09 அக்டோபர் 2015

ஒளிச்சேர்க்கை

ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பு (Photosynthesis) என்பது தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் போன்றவற்றில் நிகழும் ஒரு உயிர்வேதியியல் நிகழ்வு ஆகும். 

 

தாவரங்களின் எல்லா இலைகளிலும் ஓர் உணவுத் தொழிற்சாலை உள்ளது. இலைகளின் செல்களில் உள்ள பச்சையம் (குளோரோபில்) சூரிய ஒளியில் இருந்து பெறும் சூரியனின் ஆற்றலை, காற்றில் உள்ள கரியமில வாயு மற்றும் வேரில் இருந்து உறிஞ்சப் பட்டு இலையை அடையும் நீரின் நுண்துளிகளையும் (மாலிக்யூல்கள்) பயன்படுத்தி, சர்க்கரைச் சத்தாக மாற்றுகிறது. இதைத் தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம். 

சர்க்கரை அல்லது மாவுச்சத்தின் உபரிப் பொருளாக ஆக்சிஜன் (பிராண வாயு) என மாற்றம் காண்கிறது. இந்த உயிர்க்காற்று இலைகளின் அடிப்பகுதியில் உள்ள ஸ்டோமேட்டா செல்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

கூடவே நீரும் ஆவியாக வெளியேறுகிறது. அதனால் தான் நாம் வெயில் நேரத்தில் மரத்தடியில் ஒதுங்கும்போது புத்துணர்வு பெறுகிறோம். குளிர்ச்சியும்
பெறுகிறோம். 



இதே ஸ்டோமேட்டா செல்கள்தான் ஒளிச்சேர்க்கை நிகழாத சமயங்களில் அல்லது சூரியஒளி இல்லாத பகல் பொழுதிலும், இரவு நேரங்களிலும் ஏனைய உயிரினங்களைப் போல காற்றைச் சுவாசிக்கின்றன.

அதாவது காற்றிலுள்ள பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. அதனால் இரவு நேரங்களில் மரத்தடியில் இளைப்பாறும் போது புத்துணர்வு தோன்றாது.

அதாவது ஒளிச்சேர்க்கையின் மூலம் இந்த உயிரினங்கள் ஒளியின் ஆற்றலைப் பயன்டுத்திக் கொள்கின்றன.

தாவரங்களில் உள்ள பச்சையம் என்ற நிறமி பெரும்பாலும் இதற்கு உதவுகிறது. ஒளிச்சேர்க்கை வழியாகத் தாவரங்களும், பாசிகளும் கரியமில காற்றைக் கிரகித்து உயிர்க் காற்றை (அல்லது ஆக்சிசனைக்) கழிவுப் பொருளாக வெளிவிடுகின்றன.

ஒளிச்சேர்க்கையின் வழி சூரியனில் இருந்து பற்றப் படும் (பிடிக்கப் படும்) ஆற்றல் மிக மிகப் பெரியது. ஓர் ஆண்டிற்கு ஏறத்தாழ 100 டெரா வாட் (100,000,000,000,000 வாட்) மின் ஆற்றல் பிடிக்கப் படுவதாகக் கணக்கிட்டு இருக்கின்றார்கள். உலக முழுவதும் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த மின் ஆற்றலின் அளவைப் போல் ஏழு மடங்கு கூடுதல் ஆகும்.

இந்த ஒளிச்சேர்க்கையால் மரங்கள், செடிகள், கொடிகள், பாசிகள், பாக்டீரியாக்கள் போன்றவை 100,000,000,000 டன் கரியமிலக் காற்றைக் கிரகித்து உயிரகப் பொருளாக (biomass), மற்ற உயிர்ப் பொருட்களுக்கு மாற்றிக் கொடுக்கின்றன. கையெடுத்துக் கும்பிட வேண்டும். 

 புளிய மரமும் பேயும்

கொஞ்சம்கூடக் காற்றின் அசைவு இல்லாத சமயங்களில், பெரிய அடர்ந்த புளியமரம் போன்ற மரத்தடியில் உறங்கினால் உங்களைப் பேய் அடித்துக் கொல்லும் என்று பாமர மக்கள் இன்றும் நம்புகிறார்கள்.

                               அறிவியல் அடிப்படையிலான விளக்கம்

காற்று அசைவு இல்லாவிட்டாலும் இலைகள் சுவாசிக்கும் போது வெளியேறும் கரியமிலவாயு காற்றைவிடச் சற்று கனமானது. நாம் சுவாசிக்கும் காற்றில் கரியமில வாயு 0.5 விழுக்காடுதான் உள்ளது. 

ஆனால், இரவு நேரங்களில், அதுவும் காற்றின் சலனம் இல்லாவிட்டால் மரத்தடியில் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்கும். அதனால் நமக்கு மூச்சு அடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து இருப்பவர்களின் உயிரை எடுப்பது இந்தப் பேய்தான்.

      ஒவ்வொரு மரத்திலும் பொறியியல் கட்டிடக்கலை தொழில்நுட்பம்
ஆஸ்திரேலியா நாட்டில் வளரும் சில தைல மரங்கள் (யூக்கலிப்டஸ்) 300 அடி உயரம் வளரக் கூடியவை. அமெரிக்க கண்டத்தில் வளரும் சேக்கோவியா மரங்கள் 400 அடிக்கும் கூடுதலாக வளர்கின்றன. அவற்றை நாம் பார்த்தது இல்லை.

பெரிய புளியமரம் அல்லது வேப்ப மரம் அல்லது ஆல மரங்கள் 60-70 அடி உயரம் வரை வளர்கின்றன. 20-30 அடி தடிமன் கொண்ட அடிமரம். அவற்றில் இருந்து பிரிந்து செல்லும் கிளைகள், கொப்புகள். அவற்றில் வளரும் இலைகள், காய்க்கும் காய்கள், பழங்கள். இவை எல்லாம் 60-79 டன்களுக்கு மேல் எடை கொண்டவை. காற்றுக்கும் வளைந்து கொடுத்து அதே சமயம் உறுதியாகவும் நிற்பவை.

 http://siragu.com/wp-content/uploads/2013/10/puvi-veppamayamaathal-7.jpg
 
இந்த ஒட்டுமொத்த எடையையும், பூமிக்கு அடியில் இருக்கும் வேர்கள், ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் போல் தாங்கிக் கொள்கின்றன. அடிமரத்தில் இருந்து பிரியும் கிளைகள், கோப்புகள் எல்லாமே ஒரு ஜியோமிதி கணித அடிப்படையில் பிரிந்து செல்கின்றன. அதாவது கட்டிடக்கலை வல்லுநர் திட்டமிடுவது போல மரமும் ஒரு திட்டத்துடன்தான் கிளைகளைப் பரப்புகிறது.

அதே சமயம் இலைகளுக்குப் போதுமான அளவில் சூரிய ஒளி கிடைப்பதையும் உறுதி செய்து கொள்கிறது. அப்போதுதான் நாம் முன்பே குறிப்பிட்ட ஒளிச்சேர்க்கை உணவு தயாரிப்பு எல்லாமே நிகழ முடியும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக