17 மே 2016

கோத்தா கெலாங்கி - பாகம்: 1

மலாயா தீபகற்பகத்தின் தென்கோடியில் ஜொகூர் மாநிலம். அங்கே கோத்தா திங்கி என்பது ஒரு புறநகர்ப் பகுதி. அதற்கு அப்பால் அடர்ந்த ஒரு மழைக் காடு. அந்தக் காட்டின் நட்ட நடு மையத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் அரச மரங்கள். அந்த மரங்களுக்கு எத்தனை மாமாங்க வயது என்பது யாருக்கும் தெரியாது. 


அந்த மரங்களைச் சுற்றிலும் பாழடைந்த கோட்டைச் சுவர்கள். ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. அவை தான் கோத்தா கெலாங்கி (Kota Gelanggi) என்கிற சாய்ந்த கோபுரங்கள். உலகப் புகழ் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைந்து போன வரலாற்றுச் சின்னங்கள்.

இப்படி ஓர் இந்திய சாம்ராஜ்யக் கோட்டைகள் அங்கே இருக்கின்றன என்பது மலேசியர்கள் பலருக்குத் தெரியாது. ஆனால், அந்தக் காட்டுப் பகுதியில் வாழ்ந்த ஓராங் அஸ்லி பூர்வீகக் குடிமக்களுக்குத் தெரியும். வேட்டைக்குப் போன அவர்களில் சிலருக்குக் கற்சிலைகள் கிடைத்து இருக்கின்றன. 




அவற்றை எடுத்து வந்து விளையாட்டுப் பொருட்களாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். அந்தப் பொருட்கள் எல்லாம் மாபெரும் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சிதைப் பொருட்கள். அது அவர்களுக்குத் தெரியவே தெரியாது.

2005-ஆம் ஆண்டில் தான் இந்த அதிசயம் வெளி உலகத்திற்கே தெரிய வந்தது. மலேசியாவின் ‘தி ஸ்டார்’ நாளிதழ் பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளியிட்டு உலகத்தையே பிரமிக்க வைத்தது.


கோத்தா கெலாங்கி என்பது ஸ்ரீ விஜய பேரரசின் புரதானத் தலைநகரம் ஆகும். இந்தோனேசியா, சுமத்திராவில் கி.பி. 650-இல் இருந்து கி.பி. 1377 வரை செல்வச் செழிப்புடன் களை கட்டிய மாபெரும் சாம்ராஜ்யம். 




வியாபாரம் செய்ய சீனா நாட்டு வணிகர்கள் அங்கே போய் இருக்கிறார்கள். நீண்ட காலமாக அராபிய வணிகர்களும் தொடர்புகளை வைத்து இருக்கிறார்கள். உள்நாட்டு வணிகர்களும் பண்டமாற்று வியாபாரம் செய்து இருக்கிறார்கள். பூகிஸ் மக்களும் வணிகம் செய்து இருக்கிறார்கள்.

ஸ்ரீ விஜய பேரரசு என்பது அந்தக் காலத்தில் சுமத்திராவை ஆட்சி செய்த ஒரு மாபெரும் பேரரசு ஆகும். இந்த ஸ்ரீ விஜய பேரரசின் கிளை அரசாங்கங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் கோலோச்சி உச்சம் பார்த்தவை.

பேராக் புருவாஸ், பீடோர் பகுதிகளில் கங்கா நகரம் (Gangga Negara); கெடாவில் கடாரப் பள்ளத்தாக்கு (Bujang Valley); கோத்தா கெலாங்கி புரதான நகரம்; பகாங் சமவெளி நகரம். இப்படி நிறைய நகரங்கள் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் இருந்து இருக்கின்றன. 




மறுபடியும் சொல்கிறேன். கோத்தா கெலாங்கியைச் சுற்றிலும் அடர்ந்த காடுகள். இங்கே தான் லிங்கியூ நீர்த்தேக்கம் இருக்கிறது (Linggiu Reservoir by the Public Utilities Board (PUB) of Singapore). அருகில் சுங்கை மாடேக், சுங்கை லிங்கியூ ஆறுகள் ஓடுகின்றன. சிங்கப்பூருக்குத் தேவையான குடிநீர் இங்கே இருந்துதான் அந்தக் குடியரசிற்குப் போகிறது.

ரேய்மி செ ரோஸ்

கோத்தா கெலாங்கி நிலப் பகுதிகள் ஜொகூர் மாநிலத்திற்குச் சொந்தமானது. 140 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இருப்பினும், அந்த நீர்த் தேகத்தையும், அதைச் சுற்றி உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் சிங்கப்பூர் அரசாங்கம் தான் இன்றுவரை பரமாரித்து வருகின்றது. பராமரிப்பிற்கான எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது.




சிங்கப்பூர் அரசு ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால் ஜொகூர் அரசுடன் ஒரு குடிநீர் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஜொகூர் மாநில அரசாங்கத்தின் அனுமதியுடன் தன் பாதுகாப்பிற்காகச் சின்ன ஒரு சிங்கப்பூர் பிரதேச இராணுவத்தையும் அந்த லிங்கியூ காட்டுக்குள் தயார் நிலையில் வைத்து இருக்கிறது.

இன்னும் ஒரு தகவல். சிங்கப்பூர் பிரதேச இராணுவத்தின் ஒரு குழு மலேசிய மண்ணில் இருப்பது பலருக்கும் தெரியாத தகவல் ஆகும். இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.




ரேய்மி செ ரோஸ் (Raimy Che-Ross) என்பவர் ஒரு மலேசிய வரலாற்று ஆய்வாளர். பன்னிரண்டு ஆண்டுகள் உலகம் பூராவும் சுற்றி கோத்தா கெலாங்கியைப் பற்றிய ஆதாரங்களைத் திரட்டினார். விமானத்தின் மூலமாக வான்படங்களையும் கிடைக்கப் பெற்றார். விண்வெளிப் படங்களும் கிடைத்தன.

(The Lost city of Kota Gelanggi was detected by satelite maps which confirms the existence of these structures and visible on site. "MACRES" or Malaysian Centre for Remote Sensing revealed this. This structure apparently matches with the aerial photographs taken by a Canberra based independent researcher, Raimy Che Ross. The satelite image proves that these structures are even larger than earlier presumed. Raimy believes he has found the lost city of Kota Gelanggi.)
(Source: http://mystiquearth.blogspot.my/2009/06/lost-city-of-kota-gelanggi.html)

மெக்ரெஸ் (MACRES) என்பது ஒரு தொழிநுட்ப அமைப்பு. அந்த அமைப்பை மலேசிய தொலைத் தொடர் உணர்வு மையம் என்று சொல்வார்கள். (Malaysian Centre for Remote Sensing). இந்த மையத்தின் மூலமாகவும் விண்வெளிப் படங்கள் கிடைத்து உள்ளன. 




கடைசியில் ரேய்மி செ ரோஸ் ஓர் உண்மையைக் கண்டுபிடித்தார். கோத்தா கெலாங்கி என்பது ஓர் இந்திய சாம்ராஜ்யம். காலத்தால் மறைந்து போன சாம்ராஜ்யம். ஸ்ரீ விஜய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த சாம்ராஜ்யம்.

அந்த சாம்ராஜ்யத்தைப் பற்றி வெளியுலகத்திற்குத் தெரியப் படுத்த வேண்டும் என்றார். எல்லா மலேசிய நாளிதழ்களுக்கும் தெரிய படுத்தினார். நாளிதழ்கள் பக்கம் பக்கமாய் செய்திகளை வெளியிட்டன.

கோத்தா கெலாங்கி இரகசியங்கள்

மலேசிய அரசாங்கத்திடமும் கோத்தா கெலாங்கி தொடர்பான சான்றுகளை முன்வைத்தார். சீரமைப்புப் பணிகளுக்கு நிறைய செலவாகும். ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மேல் தரப்பில் சொல்லப் பட்டது.




Conclusive Finding?
On April 28th 2006, the Malaysian National News Service (Bernama) reported that the "Lost City does not exist". Khalid Syed Ali, the Curator of Archaeology in the Department's Research and Development Division, said a team of government appointed researchers carried out a study over a month in July last year [2005] but found no trace of the "Lost City".

However, Khalid later added that 'the Heritage Department (Jabatan Warisan) does not categorically deny that it exists, only that research carried out until now [over the month of July] has not shown any proof that can verify the existence of the ancient city of Linggiu [sic]' (Azahari Ibrahim, 'Kota Purba Linggiu: Antara Realiti dan Ilusi', Sejarah Malaysia, July-August 2006, p.37). When pressed for details, he revealed that Che-Ross was not involved in the museum's search team for the lost city.




சொல்லிப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இன்னும்தான் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள். சோறு இன்னும் வேகவில்லையாம். செத்துப் போன எலியின் நாற்றம் அடிக்கிறது.

கோத்தா கெலாங்கி விவகாரத்தை ஏன் இப்படி ஆறப் போட்டு ஊறப் போட்டு காயப் போட்டு கிடப்பில் போடுகிறார்களோ… யாம் அறியேன் பராபரமே! இறைவா!!

16 மே 2016

Kota Gelanggi the Lost City

Welcome to the sad World of Malaysian Discoveries...


Kota Gelanggi was the first capital of the ancient Empire of Srivijaya and dating to around 650–900 and one of the oldest Kingdoms in Malay Peninsula. The site's existence was announced as a discovery by the Malaysian press on 3 February 2005. (Source: Tracking down Kota Gelanggi (PDF). The Star. Retrieved May 16, 2016)

Ancient Tamil inscriptions show that the city was raided in 1025 by South Indian Chola Dynasty conqueror Rajendra Chola I. Earlier he had destroyed the Sri Vijaya Kingdom of Gangga Negara. The latter that is Gangga Negara is generally equated with the ruins and ancient tombs that can still be seen in Beruas, Perak.

Old European maps of the Malay Peninsula show the location of a city known as Polepi that is Gelanggi at the southern tip of the Malay Peninsula. 




There was a wide publicity in the Malaysian media in 2005, about the Lost City of Kota Gelanggi and the painstaking efforts of Malaysian researcher Remy Che Ross to trace it.

In response to these media reports, the authorities indicated they would conduct an expedition in April 2005 to the site somewhere in Kota Tinggi, Johor to confirm the discovery and that the researcher Remy would be part of the expedition. 



That was that. The ensuing dead silence over the whole issue has perplexed Remy and countless others including me who are following this event with much interest. The authorities now behave as if the discovery never happened at all.

We suspect that although the authorities may concur with Remy's findings, they are nevertheless reluctant to acknowledge his discovery. They feel that since the Lost City of Kota Gelanggi belongs to the era of Srivijaya more than 1,000 years ago, its glory of ancient Buddhist/Hindu civilisation would outshine that of the Malaccan era from which Malaysia's official history begun only 600 years ago.



From the perspective of these local historians, it is clear that with the discovery of Kota Gelanggi, history would definitely have to be rewritten in that the Malaccan era would have to be replaced as the starting point of Malaysian history.

However, political and religious imperatives make the authorities unwilling to rewrite Malaysian history to begin from the era of Srivijaya because that would mean undermining the prominence which the government has given to Malacca in Malaysian history.



Kota Gelanggi and Remy's painstaking efforts at discovering remnants of a by-gone glorious Indian/Buddhist era are therefore on the verge of being shamelessly sacrificed and buried.

History, therefore, will not be re-written. As this would mean Malacca has to play the second fiddle to the Buddhist/Hindu Kota Gelanggi.

Had Kota Gelanggi been an other non Indian civilisation, the authorities would no doubt have widely highlighted and publicised it and Remy would be an instant celebrity today with something in front of his name.



Unfortunately, it is not.

Still, Remy should not be unduly disappointed by the decision of the authorities not to give Kota Gelanggi its proper due in Malaysian history. Sooner or later, his painstaking efforts will be internationally recognised. He has already taken the first step of having his findings published in well-acclaimed overseas journals. International recognition is certainly better than local recognition.



References to Kota Gelanggi were reported in the late 19th and early 20th centuries by colonial scholar-administrators. Dudley Francis Amelius Hervey (1849–1911), published eye witness reports of the city in 1881. Sir Richard Olof Winstedt (1878–1966) stated that an Orang Asli was prepared to take people to the site in the late 1920s. Adventurer-explorer Gerald Gardner (1884–1964) discovered the ruins of Johore Lama while searching for Kota Gelanggi.

14 மே 2016

பாலி தீவின் இந்திய வரலாறு

பச்சைப் பசேல் வயல் காடுகள். பார்க்கும் பரவெளிக் காட்டில் பசுமைச் செல்வங்கள். பார்ப்பவர்களை எல்லாம் ஈர்த்துக் கொள்ளும் பாமர மக்கள். பார்த்த பின்னும் பார்க்கச் சொல்லும் பாலியப் பெண்கள். நடையழகில் அழகின் அழகுகள். அத்தனையும் சொர்க்க வாசலின் சொப்பனச் செல்வங்கள். ஒய்யார ஒப்பனைகளில் ஓராயிரம் கவிதைகள். வண்ண வண்ணக் கலவைகளின் வானவில் கோலங்கள். 



எப்படி வர்ணிப்பது என்று எனக்கே தெரியவில்லை. அதுதான் உலகின் அதி அற்புதமான அழகிய தீவுகளில் ஒன்றான பாலித் தீவு. உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேசியா. சுந்தா தீவுகளுக்கு மேற்கிலும் ஜாவா லொம்பொக் தீவுகளுக்கு இடையிலும் அமைந்து உள்ளது. இந்தோனேசியா நாட்டின் 33 மாநிலங்கள் உள்ளன. அதில் பாலித் தீவு ஒரு சின்ன மாநிலம்.

அங்கே 92.29% விழுக்காட்டினர் இந்துக்கள். 42 இலட்சம் பேர். ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒருநாள் மௌன விரதம். அதனை மௌனதினம் (Nyepi Day) எனச் சொல்கிறார்கள். அந்த நாளில் பாலித் தீவு முழுமைக்கும் விடுமுறை. யாரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள். 




பாலித் தீவில் இந்துக்களின் நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த உன்னதமான நிலையில் உள்ளன. அந்த வகையில் இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது. சரி.

பாலி தீவு வரலாற்றின் இந்தியப் பின்னணியைக் கொஞ்சம் மீள்பார்வை செய்து பார்க்கலாமே.

இந்தோனேசியாவை இந்தியர்கள் ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டோம். அவர்கள் ஆட்சி செய்த நிலப்பகுதிகளில் பாலித் தீவும் ஒன்று. 




அதற்கு முன் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியப் பேரரசுகளின் பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அடிக்கடி அந்தப் பெயர்களைச் சொல்லி வந்தால் அந்தப் பெயர்கள் மனதில் நன்கு பதிந்துவிடும். மறக்க முடியாத மறக்கக் கூடாத பெயர்கள். தலைமுறை தலைமுறையாக நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர்கள்.


•    கி.பி. 358 இல் பூரணவர்மன்  உருவாக்கிய தர்மநகரப் பேரரசு.
•    கி.பி. 650 இல் ஸ்ரீ ஜெயாசேனா உருவாக்கிய ஸ்ரீ விஜய பேரரசு.
•    கி.பி. 650 இல் கலிங்கர்கள் உருவாக்கிய சைலேந்திரப் பேரரசு.
•    கி.பி. 915 இல் ஸ்ரீ கேசரி வர்மதேவா உருவாக்கிய வர்மதேவா பேரரசு.
•    கி.பி. 732 இல் சஞ்சாயா உருவாக்கிய மத்தாராம் பேரரசு.
•    கி.பி. 1293 இல் ராடன் விஜயா உருவாக்கிய மஜபாகித் பேரரசு.
•    கி.பி. 1222 இல் ராஜாசா உருவாக்கிய சிங்காசாரி பேரரசு.


அதில் ஸ்ரீ கேசரி வர்மதேவா உருவாக்கிய வர்மதேவா பேரரசு என்று ஒரு வாசகம் வருகிறதே அதைக் கவனியுங்கள். அந்த  ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesari Warmadewa) தான் பாலியில் ஓர் இந்தியப் பேரரசை உருவாக்கியவர். இவர் தான் வர்மதேவா அரச மரபையும் தோற்றுவித்தவர்.






இந்தோனேசியா பாலியில் சானூர் (Sanur) எனும் ஓர் இடம் இருக்கிறது. அங்கே 1932ஆம் ஆண்டு ஒரு கல் தூணைக் கண்டு எடுத்தார்கள்.  அதன் பெயர் பெலாஞ்சோங் கல் தூண் (Belanjong pillar). சமஸ்கிருத மொழியிலும் பழைய பாலித் தீவு மொழியிலும் எழுதப்பட்டது.

பழைய பாலித் தீவு மொழி பல்லவ எழுத்து வடிவங்களைக் கொண்டது. (சான்று: A Short History of Bali: Indonesia's Hindu Realm - பக்கம்: 46). இந்தத் தூணில் உள்ள எழுத்துக்கள் கி.பி. 914 ஆம் ஆண்டில் வரிக்கப்பட்டவை ஆகும்.

அந்தக் கல் தூண், ஸ்ரீ கேசரி வர்மதேவா மன்னர் தன் ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட படையெடுப்புகளை விவரிக்கின்றது. இப்போது பெலாஞ்சோங் ஆலயத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சந்தன மஞ்சள் பட்டுத் துணிகளைப் போர்த்தி ஒரு தெய்வப் பொருளாக அர்ச்சனை செய்து வருகின்றனர்.

மத்திய ஜாவாவை ஆட்சி செய்த சஞ்சாயா பேரரசிற்கும் (Sanjaya Dynasty) பாலித் தீவின் ஆட்சிக்கும் இடையே நிலவிய தொடர்புகளை அந்தக் கல் தூண் விவரிக்கின்றது. இன்னும் ஒரு விசயம். 




பேரரசு என்பது வேறு. அரச மரபு அல்லது வம்சாவளி என்பது வேறு. ஒரு பேரரசைப் பற்பல வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கலாம். ஆனால் அது ஒரே பேரரசு தான். அந்த வகையில் வர்மதேவா பேரரசைப் பற்பல வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கிறார்கள். சஞ்சாயா பேரரசையும் பற்பல வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

பாலியில் வர்மதேவா பேரரசை உருவாக்கியவர் ஸ்ரீ கேசரி வர்மதேவா. கல் தூண் குறிப்புகளின் படி ஸ்ரீ கேசரி வர்மதேவா என்பவர் சைலேந்திரா பேரரசைச் சேர்ந்தவர். புத்த மதத்தைச் சார்ந்த மன்னர்.

சைலேந்திரா பேரரசு மத்திய ஜாவாவைச் சேர்ந்த ஒரு பேரரசு. மறந்துவிட வேண்டாம். ஸ்ரீ கேசரி வர்மதேவா புத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பாலித் தீவிற்குப் படையெடுத்துச் சென்றார். அப்படி படையெடுத்துச் சென்ற போது தொலை தூரத்தில் இருந்த மொலுக்கஸ் தீவுகளையும் கைப்பற்றி இருக்கிறார். ஆக அந்தப் பெலாஞ்சோங் கல் தூண் தான் இப்போதைக்குப் பாலித் தீவின் வரலாற்றைச் சொல்லும் முதல் வரலாற்றுப் படிவம் ஆகும்.




பாலியில் வர்மதேவா வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்கள்:

•    ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesari Warmadewa - கி.பி. 914)
•    ரத்து உக்ரசேனா (Ratu Ugrasena)
•    சந்திரபாயா சிங்க வர்மதேவா (Candra-bhaya-singha-Warmadewa - கி.பி. 962)
•    ஜனசாது வர்மதேவா (Janasadu Warmadewa - கி.பி. 975)
•    உதயனா வர்மதேவா (Udayana Warmadewa)
•    தர்மவங்சா வர்மதேவா (Dharmawangsa Warmadewa)
•    ஆயிர்லங்கா (Airlangga - கி.பி. 991-1049)
•    அனாக் உங்சு (Anak Wungsu - கி.பி. 1049)

பாலியில் ஜெயா வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்கள்:

•    ஜெயாசக்தி (Jayasakti - கி.பி. 1146-1151)
•    ஜெயா பாங்குஸ் (Jayapangus - கி.பி. 1178-81)

பெலாஞ்சோங் கல் தூண்ணைப் போல மேலும் ஒரு கண்டுபிடிப்பு. கற்களால் கட்டப்பட்ட ஆலயம். பாலித் தீவில் உபுட் எனும் இடத்தில் இந்தக் குகை கண்டுபிடிக்கப் பட்டது. 




அதன் பெயர் யானைக் குகை (Goa Gajah / Elephant Cave). குகைவாயிலில் யானையின் உருவம். புத்த மதமும் இந்து சமயமும் கலந்த சிற்ப வடிவங்களின் அலங்காரங்கள். தீய ஆவியைத் தவிர்ப்பதற்காக அந்தக் கோயில் கட்டப்பட்டது.

1365ஆம் ஆண்டு ஜாவாவில் ஒரு கவிதை எழுதப்பட்டது. கவிதையின் பெயர் தேசவர்ணனா (Desawarnana). அந்தக் கவிதையிலும் இந்தக் குகை ஆலயத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள்.

1950ஆம் ஆண்டில் இந்தக் குகைக் கோயிலை இந்தோனேசிய அரசாங்கம் மறுசீரமைப்புச் செய்தது. அதன் பின்னர் 1995 அக்டோபர் 19ஆம் தேதி அந்தக் கோயிலை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது.

ஜாவாவைச் சேர்ந்த அரச பரம்பரைக்கும் பாலியைச் சேர்ந்த அரச பரம்பரைக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடந்துள்ளன. பாலியின் வர்மதேவா பரம்பரையைச் சேர்ந்த உதயானா வர்மதேவாவிற்கும் ஜாவாவைச் சேர்ந்த தர்மவங்சா பரம்பரையைச் சேர்ந்த ஓர் இளவரசிக்கும் கலப்புத் திருமணம்.

இவர்களுக்குப் பிறந்த மகன் ஆயிர்லங்கா. இந்த ஆயிர்லங்காதான் ஒரு காலத்தில் பாலியையும் ஜாவாவையும் ஒரு சேர ஆட்சி செய்தவர். பாலி வரலாற்றில் உச்சம் கண்டவர்.

இவரின் வழித்தோன்றல் தான் அதாவது ஆயிர்லங்காவின் வழித்தோன்றல் தான் பாலியின் ஜெயா வம்சாவளியினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜெயாசக்தி, ஜெயா பாங்குஸ் எனும் அரசர்கள்.

ஜெயாசக்தி, ஜெயா பாங்குஸ் அரசர்களின் அரசாட்சிக்குப் பின்னர் பாலியில் வர்மதேவா பேரரசு ஒரு முடிவிற்கு வந்தது.

1284ஆம் ஆண்டு ஜாவாவில் இருந்த சிங்காசாரி பேரரசின் கெர்த்தாநகரா (Kertanegara) எனும் அரசர் பாலியின் மீது படையெடுத்தார். வர்மதேவா அரசிற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார். அப்புறம் சில காலம் கழித்து கெர்த்தாநகராவும் மஜபாகித் பேரரசினால் தோற்கடிக்கப்பட்டார். இப்படித்தான் ஒருவரை ஒருவர் அடித்து நொறுக்கி இந்திய ஆளுமைகளுக்கு அஸ்திவாரமே இல்லாமல் செய்து விட்டார்கள்.

14ஆம் நூற்றாண்டில் சுமத்திராவில் மஜபாகித் பேரரசு தன்னிகரில்லாத அரசாக விளங்கியது. கடைசியில் பாலித் தீவும் மஜபாகித்தின் கரங்களில் வீழ்ந்தது. காஜா மாடா எனும் மஜபாகித் அரசர் பாலியின் மீது படையெடுத்துச் சென்று கெர்த்தாநகராவின் சிங்காசாரி அரசை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தார்.

பாலியில் சாம்பராங்கான் எனும் இடத்தில் மஜாபாகித்தின் தலைநகரம் உருவாக்கப்பட்டது. ஆக அதன் பின்னர் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு மஜபாகித் பேரரசு பாலியை ஆட்சி செய்தது. அதாவது 17ஆம் நூற்றாண்டு வரை மஜபாகித் அரசர்கள் பாலியை ஆட்சி செய்தார்கள். அது ஒரு நீண்ட கால அரசாட்சியாகும். இந்த வரலாற்றுக் கட்டுரையின் தொடர்ச்சி நாளை இடம்பெறும்.

பாலியைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:

பாலியில் இருக்கும் இந்துக் கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடம் இருந்து வந்தது. பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளைப் பற்றிய பாடங்கள் இருக்கின்றன. அகஸ்திய, மார்கண்டேய, பரத்வாஜ ரிஷிகளைப் பற்றி இங்கே இருக்கும் நமக்கே தெரியாத நிலை. ஆனால் இந்த ரிஷிகளைப் பற்றி அங்கே பாலித் தீவில் சின்னக் குழந்தைகள்கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

திரிகால சந்தயம் (Trikala Sandhya) என்பது சூரிய நமஸ்காரம். அங்கே அனைத்துப் பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்.அதே போல மூன்று வேளை காயத்ரி மந்திரத்தையும் சொல்ல வேண்டும். பாலி வானொலியில் மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தையும் அறிவிக்கிறார்கள்.

பாலி கோயில்களில் பணிபுரியும் இந்து பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. பாலித் தீவு முழுவதும் அரிசி வயல்கள். வயல்களில் விளைந்த அரிசியை ஸ்ரீ தேவி, பூ தேவி (Shri Devi / Bhu Devi) ஆகிய தெய்வங்களுக்குதான் முதலில் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் சிறு சிறு கோயில்கள் இருக்கும். இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகுதான் விவசாயிகள் தொழிலுக்குச் செல்கிறார்கள்.

அனைத்து திருவிழாக்களிலும் பாலி நடனம். அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களைக் கதைகளாகச் சொல்வார்கள். அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க  இந்துக் கலாச்சாரம், நடனம், இசை என இந்தத் தீவு உலகச் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவதில் வியப்பு எதுவும் இல்லை. ஆக இந்துக்களின் சொர்க்கபூமி பாலி என்று சொல்வதிலும் தவறு இல்லை.

கோலா செலிங்சிங்


கோலா செலிங்சிங் என்ற பகுதியில் இருக்கும் களும்பாங் தீவில் 1930-ஆம் ஆண்டுகளில் சில அகழ்வாராய்ச்சி நடந்து இருப்பது உண்மை. இந்தத் தீவிற்குப் புலாவ் பூலோ என்று இன்னொரு பெயரும் உண்டு.

Ivor Hugh Norman Evans எனும் ஆங்கிலேய வரலாற்று அறிஞர் 1930இல் முதல் ஆய்வு செய்தார். இவர் பேராக் அரும்பொருள் காட்சியகத்தின் இயக்குநராக இருந்தவர்.

அவர் எழுதி இருக்கும் Skeletal remains from the Kuala Selinsing excavations, Perak எனும் நூலில் இருந்து நிறைய தகவல்களைப் பெற முடியும்.

இந்த நூல் இப்போது ஆஸ்திரேலிய தேசிய நூலகத்தில் உள்ளது. இணையம் வழியாக நீங்களும் படித்து தகவல்களைப் பெற முடியும்.

அந்த நூலகத்தில் முதலில் நீங்கள் உறுப்பினராக வேண்டும். அதன் முகவரி: http://www.nla.gov.au/ இந்த நூலகத்தில் இருந்து தான் மலேசிய இந்தியர்களின் வரலாற்று ஆவணங்களைப் பெற்று வருகிறேன்.

கோலா செலிங்சிங் பாசி மணிகள் தமிழ் நாட்டின் Arikamedu எனும் இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டன். உள்ளூர் மக்களுக்கு விற்கப்பட்டன. Kuala Selinsing (Perak), Sungai Mas (Kedah) and Santubong (Sarawak) ஆகிய இடங்களில் அதே காலக் கட்டத்தில் பாசிமணிகள் உற்பத்தியும் செய்யப்பட்டு உள்ளன. 

 

மணிகளை manik என்று மலாய் மொழியில் சொல்கிறார்கள். manikya எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து manik எனும் சொல் உருவானது. கோலா செலிங்சிங்கில் மனித எலும்புக்கூடுகள் கிடைத்தன. உண்மை.

அவை 7ஆம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த இந்தியர்களின் எலும்புக் கூடுகள். மலாய்க்காரர்களின் எலும்புக்கூடுகள் என்று சொல்கிறார்கள். மேலிடங்களுக்குத் தெரியும். ஏனோ தெரியவில்லை. அந்த ரகசியங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன.

பூஜாங் நாகரிகத்தை அவர்களின் நாகரிகம் என்று சொல்லவில்லையா. அந்த மாதிரிதான் கோலா செலிங்சிங் 7ஆம் நூற்றாண்டு எலும்புக்கூடுகளின் ரகசியங்களும். கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். ரகசியம் வெளியாகும்.

கோலா செலிங்சிங் ரகசியங்களை அவிழ்க்க வேண்டும். மலேசிய இந்தியர்களுக்கு மட்டும் அல்ல உலக இந்தியர்களுக்கே தெரிவிக்க வேண்டும். அது நம்முடைய பொறுப்பு அல்ல கடமை.

13 மே 2016

பிரம்பனான் ஆலயம்

பிரம்பனான் ஆலயம் உலகத்திலேயே மிக அழகான ஆலயம். இந்து ஆலயங்களில் தலையாய ஆலயம். சைலேந்திரா வம்சாவழியினர் ((Sailendra Dynasty)) உருவாக்கிய பொராபுடுர் (Borobudur) புத்த ஆலயத்திற்கு நிகரான இந்து ஆலயம். இந்துக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவா ஆகிய மூவரின் தோற்றத்திற்குத் தோரணம் கட்டிய அழகு ஆலயம்.


உலகப் பாரம்பரியச் சின்னமாக ஒரு நளின ஆலயம். 1250 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 850 ஆம் ஆண்டு கட்டப் பட்ட ஆலயம். அதுதான் பிரம்பனான் (Prambanan) ஆலயம். ஒவ்வோர் இந்துவும் பார்க்க வேண்டிய ஆலயம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்தோனேசியாவில் அழகு அழகான ஆலயங்களைக் கட்டி இந்தியர்கள் அழகு பார்த்து இருக்கிறார்கள். அத்தனையும் அற்புதமான கலை நுணுக்கங்கள்.

அதிசயமான சிற்ப ஆராதனைகள். அறிவார்ந்த அறிவியல் நுட்பங்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் ஆடம்பரம் இல்லாமல் அழகு பேசும் அதி அற்புதங்கள். சொல்லும் போது மனசு நடுங்குகிறது.




9-ஆம் நூற்றாண்டில் ஜாவாத் தீவில் ஸ்ரீ விஜய பேரரசின் (Srivijaya 650 – 1377) வழித்தோன்றல்கள் சைலேந்திரா அரசு; மத்தாராம் அரசு.
சைலேந்திரா அரசு என்பது ஒரு புத்த அரசு. அந்த அரசு போராபுடோர் (Borobudur) புத்த ஆலயங்களைக் கட்டி அழகு பார்த்தது. 

மத்தாராம் (Mataram) அரசு ஓர் இந்து அரசு. பிராம்பனான் (Prambanan) திருமூர்த்தி கோயிலைக் கட்டி அழகு பார்த்தது.

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா. உலகத்திலேயே மிக அழகான இந்துக் கோயில் எது தெரியுமா. அதுதான் பிராம்பனான் திருமூர்த்தி கோயில். நான் சொல்லவில்லை. 2008 ஆம் ஆண்டில் உலகளாவிய இந்து ஆலயக் கணக்கெடுப்பு நடந்தது. அதில் அந்த உண்மையைச் சொன்னார்கள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஒன்றிணைத்து திருமூர்த்திகள் என்கிறோம். அந்த மூவரின் தத்துவங்களுக்கும் சான்று கூறும் இந்துத் தத்துவமாகப் பிராம்பனான் ஆலயம் அமைகின்றது. காலா காலத்திற்கும் அழகு பேசும் அழகு ஓவியம்.

இந்த ஆலயத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதே இந்தக் கோயிலின் 30 சதுர கி.மீ. அளவிற்கு உள்ள நிலப்பகுதியை இந்தோனேசியாவின் பாரம்பரியக் காப்பகமாக இந்தோனேசிய அரசாங்கமும் அறிவித்து இருக்கிறது.

ஆலயத்தின் சுற்றுப் புறங்களில் ஒரு செடியைக் கூட இடமாற்றம் செய்யக் கூடாது என்று தடாலடியான ஒரு சட்டத்தையும் போட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லை. ஆலயத்தின் குளங்களில் மீன் பிடிக்கக் கூடாது. படகு விடக்கூடாது. குளிக்கக் கூடாது என்று அதிரடியான சட்டங்களையும் இயற்றி ஆலயத்திற்குப் புனிதம் சேர்த்து வருகிறது. கை கூப்புவோம்.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் உள்ள நகரங்களில் யோக்ஜகார்த்தா மிக முக்கியமான நகரம். அந்த நகரத்தில் இருந்து 17 கி,மீ. தொலைவில் தான் இந்த ஆலயம் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது. இரவு நேர ஒளிவிளக்குகளில் பார்ப்பவர்களின் இதயங்கள் சலனமாகி விடுகின்றன. அப்பேர்ப்பட்ட கொள்ளை அழகு.

உலகின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் சுற்றுப்பயணிகள் இந்த ஆலயத்திற்கு வருகிறார்கள்…. பார்க்கிறார்கள்…. ரசிக்கிறார்கள்…. வாயாரப் புகழ்கிறார்கள். மனுக்குல மாண்புகளை மனதாரப் போற்றுகிறார்கள். மனதைப் பறிகொடுத்துப் போகிறார்கள்.

ஆனால் அடிவாசலில் இருக்கும் மலேசிய இந்தியர்களில் பலருக்குத் தான் அந்த ஆலயத்தைப் பார்க்க நேரம் இல்லை. புளிச் சோறு கட்டிக் கொண்டு புரியாத இடங்களுக்கும் தெரியாத மடங்களுக்கும் படை எடுக்கிறார்கள். அவர்களுக்காக அனுதாபப் படுகிறேன்.

இந்த ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் கி.பி. 850ஆம் ஆண்டில் தொடங்கின. கி.பி. 856ஆம் ஆண்டில் முடிவுற்றது. ஆறு ஆண்டுகள். சஞ்சாயா வம்சாவளியைச் சேர்ந்த ராக்காய் பாக்கத்தான் (Rakai Pikatan) எனும் அரசர் தான் கட்டுமானப் பணிகளை முதலில் தொடக்கினார். இருந்தாலும் அவருக்குப் பின்னர் அரசர்களான லோகபாலா (Lokapala), மகா சம்பு (Balitung Maha Sambu) எனும் அரசர்கள் தான் பெருவாரியான கட்டு வேலைகளைச் செய்து முடித்தனர்.

அண்மையில் அங்கே சிவர்கா (Shivagrha Inscription) எனும் கல்வெட்டு கிடைத்தது. கி.பி. 856ஆம் ஆண்டுக் கல்வெட்டு. அந்தக் கல்வெட்டில் அந்த ஆலயம் இந்துக் கடவுள் சிவனுக்காகக் கட்டப் பட்டது என்று எழுதப்பட்டு இருந்தது.

உண்மையிலேயே அந்த ஆலயத்தின் அசல் பெயர் சிவர்கா ஆலயம். அல்லது சிவாலயம். பிரம்பனான் எனும் இடத்தில் இருப்பதால், காலப் போக்கில் அதற்குப் பிரம்பனான் ஆலயம் எனும் பெயரும் வந்து சேர்ந்தது.

முன்பு காலத்தில் மத்தாரம் எனும் அரசப் பரம்பரை ஜாவாவை ஆட்சி செய்து வந்தது. அந்தப் பரம்பரையில் தாக்சா (Daksa), துலோடொங் (Tulodong) எனும் அரசர்கள் இருந்தார்கள். இவர்கள் தான் பிரம்பனான் கோயிலைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து இருக்கிறார்கள். அது மட்டும் இல்லை. பிரதானக் கோயிலைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான சிறு கோயில்களையும் இவர்கள் தான் கட்டினார்கள்.

பிரம்பனான் ஆலயம் தான் மத்தாரம் பேரரசின் அரச ஆலயமாகவும் விளங்கி இருக்கிறது. அரச சமய நிகழ்ச்சிகளும் அரச நேர்த்திக் கடன்களும் அங்கே நடைபெற்று உள்ளன. ஒரு கட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆரிய அர்ச்சகர்கள் கோயில் வளாகத்தில் தங்கிச் சேவைகள் செய்து இருக்கின்றனர்.

கி.பி. 930ஆம் ஆண்டு வாக்கில் இசாயானா அரசப் பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீ இசாயானா விக்ரமாதமதுங்க தேவா (Sri Isyana Vikramadhammatunggadeva) என்பவர் ஆட்சிக்கு வந்தார். இவர்தான் இசாயானா அரசப் பரம்பரையைத் தோற்றுவித்தவர். அவருடைய ஆட்சிக் காலத்தில் மெராப்பி எரிமலை வெடித்தது.

மெராப்பி எரிமலை மத்திய ஜாவாவில் பிரம்பனான் பகுதிக்கு வடக்கே உள்ளது. எரிமலை வெடிப்பினால் சேதங்கள் ஏற்பட்டன. அதனால் இசாயானா அரசு கிழக்கு ஜாவாவிற்கு இடம் மாறியது.

அதன் பின்னர் பிரம்பனான் ஆலயச் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்தது. முறையான பராமரிப்பு இல்லை. ஓர் அபலையான நிலை. அப்படியே கைவிடப்பட்டது. அப்படியே அந்த ஆலயம் சிதைவும் அடைந்தது.

பிரம்பனான் ஆலயத்தைப் பற்றிய ரகசியங்கள் வெளியுலகத்திற்குத் தெரிவதற்கு முன்னால் அங்கு வாழ்ந்த ஜாவா மக்களுக்கு ஆலயத்தின் இடிபாட்டுச் சிதையல்களைப் பற்றி தெரிந்து வைத்து இருந்தார்கள். ஆனால் யார் கட்டியது, எப்போது கட்டியது, எந்த அரசப் பரம்பரையினர் ஆட்சி செய்தனர் என்பது எல்லாம் அவர்களுக்குத் தெரியாது. தெரிந்து இருக்க வாய்ப்பும் இல்லை.

இருந்தாலும் பற்பல பாட்டிக் கதைகளைச் சொல்லி வந்தார்கள். அரக்கர்களும் பூதங்களும் சேர்ந்து கட்டியதாகவும் கதைகள். அந்தக் கதைகளில் ஒரு பிரபலமான கதையும் உண்டு. அதன் பெயர் லோரோ ஜொங்கராங் (Loro Jonggrang) கதை.

பல ஆயிரம் அரக்கர்கள் ஒன்றுகூடி ஆலயத்தைக் கட்டிய கதை. அந்த அரக்கர்களுக்கு பாண்டுங் போண்டோவோசோ எனும் அரக்கர் தலைமை அரக்கராக இருந்தாராம். அவருடைய மூர்க்கத்தனத்தினால் மற்ற அரக்கர்கள் பயந்து போது போய் அடிமைகளைப் போல வேலை செய்தார்களாம்.

இன்னும் இந்தக் கதை அங்கே ஒரு மெகா சீரியல் மாதிரி ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. புதிய தலைமுறையினரும் கேட்டுத் தலைகளை ஆட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

சிங்கப்பூரை ராபிள்ஸ் ஆட்சி செய்த காலத்தில் ஜாவாவும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொஞ்ச காலம் இருந்தது. 1811ஆம் ஆண்டு. அப்போது ராபிள்ஸிடம் காலின் மெக்கன்சி (Colin Mackenzie) எனும் ஓர் ஆங்கிலேயர் நில ஆய்வாளராகப் பணிபுரிந்தார்.

பிரம்பனான் பகுதியில் நில ஆய்வு செய்து கொண்டு இருக்கும் போது எதேச்சையாக அந்தக் கோயிலில் தடுக்கி விழுந்தார். தடுக்கி விழவில்லை. அப்பேர்ப்பட்ட கோயிலில் எப்படிப் போய் தடுக்கி விழ முடியும். அது என்ன சின்ன பிள்ளைகள் விளையாடும் மரப்பாச்சி பொம்மையா. கண்டுபிடித்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படியும் சொல்லலாம். அதாவது அவர் தான் பார்க்க வேண்டும். வெளியே போய் நாலு பேரிடம் சொல்ல வேண்டும் எனும் ஒரு கொடுப்பனை இருக்கிறதே. அதற்குப் பெயர் தான் அதிர்ஷ்டம். கண்டுபிடிப்பு எனும் பெயரில் லாட்டரி அடித்து இருக்கிறது. அங்கார் வாட் அதிசயச் சின்னத்தையும் அப்படித் தானே கண்டுபிடித்தார்கள். சரி. இந்தக் கதையை நாளைய கட்டுரையில் தொடர்ந்து பார்க்கலாமே. அதற்கு முன்னர் மனசிற்குள் இருக்கிற ஒரு சின்ன ஆதங்கம். அதையும் சொல்லி விடுகிறேன்.

இந்தியர்கள் அதிகமாக வாழாத நாடுகளில் இந்தியப் பாரம்பரியங்களை எப்படி எல்லாம் ஆராதனை செய்கிறார்கள் பாருங்கள். இங்கே அப்படியா நடக்கிறது. இருக்கிற இந்தியப் பாரம்பரியங்களை அழித்து ஒழிப்பதில் தான் தீவிரம் காட்டுகிறார்கள். அழித்து ஒழித்துவிட்டு முகம் சுழிப்பது இல்லை. மாறாக முப்பத்திரண்டும் தெரியாத மௌனப் புன்னகை. என்னே புனிதப் புன்னகை.

தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த உலகம் எங்கோ பயணித்துக் கொண்டு இருக்கிறது. இணையம் இண்டர்நெட் என்று உலக மக்கள் இதிகாச இத்யாதி இத்யாதிகளைத் தாண்டிப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு சில மரமண்டைகளுக்கு அவ்வப்போது மண்டைக் கிறுக்குப் பிடித்து விடுகிறது.

லெம்பா பூஜாங் தங்களின் பாட்டன் சொத்து என்றும் அங்கோர் வாட் தங்களின் பாட்டிச் சொத்து என்றும் வெட்கம் இல்லாமல் கப்சா அடிக்கிறார்கள். அதைப் பார்த்து உலகமே வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறது.

இந்த மாதிரியான ஜென்மங்கள் கத்துகிற வரை கத்தட்டும். விடுங்கள். அவர்களுக்குத் தானே வாய் வலிக்கும். நமக்கு இல்லையே. இதோடு போதும். விட்டு விடுகிறேன். இல்லை என்றால் சட்டம் பாயலாம்.