04 ஏப்ரல் 2021

இனிய பிரதமரின் இனிப்பான வாக்குறுதி

மலேசிய தமிழர்ச் சமூகத்திற்கு மலேசியப் பிரதமர் நேற்று (03.04.2021) ஓர் வாக்குறுதி அளித்து உள்ளார். மகிழ்ச்சியான வாக்குறுதி. கேட்பதற்கு இனிமையாக உள்ளது. “நாங்கள் உங்களை கவனித்துக் கொள்வோம். இது எங்கள் உறுதிமொழி”. ("We will take care of you. This is our pledge to you") இந்த வாக்குறுதியை உண்மையிலேயே நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதியாக ஏற்றுக் கொள்ள முடியுமா. பெரிய ஒரு கேள்விக்குறி?


The Prime Minister has made a promise to the Malaysian Indian (Tamil) community. Sweet promise to hear. "We will take care of you. This is our pledge to you". Can this promise be accepted as a truly hopeful promise? A big question mark?

கடந்த காலங்களில் இந்தியச் சமூகத்தின்; குறிப்பாக தமிழர்களின் அரசியல் பிரதிநிதித்துவங்கள் மாநில நிலைகளிலும்; தேசிய நிலைகளிலும் கட்டம் கட்டமாகக் குறைக்கப் பட்டு விட்டன. இது மலேசியர்களுக்கும் மட்டும் அல்ல. உலகத்தில் பாதி பேருக்கும் தெரிந்த விசயம். அத்துடன் நாட்டின் பல இடங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பெரிய அளவில் குறைக்கப்பட்டு விட்டது. இதை ஒரு திட்டமிடப்பட்ட செயலாக்கம் (Systematic implementation) என்று சொல்லலாம்.

The political representation of Indians in particular Tamils ​​has been gradually reduced at the state and national levels. And not just for Malaysians here; half the world knew that. And the representation of Indians (Tamils) in many parts of the country has been greatly reduced. Well it is par valued to a systematic implementation.

இப்போது ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டும் பெற்று வரும் சமூகப் பொருளாதார நலன்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால்; இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாகி விட்டது. மதச் சார்பான இடைவெளியும் அதிகமாகி விட்டது. இதை நன்றாகவே உணர முடிகின்றது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி; அரசியல் வளர்ச்சி; சமூக வளர்ச்சி; இவற்றின் வளர்ச்சிகளில் இருந்து தமிழர்கள் சன்னம் சன்னமாக ஒதுக்கி வைக்கப் பட்டனர். ஒதுக்கி விடப்பட்டனர்.

Considering the socioeconomic benefits now available only to a particular ethnic group; the gap between races and religions in this country has become wide and large. This can be felt. The economic development of the country; political development; social development; Indians (Tamils) have been narrowly excluded from these developments.

சுருக்கமாகச் சொன்னால், இந்த நாட்டின் வளர்ச்சிக்கு தமிழர்கள் அளப்பரிய பங்களிப்புகளை வழங்கி உள்ளனர். தெரிந்த விசயம். இருப்பினும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைக்கு அவர்கள் பின் தள்ளப்பட்டு உள்ளனர்.

In short, Indians (Tamils) have made tremendous contributions to the development of this country. It is commonly known fact. However, they have been neglected to an unacceptable marginal level.

நாட்டின் வளர்ச்சி வளப்பத்தைப் பற்றி பேசுவது நல்லது. மகிழ்ச்சி. உலகப் பார்வைக்குக் கொண்டு செல்வதும் சிறப்பு தான். தவறு இல்லை. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாடு பெற்று வந்த எந்தச் செழிப்பையும் வளப்பத்தையும் தமிழர்கள் பெறவில்லை என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது. நினைவில் கொள்ள வேண்டும்.

It is good to talk about the wealth of the country. It is good talk in a common arena about its achievements. Nothing wrong in that. But it should not be forgotten that Indians (Tamils) have not received any of the prosperity and wealth that the country has gained over the last few decades. This to be remembered.

தமிழர்கள் ஏன் தற்போதைய இந்த இக்கட்டான நிலைக்குப் பின் தள்ளப் பட்டார்கள்? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பேராசிரியர் ராமசாமி சொல்வது போல விண்வெளி (ராக்கெட்) அறிவியலை எடுத்துப் படித்துப் பட்டம் வாங்கி வர வேண்டிய அவசியம் இல்லை.

Why were the Indians (Tamils) pushed to this present level of predicament? If you want to know this, as Professor Ramasamy says, there is no need to take a degree in space rocket science.

உள்ளம் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரியும். தமிழர்கள் ஓரங்கட்டப் படுவது என்பது அந்தக் காலத்து பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் தொடக்கி வைக்கப்பட்ட ஓர் ஈமச்சடங்கு.

Historically, the marginalization of Indians (Tamils) was a rite of passage that began during the British colonial period.

இன மதக் கொள்கைகள் வெளிப்படையாகப் பட்டவர்த்தனமாக அமல்படுத்தப் படுகின்றன. அவற்றை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில்; தமிழர்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய தடைத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Ethnic and religious policies are openly enforced. Accepting them is having a major impediment to the socio-economic progress of Indians (Tamils).

கடந்த காலங்களில் தமிழர்கள் வேண்டும் என்றே புறக்கணிப்புச் செய்யப்பட்டு உள்ளனர். சமூகப் பொருளாதார வளர்ச்சியில் தமிழர்கள் பங்கு எடுத்துக் கொள்வதில் இருந்து தவிர்க்கப்பட்டு வருகின்றனர்.

In the past, Indians (Tamils) have been totally neglected. They were excluded from participating in the national socio-economic developments.

பிரதமர் அவர்களின் "இந்தியர்களைக் கவனித்துக் கொள்வோம்" எனும் உத்தரவாதச் சொற்கள் கேட்பது நன்றாக இருக்கிறது. இருந்தாலும் மலேசியத் தமிழர்ச் சமூகத்திற்கு ’இந்தா எடுத்துக்கோ’ என்று சில ரொட்டி துண்டுகளைத் தூக்கிப் போடுவது போலாகும்.

It is good to hear the Prime Minister's words of assurance, "Let us take care of the Indians." However, it is like throwing some bread crumbs to the Malaysian Indian (Tamil) community saying ‘Take It’.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்ள தமிழர்கள் தங்கள் கண்ணியத்தையும் பெருமையையும் இழந்து வருகின்றனர். வேதனை.

The Indians (Tamils) under the present government are losing their dignity and pride.

கடந்த காலத்து நினைவலைகளில் எஞ்சி இருப்பது தாய்க்கட்சி ம.இ.கா. மட்டுமே. அந்தக் கட்சியின் மூலமாக தமிழர்களின் பிரதிநிதித்துவம் அரசாங்கத்தில் இன்னும் உள்ளது எனும் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டு உள்ளது. அவ்வளவுதான்.

The remnants of the memories of the past are the mother party MIC. An illusion has now been created that the representation of Indians (Tamils) is still in government.

ஒரு முழு அமைச்சர் பதவி. அதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த தமிழர்களும் பிரதிநிதித்துவம் பெற்று விட்டனர் என்று சொல்ல முடியுமா? ஒரே ஓர் அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு பேர் போடுவது சாதாரண விசயம் அல்ல.

A full ministerial post. Can it be said that all Indians (Tamils) are represented?

பிரதமர் மட்டும் அல்ல. இன பேதம் பார்க்கும் வேறு எந்தத் தலைவர்களின் இனிமையான பேச்சுகளும் சரி; தமிழர்ச் சமூகத்தின் எதிர்கால நல்வாழ்வுக்கு எந்த வகையிலும் நன்மை வழங்கப் போவது இல்லை. எல்லாமே கானல் நீர்.

All the sweet talk by the primier or any other race baiting leaders will mean nothing for the future well-being of the Indian Tamil community. Just a mirage.

இந்த நாட்டிற்காகக் கண்ணீர் வடித்த தமிழர்ச் சமூகம். இரத்தம் சிந்திய தமிழர்ச் சமூகம். அந்தச் சமூகம் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை குடிமக்களாகவே கருதப் படுகின்றனர்.

The community that shed tears and blood for this country and that community is treated as second or third class citizens.

இந்த நிலையைத் தாண்டி தமிழர்களின் நிலை உயரும் வரையில் பிரதமரின்  “நாங்கள் உங்களைக் கவனித்துக் கொள்வோம்” எனும் சொற்கள் வெறும் அல்வாத் துண்டு விளம்பரங்கள் தான்.

Until the status of Tamils rises beyond this level, the PM's pledge "We will take care of you" is merely a sweet candy manifesto.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.04.2021


பேஸ்புக் பதிவுகள்


Maha Lingam: அரசியல் நாடகம்... ஐயா. ஏற்கனவே நம்பி நம்பிக் கெட்டுப் போன ஏழை இனம். இவர்களுக்குத் தெரியும்; இந்தியச் சமுதாயம் எதைச் சொன்னாலும் நம்பும். ஓட்டுப் போடும். பிறகு பார்த்துக் கொள்ளலாம். காரணம், ஏற்கனவே ஒருத்தன் கற்று கொடுத்து விட்டான். எப்படி இந்த இனத்தை ஏமாற்றுவது என்று... நம்ப வேண்டாம்...

Sathya Raman >>> Maha Lingam: சரியாகச் சொன்னீர்கள் சார்.

Muthukrishnan Ipoh >>> Maha Lingam: புதிதாக எதுவும் இல்லை. ஏற்கனவே ஒருவர் கற்றுக் கொடுத்து விட்டார். நல்லாவே நாலு டன் ஆணி அடித்துவிட்டு நகர்ந்து விட்டார். நம்பி மோசம் போனதுதான் மிச்சம்.

Sathya Raman >>> Muthukrishnan Ipoh: இப்போதுதான் தங்களது முழு பதிவையும் படித்துக் கொண்டிருக்கிறேன் சார். இதற்காக கருத்துகளையும் நிச்சயம் எழுதுவேன் .

Muthukrishnan Ipoh >>> Sathya Raman: சரிம்மா. ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துப் பகிர வேண்டி உள்ளது. உலக அளவில் எல்லோரும் உண்மையைத் தெரிந்து கொள்ளட்டும். அடிபட்டுக் கடிபட்டு வந்தவர்களுக்கு வலிக்கவே செய்யும்.

MP Tarah: ஒவ்வொரு தேர்தல் சமயத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் அள்ளி விட்டு போக வேண்டியது தானே, இதை எல்லாம் நம்புவதற்கு இங்கு யாருமில்லை, வேறு வேலை இருந்தா பார்க்கச் சொல்லவும். குடிகாரன் பேச்சி, விடிந்தால் போச்சி என்பது போல்தான் இதுவும் ஒன்றாகும்.

Sathya Raman >>> MP Tarah: அதே 🙏

Muthukrishnan Ipoh >>> MP Tarah: நல்ல வாக்குறுதி... தேர்தல் வாக்குறுதி... சேர்த்து பால்கோவா பாயாசம் கொடுத்து இருக்கலாம். மேலும் கூடுதலாக இனிக்கும்.

Sathya Raman >>> Muthukrishnan Ipoh: இந்த கேக்கு கீக்கு சார்?

Muthukrishnan Ipoh >>> Sathya Raman: பால்கோவாவிற்கு மிஞ்சி ’கேக்’காவது... ’கிக்’காவது...

Parameswari Doraisamy: வணக்கம் ஐயா.. இந்த சுயநல அரசியல்வாதிகளின் குள்ளநரி வேசத்தை நம்பி நம்பி ஏமாற்றம் அடைந்துதான் மிச்சம். தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குறுதிகள் அள்ளி வீசுகிறார்கள்.இவர்களை பார்த்தாலே மிகவும் கோபம் எரிச்சல் தான் வருகிறது.

Sathya Raman >>> Parameswari Doraisamy: இந்த முறையாவது எரிச்சல் மிகுந்த கோபத்தை நிஜமாக்குவோம் பரமேஸ்.

Parameswari Doraisamy >>> Sathya Raman: ஆமாம் சத்தியா சரியான பாடம் புகட்ட வேண்டும்

Sathya Raman >>> Parameswari Doraisamy: வெச்சு செய்வோமா? 😀

Arojunan Veloo: தன் கையே தனக்கு உதவி. நாம ஒன்றுபட்டுச் செயல் படவேண்டிய நேரம் வந்தாச்சு! அரசும் அரசியலாரும் நம்மைக் காப்பாற்றப் போறதில்லை! ஏதாவது ஒரு நல்ல வழியச் சொல்லுங்க ஐயா!

Sathya Raman >>> Arojunan Veloo: அப்படி போடு

Muthukrishnan Ipoh >>> Arojunan Veloo: மிகச் சரியாகச் சொன்னீர்கள். நம் கையே நமக்கு உதவி. இனி அரசியல் தலைவர்களை நம்பி நடக்கப் போவது எதுவும் இல்லை.

Perumal Thangavelu: தலைவன் சந்தர்ப்பவாதியாக இல்லாமல் மக்களை நேசிப்பவரா இருந்தால் தானாக வாக்களிக்கும் கூட்டம் பெருகும். யார் ஒருவர் இன மத  பேதமின்றி சேவை செய்கிறாரோ அவரை மக்கள் கூட்டம் மொய்க்கும். இல்லாவிடில் ஏய்க்கும் ta

Sathya Raman >>> Perumal Thangavelu: அத்தகைய நல்லவரை இந்ந நாடு இன்னும் கண்டுபிடிக்க வில்லை சார்.

Perumal Thangavelu >>> Sathya Raman: 🙏

Kumar Murugiah Kumar's >>> Sathya Raman: உண்மையை அறிந்து மக்கள் சிந்திக்கட்டும்.

Vani Yap: சிந்திக்க வைக்கும் பதிவுங்க ஐயா.. நம்ப முடியாத வாக்குறுதி தான்.... காலம் தொட்டும் தமிழர்களுக்கு கிடைக்கும் சிறப்பு சேரா சன்மானம் 😔😔

Kala Balasubramaniam: So well said and the undeniable truth..

Muthukrishnan Ipoh >>> Kala Balasubramaniam: சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லித் தான் ஆக வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி... நம்முடைய கருத்துகளைச் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை. நமக்கு கருத்துரிமை உள்ளது. இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்த உரிமை உள்ளது.

Kala Balasubramaniam >>> Muthukrishnan Ipoh: 🙏

Ranjanaru Ranjanaru: தேர்தல் நெருங்கும் நேரத்தில் ... சமயம் பார்த்து காய் நகர்த்துகிறார் பிரதமர் ... இன்னும் நாம் நம்பிக் கொண்டிருந்தால் ஏமாளி சமூகம்தான் ...

Sathya Raman >>> Ranjanaru Ranjanaru: அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா

Muthukrishnan Ipoh: நம் இனம் மிக மிகச் சிறிய இனமாகி விட்டது. அதனால் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படப் போவது இல்லை. எதிர்த்துப் போகவும் மாட்டார்கள் என்பதும் நன்றாகத் தெரியும்.

Ranjanaru Ranjanaru >>> Muthukrishnan Ipoh: 🙏

Baakialetchumy Subramaniam: இந்த மாதிரியான பசப்பு வார்த்தைகளை பேசியே பழக்கப் பட்ட அரசியல்வாதிகளை என்னவென்பது...

Sathya Raman >>> Baakialetchumy Subramaniam: அவர்களுக்கு பெயர்தான் அரசியல்வாதிகள் சகோதரி.

Raghawan Krishnan: You have written very clearly about our Present situation in this country. Indeed TRUE FACTS. Are our Leaders BRAVE Enough to have Table Talk with the Prime Minister? We must talk as Citizens of this Country. Congrats. My Dearest Friend YB Muthu Krishnan.

Muthukrishnan Ipoh >>> Raghawan Krishnan: நன்றிங்க. எதிர்பார்த்தது தான். ’நாங்கள் உங்களைப் பாதுகாப்போம்’ என்றால் என்ன. இனிமேல் தான் பாதுகாக்கப் போகிறார்களா? இவ்வளவு நாளும் ஏமாற்றப் பட்டோம். அதை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பதாம். விடுங்க ராகவன். வேதனையைக் கொட்டித் தீர்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.

Velan Mahadevan: Marilah maari undilah undi

Muthukrishnan Ipoh >>> Velan Mahadevan: 🙏 தேர்தல் நெருங்கி விட்டது.

மா.சித்ரா தேவி: ஐயோ ஐயோ

Sathya Raman >>> மா.சித்ரா தேவி: ஏன் இந்த கொலை வெறி.? 😀

மா.சித்ரா தேவி >>> Sathya Raman: நம்ப கூட்டம் இப்பதான் திராவிடன் தமிழன் சமஸ்கிருதம்ன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்குதுங்க. அப்புறம் புத்தாண்டு தீபாவளிக்கு போயிருங்க. இதுல நம்ம பிரதமர் வேற காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு அய்யோ அய்யோ 😁

Sathya Raman >>> மா.சித்ரா தேவி: அதுமட்டுமா இன்னும் ஒரு வாரத்தில் பிறக்க போகிற சித்திரை முதல் நாளை வெச்சி செய்வாங்களே ஒரு கூத்து. நம்ம பயல்களே காமெடியன்களாக இருக்கும் போது நம்ம பிரதமர் பாவம் சித்ரா. சீக்குக்கார மனுசன்.

இப்பத்தான் நமக்கு இனிப்பு தந்திருக்கிறார். அது திகட்டியதும் தண்ணி காட்டுவார் பாருங்கள். இருந்ததாலும் உங்களுக்கு தாமாஷ் ஜாஸ்தி... பாவம்! அவரே சீக்குக்கார ம ???? 😁

Parameswari Doraisamy >>> Sathya Raman: இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த பிரச்சனை தீராது சத்தியா. இனிப்பான செய்தியைக் கேட்டு எனக்கு சர்க்கரை அதிகமாகி மயக்கம் வந்துவிட்டது 😄

Sathya Raman >>> Parameswari Doraisamy: எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று நம்மவர்களைப் பற்றி கணித்து வைத்து இருக்கிறார்களே? ஏமாந்த சோணகிரிகள் நம்மில் இருக்கும் வரை இனிப்பென்ன தேனாறும், பாலாறும் பாசாவில் ஓடுகிறதுன்னு பாட்சா கட்டுவார்கள். அதையும் நம்பி நம்ம பயப் பிள்ளைகள் பாத்திரம் ஏந்தி படை எடுப்பார்கள்.

தன்மானம் தன்னில் உணர்த்தாத வரை தமிழன் இந்த நாட்டில் தலை எடுப்பது எங்கணம் பரமேஸ்?

பயப்படாதீர்கள்... பிரதமர் தந்த இனிப்பான செய்தியால் மயக்கம் எல்லாம் வர வாய்ப்பில்லை. தேர்தல் முடிந்ததும் அவர் செய்யும் அதிரடியில்தான் நம் சமூகத்திற்கு பெரும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Parameswari Doraisamy >>> Sathya Raman: சூடு சொரணை தன்மானம் என்ன விலை என்று  கேட்பார்கள் சிலர்.

Sathya Raman >>> Parameswari Doraisamy: அந்த குணம் விலைமதிப்பற்றது என்று தெரியாத மடந்தைகளோ என்னவோ. 🤔

Malathi Nair: Satya Raman's words very true.

MP Tarah: ஒவ்வொரு

Sundaram Natarajan:
Arumai Anna.

Muthukrishnan Ipoh >>> Sundaram Natarajan: நன்றிங்க

Raja Rajan: image of 1 person and text that says '8:53 facebook Thinnes Kumar KL INDIAN MAKKAL'S 12h.® Join Cuti thaipusam Di kedah dibatalkan oleh mb racist sanusi, angsung x pernah buka mulut pm Pintu belakang, ini nak kata jaga kaum india, ennamma nadikar paaruuu i f NST ONLINE 1 MIN READ Muhyiddin to Indian community: We will take care of you New Straits...

Ganesan Nagappan: 🙏

Sathya Raman: வணக்கம் சார். யானையைக் கண்டால் ஆயிரம் அடி நகர்ந்து விட வேண்டும். குதிரையைக் கண்டால் நூறு அடி விலகிவிட வேண்டும். இந்த நம்பிக்கைத் துரோகிகளைக் கண்டால் எப்போதுமே எட்டி ஒதுங்கிப் போய் உறவை முறித்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் இந்த அரசியல்வாதிகளின் வாய்ப் பந்தல்களையும், வஞ்சனை எண்ணத்தையும் வேரோடு அறுத்துச் சாய்க்கிற அறிவு வேண்டும். வாழைப்பழத் தோல்களாக; சோளக் கதிரின் சருகாக; தேவையற்றக் கழிவாக; இந்த நாட்டுத் தமிழர்களை எண்ணி எள்ளி நகையாடும் இந்த நாட்டு அதிகார வர்க்கத்தை நினைத்தால் வாந்தி வருகிறது.

பிரிட்டிஷ் காலனித்துவத்தில் தென்னிந்தியத் தமிழர்களை இங்கு அழைத்து வந்து அவர்களிடம் பெற வேண்டியதை எல்லாம் பெற்று, உறிஞ்ச வேண்டியதை எல்லாம் உறிஞ்சி, மலாயாவைத் தங்களது உழைப்பால், உதிரத்தால் உருமாற்றம் செய்து மலேசியாவாக இன்று மலர்ச்சிப் பாதையில் வலம் வருவதற்கு இன்று இந்த நாட்டில் இன்று குவிந்துக் கிடக்கும்... மியான்மர்காரர்களோ, இந்தோனேசியர்களோ, பாகிஸ்தானியர்களோ, பங்காளதேசிகளோ அல்ல.

சத்தியமாக எம் தமிழர்கள் தாம். இந்த நாட்டின் வாரிசுகள் என்று வாய்ச் சவடால் பேசும் பூமி புத்ராக்களும் இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

ஓர் இனம் உழைக்கத் தயாராக இல்லாத போது மற்றோர் இனம் இந்த நாட்டில் எருமை மாடுகளாய், நேரம் காலம் இன்றி, சூடு சொரணை இல்லாமல் அனைத்தையும் பொறுத்து, அடக்கி, அடங்கி, உழைத்து... இன்று நன்றி கெட்ட அரசியல் வாதிகளின் பார்வையில் உதவாக் கரைகளாக உதாசீனப் படுத்தப் படுகிறோம்.

உலகில் மூத்த இனம் இன்று சொந்த நாடு இல்லாமல் உழைப்பைக் கொட்டிய நாட்டிலும் இன்றும் கொத்தடிமைகளாக நடத்தப்படும் கொடூரம்.

இந்த நாட்டில் ஏற்படுகின்றன அரசியல் மாற்றங்களிலும் நம் இந்தியர்களின் மனங்களையே சதா புண்படுத்தி புளங்காகிதம் அடையும் அவலம்.

இதற்கும் நாம் தான் காரணம். நம்மிடையே இல்லாத ஒற்றுமை. சொந்த இனத்தின் மீதே இல்லாத அக்கறை. கூடவே நமக்காக துணிந்து எதையும் கேட்டுப் பெற துணிவு இல்லாத நமது பிரதிநிதிகள்.

அப்படியே கேட்டது கிடைத்தாலும் அவற்றைச் சொந்தத்திற்கும், சுயத்திற்கும் அனுபவிக்கும் சுயநலச் சொருபர்கள்.

தேர்தல் வரும் பின்னே, இனிய செய்திகள் வரும் முன்னே. இந்நாட்டு இந்தியர்களை இளித்த வாயர்களாக நினைத்து, நினைத்து ஒவ்வொரு தேர்தல் வரும் போது எல்லாம் இந்த சோழியன் குடுமிகளின் சொகுசு வார்த்தைகளை, பசப்பு, பித்தலாட்டம் நிறைந்த உரைகளை உதிர்க்கும் உச்சரிக்கும்.

இந்த நயவஞ்சக நாலாந்திர ஆலாபனைகளில் ஆட்கொள்ளாமல், அறிவு மயங்காமல் இந்த அறிவிப்புகளுக்குப் பின்னால் மறைந்து இருக்கும் மர்ம முடிச்சுகளை ஆழ்ந்த அறிவோடு அவிழ்த்து... இதுநாள் வரை இந்நாட்டில் நம்மவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அத்தனை துரோகத்தையும், திறந்த மனதோடு சீர்தூக்கிப் பார்த்து பாடம் கற்றுக் கொள்வோமாக.

இனிமேலாவது நாமும் சுயநலமாக வாழ பழகுவோமாக. ஏகாந்த வார்த்தைகளில்

ஏமாந்தது போதும். தேனான அறிவிப்புகளில் நம் தன்மானம் தேய்ந்தது போதும். இனியாவது சுயத்தோடு அறத்தோடும் நமக்கான வாழ்வாதாரத்தை வாழ்வோமா?

இது ஒரு அட்வைசோ அறிவுறுத்தலோ இல்லை. நம் சமூகம் இந்நாட்டில் நடத்தப் படுக்கின்றன ஆதங்கத்தின் வெளிப்பாடே என்னுடைய இந்த பதிவு.

Parthiban Apparu >>> Sathya Raman: அருமையான வார்த்தைகள். சிறப்பு சிறப்பு. 🙏

Sathya Raman >>> Parthiban Apparu: நன்றிங்க சார். எம் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளின் வெளிப்பாடே அரணான என் எழுத்துக்கள். 🙏

Christopher Charles >>> Sathya Raman: migavum arumai.

Jeeva Muthu >>> Sathya Raman: நம் சமூகத்துள்ளேயே குள்ள நரிகள் பெருகி கிடக்கிறதே

Sathya Raman >>> Jeeva Muthu: இன்னும் எவ்வளவு காலத்துக்கு இத்தகைய காரணங்களையும் சொல்லி கவலைப் பட்டுக்கொண்டிருக்கப் போகிறோம் சார். ஒரு ஹிண்ராப்பை உருவாக்கிய நம்மால் இந்த குள்ளநரிகளையும் அடையாளம் கண்டு அலர வைக்க முடியும். மனதில் தீரம் இருந்தால்...

Banu Linda: இந்த இனிப்பு செய்தி கேட்டு எனக்கு இனிப்பு இரத்தில் எகிறி விட்டது.. போங்க...

Sathya Raman >>> Banu Linda: பார்த்து பானு.தேர்தல் முடிந்தவுடன் எல்லாம் தானாகவே இறங்கி விடும் எல்லாமே...

Banu Linda >>> Sathya Raman: 😄😄😄

Muthukrishnan Ipoh >>> Banu Linda:
நல்லவேளை எனக்கு இல்லை. இருந்து இருந்தால் யாராவது தூக்கிக் கொண்டு போக வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கலாம்.

Isham Balqis:
It's all syaitans naadagam... Tamil Scholl make less... IC Mykad... LTTE... Alocation for Tamil School RM50M cut to RM30M... worst MIC happy to promise like syaitans

Sathya Raman >>> Isham Balqis:
Exactly Sir.

Muthukrishnan Ipoh: ஏதோ சொல்ல வேண்டிய கட்டம். ஏதோ சந்தோஷப் படுத்த வேண்டிய கட்டம். சொல்லிவிட்டுப் போகட்டும். நமக்குத் தெரியாத ஒன்றா. விடுங்க தம்பி. போராட வேண்டிய நம் இலக்கு.

Isham Balqis: Yes sar.. We Fight for Merdeka.. British brought us to fight n help get Metdeka.. since 64yrs still fighting for our right cos MIC only care own pockets.. luxury life style..

Sathya Raman >>> Isham Balqis: உங்களின் இந்தப் பதிவுக்கு என் தமிழில் பதில் தந்தால்தான் சரியாக இருக்கும். என்று ஒரு நாட்டில் மதம் பெரிதாகப் பேசப் படுகிறதோ அன்றே அந்த நாட்டின் தலைவிதியும் தலைக் குப்பற கவிழ்ந்தே தீரும்.

இன்று உலகத்தில் நடக்கும் அத்துணை அநீதிகளுக்கும் மதவெறியே மூலக் காரணம் என்பதைத் தாங்களும் அறிவீர்கள். மலேசியா நல்ல நாடு, சுபிட்சம் நிறைந்த தேசம், எல்லா வளங்களையும் கொண்ட வற்றாத பூமி.

ஆனால் அந்த அற்புதங்களை, அரசியல் அல்பத்தால் இன வெறியால், மத மயக்கத்தால் சீரழித்துச் சின்னா பின்னமாக்கி விட்டார்கள்.

முந்தைய அரசாங்கத்தின் மிகப் பெரிய ஊழல் நடவடிக்கையால் வெறுப்பு அடைந்து வேறோர் அரசாங்கத்தை மக்கள் மாற்றி அமைத்தார்கள்.

அவர்களும் மக்கள் ஏற்படுத்திய புரட்சியை கொஞ்சம்கூட மதிக்காமல் கட்சிக்கு உள்ளேயே காலை வாரி விட்டுக் கொண்டார்கள். சேராக் கூடாத இடத்தில் சேர்ந்தார்கள். பதவிக்காகப் பல துரோகங்களைச் செய்தவர்களின் கையாளாத தனம்.

ஓட்டுப் போட்டு மக்கள் பிரதிநிதிகளாக பிரகடனம் செய்யப் பட்டவர்களின் அஜாக்கிரதையால், அலட்சியத்தால் பின் வாசல் வழியாக அதிகாரத்தை கைப்பற்றியவர்களும் பல குளறுபடிகளுக்கு இடையில் ஒரு வருடத்தை கடந்து விட்டார்களே.

இந்த அரசியல் சித்து விளையாட்டில் ம.இ.கா. மட்டும் நம் இந்திய மக்களின் நலங்களைக் காக்கும் என்கிற கனவு எல்லாம் காணக் கூடாது சார்.

எரிகிறதில் பிடுங்கியது லாபம் என்ற நினைப்பில்; பதவிக்கு வருகிறவர்களிடம் நாம் எந்த எதிர்பார்ப்பையும் வைக்கக் கூடாது.

இருபது வருடத்திற்கு மேல் இந்திய சமுதாயத்தின் தானைத் தலைவன் என்றவர் எல்லாம் எம் மக்களின் கொஞ்ச நஞ்ச சொத்து உடைமையும் தின்று ஏப்பம் விட்டதுதான் மிச்சம்.

ஒரு தரமான கொள்கை, கோட்பாடு இல்லாத அரசியல் மக்களுக்கு எந்த நன்மையையும், நலத்தையும் தரப் போவது இல்லை.

நாட்டின் பெரும்பாலான கருவூலத்தைக் கொள்ளை அடித்தவர்களுக்குச் சட்டம் தண்டனையைக் கொடுத்து உள்ளது. இருந்தாலும் இன்னமும் அவர்களும் சுதந்திரமாக, சுகமாக வெளியே சுற்றி வருகிறார்கள்.

அதே சமயம் மூக்குக்கு கீழே முகக் கவசத்தை இறக்கி விட்டால் அதற்கு அபதாரமாக ஆயிரம், பத்தாயிரம் என்று எளிய மக்களிடம் பிடுங்குகிறார்கள்.

இந்த நாட்டில் சட்டமும், ஒழுங்கும் அவ்வப்போது மாற்றி அமைப்பதே பொது மக்களுக்காகவே தானே ஒழிய அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இல்லை.

கூடிய விரைவில் 15 ஆவது பொது தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். இதில் யார், யார் சந்தி சிரிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கப் போகிறோம் சார். எல்லா தீர்ப்பும், தீர்வும் மக்கள் கையில்.

Isham Balqis >>> Sathya Raman:
worst Racist.. Kedah didnt give PH for Thaipusam to stay at home but this back door brain now giving MIC alwaa n jujubi n honey talks

Muthukrishnan Ipoh >>> Sathya Raman: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க. இருவரின் பதிவுகளும் வலைத்தளத்தில் பதிவாகி உள்ளன.

Christopher Charles: Arumai.

Vejayakumaran: 🙏

Muthukrishnan Ipoh >>> Vejayakumaran:
🙏🌻

Shanker Muniandy:
ம.இ.கா. மாநாட்டில் ஒரு பசப்பு பேச்சு ம.சீ.ச மாநாட்டில் ஒரு பசப்பு பேச்சு. கடைசியில் அம்னோ மாநாட்டில் அவர்களுக்காகத் தீர்மானங்கள் போட்டு நிறைவேற்றுவார்கள். இப்படி பேசிப் பேசி காலை வாரிவிட்ட எத்தனைத் தலைவர்களை பார்த்து இருப்போம்.

முனைவர் நாகப்பன் ஆறுமுகம்: இப்படி ஒரு அறிவிப்பு வருகிறதென்றால் பக்கத்தில் தேர்தல் வருகிறது என்று பொருள். அமைச்சர் பதவி ஒருவருக்கோ இருவருக்கோ கிடைத்தால் மொத்த இந்தியரில் இரண்டு பேர் கவனிக்கப் பட்டார்கள் என்று பொருள். அவ்வளவே.

Velaydam Kannan:
வெற்று வாக்குறுதிகள்






01 ஏப்ரல் 2021

மின்னல் எப்.எம். 75-ஆம் ஆண்டு நிறைவு நாள்

மொழிக்கு கலை ஒரு கலைவாசல். கலைக்கு இசை ஓர் இசைவாசல். இசைக்கு மொழி ஒரு விழிவாசல். அந்த மொழிக்கு ஒலி ஒரு தலைவாசல். அதுதான் மின்னல் எப்.எம். என்கிற ஒலிவாசல். அதுவே ஆனந்தத் தேன்காற்றில் ஓர் ஆனந்த பைரவி. வணக்கம் சொல்லி வாழ்த்துகிறேன்.
1951-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் மலாயா வானொலி நாடக நடிகர்கள்

நம்முடைய பிள்ளையின் தோற்றம் எப்படி இருக்கிறதோ. அது பிரச்சினை இல்லை. என்றைக்கும் கிளியோபாட்ரா தான். நன்றாக நடக்கிறதோ இல்லையோ. என்றைக்கும் நம்முடைய ஜான்சிராணி தான். நன்றாகப் பேசுகிறதோ இல்லையோ. என்றைக்கும் நம்முடைய இளவரசி டயானா தான். இன்றைக்கும் என்றைக்கும் நடமாடும் தாஜ்மகால்.

அந்த வகையில், மின்னல் எப்.எம். நம்முடைய மொழிக்கு ஒரு வரப்பிரசாதம். தமிழுக்குத் தோரணம் கட்டி அழகு பார்க்கும் சின்ன ஒரு தேவதை.

அந்தச் சிருங்காரச் சொப்பனத்தை நாம்தான் போற்ற வேண்டும். புகழ வேண்டும். தவறு செய்தால் கண்டிக்க வேண்டும். கண்டிப்பது வேறு. தண்டிப்பது வேறு. அதே சமயத்தில், தொட்டதற்கு எல்லாம் குறை சொல்லும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

1950-களில் கோலாலம்பூர் ஓரியண்டல் கட்டடத்தில்
மலாயா வானொலியின் ஒலிபரப்பு

அடுத்து, நம்முடைய குழந்தையை நாம் தான் முதலில் உச்சி முகர்ந்து மெலிதாய் அரவணைக்க வேண்டும். வேறு யாரைப் போய்ப் புகழச் சொல்கிறீர்கள். சொல்லுங்கள்.

ஆப்பிரிக்கா காங்கோ காட்டில் ஆடிப்பாடும் குழந்தையைத் தேடிப் போகச் சொல்கிறீர்களா. இல்லை மங்கோலியாவில் மஞ்சள் அரைத்து மாமன் மச்சான் விளையாடும் குழந்தையைத் தேடிப் போகச் சொல்கிறீர்களா.

அழகு பைங்கிளியைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு ஆலமரத்து ஜீவனைப் புகழ்வது எல்லாம் நன்றாக இல்லை. ஆக நம்முடையதை நாம் புகழ்வது என்பது ஒரு சாதுர்யமான சாணக்கியம். தப்பில்லை.

மலாயா வானொலி பழம் பெரும் பாடகர்கள்

இன்னும் ஒரு விசயம். மின்னல் எப்.எம். அடுத்து டி.எச்.ஆர். ராகா. இரண்டுமே நம்முடைய இரண்டு கண்கள். இதில் மாற்றுக் கருத்துகள் எதுவும் இல்லை. அப்படி மாற்றுக் கருத்துகள் இருந்தால் நல்லது.

அப்புறம், இரண்டு கண்களில் எந்தக் கண் உங்களுக்குப் பிடிக்கும் என்கிற கேள்விதான் உங்களையே கண்சிமிட்டிக் கேட்கும். இன்றைக்கு மின்னல் எப்.எம். பற்றிய தகவல்கள். இன்னொரு நாளைக்கு டி.எச்.ஆர். ராகா. சரி. நம்முடைய மின்னலுக்கு வருவோம்.

வானொலி திரைப்பட புகழ் சந்திரா சண்முகம்

புனிதமான இலக்கிய மொழியில் சுப்ரபாதம் பாடும் அமுதே தமிழே. மென்மையானத் தென்றலாய்த் தவழ்ந்து வரும் தாலாட்டுதே வானம். நம்பிக்கையின் சுடர்விளக்காய் நம்பிக்கை நட்சத்திரம். மலேசிய மனங்களை வருடிச் செல்லும் மக்கள் நடுவே. மறக்க முடியாத மலரும் நினைவுகள்.

மண்வாசனைகளைச் சுமந்து வரும் மண்ணின் நட்சத்திரம். நயனங்கள் பேசும் நம்மைச் சுற்றி. செதுக்கிச் சிறகடிக்கும் சிறுகதைகள். மஞ்சுளாவின் மணிமணியான நாடகங்கள். நலம் விசாரிக்கும் யாவரும் நலம்.

மலாயா வானொலி தமிழ்ப் பகுதிக்கு புதிய பரிமாணத்தைக்
கொண்டு வந்த திரு. பாலகிருஷ்ணன்

இப்படி கலைகட்டும் நிகழ்ச்சிகள். அடுக்கிக் கொண்டே போகலாம். அத்தனையும் நல்ல நல்ல நிகழ்ச்சிகள். அத்தனையும் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் இனிமையான சாருகேசிகள். பாராட்டுகிறோம்.

மின்னல் எப்.எம். என்று சொல்லும் போதே, மின்மினியாய் இனிமையான கீர்த்தனங்கள் துளிர்க்கின்றன. அங்கே அழகு அழகான குரல்கள். அழகு அழகான நிகழ்ச்சிகள். அழகு அழகான சிந்து பைரவிகள். எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். தப்பில்லை.


இருந்தாலும், ரொம்பவும் புகழக் கூடாது. அப்புறம் இருமல் வந்து... காய்ச்சல் வந்து...  வேண்டாங்க. இதோடு நிறுத்திக் கொள்வோம்.

மின்னல் எப்.எம். பண்பலையின் நீண்ட நெடிய வரலாற்றுச் சுவடுகளை நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

முன்பு வானொலி 6 என்றும் மலேசிய வானொலி அலைவரிசை 6 என்றும் அழைக்கப்பட்டது. அதில் இருந்து வந்த புதிய பரிமாணம்தான் மின்னல் எப்.எம். மலேசிய இந்தியர்களின் தகவல் பொழுதுபோக்கு ஊடகம்.

1960-ஆம் ஆண்டுகளில் வானொலிப் பெட்டி

மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமானது. மலேசிய தகவல் தொடர்புதுறை அமைச்சின் கீழ் செயல்படுகிறது. மலேசிய வானொலியின் வரலாறு 1940-களில் தொடங்குவதாக பலர் சொல்கின்றனர். சொல்லியும் வருகின்றனர். அது தவறு. 1921-ஆம் ஆண்டு தொடங்குகிறது என்பதுதான் மிகச் சரியான தகவல்.

1920-களில், ஜொகூர் மாநில அரசாங்கத்தில் ஏ. எல். பெர்ச் என்பவர் ஒரு மின்பொறியியலாளர். இவர்தான் மலாயாவிற்குள் முதன்முதலாக ஒரு வானொலிப் பெட்டியை, இங்கிலாந்தில் இருந்து கொண்டு வந்தார்.

1960-ஆம் ஆண்டுகளில் வானொலிப் பணியாளர்கள்

கொண்டு வந்த சூடு ஆறவில்லை. அதற்குள் ஜொகூர் கம்பியில்லாத் தொடர்புக் கழகத்தை (Johore Wireless Association) உருவாக்கினார். 300 மீட்டர் ஒலி அலையில் ஒரு சின்ன கம்பியில்லாத் தொடர்பு முறை. அவ்வளவுதான்.

அதற்கும் மறு ஆண்டு 1922-இல், பினாங்கில் கம்பியில்லாத் தொடர்புக் கழகம் உருவானது. அதைத் தொடர்ந்து கோலாலம்பூரிலும் அதே போல ஒரு கழகம். அதன் பின்னர், மலாக்காவிலும் கம்பியில்லாத் தொடர்புக் கழகம் உருவானது.

இந்தக் கம்பியில்லாத் தொடர்பு முறை, அப்போதைக்கு ஒரு புதிய தொழில்நுட்ப முறை. அரிச்சுவடி படித்துக் கொண்டு இருந்தன.


ஆக அந்த 1921-ஆம் ஆண்டு, வானொலி என்கிற ஒரு நூதனமான பெட்டி எப்படியோ கப்பலேறி மலாயாவுக்கும் வந்துவிட்டது. கப்பலின் பெயர் தெரியவில்லை. நிச்சயமாக அது ரஜுலா கப்பலாக இருக்க முடியாது. ஏன் தெரியுமா.

1926-இல் தான் ரஜுலா கப்பல், சென்னைக்கும் பினாங்கிற்கும் பயணத்தைத் தொடங்கியது. ஆக, வானொலிப் பெட்டி மலாயாவுக்
கு வந்தது 1921-இல். இந்த விசயம் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இப்போது தெரிந்து இருக்கும்.


1930-ஆம் ஆண்டு, சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தைச் சேர்ந்த சர் ஏர்ல் (Sir Earl) என்பவர், மாதத்தில் இரண்டு நாட்களுக்குச் சிற்றலை ஒலிபரப்பைத் தொடங்கினார். ஞாயிற்றுக்கிழமை அல்லது புதன்கிழமைகளில் ஒலிபரப்பு.

அதுவே பின்னர் காலத்தில், சிங்கப்பூரில் இருந்து கோலாலம்பூர், புக்கிட் பெட்டாலிங் பகுதிக்கு மாற்றம் கண்டது. அங்கு இருந்து, ஒரு புதிய ஒலிபரப்புச் சேவைத் தொடங்கினார்கள். மலாயா கம்பியில்லாக் கழகம் என பெயரையும் வைத்தார்கள்.


அடுத்து, சர் செண்டோன் தாமஸ் (Sir Shenton Thomas) என்பவர் வருகிறார். இவருடைய அரிய முயற்சிகள் தான் இமயத்தில் சிகரம் காண்கின்றன. அவருடைய தன்னலமற்ற சேவைகள் மலாயா ஊடக வரலாற்று ஏடுகளில் பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டியவை. உண்மையிலேயே, இவரைத் தான் மலாயா வானொலியின் தந்தை என்று சொல்ல வேண்டும்.

மலாயாவின் ஒலிபரப்புத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்தார். சிங்கப்பூரில் இருக்கும் கால்டிகாட் குன்றில் ஓர் ஒலிபரப்பு அறையை உருவாக்கினார். அதற்கு மலாயா பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் (British Broadcasting Corporation of Malaya) என பெயரையும் சூட்டினார்.

சர் செண்டோன் தாமஸ், தன் நண்பர்கள், அறிந்தவர்கள்  தெரிந்தவர்களிடம் கைமாற்றாகப் பணம் வாங்கி இருக்கிறார். அரசாங்கம் பணம் எதுவும் கொடுத்து உதவியதாகத் தகவல் எதுவும் இல்லை.

இது 1937 மார்ச் மாதம் 11-ஆம் தேதி நடந்தது. ஒரு வரலாற்று நிகழ்ச்சி. அந்த ஒலிபரப்புக் கழகம் பின்னர் அரசுடைமையாக்கப் பட்டது. மலாயா ஒலிபரப்புக் கழகம் என பெயர் மாற்றமும் செய்யப் பட்டது.

இந்த மலாயா ஒலிபரப்புக் கழகத்தில், ஒலிபரப்பு மொழிகளாக மலாய், ஆங்கிலம், மாண்டரின் சீனம், தமிழ் என நான்கு மொழிகள் இருந்தன. மலாயாவில் தமிழ் ஒலிபரப்பு 1938-ஆம் ஆண்டு தொடக்கப் பட்டதாக சிலர் சொல்கின்றனர். அதுவும் தவறு. 1937 மார்ச் மாதம் 11-ஆம் தேதி என்பது தான் மிகச் சரியான தகவல்.

அந்த நாளில் சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து தமிழ்மொழியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. மற்ற மொழிகள் பினாங்கில் இருந்தும் ஒலிபரப்பு செய்யப் பட்டன.


கோலாலம்பூர் நிலையத்தில் இருந்து தமிழ் ஒலிபரப்பு செய்யப்படும் போது, தஞ்சை தாமஸ் என்பவர் தமிழ்ப்பகுதியின் தலைவராக இருந்தார். மலாயாத் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் முன்னோடி என்று இவர் அழைக்கப் படுகிறார்.

1942-இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலக்கட்டம். மலாயாவிலும் சிங்கப்பூரிலும் பிரிட்டிஷாரின் ஆட்சி ஒரு முடிவிற்கு வருகிறது. அப்போது மலாயா தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பெயர் ஜே.எம்.பி.கே வானொலி. ஜப்பானியர்கள் வந்ததும் முதல் வேலையாகப் பெயரை மாற்றம் செய்தார்கள்.


அப்போது டி.எஸ்.சண்முகம் தலைவராக இருந்தார். கோலாலம்பூர் துன் பேராக் சாலையில் (மவுண்ட்பாட்டன் சாலை) இருந்த ஓரியண்டல் கட்டிடத்தில் இருந்து, அப்போதைய ஒலிபரப்பு தொடங்கியது.

1946-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி சிங்கப்பூரில் மலாயா ஒலிபரப்புச் சேவை தொடங்கப் பட்டது. (On 1st April 1946, the Department of Broadcasting was established in Singapore) இன்றோடு 75 ஆண்டுகள். வாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.04.2021

(தொடரும்)

சான்றுகள்:

1. https://www.rtm.gov.my/index.php/en/background

2. https://www.britannica.com/topic/Radio-Television-Malaysia

3. https://www.abu.org.my/portfolio-item/radio-televisyen-malaysia/

4. https://www.nst.com.my/news/2017/03/222337/sound-history


பேஸ்புக் பதிவுகள்


Perumal Thangavelu: ஊடகங்களில் இன்னும் வெளி வராத செய்திகளை தாங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

Muthukrishnan Ipoh >>> Perumal Thangavelu: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க

Sheila Mohan: மின்னல் பண்பலை. வரலாற்றை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. அருமையான பதிவு. நன்றிங்க சார்...

Malathi Nair: Vaaltukal

Muthukrishnan Ipoh >>> Malathi Nair: மகிழ்ச்சி

Sarkunavathi Panchanathan: Vaazhga Minnal Fm. Valarga um seavai!

Kala Balasubramaniam: 🙏

Yogavin Yogavins: 🙏

Muthukrishnan Ipoh >>> Yogavin Yogavins: வாழ்த்துகள்

Letchumanan Nadason: 🙏

Muthukrishnan Ipoh >>> Letchumanan Nadason: வாழ்த்துகள்

Aananthi Pooja: 🙏

Valliamah Nadesan: Vaaltukal.

Muthukrishnan Ipoh >>> Valliamah Nadesan: நன்றிங்க

Muthukrishnan Ipoh >>> Valliamah Nadesan: வாழ்த்துகள்

Mohan Jegan: Arumai sar

Muthukrishnan Ipoh >>> Mohan Jegan: நன்றிங்க

Bobby Sinthuja: வாழ்த்துகள்

Mohamed Shameem: ஒலி அலை 6

Muthukrishnan Ipoh >>> Mohamed Shameem: வாழ்த்துகள்

Maha Lingam: வாழ்த்துகள் ஐயா..

Sathya Raman: வணக்கம் சார். ஓர் இத்தாலியரான மார்கோனி கண்டுபிடித்த வானொலி பற்றிய நிறைய தகவல்களைப் பகிர்தமைக்கு மிக்க நன்றி.

மலேசியா வானொலி தமிழ்ப் பிரிவு வானொலி ஆறுக்கு முன்பாக "ரங்காயான் மேரா" என்ற பெயரிலே வலம் வந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம் .

சிங்கப்பூர் வானொலியை அடுத்து நல்ல தமிழ் பேசி நயம்பட நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகின்ற ஒரே வானொலி மின்னல் எப்,எம் எனலாம்.

சதா பொதுநல அறிவிப்பு என்கிற பெயரில் புத்தி சொல்லி அதிகமான ஆங்கில கலவையைப் புகுத்தி வெறும் பாடல்கள்; வெட்டிப் பேச்சும்; விளம்பரங்களைத் தவிர வேறு எதுவும் தமிழுக்கென்று பாடுபடாத மற்றொரு வானொலியைப் பற்றி வம்பு பேசி ஒன்று ஆக போவதில்லை.

அன்று ராங்காயான் மேராவாக உலா வந்த காலக் கட்டத்தில் வானொலி ஒலிபரப்பில் தெளிவு இருக்காது. சதா இரைச்சலாகவே இருக்கும்.

அப்போது சிங்கப்பூர் வானொலிக்கு நான் நிறைய எழுதிக் கொண்டிருந்த நேரம்.

அவர்களின் 96.8-லிருந்து நிகழ்ச்சிகள் தெள்ளத் தெளிவாகக் கேட்க முடிந்த போது நம்மூர் வானொலியில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைச் சரியாகக் கேட்க முடியவில்லை என்ற ஆதங்கங்களை அன்றே பத்திரிகையில் புகார் எழுதிப் புரட்டிb போட்ட கதை எல்லாம் நடந்தது.

நிறை குறைகளைச் சுட்டி காட்டினால் பெருந்தன்மையோடு ஏற்கும் பக்குவம் பலருக்கு இருப்பதில்லை.

இன்று மின்னல் எப்.எம்.மில் காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பலரின் குரல்கள் இனிமை சேர்த்தாலும் சிலரின் குரல்களிலே அபரிதமான நேர்மை தெரிகிறது.

புதிதாக வந்த அறிவிப்பாளர்கூட பிசிறி இல்லாமல் தமிழை நல்ல படி உச்சரித்து உரையாடுவது உற்சாகம் அளிக்கிறது.

75-ஆம் ஆண்டைக் கொண்டாடும் மின்னல் எப்.எம்-க்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு சதா மலேசிய சரித்திரத்தையும், மலாயா தமிழர்களைப் பற்றியும் இன்று ஒருநாள் மறந்து மக்களுக்கு மகிழ்வூட்டும் வானொலி அதன் ஆக்கம் பற்றி விவரித்து விளக்கமாகப் பதிவு செய்தது சிறப்பு சார்.

அவ்வப்போது இப்படியான கட்டுரைகளைத்த் தந்து மன இறுக்கத்தை தள்ளி வைக்கவும். நன்றிங்க சார். வாழ்க வானொலி. வெல்க எம் மொழி 🌷

மா.சித்ரா தேவி >>> Sathya Raman: இன்றும் வானொலி நமக்கு உற்ற தோழிதானே

Sathya Raman >>> மா.சித்ரா தேவி: சில சமயம்.😁

Easkay Vasan: வானொலிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய வரலாறா. அருமை ஐயா, அற்புதம்.

Sheila Mohan: அருமைங்க சார்.. வானொலியின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.. 75-ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடும் மின்னல் பண்பலைக்கு நல்வாழ்த்துகள்

Parimala Muniyandy: அருமையான தகவல்கள்... விவரம் தெரிந்த நாள் முதல் வானொலியின் தீவிர ரசிகை என்பதால் இந்தப் பதிவை மிகவும் விரும்பிப் படித்தேன். மிகவும் சிறப்பான பதிவு... நன்றிங்க அண்ணா🙏

Parameswari Doraisamy: அருமை ஐயா. நானும் வானொலியின் தீவிர நேயர். தகவல்களுக்கு மிக்க நன்றி

Oviyar Mugil: 🙏

Funa Perumal: பழைய ஞாபகங்களைக் கட்டி அணைத்து கொண்டு இருக்கிறீர்கள்... நமக்கு ஞாபகம் வருகிறது... சந்தோஷம் அடைகிறேன்... நன்றி

Muthiah Valliyappah Karuppiah: வணக்கம் ஐயா... சிறப்பானச் செய்தி... வானொலி 6 க்கு முன்னால் சிவப்பு அலை வரிசை (Rangkaian Merah) என்பதாக ஞாபகம்... சரியா தவறா என்று தெரியவில்லை...

Velan Mahadevan: Super info

Thanga Raju: மின்னல் பண்பலையின் அருமையான வரலாற்றுப் பதிவு... சூப்பர்

Raghawan Krishnan: Awesome.

Thanga Raju: 🙏

Vijaya Sri: அருமை ஐயா

Thanabaal Varmen: 🙏

Vijayan Vijay: Sir, I work in oriental building 🏢 Insurance company... United India fire & general Insurance co.

Renganathan Thirumalai: Information on the radio broadcasting in this country especially in Tamil. Tq

KM Guna: அருமையான பதிவு நன்றி அய்யா.

Alagumani Mathivanan: உற்ற நண்பனாக இருக்கும் மின்னல் பண்பலை பற்றிய தகவல்கள் அருமை ஐயா

Palaniappan Kuppusamy: 🙏







 

30 மார்ச் 2021

கிள்ளான் நெடுஞ்செழியன் எளிமையின் வழமை

 தமிழ் மலர் - 28.03.2021

திருக்குறள். காலத்தில் அழியாத கலைநெறிக் கருவூலம். ஞாலத்தில் மறையாத மொழிநீதிக் கருவூலம். மனிதச் சிந்தனைகளின் வாழ்வியல் தத்துவம். அந்த வாழ்வியல் தத்துவத்தில் வாழ்வாதார அணிகலனாய்ப் பரிணமிக்கும் ஒரு பொற் குவியல். பரிமேழகம் பார்த்துப் பரிவட்டம் கட்டிப் பாரிஜாதம் பார்க்கும் தலைவாசல். ஒவ்வொரு தமிழர்க் குடும்பத்திலும் சத்தியம் பேச வேண்டிய ஒப்பற்ற வாழ்வியல் விழுமியம்.

இப்படிச் சொல்பவர் ஒரு திருக்குறள் புகழேந்தி அல்ல. திருக்குறள் செம்மல் அல்ல. திருக்குறள் முனைவரும் அல்ல. மாறாக மலேசிய நாட்டில் வாழும் ஒரு சாமானியத் தமிழர். நெடுஞ்செழியன் எனும் பெயரில் நெடும் காலமாய்ப் பயணிக்கும் ஒரு சாமானிய மனிதர்.

தமிழ் இனத்திற்கும்; தமிழ் மொழிக்கும்; தமிழ்ப் பள்ளிகளுக்கும்; சத்தம் இல்லாமல் யுத்தம் இல்லாமல் சமூகப் பணிகளைச் செய்து வரும் ஒரு சாதாரண மனிதர்.

பல் மருத்துவராகத் தொழில் சேவைகள் செய்தாலும் பாமரர்கள் போற்றும் மனிதநேயச் சேவைகளைச் செய்து வருகிறார். ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக தமிழ் மொழி - தமிழ்ப்பள்ளிச் சேவைகள். பலருக்கும் தெரியாத உண்மை.

அவரின் சேவைப் பின்புலன்களைப் பார்க்கும் போது மலைப்பு ஏற்படவில்லை. வியப்பு ஏற்படவில்லை. வாழ்த்த வேண்டிய மனித உணர்வுகள் என்றே தோன்றுகிறது. சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லிச் சிறப்பு செய்ய வேண்டும்.

இடையில் சின்ன ஒரு செருகல் வந்து போகிறது. சொல்ல வேண்டிய நிலைமை. தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பத்து பாக்கெட் மெகி; பத்து பாக்கெட் மீகூன்; பத்து கிலோ அரிசி; பத்து ரிங்கிட் ஆங் பாவ். அதிகம் இல்லை. இரண்டு மூன்று நாள்களுக்குத் தாக்குப் பிடிக்கும் சின்ன ஓர் உபசரிப்பு. இருந்தாலும் பத்து பேரைக் கூப்பிட்டு; பத்து படங்களைப் பிடித்து; பத்திரிகையில் போட்டு படம் காட்டும் மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒரு சிலர்தான். எல்லோரும் அல்ல.

அதே மண்ணில் ஆர்ப்பாட்டம் இல்லாமல்; ஆரவாரம் இல்லாமல்; எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்; மிக அமைதியாகச் சிலரும் பலரும் பயணிக்கின்றார்கள். அப்படிப்பட நல்ல உள்ளங்கள் விளம்பரங்கள் தேடுவது இல்லை. வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் இல்லை.

அதே சமயத்தில் அசல் உண்மையான சேவகர்களைப் பலருக்கும் தெரிவதும் இல்லை. இருக்கிற இடம் தெரியாமல் வாழ்கின்ற அவர்களுக்கு விளம்பரம் கிடைப்பதும் குறைவு. வெளிச்சம் கிடைப்பதும் குறைவு.

அந்த விளம்பரம் வெளிச்சங்களை அவர்கள் நாடிப் போவது இல்லை போலும். அப்படிப்பட்டவர்களை நாம் தான் தேடிப் போக வேண்டும். அந்தப் பட்டியலில் பயணிப்பவர்களில் ஒருவர்தான் பூச்சோங் பல் மருத்துவர் நெடுஞ்செழியன். டாக்டர் நெடு என்று அழைக்கிறார்கள்.

அனைத்துக அளவில் மருத்துவத் துறை வழியாக இவர் அறியப் பட்டாலும்; சத்தம் இல்லாமல் சலனமான வெளிச்சத்தில் சாதித்து வருகிறார். இவர் மலாயாத் தமிழர்களின் வாரிசு. ஒரு மலேசியத் தமிழர். வாழ்த்துகிறோம்.

இவரின் தமிழ்ச் சேவைகள்; தமிழார்ந்த உணர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் இவர் யார் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். மலேசியத் தமிழர்கள் மட்டும் அல்ல. உலகத் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவர்.
 
டாக்டர் நெடுஞ்செழியன் ஒரு தமிழ்மொழிச் சேவையாளர். தமிழினப் பற்றாளர். தமிழ் மொழியை உயிருக்கும் மேலாய்க் கருதும் ஒரு தமிழர்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். எளிமையான வழமையில் தமிழ் வளர்க்கும் இவரின் குடும்பத்தாருக்கு முதல் மரியாதை.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே இவரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். மலேசியாவில் நல்ல தமிழ்ச் சேவைகள் செய்து வருகிறார். அவரைப் பார்க்க வேண்டும்; பேச வேண்டும்; அடையாளப் படுத்த வேண்டும் என்று நினைத்தது உண்டு. அதற்கும் சரியான நேரம் காலம் சரியாக அமைய வேண்டும் அல்லவா.

சில தினங்களுக்கு முன்னர் பூச்சோங்கில் அமைந்து இருக்கும் அவருடைய பல் மருத்துவகத்தில் சந்தித்தேன். ஏற்கனவே அலைபேசியில் பேசியது உண்டு. கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.  

எளிமையானத் தோற்றம். இயல்பான பழகுமுறை. சொற்களில் அழுத்தங்கள். உச்சரிப்புகளில் தெளிவு. உவமானங்களில் உயிர்ப்புகள். சுய விளம்பரத்தைத் தவிர்க்கும் பாங்கு. பலரையும் கவர்ந்து இருக்கலாம். என் கணிப்பு சரியாக அமையும்.

அவருடைய மருத்துவகத்தில் ஐந்து பணியாளர்கள். ஒருவர் மருத்துவர். பெயர் விக்னேஸ்வரி. பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குப் போகச் சொல்லி மலேசியச் சுகாதார அமைச்சில் இருந்து கடிதம் வந்து இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் பயணம்.

மேலும் நான்கு பணியாளர்கள். பெயர்கள் வேண்டாமே. வாடிக்கையாளர்களை இனிதாக வரவேற்று இனிதாகப் பேசி இனிதாகச் சேவை செய்கிறார்கள். தனியார் மருத்துவகம் என்பதற்காக அல்ல. அவர்களின் இயல்பான சேவை நற்பண்புகள்.  

வரவேற்பு அறையில் சந்திப்பு. முதல் அறிமுகம். அவர் சொல்கிறார். மனிதனாகப் பிறந்தாலே பற்பல வேதனைகள்; பற்பல சோதனைகள்; பற்பல அவலங்கள். அத்தகைய மனித வாழ்க்கையை இனிமையாக்கி அலங்கரிப்பது எளிமையான விசயங்கள் தான் ஐயா.

நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள்; நம்மைச் சார்ந்த நல்ல நல்ல நிகழ்வுகள்தான் நம்முடைய மனங்களை அழகு செய்கின்றன. இப்படி அழகாகத் தமிழ் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. தமிழில் பேசுவது அவமானம் அல்ல. அது நம் அடையாளம்!

'பேசு தமிழா பேசு’ எனும் பேச்சுப் போட்டியைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அஸ்ட்ரோ வானவில் மற்றும் வணக்கம் மலேசியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் உயர்க்கல்வி மாணவர்களிடையே நடைபெற்று வரும் “பேசு தமிழா பேசு” போட்டியின் நீதிபதிகளில் ஒருவராகப் பயணித்தவர் டாக்டர் நெடுஞ்செழியன். இது போன்று பல தமிழ் மேடை நிகழ்ச்சிகளில் நடுவராகப் பயணித்து உள்ளார்.

எளிமையை நாம் ஏளனமாகப் பார்க்கக் கூடாது. புறக்கணிக்கக் கூடாது. அந்த எளிமையை நம் வாழ்க்கையுடன் அணைத்து மகிழ வேண்டும். மனித வாழ்க்கையில் எவ்வளவு ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும் எளிமை என்றும் இனிமையாக இருக்கும். இது மிகையில்லை. சத்தியமான உண்மை என்று சொல்கிறார். அந்த எளிமையில் தான் பூச்சோங் நெடுஞ்செழியன் என்பவரும் நிற்கின்றார்.

முதலில் அவரின் பெற்றோருக்கு நன்றி சொல்ல வேண்டும். இருவருமே இனிய தமிழ் எங்கள் தமிழ் என்று வாழ்ந்தவர்கள். எளிமைத் தமிழில் இனிமை கண்டவர்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். தகப்பனாரின் பெயர் வேங்கு. தாயாரின் பெயர் வள்ளியம்மை.

தமிழ் நாவல்களைப் படிப்பது என்றால் அவர்களுக்கு அலாதியான ஆர்வம். சாண்டில்யன்; கல்கி; அகிலன்; டாக்டர் மு.வ; நா. பார்த்தசாரதி; ஜெயகாந்தன்; ஜானகி ராமன்; கி.வ.ஜெகநாதன்; ரமணி சந்திரன்; பாலக்குமரன்; ஜெயமோகன்; ராஜம் கிருஷ்ணன்; சுஜாதா போன்றோரின் நாவல்களைச் சேகரித்து தங்கள் பிள்ளைகளையும் படிக்கச் சொல்லி இருக்கிறார்கள்.

அந்த நாவல்களைச் சின்ன வயதிலேயே படித்ததினால் தான் நெடுஞ்செழியன் இன்று தமிழ் மொழிப் பயன்பாட்டில் சிறந்து விளங்குகிறார் என்று சொல்லலாம்.

இவருடைய தந்தையார் ஒரு தமிழாசிரியர். ஷா ஆலாம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இவருடைய தாயார் தந்தையார் மூலமாக மட்டும் அல்ல. பாட்டியின் மூலமாகவும் டாக்டர் நெடுஞ்செழியன் தமிழை வளர்த்துக் கொண்டார்.

இராமயணத்தில் ஒவ்வொரு காண்டமாக அவரின் பாட்டி சொல்லிக் கொடுத்து இருக்கிறார். பாலகாண்டம்; அயோத்தியா காண்டம்; ஆரண்ய காண்டம்; கிட்கிந்தா காண்டம்; சுந்தர காண்டம்; யுத்த காண்டம் என்று எல்லாக் காண்டங்களையும் காட்சி காட்சியாகப் பாட்டி சொல்லுவாராம்.

டாக்டர் நெடுஞ்செழியன் சொல்கிறார். எடுத்துக்காட்டாக அயோத்தியா காண்டம். இராமனுக்கும், சீதைக்கும் காட்டில் நடந்த வனவாசம் காதை. அந்தக் கதையைச் பாட்டி சொல்லும் போது எங்களுக்கு அந்த வனவாசக் காட்சி அப்படியே தெரியும். அப்படி உயிரோட்டமாய்க் கதையைச் சொல்வார்.

மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி. இது ஓர் இதிகாசக் காப்பியம் என்பதை நினைவில் கொள்வோம். டாக்டர் நெடுஞ்செழியன் எப்படி விவரிக்கிறார் என்று பார்ப்போம்.

’திரௌபதி காட்டில் உட்கார்ந்து இருப்பாங்க... வெளியே ஒரு புள்ளிமான் ஓடிக் கொண்டு இருக்கும்... அந்த மானைப் பிடித்துத் தரச் சொல்லுவாங்க... பீமன் ஒரு பலசாலி. அவர்தான் மானைப் பிடிக்க முதலில் போவார்.

அந்த மான் எங்கே எங்கேயோ ஓடும். மானை விரட்டி விரட்டி பீமனுக்குத் தாகம் எடுத்துவிடும். குடிப்பதற்கு தண்ணீர் தேடுவார். அப்போது குயிலும் மயிலும் கத்தும் சத்தம் கேட்கும். ஒரு குளிர்ந்த இடத்தில் தான் குயிலும் மயிலும் கத்தும். ஆக அங்கே தண்ணீர் இருக்கும் என்பதைப் பீமன் உணர்ந்து கொண்டார்.

அங்கே ஒரு சின்ன தடாகம். பீமன் தண்ணீர் குடிக்கப் போகிறார். அப்போது அங்கே இருந்த குயிலும் மயிலும் பீமனிடம் கேள்விகள் கேட்கின்றன. ‘ஏய் மானிடா... எங்களுடைய மூன்று கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டு தண்ணீர் குடி. இல்லை என்றால் இறந்து போவாய்.

முதல் கேள்வி: வாடாத பயிர் எது? இரண்டாவது கேள்வி: வருத்தம் இல்லாத சுமை எது? மூன்றாவது கேள்வி: உலகத்தில் அதிசயமானது எது?

கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் தாகத்தினால் பீமன் தண்ணீர் குடித்து இறந்து விடுகிறார். அடுத்து அர்சுணன், நகுலன், சகதேவன் அனைவருக்கும் அதே நிலைமை. தண்ணீர் குடித்து இறந்து விடுகிறார்கள்.

கடைசியாகத் தர்மம் வருகிறார். மூத்தவர். நிதானமாக நடந்து கொள்கிறார். அவர் மூன்று கேள்விகளுக்கும் பதிலைச் சொல்லிவிட்டுத் தண்ணீர் குடிக்கிறார். அப்போது குயிலும் மயிலும் சேர்ந்து சொல்கின்றன. நாங்கள் தான் சித்ர குப்தன்; எமதர்மன்.  உங்களைக் அந்த இடத்தில் இருந்து இங்கே கொண்டு வந்து காப்பாற்றுவதற்காகத் தான் மானை அனுப்பி வைத்தோம் என்று சொல்கின்றன.   

இது கதை. இதில் முக்கியமானது குயிலும் மயிலும் கேட்ட கேள்விகள் தான். முதல் கேள்வி: வாடாத பயிர் எது? உங்களுக்குத் தெரியுமா. சொல்லுங்கள் பார்ப்போம். பரவாயில்லை. நானே சொல்கிறேன்.

வாடாத பயிர் அருகம்புல். அதுதான் வாடாத பயிர். இரண்டாவது கேள்வி: வருத்தம் இல்லாத சுமை எது? தாய்மை அடைதல். தாய்மை ஒரு சுமை தான். ஆனாலும் வருத்தம் இல்லாத சுமை தானே. எந்தத் தாயாவது தன் குழந்தையைச் சுமை என்று சொல்வாளா?

அடுத்து மூன்றாவது கேள்வி: உலகத்தில் அதிசயமானது எது? இதற்கான பதில் பிறப்பு இறப்பு. புரிகிறதா. பிறப்பும் இறப்பும் தான் உலகத்திலேயே அதிசயம் என்று மகாபாரதம் சொல்கிறது. உண்மைதான். பிறப்பதும் ஓர் அதிசயம். இறப்பதும் ஓர் அதிசயம்.

பூச்சோங் டாக்டர் நெடுஞ்செழியனுக்கு சின்ன வயது. ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் பாட்டி அந்தக் கதையைச் சொன்னார். இப்போது அவருடைய வயது 50-ஐ தாண்டி விட்டது. இருப்பினும் நன்றாக நினைவில் வைத்து இருந்து இப்போதும் சொல்லிக் காட்டுகிறார்.

நேற்று நடந்தை இன்று மறந்துவிடும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருப்பினும் இவர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் பாட்டி சொன்ன கதையை மறக்காமல் இன்றும் நினைவில் வைத்து இருக்கிறார். பாராட்ட வேண்டும். சின்ன வயதில் கற்றது சிலை மேல் எழுத்து என்று சொல்வார்கள். உண்மை.

அது மட்டும் அல்ல. அவருடைய பாட்டி எப்போதும் புத்தகம் கையுமாக இருப்பாராம். எங்கே எப்போதும் கையில் ஒரு புத்தகம் இருக்குமாம். புத்தகப் பாட்டி என்று பட்டம் கொடுக்கலாம். அவரிடம் இருந்து தான் புத்தகம் வாசிக்கும் பழக்கம் நெடுஞ்செழியனுக்கு வந்ததாகவும் சொல்கிறார்.

இப்போது எல்லாம் இணையத்தைப் பார்த்துப் படிக்கிறோம். அப்போது புத்தகத்தைப் பார்த்துப் படித்தோம். உலகம் ரொம்பவும் மாறி விட்டது. இருந்தாலும் புத்தகம் படிக்கும் பழக்கத்தைச் சின்னப் பிள்ளைகளிடம் வழக்கப் படுத்த முயற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் வாசிக்கும் பழக்கத்தை நேசிக்காமல் போய் விடுவார்கள்.

எவ்வளவுக்கு எவ்வளவு நூல்களைப் படிக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களின் நினைவாற்றல் கூடுகிறது. சிந்திக்கும் திறன் கூடுகிறது. விவாதிக்கும் திறமை விரிவடைகிறது. இணையம் என்பது உயிர்க் காற்று. ஆனால் நூல் என்பது உயிர்மண் என்கிறார் டாக்டர் நெடுஞ்செழியன்.

இன்று (28.03.2021) காலை 10 மணிக்கு மலேசிய வானொலி மின்னல் பண்பலையில் ‘அமுதே தமிழே’ எனும் இலக்கிய நிகழ்ச்சி. பொன்மணியாள் பொன் கோகிலம் படைக்கும் அற்புதமான இலக்கிய நிகழ்ச்சி. பொன் கோகிலம் மலாயா தமிழ் உலகிற்கு கிடைத்த மற்றும் ஒரு பொன் கலசம். அந்த நிகழ்ச்சியில் அரு.சு. ஜீவானந்தன் கதைகள் எனும் தலைப்பில் டாக்டர் நெடுஞ்செழியன் இலக்கிய உரை ஆற்றுகிறார்.  கேட்டுப் பாருங்கள்.

பார்த்தால் அவரா இவர் என்று ஐயம் எழும். கேட்டால் அந்த மனிதரா என்று குழப்பமும் ஏற்படும். அவ்வளவு எளிமையாகப் பழகுகிறார். தமிழ் மொழியைப் பற்றியும் தமிழினம் பற்றியும் நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறார். நாளைய கட்டுரையில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

(தொடரும்)

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.03.2021

சான்றுகள்:

1. Sang Kancil Foundation Malaysia - https://www.hati.my/yayasan-sang-kancil-malaysia/

2. Yayasan Sang Kancil Malaysia - https://www.facebook.com/yayasanskm/

3. Nedu The Dentist Klinik Pergigian Puchong - https://www.whatclinic.com/dentists/malaysia/kuala-lumpur/bukit-jalil/nedu-the-dentist-klinik-pergigian-puchong

4. Nedunchelian Vengu - University of Malaya Department of Oral Pathology & Oral Medicine & Periodontology Nedunchelian Vengu

பேஸ்புக் பதிவுகள்

Venogobaal Kuppusamy: நல்லோரை நயம்பட அறிமுகம் செய்தீர்கள்! மிக்க மகிழ்ச்சி! இருவருக்கும் நன்றியும் நல்வாழ்த்துகளும்!

Muthukrishnan Ipoh >>> Venogobaal Kuppusamy: நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை... ஒருவர் பண்புடையாராக இருப்பின் மழை பொழியும். உயிர்கள் தழைக்கும்.

Devendran Ravi: வாழ்த்துக்கள் ஐயா

Arni Narendran: Vaazthugal from Mumbai 🙏🌿

Muthukrishnan Ipoh >>> Arni Narendran: நன்றிங்க

Sheila Mohan: வாழ்த்துகள் சார்...

Kala Balasubramaniam:

Arojunan Veloo: மகிழ்ச்சி; வாழ்த்துகள் டாக்டர்!

Letchumanan Nadason:

Muthukrishnan Ipoh >>> Arojunan Veloo: அவர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Balamurugan Balu:

Velan Mahadevan:

Sharma Muthusamy:

Arichanderan Manickavasakar:

Isham Balqis: Vaalthukkal sir

R Muthusamy Rajalingam: விளம்பர வெளிச்சம் அற்று, தமிழ்ப் பணி ஆற்றும், அவருக்கு வாழ்த்துகள். சிறப்பான ஆக்கம் ஐயா.

Muthukrishnan Ipoh >>> R Muthusamy Rajalingam: ஆரவாரம் இல்லாமல் அமைதியாகப் பயணிக்கின்றார்... எவர் ஒருவர் தாம் செய்த நல்காரியங்களைப் பற்றி வெளியே சொல்லாமல் இருக்கின்றாரோ அவரை நன்மக்களின் ஒரு பகுதியாகக் கருத வேண்டும்.

Kumar Murugiah Kumar's: வாழ்க அவர் தமிழ் உணர்வோடு, வாழ்த்துகள் பாராட்டுகள் ஐயா!

Muthukrishnan Ipoh >>> Kumar Murugiah Kumar's: தமிழ் மொழிக்குச் சேவை செய்பவர்களை அடையாளப்படுத்த வேண்டியது நம் கடமை ஐயா..

Kumar Murugiah Kumar's >>> Muthukrishnan Ipoh: எல்லாம் இறைவனின் சித்தம் ஐயா ! தொடருங்கள் ஐயா !

Muthukrishnan Ipoh: இலை மறைக் காயாக வாழும் ஒரு தமிழர்... அறிமுகம் செய்வது நல் வழக்கம்.

Sheila Mohan: வாழ்த்துகள் சார்..

தேவிசர சரவணக்குமார்:
அருமை.... வாழ்த்துகள்

Raghawan Krishnan: Fantastic.

Sara Rajah: வாழ்த்துகள் அய்யா

தேவிசர சரவணக்குமார்:

Oviyar Mugil:


Isham Balqis: Vaalthukkal sir