25 ஜூலை 2019

மலாயாவில் முதல் ரப்பர் மரம் - வயது 140

உலகத்திற்கே ரப்பரைப் பற்றி சொல்லிக் கொடுத்தது மலையூர் மலாயா. பல இலட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகச் சாணக்கியம் பேசியது இந்த மலையக மலாயா. புலம் பெயர்ந்து கரை தாண்டும் மனிதர்களையும் கட்டிப் போட்டது இந்த மண்ணுயிர் மலாயா.

எச்.என். ரிட்லி

இந்தப் பூமிக்கு வாழ்வு அளித்த ரப்பர் எனும் அந்த மந்திரப் புன்னகையைப் பலரும் மறந்து வருகிறார்கள். ரப்பர் என்றால் என்ன என்று தெரியாமல் இன்றும் சிலர் மலேசியாவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். வேதனை.

மலேசியாவின் இத்தனை பெரிய சாதனைகளுக்கும் சோதனைகளுக்கும் ஒரே ஒரு ரப்பர் மரம் தான் காரணம் என்கிற விசயம் எத்தனை பேருக்குத் தெரியும்.

ஒரே ஒரு ரப்பர் மரத்தை வைத்துக் கொண்டு அதன் விதைகளை மட்டுமே நம்பி மலாயா முழுவதும் ரப்பர் தோட்டங்களைப் போட்டுச் சாதனை படைத்து இருக்கிறார்களே. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். ஒரே ஒரு மரம் தான். அந்தச் சாதனையைப் பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். 


இந்தக் கதை 1873-இல் நடந்தது. அமேசான் காட்டில் இருந்து முதன்முதலில் 12 ரப்பர் விதைகளை லண்டனுக்கு கொண்டு வந்தார்கள். அங்குள்ள கியூ அரச தாவரவியல் தோட்டத்தில் நட்டார்கள். அவற்றில் சில கன்றுகளை இந்தியாவுக்கு எடுத்துச் சென்றார்கள்.

முதன்முதலில் கல்கத்தாவில் நட்டுப் பார்த்தார்கள். மண்வாசனை ஒத்துக் கொள்ளவில்லையாம். எல்லாக் கன்றுகளுமே மடிந்து விட்டன.  அதன் பிறகு கேரளாவில் 1902-ஆம் ஆண்டு தாத்தேக்காடு எனும் இடத்தில் நட்டுப் பார்த்தார்கள். ஓரளவுக்கு வெற்றி கிடைத்தது.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1875-இல் ஹென்றி விக்ஹாம் (Henry Wickham) என்பவர் பிரேசில் நாட்டு அதிகாரிகளுக்குத் தெரியாமல் 70,000 ரப்பர் விதைகளை கள்ளக் கடத்தல் செய்தார். அந்த விதைகளில் 2,800 விதைகள் துளிர்விட்டுக் கன்றுகள் ஆகின. 


Sir Henry Wickham
இவற்றில் 2000 கன்றுகளைப் பக்குவமாகப் பிடுங்கி இலங்கையில் கொண்டு வந்து நட்டார்கள். அவற்றில் 22 கன்றுகள் மட்டும் சிங்கப்பூருக்கு கப்பலேறி வந்தன.

‘ரப்பர் ரிட்லி’ எனும்  எச்.என்.ரிட்லி (HN Ridley) என்பவரைப் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். அவர் தான் மலாயா ரப்பரின் தந்தை. ரப்பரின் மூலமாக மலாயாவை உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.

மலாயா என்கிற ஒரு நாடு உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது என்று உலக மக்கள் கற்பனை செய்து கொள்ளும் அளவிற்கு கடிவாளத்தை அவிழ்த்து விட்டவர்தான் அந்த மனிதர்.

தென்னிந்தியாவில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவரும் இதே இந்த மனிதர் தான். 


Father of Rubber - HN Ridley

எச்.என்.ரிட்லி சிங்கப்பூருக்கு வந்த 22 கன்றுகளில் ஒன்பது கன்றுகளை மலாயாவுக்கு கொண்டு வந்தார். மறுபடியும் சொல்கிறேன் 9 கன்றுகள். 1877-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி.

அந்தக் கன்றுகள் பேராக் மாநிலத்தில் உள்ள கோலாகங்சாரில் நடப்பட்டன. அவற்றில் எட்டு கன்றுகள் நட்டு வைத்த கொஞ்ச நாட்களில் அடையாளம் தெரியாமல் இறவாப் புகழ் பெற்றன.

எஞ்சியது ஒரே ஒரு கன்று. நாம் செய்த புண்ணியம். அதற்கு மட்டும் காம்போதி ராகம் எடுபடவில்லை. அந்தக் கன்றை ரொம்ப பதுவுசாக வளர்த்தார்கள். ஈ கடிக்காமல் கொசு கடிக்காமல் போற்றிப் போற்றி வளர்த்தார்கள் என்றுகூட சொல்லலாம்.

ஒரு சில ஆண்டுகளில் அந்த மரம்  பெரிதாகியது. பெரிய மனுசி மாதிரி பதினெட்டு அடிக்கு வளர்ந்து நின்றது. அந்தக் கன்று தான் மலாயாவின் சரித்திரத்தையே திசை மாற்றிப் போட்டது.

1890-ஆம் ஆண்டுகளில் போகிற இடங்களுக்கு எல்லாம் எச்.என்.ரிட்லி ரப்பர் விதைகளை எடுத்துச் சென்றார். அவருடைய சிலுவார் பாக்கெட்டுகளில் ரப்பர் விதைகள் எப்போதும் நிறைந்து இருக்கும். கிராமப்புற மக்களிடம் அந்த விதைகளைக் கொடுத்து நடச் சொன்னார்.

ரிட்லியின் தொல்லை தாங்க முடியாமல் மக்களும் வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொள்வார்கள். சிலர் நட்டுப் பார்த்தார்கள். அதில் சிலர் ரிட்லி அந்தப் பக்கம் போனதும் ‘மனுசன் உயிரை வாங்குறாண்டா’ என்று இந்தப் பக்கம் தூக்கி வீசினார்கள்.

1839-இல் சார்ல்ஸ் குட்யியர் என்பவர் ரப்பர் கெட்டியாக்கல் (Vulcanization ) முறையைக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் ரப்பரின் தேவைகள் அதிகரித்தன. உலகில் பல நாடுகளில் ரப்பர் பயிர் செய்யப்பட்டது.

சரி. மலாயாவில் பிழைத்துக் கொண்ட ஒரே ஒரு கன்றின் கதைக்கு வருகிறேன். அந்தக் கன்று வளர்ந்து இன்றும்கூட கோலாகங்சாரில் கம்பீரமாக, நல்ல ஒரு வரலாற்றுக் காவியமாக வசனம் பேசிக் கொண்டு நிற்கிறது.

மலாயாவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பது கன்றுகளில் அந்த ஒரே கன்றுதான் தப்பிப் பிழைத்தது. அந்த ஒரே கன்றுதான் பெரிதாகி மரமானது. பிறகு அதன் விதைகளின் மூலமாகத் தான் மற்ற கன்றுகள் உருவாகின.

அந்தக் கன்றுகளின் மூலமாக பல ஆயிரம் மரங்கள் பிறந்தன. அந்த மரங்களைக் கொண்டு 1887-இல் முதல் ரப்பர் தோட்டம் மலாயாவில் உருவானது. 1889-ஆம் ஆண்டு சிலாங்கூரில் முதல் ரப்பர் தோட்டம் உருவானது. அதன் பெயர் மிட்லண்ட்ஸ் தோட்டம். என்ன யோசிக்கிறீர்கள். சரி.

நீங்கள் கோலாகங்சார் பக்கம் போனால் அந்த மரத்தைப் பாருங்கள். அதற்கு வயது 140. கூட்டரசு நிலச் சுரங்கர அலுவலகத்திற்கு முன் இருக்கிறது. மரத்தைச் சுற்றிலும் அழகிய வேலிகளை அமைத்து பாதுகாப்பாக வைத்து  இருக்கிறார்கள்.

மரத்திற்கு முன் மலேசிய கொடியை 24 மணி நேரமும் பறக்க விட்டு இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் போய்ப் பாருங்கள். மலேசியாவின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஓர் உயிரோவியம்.

சிங்கப்பூரில் நடப்பட்ட 13 கன்றுகளில் இன்னும் இரண்டே இரண்டு மரங்கள் மட்டும் தான் உள்ளன. ஒரு மரம் சுவான் ஹோ ஜப்பானிய நல்லடக்கப் பூங்காவில் இருக்கிறது. இன்னும் ஒன்று சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் இருக்கிறது. அவற்றுக்கும் நம்ப மலாயா மந்திரப் புன்னகை மாதிரி வயது 140 தான்.

இப்போது சொல்லுங்கள். எது எதற்காகவோ கையெடுத்து கும்பிடுகிறோம். மலேசியாவின் வாழ்வதாரமாக அமைந்த அந்தத் தெய்வத்திற்கு மரியாதை செய்வதில் தப்பு இல்லையே.

மலாயாவுக்கு வந்த அந்தப் புன்னகையை மந்திரப் புன்னகை என்று அழைக்கலாம் தானே! நமக்கு வாழ்வளித்த அந்தத் தெய்வத்தைக் கையெடுத்துக் கும்பிடலாம் தானே! தயவு செய்து போய்ப் பாருங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
@ copyrighted

23 ஜூலை 2019

ஹிமா தாஸ் ஒரு பறக்கும் பாவை

அண்மைய காலங்களில் விளையாட்டுத் துறையில் இந்தியா ஒரு ஜாம்பவானாக மாறி வருகிறது. கடந்த சனிக்கிழமை (நேற்று) செக் குடியரசு நாட்டில் Nove Mesto நகரில் அனைத்துலகத் தடகளப் போட்டிகள் நடந்தன.

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஹிமா தாஸ் 52.09 வினாடிகளில் ஓடி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹிமா தாஸ் பெறும் 5-ஆவது தங்கப் பதக்கம்.




‘திங் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் ஹிமா தாஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறார். உலகமே இந்தியாவைத் திரும்பிப் பார்க்கிறது.  அவரை வாழ்த்துவோம். இந்தியராகப் பிறந்த அனைவருக்கும் பெருமை அளிக்கும் வெற்றிச் சாதனை.

Sprinter Hima Das wins 400 meter race to claim 5th gold of the month

The 19-year-old Ace Indian sprinter Hima Das... on Saturday by winning the fifth gold of the month as won the 400 meter race with a season-best time of 52.09s in Nove Mesto, Czech Republic.

The star sprinter has managed to bag 4 gold medals in just 15 days. Hima Das in a historic win, clinched her fourth gold medal as she won the 200 mt in Tabor Aesthetics Meet. 




She is the first Indian woman, in fact the first ever athlete to win a Gold in any format of a World track event. The teenager who made it globally with her raw talent has only been getting better with every race and only getting faster with every passing race.

Needless to say she is an inspiration to all the young boomers  with a message that if you’re really passionate and dedicated towards your goal than anything is possible.

Hima Das was born in the wake of the new century on January 9th 2000. Infact, she had always wanted to be a footballer. Hima would play for the local clubs as a striker and was pretty good at it. However, it was only in 2016 wherein her PE coach told her to try her hand in an individual event. The rest as we all say is history. 



The President, Shri Ram Nath Kovind presenting the Arjuna Award, 2018 to Ms. Hima Das for Athletics, in a glittering ceremony, at Rashtrapati Bhavan, in New Delhi on September 25, 2018

Das is the youngest of the five kids of Ranjit and Jomali Das. Her parents have always been supportive of her career choice. Incredible indeed!

In an unfortunate state of affairs, Hima Das had absolutely no sports gear for her till 2 years ago.

Assam is known for its rice terrain and the sprinter would cover the lengths of the muddy fields of her school where her fellow schoolmates would play football. So much is her talent that within a few months of training, she qualified for state championships in Guwahati where she won a  bronze medal. 




Its surprising that Hima has never had any formal training. However she performed was all because of her raw strength. She made it to the finals of the Junior National Championships iin Coimbatore.

Hima really worked very hard on her running and timing. Post her Coimbatore success her two coaches spoke to her parents to let her take on full time training. Hima’s parents were extremely supportive and encouraged her for the same.

Her performance in the Federation Cup gave her the Golden ticket to the Commonwealth Games in Australia. She stood first in the 400 mts race with a timing of 51.97 seconds.

Ever since then there has been no looking back for her. Hima Das is a true champion at the mere age of 19 and it is heart-warming to see the World applauding her. She truly has made India proud we are all so thankful to her for flaring the National flag on International waters. We salute you Hima Das!

20 ஜூலை 2019

ருத்ர மாதேவி - 1

உலக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். எல்லா விசயங்களிலும் ஆண்களே பிரதானமாகப் பிரகாசிப்பார்கள். பிதாமகன்களாக ஜொலிப்பார்கள். பெண்களின் வலிமைகளும் சரி; சிறப்புகளும் சரி; இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கும். பெண்களின் திறமைகள் ஓரங்கட்டப்பட்டு இருக்கும். 



அவை ஆணாதிக்கத்தின் எதார்த்தமான வெளிப்பாடுகள். காலா காலமாக உரம் போட்டு வளர்த்த பெண் அடிமைத் தனத்தின் பிரதிபலிப்புகள்.

இப்படியும் சொல்லலாம். பெண்களை அடக்கியே வைத்து இருக்க வேண்டும் என்கிற ஆண்மைத்துவ அதிகாரப் பாவனையாகவும் இருக்கலாம்.




இந்தப் பக்கம் இந்திய வரலாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மணி மணியான பெண்கள். அனைவரும் முத்து முத்தான ஜீவன்கள். அவர்களில் சிலர் அசாத்தியமான துணிச்சல் பெற்று வைரம் பாய்ந்த நவரத்தினக் கொலுசுகள். மன்னிக்கவும். வீரக் கொலுசுகள்.

ராணி மங்கம்மாள் (மதுரை)

ராணி சம்யுக்தா (உத்தரப் பிரதேசம்)

ராணி பத்மாவதி (சித்தோர்கார்)

வேலு நாச்சியார் (சிவகங்கை)

கித்தூர் ராணி சென்னம்மா (கர்நாடகம்)

மகாராணி காயத்திரி தேவி (ஜெய்ப்பூர்)

ஜான்சி ராணி (உத்தரப் பிரதேசம்)

துர்க்காவதி (வட இந்தியா)

மகாராணி ஜிஜாபாய் (மராட்டியம்)

உன்னியார்ச்சா (மலபார், கேரளா)

பெல்லாவதி மல்லம்மா (ஆந்திர பிரதேசம்)

ராஸ்யா சுல்தானா (மைசூர்)

அப்பாக்கா ராணி (மங்களூர்)

தாரா பாய் (மராட்டியம்)

சரோஜினி நாயுடு (ஆந்திர பிரதேசம்)

சிபில் கார்த்திகேசு (மலேசியா)

ஜானகி ஆதி நாகப்பன் (மலேசியா)

ராசம்மா பூபாலன் (மலேசியா)



தமிழ் மலர் - 20.07.2019

இவர்கள் அனைவரும் பெண் குலத்திற்குப் பெருமை சேர்த்த புண்ணியத் திலகங்கள். இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியினரைத் தான் சேர்த்து இருக்கிறேன். வெளிநாட்டு வீர மங்கைகளுக்கு நீண்ட ஒரு பட்டியல் உள்ளது.

இந்த இந்திய வம்சாவளியினர் பட்டியலில் ஒருவரின் பெயரைப் பலரும் மறந்து விடுகிறார்கள். அவர் தான் ராணி ருத்ரம்மாதேவி.

பலரும் கேள்விப்படாத பெயராக இருக்கலாம். கறுப்பு தாஜ் மகால் கட்டுரைத் தொடரைத் தயாரிக்கும் போது ராணி ருத்ரம்மாதேவிவியின் வரலாற்றைப் படித்தேன். மெய்சிலிர்த்துப் போனேன். 




800 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு வீரப் பெண்மணி இந்திய மண்ணில் போர் வாள் ஏந்திப் போராடி இருக்கிறாரே; போர் முனையில் உயிர் கொடுத்துச் சரிந்தும் போய் இருக்கிறாரே. வியந்து போனேன். அவரின் வரலாறு உண்மையிலேயே என் நெஞ்சத்தைக் கனக்கச் செய்தது.

அவருடைய பெயர் இலைமறைக் காயாக மறைந்து நிற்கிறதே என்று கலங்கியும் போனேன். அவரைப் பற்றி பலரும் தெரிந்து கொள்ள வேண்டும். உலகப் பெண்களுக்கு அவரின் வரலாறு ஓர் உந்து சக்தியாக அமைய வேண்டும்.

அவரைப் பற்றி 2015-ஆம் ஆண்டில் ஒரு திரைப்படம் தயாரித்து இருக்கிறார்கள். ருத்திரம்மா தேவியின் வரலாறு திரைப் படமாக வரப் போகின்றது என்று தெரிய வந்ததும் தான்; யார் இந்த ருத்ரம்மா தேவி என்று பலரும் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள். 




அதுவரை அந்தப் பெயர் அட்ரஸ் இல்லாமல் அமேசான் காட்டில் அமைதி கொண்டு நிர்மலமாய் இருந்து இருக்கிறது.

அரிய பெரிய தியாகச் செம்மல்களைப் பற்றியும்; இந்திய விடுதலைச் சீலர்களைப் பற்றியும் வெளியே சொன்ன பிறகுதான் பலரும் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள்.

இப்படிப் பட்டவர்களின் தியாகச் செயல்கள் இந்திய வரலாற்றில் நிறையவே உள்ளன. ஆராய்ந்து தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவது இல்லை. வேதனையான விசயம்.

ருத்திரம்மாதேவி (Rani Rudrama Devi) என்பவர் கி.பி. 1259-ஆம் ஆண்டு முதல் 1295-ஆம் ஆண்டு வரை தக்காண பீடபூமியில் (Deccan Plataeu) வாரங்கல் நிலப் பகுதியை ஆட்சி செய்த காக்கத்திய அரசியார். அழகிய வீரப் பெண்மணி. துணிச்சல் மிக்க பொன்மணி.




தென்னிந்திய வரலாற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. பண்டைய வரலாறு.

2. இடைக்கால வரலாறு.

3. நவீன வரலாறு.

இதில் இடைக்கால வரலாற்றில் ஜொலித்தவர் தான் இந்த ருத்திரம்மா தேவி.

காக்கத்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் (Kakatiya dynasty). காக்கத்திய நாட்டை ஆட்சி செய்த மன்னர்களுள் மிக மிக முக்கியமானவர். ஒரே சமயத்தில் மூன்று படையெடுப்புகளை எதிர்கொண்ட அசாத்தியமான வீரப் பெண்மணி. தெலுங்கானாவில் இவருக்காகப் பல கோயில்களைக் கட்டி கும்பிடுகிறார்கள்.

முன்பு காலத்தில் வாரங்கல் என்பது ஆந்திர பிரதேசத்தில் பெரிய ஒரு நிலப்பகுதி. அதன் தலைநகரம் ஓருகல்லு. காக்கத்திய நாட்டு மக்களைக் காக்கத்தியர்கள் என்று அழைத்தார்கள். 




இப்போதைய தெலுங்கானாவில் வாரங்கல் என்பது ஒரு மாவட்டம். அந்த மாவட்டத்தின் தலைநகரமும் வாரங்கல் தான். இந்த நகரம் இப்போது ஹைதராபாத் நகரத்திற்கு 157 கி. மீ. வடகிழக்கில் அமைந்து உள்ளது.

காக்கத்தியர்கள் தெலுங்கு அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கி.பி 1083-ஆம் ஆண்டு முதல் 1323-ஆம் ஆண்டு வரை காக்கத்திய நாட்டை ஆட்சி செய்தவர்கள். அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காக்கத்தியர்கள் தெலுங்கானாவை ஆட்சி செய்தவர்கள்.

இன்றைய ஆந்திரப் பிரதேசம் என்று அழைக்கப்படும் பகுதிகள் அனைத்தையும் காக்கத்தியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களின் தலைநகரம் ஓருகல்லு.

இப்போது அந்த ஓருகல்லு நகரம் வாரங்கல் என்று அழைக்கப் படுகிறது. வாரங்கல் என்பது இப்போதைக்கு புகழ்பெற்ற ஒரு வரலாற்றுத் தடம். அதையும் நாம் மறந்து விடக் கூடாது.



இந்த வாரங்கல்லுக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. வாரங்கல்லை உருவாக்கியவர்கள் காக்கத்தியர்கள். அந்த வகையில் பார்த்தால் காக்கத்திய சாம்ராஜ்யத்தையும் காக்கத்திய அரச வம்சாவளியையும் உருவாக்கியவர் பெத்தா ராஜா (Beta Raja I). சாம்ராஜ்யம் என்பது வடச் சொல். இருந்தாலும் பயன்படுத்துவதில் தப்பு இல்லையே.

அப்பாவை பப்பி என்றும் அம்மாவை மம்மி என்று அழைக்கின்றவர்கள் இருக்கும் வரையில் பேரரசு என்பதை சாம்ராஜ்யம் என்று அழைப்பதில் தப்பு இல்லை என்பது என் கருத்து.

காக்கத்திய அரச வம்சாவளியை உருவாக்கிய பெத்தா ராஜாவுக்குப் பின்னர் நிறைய தெலுங்கு காக்கத்திய அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

புரோலா ராஜா, இரண்டாம் பெத்தா ராஜா; இரண்டாம் புரோலா ராஜா, ருத்திரதேவா, மகா தேவா, கண்பதி தேவா, பிரதாபாருத்தரா. இந்த வரிசையில் வந்தவர் தான் ருத்திரம்மாதேவி.




காகத்தியர்கள் தொடக்கத்தில் சமண மதத்தைப் பின்பற்றினார்கள். காலப் போக்கில் இந்து மதத்தின் ஓர் அங்கமான சைவ சமயத்திற்கு மாறினார்கள்.

காக்கத்தியர்கள் வம்சத்தில் முக்கியமானவர் ராணி ருத்திரம்மாதேவி. இவருக்குப் பின்னர் 30 ஆண்டுகள் வரை தான் காக்கத்திய ஆட்சி நீடித்தது. கி.பி.1323-ஆம் ஆண்டிற்குப் பின்னர் காக்கத்திய அரசு வரலாற்றில் இருந்து காணாமல் போய் விட்டது.

1326-ஆம் ஆண்டு முதல் முசுனூரி நாயக்கர்கள் வாரங்கல் பகுதியை (காக்கத்திய அரசு) ஆட்சி செய்தார்கள். பின்னர் பாமினி சுல்தான்கள் 1347 ஆண்டு முதல் 1527 வரை ஆட்சி செய்தார்கள். பாமினி சுல்தான்களுக்குப் பின்னர் கோல்கொண்டா சுல்தான்கள் ஆட்சி செய்தார்கள்.

1687-ஆம் ஆண்டில் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் வாரங்கல்லைக் கைப்பற்றினார். மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வாரங்கல் பகுதி 1724-ஆம் ஆண்டில் ஐதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழ் வந்தது. இப்போது இந்த வரலாற்றுப் புகழ் வாரங்கல் நிலப்பகுதி தெலுங்கானா மாநிலத்தில் ஒரு மாவட்டமாக உள்ளது. சரி.




மொகலாய மன்னர்களின் படையெடுப்பு காலம் வரை பல தெலுங்கு அரச வம்சங்கள் தென் இந்தியாவில் இருந்தன. அவற்றில் ஒன்றுதான் காகத்திய வம்சாவளி.

காக்கத்திய மன்னர்களில் ஒருவர் கணபதி தேவர் (Ganapatideva). இந்தக் கணபதி தேவரின் மகள்தான் ருத்ரம்மா தேவி.

கணபதி தேவருக்கு ஆண் வாரிசு இல்லை. இவருக்குப் பிறந்தவர்கள் இருவருமே பெண்கள். மூத்தவர் ருத்ரம்மா தேவி. இளையவர் கணபாமா தேவி (Ganapamadevi).

அதனால் தன் மூத்த மகளுக்கு ருத்ரதேவா என்று ஆண் பெயரைச் சூட்டி அழகு பார்த்தார். வாரங்கல்லுக்கு வாரிசாகவும் நியமித்தார்.

இருந்தாலும் ஒரு பெண் பிள்ளையை வாரிசாக அறிவித்ததைப் பலரும் விரும்பவில்லை. உறவினரும் விரும்பவில்லை. ஊராரும் விரும்பவில்லை. 



தமிழ் மலர் - 20.07.2019

ஆணாதிக்கம் ஆணிவேராய் ஆழம் பார்த்த காலத்தில் ஒரு பெண் அரசராக இருப்பதை ஆண்கள் விரும்பவில்லை. அதனால் தான் அந்தக் காலத்தில் பெண்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்காமல் மட்டம் தட்டி முட்டாள் பிண்டங்களைப் போல வளர்த்து இருக்கிறார்கள்.

மிஞ்சிப் போய் விடுவார்களோ என்கிற பயம் தான். வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். விருப்பப்படும் போது ஆணின் ஆசையைத் தணிக்கும் ஒரு ஜடப் பொருளாகவும் இருக்க வேண்டும். அதுதான் இலக்கு.

பெண்கள் ஆண்களைக் கட்டி ஆளக் கூடாது என்கிற விசயத்தில் ரொம்பவும் கண்டிப்பாக இருந்தார்கள். ஆக கணபதி தேவர் தன் மகளை ஒரு நாட்டின் வாரிசாக நியமித்ததை ஆண்கள் எதிர்த்ததில் அப்போதைக்கு ஒரு நியாயம் இருந்து இருக்கிறது. இப்போதைக்குப் பார்த்தால் அது ஒரு மண்ணாங்கட்டி நியாயம். தப்பு இல்லை.

என் மகள் ஒரு பெண்ணாக இருப்பதால் தானே அவளை எதிர்க்கிறீர்கள். சரி. நான் அவளை ஓர் ஆணாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லி ருத்ரம்மா தேவி எனும் பெயரை ருத்ர மகாராஜா என்று மாற்றி இருக்கிறார். ஏற்கனவே ருதரதேவா என்று மாற்றினார். அதையும் பலர் எதிர்த்தனர். அதனால் ருத்ர மகாராஜா என்று மாற்றினார்.

அதோடு அவர் விடவில்லை. ஆண்கள் அணியும் ஆடை அணிகலன்களத் தன் மகளுக்கு அணிவித்தார். வாள் வீச்சு, குதிரையேற்றம், அம்பு எய்தல், சிலம்பாட்டம் போன்றவற்றைச் சொல்லிக் கொடுத்தார். ஓர் ஆணைப் போலவே வளர்த்தார்.

ருத்ரதேவி கொஞ்ச காலம் ருத்ர மகாராஜா எனும் ஆண் பெயரில் தன் தந்தையுடன் கூட்டாட்சி செய்து வந்தார்.

காக்கத்திய அரசிற்குப் பக்கத்தில் கிழக்குச் சாளுக்கியம் என்பது மற்றொரு மன்னராட்சி. நைதவோலு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். அப்போதைக்கு இளவரசர் வீரபத்திரன் என்பவர் பதவியில் இருந்தார். அவரை ருத்ரம்மா தேவி திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். ருத்ரம்மா தேவியின் கணவர் சின்ன வயதிலேயே இறந்து போனார். அந்த இறப்பு ருத்ரம்மாவைப் பெரிதும் பாதித்தது.

தன் தந்தையாருடன் கூட்டாட்சி செய்யும் போது ருத்ரம்மா தேவிக்கு பல பிரச்சினைகள். அந்தச் சமயத்தில் கீழே தமிழகத்தில் பாண்டியர்களின் ஆட்சி. ஒரு கட்டத்தில் சதவர்மன் சுந்தரபாண்டியன் என்பவர் காகத்தியா மீது படை எடுத்தார். பெரிய ஒரு போர் நடந்தது.

ருத்ரம்மா தேவிக்கு அப்போது வயது 13. படைத் தளபதிகளின் துணையுடன் தன் படைகளை வழிநடத்திச் சென்று வெற்றி பெற்று இருக்கிறார். வயதைக் கவனியுங்கள்.

ஓடி ஆடி கண்ணாமூச்சி விளையாட வேண்டிய வயது. அந்த வயதில் ஆயிரக் கணக்கான போர் வீரர்களை வழி நடத்தி ஒரு பாண்டிய மன்னரையே தோற்கடித்து இருக்கிறார் என்றால் சாதாரண விசயமா. படைத் தளபதிகளின் வியூகம் இல்லாமல் ருத்ரம்மா தேவி ஜெயித்து இருக்க முடியாது... நிச்சயமாக.

(தொடரும்)



பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Ya... I saw this story in today Tamil Malar... at night I will read...
 
Sheila Mohan பெண்ணியத்திற்கு பெருமை...மிக்க நன்றிங்க சார்...
Muthukrishnan Ipoh இவரைப் போல நிறைய பெண்கள் வரலாற்றில் அடையாளம் தெரியாமல் வலம் வருகிறார்கள்...

Neela Vanam இந்த வரிசையில் காமுகர்களை வேட்டையாடிய நவீன காலத்து பெண்மணி பூலான் தேவியைச் சேர்த்துக் கொள்வீர்களா...

Muthukrishnan Ipoh பூலான் தேவி... அவர் ஒரு சகாப்தம்...
 
Sri Kaali Karuppar Ubaasagar ஹா... என்ன ஆராய்ச்சி அண்ணா... அருமை வாழ்த்துக்கள்
 
Krishnan ATawar super
 
Supramanian English  You are right... both of you






 

16 ஜூலை 2019

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் - 5

1950-ஆம் ஆண்டுகளில் மலாயாவின் மனித வளத்தை நிறைவு செய்யக் கூடிய வகையில் ஒரு தேசியப் பாடத் திட்டம் அமைய வேண்டும் என்று மலாயா ஆங்கிலேய ஆட்சி விரும்பியது. 



அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம், சமூக முன்னேற்றம் போன்றவற்றின் மேம்பாட்டிற்கு உந்து சக்தியாக அந்தத் தேசியப் பாடத் திட்டம் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

தேசியப் பாடத் திட்டம் இப்படித்தான் அமைய வேண்டும் என்று 1950-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report) வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் மலாய் மொழி அல்லாத தாய் மொழிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என்று பரிந்துரை செய்யபட்டது. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

அந்த வகையில் மலாயாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தேசியப் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என்று முன்மொழியப் பட்டது. தேசியப் பள்ளிகள் மூலமாகத் தான் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்க்க முடியும் என்பது எழுதப்பட்ட சாசனமாக முன்நிலை படுத்தப்பட்டது. 




அதாவது சீன, தமிழ்மொழிப் பள்ளிகளை அகற்றிவிட்டு ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளைப் போதனா மொழியாகக் கொண்ட தேசியப் பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் எனும் இறுதி நோக்கத்தை பார்ன்ஸ் அறிக்கை பரிந்துரைத்தது.



பார்ன்ஸ் அறிக்கையின் பரிந்துரைகளில் முக்கியமாக எட்டு குறிப்புகள் உள்ளன.

1. மக்களின் ஒற்றுமைக்குத் தொடக்கநிலைப் பள்ளிகள் அடித்தளமாக அமைய வேண்டும்.

2. இந்த நாட்டில் தேசியப் பள்ளிகள் மட்டுமே இயங்க வேண்டும்.

3. மலாய் மொழி - தலையாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

4. ஆங்கில மொழி - இரண்டாவது பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

5. பள்ளிக்குப் போகும் வயது 6 லிருந்து 12 வயது வரையில் இருக்க வேண்டும்.

6. தொடக்க நிலைப்பள்ளி மாணவர்கள் ஆங்கில உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும்

7. இலவசமாகக் கல்வி வழங்கப்பட வேண்டும்

8. பள்ளிச் செலவுகளின் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.




பார்ன்ஸ் அறிக்கையை மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். சீனர்களும் தமிழர்களும் ஆதரிக்கவில்லை. தங்களின் தாய்மொழிகளுக்குப் பாதகம் ஏற்படலாம் என்று தயங்கினார்கள்.

பார்ன்ஸ் அறிக்கைக்கு எதிராகச் சீனர்கள் பென் பூ அறிக்கையை (Fenn-Wu Report) தயாரித்தார்கள். சீன மொழியில் பாண்டியத்தியம் பெற்ற இருவர் பென் பூ அறிக்கையைத் தயாரிக்க நியமிக்கப் பட்டார்கள்.

1. டாக்டர் பென் (Dr W.P. Fenn). சீனா நாட்டின் அரசாங்க அதிகாரி.

2. டாக்டர் பூ தே யாவ் (Dr Wu Teh Yau). ஐ.நா. சபையின் கல்வி அதிகாரி.




பென் பூ அறிக்கையைத் தயாரித்த இந்த இரு கல்விமான்களின் பரிந்துரைகள்:

1. நாட்டின் கல்விக் கொள்கையில் சீன மொழி மூன்றாவது மொழியாக இயங்க வேண்டும்.

2. தேசிய மாதிரி சீனப் பள்ளிகள் தொடர்ந்து இயங்க வேண்டும்.

3. சீனப் பள்ளிகளின் கல்வி முறை மலாயா நாட்டைச் சார்ந்ததாக அமைய வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளையும் சம பங்காளிகளாகக் கொண்ட உண்மையான தேசியப் பள்ளியை அமைக்க பென் பூ அறிக்கை பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை அம்னோ ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த வகையில் அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை.




இன்னும் ஒரு விசயம். இந்தப் பென் பூ அறிக்கை என்பது மலாயாவில் அப்போது வாழ்ந்த சீனர் சமூகம் தயாரித்த அறிக்கை ஆகும். இந்த அறிக்கை தயாரிக்கப்படும் போது சீனர்கள் தன்னிச்சையாகச் செயல் பட்டார்கள்.

அப்போது மலாயாவில் வாழ்ந்த இந்தியர்களின் கருத்துகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் வழங்கவில்லை. சீனர்களின் இனம்; சீனர்கள் மொழி என்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்கள்.

பென் பூ அறிக்கையைச் சற்று ஆழமாகக் கவனித்தீர்கள் என்றால் சீன மொழி தான் பிரதானமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழியைப் பற்றி எதுவும் சொல்லப் படவில்லை.

இந்தக் கட்டத்தில் தான் இந்தியத் தலைவர்களும் களம் இறங்கினார்கள். இருந்தாலும் அவர்கள் பென் பூ அறிக்கையைப் பற்றி பேசவில்லை. மாறாக பார்ன்ஸ் அறிக்கைக்குப் பதில் தரும் வகையில் தான் அறிக்கை தயாரித்தார்கள். 




அந்த வகையில் இந்தியச் சமூகத்தின் சார்பில் 1951-ஆம் ஆண்டு ஒரு கல்விக்குழு உருவாக்கப் பட்டது. அதற்கு 1951-மலாயா இந்தியர்களின் கல்விப் பரிந்துரை என்று பெயர்.

அந்தக் குழுவில் அப்போதைய ம.இ. கா. தலைவர் தேவாசர் (1951-1955); சைவப் பெரியார் இராமநாதன் செட்டியார், (டான் ஸ்ரீ) ஆதி நாகப்பன், தவத்திரு சுவாமி சத்யானந்தா (1950-இல் சுத்த சமாஜம் சேவை அமைப்பை தோற்றுவித்தவர்) ஆகியோர் இடம் பெற்று இருந்தார்கள்.

பார்ன்ஸ் கல்வி அறிக்கையில் இந்திய சமூகத்தினருக்குப் பாதகமாக இருந்த பரிந்துரைகளுக்கு மாற்றுக் கருத்துகளைத் தெரிவித்தார்கள். 




இந்தக் கட்டத்தில் எழுந்து நின்றார் ஒரு சீனக் கல்வியாளர் அவருடைய பெயர் லிம் லியான் கியோக் (Lim Lian Geok). மலேசியாவைச் சேர்ந்தவர். சமூக நீதிக்காவும் இனங்களின் ஒற்றுமைக்காகவும் போராடிய மனிதர்.

சீன மொழிக்குப் போராடினாலும்; அதே பார்வையில் தமிழ் மொழிக்காகவும் போராடி இருக்கிறார். இவர் ஒரு சீனர். இருந்தாலும் சீன மொழியுடன் தமிழ் மொழியின் உரிமைக்காகவும் குரல் கொடுத்து இருக்கிறார்.

சீன, தமிழ் மொழிப் பள்ளிகளை அரசாங்கம் பாரபட்சம் இல்லாமல் சமமாக நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர் இந்த லிம் லியான் கியோக்.

அவர் நடத்திய அந்தப் போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது முக்கியம் இல்லை. ஆனால் போராட்டம் எனும் ஒன்றை அவர் நடத்தி இருக்கிறாரே என்பதுதான் முக்கியம். 




சீன, தமிழ் மொழிகள் மலேசியாவில் அதிகாரப் பூர்வமான மொழிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று லிம் லியான் கியோக் உண்ணாவிரதம் இருந்தார். அதனால் 1961-ஆம் ஆண்டு அவருடைய ஆசிரியர் தொழில் பறிக்கப் பட்டது. அடுத்து அவருடைய மலேசியக் குடியுரிமையும் பறிக்கப் பட்டது.

லிம் லியான் கியோக் எனும் மனிதர் அவர் வாழ்ந்த நாட்டிலேயே நாடற்றவராக இறந்தும் போனார் என்பதுதான் வேதனையான விசயம்.

லிம் லியான் கியோக் இறந்து 34 ஆண்டுகள் ஆகி விட்டன. சென்ற 2011-ஆம் ஆண்டில் மலேசியாவில் உள்ள சீனர்களும், தமிழர்களும் ஒன்று கூடினார்கள். அவருக்கு 'இறப்பிற்குப் பின் குடியுரிமை' வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்கள். அது தொடர்பாக மலேசியப் பேரரசரிடம் பணிவான மகஜர்களையும் வழங்கினார்கள்.

சரி. இந்த லிம் லியான் கியோக் என்பவர் யார்? சுருக்கமாகச் சொல்கிறேன்.




லிம் லியான் கியோக் 1901 ஆகஸ்டு மாதம் 19-ஆம் தேதி சீனாவில் இருக்கும் பூஜியான் மாநிலத்தில் பிறந்தவர். ஏழ்மையான் குடும்பம். சொந்த முயற்சியால் சீனாவிலேயே கல்வி கற்றார். வரலாற்றுத் துறையில் பட்டம் வாங்கியவர். அவர் படித்த கல்லூரியிலேயே விரிவுரையாளராகவும் பணிபுரிந்தவர்.

1927-ஆம் ஆண்டில் ஜாவாவிற்குச் சென்றார். அங்கே ஆசிரியர் தொழில். பின்னர் 1935-ஆம் ஆண்டில் மலாயாவிற்கு வந்தார். கோலாலம்பூர் கன்பூசியஸ் பள்ளியில் ஆசிரியர் தொழில்.

மலாயா நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற போது கல்விச் சட்டங்கள் சீரமைப்பு செய்யப் பட்டன. அந்தச் சீரமைப்புகளில் சில பகுதிகள் சீன, தமிழ் மொழிகளுக்கு பின்னடைவுகளாக இருந்தன.

அதனால் கோலாலம்பூர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து தாய்மொழிக் கல்விக்கான உரிமைகளைப் பற்றி பேசத் தொடங்கினார் இந்த லிம் லியான் கியோக்.




பின்னர் 1955-ஆம் ஆண்டில் சீன, இந்திய இனங்களின் உரிமைகள் குறித்து பிரதமர் துங்குவுடன் ஒரு பேச்சு வார்த்தை நடந்தது. அந்தப் பேச்சு வார்த்தையின் பெயர் ‘மலாக்கா பேச்சு’.

அந்த நிகழ்ச்சியில்  மலேசியச் சீனர் அமைப்புகளுக்கு லிம் லியான் கியோக்  தலைமை தாங்கினார்.

பிறகு 1956-ஆம் ஆண்டில் ரசாக் அறிக்கை வெளிவந்த போதும்; 1961-ஆம் ஆண்டில் ரஹ்மான் அறிக்கை அமல் படுத்தப்பட்ட போதும்; தாய் மொழிகளின் கல்விக்கு நேர்ந்த பின்னடைவுகளைச் சரி செய்யச் சொல்லி வலியுறுத்தி வந்தார்.

1950-ஆம் ஆண்டுகளில் சீனப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் (United Chinese Schools Teachers’ Association) தலைவராக இருந்தார். 1951-ஆம் அண்டு பார்ன்ஸ் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சீன தமிழ்ப்பள்ளிகள் அகற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. அதனை எதிர்த்து இவர் உண்ணாவிரதம் இருந்தார்.

1961-ஆம் ஆண்டில் அவருடைய ஆசிரியர்ப் பணி உரிமம் பறிக்கப் பட்டது. அது வரையிலும் அவர் ஆசிரியர் தொழில் செய்து வந்தார். பின்னர் ஒரு வாரம் கழித்து குடியுரிமையும் பறிக்கப் பட்டது.

இத்தனைக்கும் மலாயா நாட்டில் சீன இனம் மற்ற இனங்களோடு இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என விரும்பியவர். தன்னுடைய எதிர்ப்புகளைக் கூட சாத்வீகமான முறையில் முன் வைத்தவர்.

அவருடைய ஆசிரியர் தொழில் பறிக்கப் பட்டதும், அவருக்கு உதவிகள் செய்ய பலர் முன்வந்தனர். ஆனாலும் அவர் கோலாலம்பூரில் இருந்த ஒரு சீனர் தனியார்ப் பள்ளியில் ஆசிரியர் வேலை செய்தார். மிக எளிமையாக வாழ்ந்தார். 




1985-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி இதயம் பாதிக்கப் பட்டு இறந்து போனார். அவர் இறக்கும் வரை நாடற்றவராக வாழ்ந்தார். அப்போது அவருக்கு வயது 85.

மலேசியாவில் இதுவரை நடந்த இறுதி ஊர்வலங்களில் லிம் லியான் கியோக்கிற்குத் தான் ஆகப் பெரிய ஊர்வலம் நடைபெற்றது.

மலேசியச் சீனர்களின் ஆத்மா (The Soul of Malaysian Chinese) என்று சீனப்பள்ளி ஆசிரியர்கள் புகழாரம் செய்கின்றார்கள்.

அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட குடியுரிமை மீண்டும் அன்னாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஓர் இயக்கத்தை சீனர் சங்கங்கள் தொடங்கின. மலேசியாவில் உள்ள சீனர் சங்கங்கள் அந்த இயக்கத்திற்கு இன்றும் ஆதரவுகள் அளிக்கின்றன.

அதற்கு எதிராக பெர்க்காசா போர்க் கொடி உயர்த்தியது. ’லிம் லியான் கியோக்கிற்கு நீதி’ எனும் இயக்கம் தேச நிந்தனையானது என்று பெர்க்காசா கூறி வருகிறது.

அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்தும் உள்ளது. அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களின் குடியுரிமையைப் பறித்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளது.

ஒரு சில மனிதர்களின் போராட்டங்களினால் தாய் மொழிப் பள்ளிகள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கின்றன. இப்போதைக்கு ஆசிரியர்களாக இருப்பவர்களுக்கு அந்த மனிதர்களைப் பற்றி தெரிந்து இருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

(முற்றும்)

தமிழ் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் - 4

தமிழர்கள் உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற முயற்சிகள் செய்ய வேண்டும். தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற தீவிரமாக முனைப்பு காட்ட வேண்டும். அது தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் நியதி.



தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான், அடுத்ததாகத் தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் நம் சந்ததியினரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி இனி மெல்லக் காணாமல் போகும்.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாமே. அதே போல மொழியை அழித்து விட்டு; இனம் என்கிற ஓர் அடையாளத்தை அந்த இனம் தக்க வைத்துக் கொள்ள முடியாது. முடியவே முடியாது. ஆக மொழியை இழந்தவர்கள் என்றைக்கும் ஓர் இனமாக கருதப் படுவது இல்லை.




அந்த வகையில் மொழியும் இனமும் எப்போதுமே ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவை. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.

இந்த நாட்டில் தமிழ் மொழி மேலே எழுந்து வர முடியாமல் அப்படியே தடுக்கப் படுவதற்கு பற்பல திட்டங்கள் உருவாக்கப் பட்டன. அந்தத் திட்டங்களை அப்போது யார் கொண்டு வந்தார்கள்; இப்போது யார் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். 



தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியைக் கட்டி காக்கும் மரபை மட்டும் விட்டுக் கொடுக்கவில்லை.  

மலேசியாவில் கடந்த 203 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. அந்தக் கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டாங்கள். 






இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த மலாயா தமிழ்ப் பள்ளிகள் 1900-ஆம் ஆண்டுகளில் சில இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டி வந்தது.

1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவர் ஜே. டிரைவர். அப்போது மலாயாவில் பல்வேறு தாய் மொழிக் கல்வி முறை இருப்பதை அவர் விரும்பவில்லை.

தமிழர், சீனர் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றன. அதனால் அவர்களுக்கு என்று தனியாகப் பள்ளிகள் தேவை இல்லை என்கிற ஒரு கருத்தை வெளியிட்டார். 




இந்தக் கட்டத்தில் சிலாங்கூர் மாநில ரெசிடெண்டாக டிரேச்சர் (W.H. Treacher) என்பவர் இருந்தார். இவர் தான் 1893-ஆம் ஆண்டு கிள்ளானில் இருக்கும் ஆங்கிலோ சைனீஸ் பள்ளியைத் தோற்றுவித்தவர்.

இவரும் தடாலடியாக ஒரு கட்டளை போட்டார். மலாய்ப் பள்ளிகளுக்கான கல்விச் செலவை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். அதைத் தவிர்த்து மற்றபடி மற்ற இனங்களின் தாய் மொழிக் கல்விச் செலவுக்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று கண்டிப்பாகச் சொன்னார். தமிழரினம் தடுமாறிப் போனது.

இருந்தாலும் இந்தக் கட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளைத் தற்காக்க ஒரு சட்டம் உதவிக்கு வந்தது. ஆங்கிலேயர்கள் உருக்கிய சட்டமே அவர்களுக்கு எதிராகத் திசை திரும்பியது. 



Sir Treacher

மலாயா ஆங்கிலேய அரசால் அமல்படுத்தப்பட்ட ஒரு சட்டம் இருந்தது. 1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour ordinance). இந்தச் சட்டம் தான் தக்க தருணத்தில் தமிழ்ப் பள்ளிகளின் ஆபத்து அவசரத்திற்கு உதவி செய்தது. 1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தை இயற்றி இருந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம்.

இந்த 1912-ஆம் ஆண்டுத் தொழிலாளர் சட்டத்தின் வழி மலாயாவில் இருந்த ஒவ்வொரு தோட்ட நிர்வாகமும் கண்டிப்பாகத்  தமிழ்ப் பள்ளிகளை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டு இருந்தன.

ஒரு தோட்டத்தில் 7 வயதில் இருந்து 14 வயது வரையிலான பிள்ளைகள் 10 பேர் இருந்தால் போதும்; ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டும் என்கிற சட்டம். அதனால் ஆங்கிலேய ஆளுநர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 




அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டில் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.

தொழிலாளர் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

அந்தத் தொழிலாளர் சட்டம் உதவிக்கு வந்ததால் 1925-ஆம் ஆண்டு வரை மலாயா நாட்டுத் தோட்டங்களில் 235 தமிழ்ப் பள்ளிகள் நிறுவப்பட்டன.

தோட்டப் புறங்களில் தோட்ட நிர்வாகங்களே தமிழ்ப் பள்ளிகளை நிறுவின. பட்டணங்களில் தனியார் நபர்கள்; பொது இயக்கங்கள் ஆகியோர் தமிழ்ப் பள்ளிகளை நிறுவினார்கள். 




காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தத் தொழிலாளர்  சட்டத்தில் மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

1930-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆய்நர் (Inspectorate of Tamil School) ஒருவர் நியமிக்கப் பட்டார். ஜி.ஆர். பில்வர்  என்பவர் பொறுப்பு வகித்தார்.

1937-ஆம் ஆண்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலேய அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்குச் சிறப்பு செயற்குழு ஒன்றை நிறுவியது.

இந்தச் செயற் குழுவின் பரிந்துரையின் கீழ் வருடத்திற்கு ஒரு மாணவருக்கு ஆறு டாலராக இருந்த நிதி ஒதுக்கீடு எட்டு டாலராக உயர்த்தப் பட்டது. அத்துடன் 1938-ஆம் ஆண்டு வரை 535 தமிழ்ப் பள்ளிகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டன. பெரிய ஒரு முன்னேற்றம்.




இப்படி வேகமாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி இரண்டாம் உலக போரினால் தடைப் பட்டது.

1942-ஆம் ஆண்டு ஜப்பானியரின் ஆட்சிக் காலத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.

இதனிடையே 1951-ஆம் ஆண்டில் ஓக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. பர்னஸ் என்பவரின் தலைமையில் மலாயாவில் கல்வி ஆய்வு செய்யப் பட்டது. (Report of the Committee on Malay Education, Federation of Malaya).

அதன்படி ஓர் அறிக்கை வெளியிடப் பட்டது. அதன் பெயர் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). அந்த அறிக்கையில் மலாய் மொழி அல்லாத தாய் மொழிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டது. இதனைச் சீனச் சமூகமும் இந்தியச் சமூகமும் கடுமையாக எதிர்த்தன.




பார்ன்ஸ் அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியச் சமூகத்தின் சார்பில் ஒரு கல்விக்குழு அமைக்கப் பட்டது.

அந்தக் குழுவில் ம.இ. கா. தலைவர் தேவாசர்; சைவப் பெரியார் இராமநாதன் செட்டியார், ஆதி நாகப்பன், தவத்திரு சுவாமி சத்தியானந்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்தக் கல்வி குழுவினர் பார்ன்ஸ் கல்வி அறிக்கைக்கு எதிராக இந்திய சமூகத்தின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பெர்னஸ் அறிக்கையில் இருக்கும் சிக்கல்களைக் களைய அப்போதைய கல்வி அமைச்சர் ரசாக் தலமையில் மேலும் ஒரு கல்வி குழு நியமிக்கப்பட்டது. அதுவே இப்போது பலராலும் அறியப்படும் ரசாக் திட்டம்.

இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் அழைக்கலாம். மலாயா சுதந்திரம் அடைந்த போது கல்வி அமைச்சராக இருந்தவர் துன் அப்துல் ரசாக். இவர்தான் மலாயா கல்விக் கொள்கைத் தயாரிப்புக் குழுவிற்குத் தலைவராக இருந்தவர். அவருடைய பெயரே அந்தக் கல்வி அறிக்கைக்கு வைக்கப் பட்டது.

மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது. 




1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது.

சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி; 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது.

ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன. முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். பென் பூ அறிக்கையைச் சீனர்களும் இந்தியர்களும் ஆதரித்தார்கள். அங்கே இணக்கப் பிணக்குகள் தோன்றின. அதைச் சரி கட்டவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.




சுருக்கமாகச் சொன்னால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம்.

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட்டன.

இதர ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாக இருந்து வருகிறது.


எல்லா பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.

ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது. தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும்.

(தொடரும்)