவரைப் போலவே தன் குரல் வளத்தால் தமிழ் அன்னைக்கு தலைப் பாகை கட்டி அழகு பார்த்தவர் இந்த வெள்ளிநரை நாயகன் நாகூர் ஹனிபா.

பதினைந்து வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்தவர். அப்புறம் திருமண வீடுகள்; மேடைக் கச்சேரிகள் என்று அடுக்கடுக்காய் தொடர்ந்து பாடினார். அவர் காலத்து 75 ஆண்டுகளில் 5000 திருமண வீடுகளில் பாடி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்வார்கள். அவரிடம் அந்த மாதிரியான ஒரு மனப்பக்குவம் இருந்தது. சரி.


நாகூர் ஹனிபா இலைமறைக் காயாக வாழ்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி. பிரபலமான ஒரு பாடகர். திராவிடக் கொள்கையில் அலாதியான பிடிப்பு கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலம் முதல் மிக முக்கியமான பங்கு வகித்தவர். இசை முரசு என்று இனிமையாக அழைக்கப் படுகிறார்.

நாகூர் இ. எம். ஹனிபா (Nagore E. M. Hanifa), தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிப்பட்டினம் என்கிற ஊர். அங்கே தான் 1925 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தில் பிறந்தார். தகப்பனாரின் பெயர் முகம்மது இஸ்மாயில். தாயாரின் பெயர் மரியம் பீவி. குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை.

(சான்று: https://en.wikipedia.org/wiki/Nagore_E._M._Hanifa)

இஸ்மாயில் முகம்மது ஹனிபா என்ற தன்னுடைய பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிபா என்று வைத்துக் கொண்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாகத் தலைதூக்கிய  காலக் கட்டத்தில் இவர் தன்னுடைய குரலையே ஆயுதமாகப் பயன்படுத்திப் போராடினார். வெற்றியும் கண்டார்.

(சான்று: http://www.thehindu.com/features/friday-review/music/when-his-life-was-a-song/article5785079.ece - Hanifa’s rise to fame as the ‘voice’ of the Dravida Munnetra Kazhagam (DMK)


செந்தமிழை மேயவந்த
இந்தி என்ற எருமை மாடே!
முன்னம் போட்ட சூடு என்ன
மறந்ததோ உனக்கு?
என்றும் இந்தி ஏற்க மாட்டோம்
ஓடிப்போ வடக்கு!

நாகூர் ஹனிபா பாடிய உணர்ச்சிமிகு பாடல். அந்தப் பாடலைத் தமிழ் உலகம் என்றைக்குமே மறக்காது.

1955-ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் குலேபகாவலி; 1961-ஆம் ஆண்டில் பாவ மன்னிப்பு; 1992-ஆம் ஆண்டில் செம்பருத்தி, 1997-ஆம் ஆண்டில் ராமன் அப்துல்லா. இப்படி நிறைய திரைப் படங்களில் பாடி இருக்கிறார்.

எல்லோரும் கொண்டாடுவோம்

உன் மதமா என் மதமா

நட்ட நடு கடல் மீது

இறைவனிடம் கையேந்துங்கள் போன்ற மணிமணியான பாடல்கள்.

நாகூர் ஹனிபா தி.மு.க.வின் தொடக்க காலத்தில் இருந்தே கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். உழைப்பில் விசுவாசத்தைப் பார்த்தவர். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தி.மு.க.-விற்கு அர்ப்பணித்த ஓர் அதிசயமான மனிதர்.

கடைசியில் உயர்ந்த குரலில் உச்சத் தொன்யில் உரக்கப் பாடிப் பாடியே இரத்த வாந்தி எடுத்தவர். அந்த ஓங்கார உச்சத்தில் அவருடைய செவிப்பறை கிழிந்து போனது. கடைசியில் உடல் நலிந்து நலம் மெலிந்து, அப்படியே மறைந்து போனது அந்தத் தன்மானச் சிங்கம்.

ஒன்று மட்டும் உண்மை. இவராக எந்த ஒரு வாய்ப்பையும் தேடிப் போனது இல்லை. இவராக எந்த ஒரு வசதியையும் தேடிப் போனது இல்லை. வந்தது வரட்டும் என்று சொல்கிறவர். அவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் திராவிடக் கொள்கையே அவருக்கு ஒரு பொற் குவியலாகத் தெரிந்தது. அப்படியே உருமி மேளமாகவும் திரிந்தது.

ஒரு செருகல். தமிழக அரசியல் வரலாற்றில் பிழைக்கத் தெரியாத அப்பாவி மனிதர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் நாகூர் ஹனிபாவின் பெயரைத் தான் முதல் இடத்தில் வைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் அப்பாவி. வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கிற மனசு. பிழைக்கத் தெரியாத மனிதர் என்று பேர் வாங்கியவர். இந்தப் பக்கம் இக்கரையில் அப்படி ஒரு பட்டியல் போட்டால் அதில் மறக்காமல் என்னையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்களேன். கோலா சிலாங்கூரில் இருந்து கோலா கங்சார் வரை பலரும் சொல்லிச் சொல்லியே ஒருவழி பண்ணி விட்டார்கள்.

நாகூர் ஹனிபா நினைத்து இருந்தால் என்றைக்கோ தமிழ்நாட்டின் அமைச்சராகி இருக்கலாம். அதுவும் இல்லையா. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் ஆகி இருக்கலாம். அதுவும் இல்லையா. பொருளாளராகவும் ஆகி இருக்கலாம். நாகூர் ஹனிபாவிடம் எல்லாத் தகுதிகளும் இருந்தன. அதில் யாருக்கும் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

ஹனிபாவுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையே இருந்த உறவு இருக்கிறதே அது இன்று நேற்று வந்த உறவு அல்ல. கலைஞர் கருணாநிதி அரைக்கால் சட்டை போட்டுத் திரிந்த ஒரு காலம் இருந்தது. அந்தக் காலத்தில் இருந்தே இருவருக்கும் அப்படி ஒரு நல்ல நட்பு. ஹனிபா மறைந்த செய்தியைக் கேட்டு முதல் ஆளாய்ப் பனித்த கண்களுடன் நின்றவர் கலைஞர் கருணாநிதி.

நாகூர் ஹனிபா கலைஞரை எப்போதும் மு.க. என்று செல்லமாகத் தான் அழைப்பார். இன்னும் ஒரு விசயம். நாகூர் ஹனிபா தன் ஒரு கையைப் பேராசிரியர் அன்பழகன் தோளிலும் இன்னொரு கையைக் கலைஞர் தோளிலும் போட்டுக் கொண்டு உரையாடும் உரிமை பெற்றவர். அந்த அளவிற்கு உரிமை.

இருந்தாலும் பாருங்கள். நாகூர் ஹனிபாவிற்கு ஏதாவது ஓர் உயர்ப் பதவியை, கலைஞர் கொடுத்து இருக்கலாம். நாகூர் ஹனிபா அந்த மாதிரி பட்டம் பதவிகளைத் தேடிப் போகிற மனிதரும் அல்ல. இருந்தாலும் ஏன் கொடுக்கவில்லை. அது ஒரு பெரிய கேள்வியாகவே இன்று வரை தொற்றி நிற்கிறது.

கலைஞர்  கருணாநிதி தன் இளமைக் காலங்களில் பெரும்பாலும் நாகூர் பகுதியில் சுற்றித் திரிந்தவர். அந்த நாகை பகுதியிலேயே காலத்தையும் நேரத்தையும் கழித்தவர். நாகை மக்களுடன் ஒன்றாய்க் கலந்து வாழ்ந்தவர்.

முன்பு காலத்தில் நாகூரில் கௌதிய்யா சங்கம் எனும் பெயரில் ஒரு சங்கம் இருந்தது. இன்னமும் இருக்கிறது. அந்தச் சங்கத்தின் தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டு, கலைஞர் கருணாநிதி சுற்றித் திரிந்த காலம் ஒன்று இருந்தது.

நாகூரில் வாழும் மூத்த குடிமக்கள் இன்றும் அதை நினைவு படுத்திச் சொல்வார்கள். ஆக அந்த வகையில் கலைஞரின் வளர்ச்சியில் இஸ்லாமியச் சகோதரர்களின் பங்கு கணிசமான அளவில் இருந்து இருக்கிறது. அதை கலைஞரும் மறுக்கவில்லை.

கோபாலபுரத்தில் கலைஞருக்கு ஒரு வீடு இருக்கிறது. தெரியும் தானே. அந்த வீட்டின் இப்போதைய மதிப்பு 8 கோடி ரூபாய். அந்த வீட்டைக் கூத்தாநல்லுர் கமால் சகோதரர்கள் தான் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் தான் கமால் பிரதர்ஸ் என்கிற கமால் சகோதரர்கள். அந்தக் காலத்துப் படத் தயாரிப்பாளர்கள்.

1957-ஆம் ஆண்டு புதையல் எனும் திரைப்படத்தைக் கமால் சகோதரர்கள் தயாரித்து வெளியிட்டார்கள். அந்தப் படத்திற்கு கருணாநிதி கதை வசனம் எழுதி இருந்தார். அந்தச் சமயத்தில் குளித்தலை தொகுதியில் கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்று முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த நேரம்.

அந்த வீட்டை கலைவாணர் என்.எஸ்.கே. தான் வாங்கித் தந்தார் என்று சிலர் சொல்வது உண்டு. அது தவறுங்க. ரகசியத்தைப் பிறகு சொல்கிறேன். புது வீட்டிற்குப் புகுமனை செய்யும் போது கலைஞருடன் கூடவே இருந்து நாகூர் ஹனிபா உதவிகள் செய்து இருக்கிறார். இந்த உண்மை பலருக்கும் தெரியாது.

கமால் சகோதரர்களுக்கு வியட்நாம் நாட்டின் சைகோன் நகரத்தில் வணிகத் தொழில் இருந்தது. 1957-ஆம் ஆண்டு வியட்நாமிய போர். அதனால், சைகோன் நகரம் வீழ்ச்சி அடைந்தது. வியாபாரத்தில் நஷ்டம்.

அதன் பின்னர் கமால் சகோதரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கமால் பிரதர்ஸ் என்கிற பட நிறுவனத்தைத் தொடங்கினார்கள். தொடர்ந்து மூன்று படங்களைத் தயாரித்தார்கள். 1957-ஆம் ஆண்டு ’புதையல்’. 1960-ஆம் ஆண்டு ’தெய்வப்பிறவி’. 1964-ஆம் ஆண்டு ’வாழ்க்கை வாழ்வதற்கே’.

படத் தயாரிப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற்றுத் தரவில்லை. நொடித்துப் போனதுதான் மிச்சம். இவர்களுக்கு கடைசி காலத்தில் யாருமே உதவி செய்யவில்லை. இந்தக் கட்டத்தில் தான் நாகூர் ஹனிபா ஐயா வருகிறார். எப்படி என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.08.2021

பேஸ்புக் பின்னூட்டங்கள்

Sara Rajah: super ayya

Vejayakumaran: சினிமாவிலும் பாடியிருப்பாரே.. வாழ்த்துக்கள்

Sheila Mohan: இறைவனிடம் கையேந்துங்கள்... என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல்... ஐயாவின் குரலும்.. மிக அருமையான கட்டுரை.. நன்றிங்க சார்..!

Vani Yap: கட்டுரை படிக்க சிறப்பாக உள்ளது ஐயா.... நாகூர் ஹனீபா அவர் சமயம், சடங்குகள், சம்பிரதாயம் அனைத்தும் கடந்து தமிழ் மொழிக்கு அழகு சேர்த்தவர் என்று படிக்கும் போது பெருமையாக உள்ளது.... இனி இவர் போல் ஒருவர் வருவாரா... சாத்தியம் குறைவே ஐயா... சிறப்பு மிகுந்த பதிவு.. மிக்க நன்றி

Vani Yap: எனது இளவயதில் பிரமிக்க வைத்த அவரது பாடல்கள், இன்றளவும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது....😊👌

Jothy Subramaniam: கம்பீரமான குரல் வளம் கொண்டவர். இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் சமய பேதங்கள் கடந்து அனைவரையும் வசீகரித்த பாடல்.

Rsmaniam Subra: 👌

Bobby Sinthuja: ஐயா, அருமையான பாடல் தமிழ் மக்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல் வரிகள்...

Venogobaal Kuppusamy: கட்டுரை மிக அருமை! தங்களின் இசை ஞானம் அபாரம்! வாழ்த்துகள்

Parimala Muniyandy: அருமை... என்றென்றும் மனதில் நிற்கும் பாடல்...

Arni Narendran: Mumbai - Masjid Bandar - I heard his live concert in the early 1980s. A Divine Golden Voice. 🌷

Alagumani Mathivanan: கம்பீரமான குரல்

Punithasamy Sittan: நாடோடி நண்பா போகாதே என்றென்றும் காதல் சாகாதே சிறப்பாக பாடி இருப்பார்.