10 அக்டோபர் 2017

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்

ஆண்டு தோறும் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதித் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. 1901-ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 13 இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்லது இந்தியாவில் பிறந்தவர்கள் பெற்று உள்ளார்கள்.


1902 - ரொனால்டு ரோஸ் - மருந்தியல் - இந்தியாவில் பிறந்தவர்
1907 - ரிட்யார்ட் கிப்ளிங் - இலக்கியம்     இந்தியாவில் பிறந்தவர்
1913 - இரவீந்திரநாத் தாகூர் - இலக்கியம் - இந்தியர்
1930 - சர் சி. வி. இராமன் - இயற்பியல் - இந்தியர்
1968 - கோவிந்த் கொரானா - மருந்தியல் - இந்தியர்
1979 - அன்னை தெரேசா - அமைதி - இந்தியர்
1983 - சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல் - இந்தியர்
1989 - டாலாய் லாமா - அமைதி - இந்தியர்
1998 - அமர்த்தியா சென் - பொருளியல் - இந்தியர்
2001 - வி.எஸ். நைப்பால் - இலக்கியம் - இந்தியர்
2009 - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - வேதியியல் - இந்தியாலில் பிறந்த அமெரிக்கர்
2014 - கைலாஷ் சத்யார்த்தி - அமைதி - இந்தியர்

ரபீந்தரநாத் தாகூர்

நோபல் பரிசை இதுவரை மூன்று தமிழர்கள் பெற்று உள்ளனர். அந்தப் பெருமைக்கு உரியவர்கள் சரி சி.வி. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009).

நோபல் பரிசு வழங்கப் படும் முறையில் பல்வேறு நையாண்டிகளின் கிண்டல் சுவைகள் தொக்கி நிற்கின்றன. இந்த நோபல் பரிசின் இலட்சணம்தான் என்ன. அமைதிக்கான நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தியின் பெயர் ஒரு முறை அல்ல இரண்டு முறைகள் அல்ல. 1937 முதல் 1948 வரை  ஐந்து முறைகள் பரிந்துரைக்கப் பட்டன. 

சரி சி.வி.ராமன்

இருந்தாலும் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவே இல்லை. பல வருடங்களுக்குப் பிறகு நோபல் பரிசுக் கமிட்டி தன் தவற்றை ஒப்புக் கொண்டது. ஆனால் என்ன. நோபல் பரிசுக் கமிட்டியின் பாரப்ட்சம் தொடர்கிறது.

என்றாலும் 1948-ஆம் ஆண்டில் காந்திஜி மறைந்தார். ஆனால் நோபல் பரிசு கமிட்டி ஓர் அறிவிப்பு செய்தது. உயிருடன் இருக்கும் எவரும் இந்தப் பரிசுக்குத் தகுதி பெற முடியாது என்ற அறிவிப்பு. அதனால் அமைதித் துறைக்கான பரிசு வழங்கப்படவில்லை என்றது.

ஆனால், டாக் ஹெம்மர்ஸால்ட் (Dag Hammarskjöld) எனும் ஸ்காண்டிநேவியர் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக இருந்தவர். அவர் 1961-ஆம் ஆண்டு அவருடைய இறப்புக்குப் பின்னர் அவருக்குப் பரிசு வழங்கப்பட்டது. அதற்காக ஒரு சப்பைக் கட்டுக் காரணம். பரிசு அறிவிக்கப்பட்ட போது அவர் உயிரோடி இருந்தார் எனும் காரணம்.

இப்போது எல்லாம் விருது வழங்குவதில் ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. அதற்குப் பேசாமல் ஓர் அமைப்பை உருவாக்கி அதற்குத் தலைவராக ஆகி விடலாம். அப்படியே ஒரு கோப்பிக் கடையில் பத்து பேரைக் கூப்பிட்டு தனக்குத் தானே ஊசிமணி, ஊசிப் போகாத மணி, பாசிமணி, பாசி பிடித்த மணி எனும் விருதுகளைத் தாராளமாகக் கொடுத்துக் கொள்ளலாம். எப்படி வசதி.

என்ன பேசி என்ன பண்றது. இங்க மட்டும் என்ன வாழ்கிறதாம். விருது கொடுப்பது எல்லாம் இப்போது கச்சான் பூத்தே கம்பத்தில் கடலை பக்கோடா வாங்கிற மாதிரி காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

இனிமேல் இந்த மாதிரி விருது வழங்கும் விசயங்களை எல்லாம் ஆதித்யா சேனலில் தான் காண்பிக்க வேண்டும். கைதட்டிச் சிரிக்க வேண்டும். அம்புட்டுத் தான்.

1 கருத்து:

  1. மக்கள் மனதில் மஹாத்மா இருக்கும்போது விருது எதற்கு? சுவையான விவரங்கள்.

    பதிலளிநீக்கு