19 ஜூலை 2017

எம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன்

தேங்காய் சீனிவாசன் நடித்த படங்களில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசி நடிப்பார். ஆனால் எம்.ஜி.ஆரோடு அரசியலில் இருந்தாரா? தேங்காய் சீனிவாசனுக்கு எம்.ஜி.ஆர் உதவிகள் செய்தாரா?


எம்.ஜி.ஆரை வாத்தியாரே, அண்ணன், துரை, சாமி என்று தேங்காய் சீனிவாசன் சொல்லும் போது எல்லாம் ஒரு வெறித் தனமான ரசிகனின் குரல் புலப்படும். திரையில் மட்டும் அல்ல. நிஜத்திலும் எம்.ஜி.ஆரை நேசித்தவர். அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்த போது அதில் இணைந்தார். பிரசாரத்திலும் பங்கேற்றார்.

ஓர் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எம்.ஜி.ஆ.ர் சென்று இருந்தார். அதற்குப் பக்கத்து தளத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்துக் கொண்டு இருப்பதாகத் தகவல் சொல்லப் பட்டது. உடனே செட்டுக்குப் போய் அவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தார் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட நட்பு இருவருக்கும்.


தேங்காய் சீனிவாசன் தன் இறுதிக் காலத்தில் 'கிருஷ்ணன் வந்தான்’ என்ற படத்தை எடுத்தார். நிதி நெருக்கடியால் அந்தப் படம் பாதியில் நின்று போனது. இந்தத் தகவல் எம்.ஜி.ஆருக்குத் தெரிந்ததும் தேங்காய் சீனிவாசனை வர வழைத்துப் பணம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.


தேங்காய் சீனிவாசன் இறந்த போது எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப் பட்டு இருந்தார். எம்.ஜி.ஆர். வருவாரா வர மாட்டாரா என்ற ஒரு சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர். வந்தார். வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் போகும் போது தேங்காய் சீனிவாசனின் மகளையும் ஏற்றிக் கொண்டு சென்றார்.

சற்று நேரத்தில் கார் நின்றது. சீனிவாசன் மகள் மட்டும் இறங்கி வந்தார். அவரிடம் எம்.ஜி.ஆர். பணம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

தேங்காய் சீனிவாசன் கலந்து கொண்ட கடைசி கூட்டம் மும்பையில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா. அந்த அளவுக்கு இருவரும் இணை பிரியாதவர்களாக வாழ்ந்தவர்கள்.

4 கருத்துகள்:

  1. சில மனிதர்களுக்கு சில நேரங்களில் எம்ஜிஆர் மிகச் சிறந்த மனிதரே...

    அவரது மற்றொரு முகம் திரு. சந்திரபாபு, திரு. எஸ். ஏ. அசோகன் இன்னும் நிறைய பேருக்கு தெரியும்.

    பதிலளிநீக்கு
  2. Chandrababu looted the financier wife, Asogan did not pay salary in time to all technicians hence they were ruined

    பதிலளிநீக்கு