03 ஜூன் 2017

DLP இருமொழித் திட்டம் - 1

DLP இருமொழித் திட்டம் அமலாக்கம் செய்யப் படுவதற்குப் பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. அண்மையில் புத்ரா ஜெயா கல்வி அமைச்சின் முன் அமைதிப் பேரணி ஒன்றும் நடந்து இருக்கிறது.


2016-ஆம் ஆண்டு தொடக்கம் மலேசியப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கை அமலாக்கம் பெறுகிறது என கல்வியமைச்சு அறிவித்தது. 

அதன்படி தமிழ்ப் பள்ளிகளில் நான்காம் ஆண்டு தொடங்கி அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், புத்தாக்கம் ஆகிய நான்கு பாடங்கள் மலாய் அல்லது ஆங்கில மொழியில் போதிக்கப்படும்.

அப்படி ஓர் அமலாக்கத்திற்குச் சில வரையறைகளும் உள்ளன. DLP இருமொழித் திட்டம் அமலாக்கம் செய்ய விரும்பும் ஒரு பள்ளியில் போதுமான ஆங்கில மொழி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். 

அந்தப் பள்ளியின் மாணவர்கள் ஆங்கில மொழியில் புரிந்து கொள்ளும் தகுதிகளையும் பெற்று இருக்க வேண்டும்.

அதன் பின்னர் தான் அந்த நான்கு பாடங்களையும் ஆங்கிலத்திலேயே போதிப்பதற்கான வசதிகள் செய்து தரப்படும். இந்தப் பரிச்சார்த்த முயற்சிக்கு 300 மலாய் தொடக்கப் பள்ளிகளை அரசாங்கம் தேர்வு செய்தது. சரி.


இந்தத் திட்டம் தேசியப் பள்ளிகளில் மட்டுமே அமல் செய்யப்படும் என்றும் அறிவிப்பு செய்யப் பட்டது. ஆனால் தமிழ்ப் பள்ளிகளில் அதன் தாக்கங்கள் துரிதமாகப் பரவத் தொடங்கி விட்டன.

இந்தத் திட்டத்தைச் சீனப் பள்ளிகள் முற்றாகப் புறக்கணித்து விட்டன. அரசாங்கம் இதை நன்றாகவே எதிர்பார்த்தது. அதன் காரணமாக தேசியப் பள்ளிகளை மட்டும் அந்தத் திட்டத்திற்கு முதலில் உட்படுத்தியது. இருந்தாலும் மலாய் சமூகத்திலும் பல்வேறு வகையில் எதிர்ப்பு அலைகள்.

ஒரு மொழியின் மீதான ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால் முதலில் அந்த மொழியைப் போதிக்கும் நேரத்தைக் கூட்ட வேண்டும். அடுத்து ஆங்கில பாடத்தைப் போதிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையும் பணியில் அமர்த்த வேண்டும். 


அப்படி இல்லாமல் மற்ற பாடங்களை உடனடியாக ஆங்கிலத்திற்கு மாற்றுவது என்பது மலாய் மொழிப் பள்ளிகளின் தேசிய மொழிக் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கும். மலாய் கல்விமான்கள் பலர் அவ்வாறு மாற்றுக் கருத்துகளை முன்வைத்தனர்.

தமிழ்ப் பள்ளிகளிலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. அவை என்ன கருத்துகள் என்பதை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.

சிவராசா எல்லை மீறிவிட்டார்

சிலாங்கூர் சுல்தான் பகிரங்க அறிவிப்பு

(நன்றி: செல்லியல்)
சான்று: http://www.selliyal.com/archives/150388

ஷா ஆலாம் – இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா, தனது உத்தரவை மீறி பள்ளி வாசல் ஒன்றில் அரசியல் உரை நிகழ்த்தியதற்காகச் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மீது நேரடியாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்து இருக்கிறார்.

சிவராசா ‘தனது செயலால் எல்லை மீறிவிட்டார்’ எனப் பகிரங்கமாகக் கூறி இருக்கிறார்.

முஸ்லீம்களாக இருந்தாலும் சரி முஸ்லீம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி யாரும் பள்ளி வாசலை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என நான் உத்தரவிட்டு இருக்கிறேன். சிவராசா எனது உத்தரவை மீறிவிட்டார். எல்லை மீறிவிட்டார் என சிவராசாவின் பெயர் குறிப்பிட்டு சிலாங்கூர் சுல்தான் உரையாற்றினார்.

இதற்கிடையில் சிலாங்கூர் சுல்தானுக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பப் போவதாகக் கூறி இருக்கும் சிவராசா, தான் இன்னும் அந்தக் கடிதத்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.

“பள்ளிவாசல்கள் தொழுகைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். மதத்தைப் பற்றி மேலும் கூடுதலாகத் தெரிந்து கொள்ளும் மையங்களாகத் திகழ வேண்டும், முஸ்லீம்களை ஒன்றுபடுத்த வேண்டுமே தவிர மாறாக பிளவுபடுத்தக் கூடாது.

பள்ளிவாசல்களை நிர்வகிப்பவர்கள் பள்ளிவாசல்களில் அரசியலை அனுமதிக்கக் கூடாது என்ற தனது உத்தரவை மதிக்க வேண்டும்” என்றும் சிலாங்கூர் சுல்தான் தனதுரையில் வலியுறுத்தினார்.

01 ஜூன் 2017

தமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம்

தமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம். தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ் மொழியைத் தாயாக மதிக்க வேண்டும். தரணி போற்றும் மொழியாகத் தமிழை உயர்த்த வேண்டும்.


ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியில் பயின்று இப்போது அமெரிக்கா புளோரிடா அனைத்துலகப் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியில் மூலக்கூற்றுத் தொற்று நோய்ப் பிரிவில் பேராசிரியராகப் பணி புரியும் டாக்டர் கலைமதியின் அறைகூவல்.

தமிழ்க்குயிலார் கா.கலியபெருமாள் அறக்கட்டளையின் சார்பில் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் *தமிழ்ப்பள்ளி மாணவர்களும் முன்னேற்றப் பாதையும்* எனும் தலைப்பில் நடைபெற்ற  கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அந்த அறைகூவலை விடுக்கப்பட்டது.

தமிழ்ப் பள்ளியில் பயின்றவர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல முக்கியப் பதவிகளில் சேவை செய்கின்றனர் என்பதற்கு டாக்டர் கலைமதி ஓர் எடுத்துக்காட்டு.

25 மே 2017

பெண் புத்தி பின் புத்தி

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். 


கல்வி ஆகட்டும், காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும். எந்தப் பிரச்சனை வந்தாலும் அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு பின்விளைவுகளைத் தரும் என்பதை நன்கு யோசித்து விட்டு அதற்குத் தகுந்த முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும்.

பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் பெண் புத்தி பின் புத்தி என்றார்கள்.

இதை நாம் எந்த இலட்சணத்தில் புரிந்து கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. உங்களுக்கே தெரியும். பெண் இல்லாமல் எந்த ஓர் ஆணும் பேர் முடியாது.

உண்மையிலேயே பெண் புத்தி முன் புத்தி என்று தான் சொல்ல வேண்டும். அதற்காகப் பெண்களுக்குத் தலைக்கனம் பிடிக்காமல் இருந்தால் சரி.

24 மே 2017

சேலை கட்டிய மாதரை நம்பாதே

விளக்கம்: சேல் + ஐ = சேலை. சேல் என்றால் கண். அகட்டல் என்றால் அகற்றுதல் (திருப்புதல்). அதாவது அடிக்கடி கண்களை அங்கும் இங்கும் அலையவிடும் 



பெண்களை நம்பாதே என்பது தான் அந்தக் காலத்துத் தமிழர்கள் சொன்னது.

ஒரேடியாக சேலை கட்டிய மாதர்களை நம்பக் கூடாது என்பது தவறான வியாக்கியானம்.

அப்படி என்றால் அம்மா, அத்தை, அக்கா, தங்கச்சி, மகள், பேத்தி அனைவரையுமே நம்பக் கூடாது என்று பொருள் படுமா.