23 ஆகஸ்ட் 2019

Zakir Naik Money Laundering

BBC News  - 2 May 2019

இந்தியாவின் முஸ்லீம் ஏழை மக்களுக்காக அரபு நாடுகள் கொடுத்த பணம் 3.6 கோடி ரிங்கிட். அதாவது 369 இலட்சம். அந்தப் பணத்தில் மனைவி, மகன் மீது மும்பாய் நகரில் 20 அடுக்குமாடி மனைகளை ஸக்கீர் நாயக் வாங்கிப் போட்டு இருக்கிறார். அதைப் பற்றிய பி.பி.சி. செய்திகள்.




Mr Naik, who lives in exile, is accused of acquiring $28m (£21m) worth of criminal assets, a claim he denies.

Indian authorities have also accused him of spreading hate speech and inciting terrorism.


Mr Naik, 53, promotes a radical form of Islam on the channel Peace TV. It is banned in India but has an estimated 200 million viewers worldwide.

Broadcasting from Dubai, Peace TV is owned by the Islamic Research Foundation, a group headed by Mr Naik.

Other countries have banned the channel - including Bangladesh, where it is accused of inspiring one of the gunmen behind a 2016 cafe attack in Dhaka in which 22 people were killed.

The influence of Zakir Naik


India's Enforcement Directorate (ED), which investigates financial crimes, filed the charges against Mr Naik in a court in Mumbai on Thursday.

It told the court that it had identified assets worth millions of dollars as proceeds of crime.

Mr Naik's "inflammatory speeches and lectures have inspired and incited a number of Muslim youths in India to commit unlawful activities and terrorist acts", ED told the court.

The agency has accused him of using funds from "dubious or suspicious sources" to buy property in India and finance events where he made "provocative speeches".

Mr Naik says the money was obtained legitimately.

Who is Zakir Naik?

Mr Naik's fundamentalist approach to religion has long been controversial.

Many detained al-Qaeda followers have reportedly told officials that he was a huge influence on them.

He was banned from entering the UK in 2010 for "unacceptable behaviour", and because of his speeches, by then-home secretary (and now Prime Minister) Theresa May.

However, it was in July 2016 when he really came to international attention, after a deadly attack on the Holey Artisan cafe in Dhaka.




Protesters in India staging a rally against Zakir Naik after the Dhaka attack in July 2016

The Bangladeshi media claimed that one of the gunmen had been inspired by his speeches. Later that month the Bangladeshi government banned Peace TV.

In November 2016, India's counterterrorism agency filed an official complaint against Mr Naik, accusing him of promoting religious hatred and unlawful activity.

Mr Naik moved to Malaysia in 2017.

ஜாகிர் நாயக் நிந்தனைகள் - 3

மலேசிய இந்தியர்களின் நாட்டுப் பற்று - 3

பூத்துக் குலுங்கும் ஒரு பூங்காவனம். அங்கே அழகு அழகான பூமரங்கள். இன்றை ஒன்று பார்த்துப் பொங்கி வழியும் பெருமிதங்கள். மஞ்சள் கலரின் மகிமைகள். சிவப்புக் கலரின் செம்மைகள். இதமான கலரின் இனிமைகள்.



மலேசிய இந்தியப் பெண்கள்

உலகின் மூலை முடுக்குகளில் உள்ள பறவைகள் எல்லாம் வருகின்றன. இஷ்டம் போல கும்மாளம் போடுகின்றன. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். ஊடல் கூடல்களுக்கு எல்லை இல்லை.

அதைப் பார்த்த பக்கத்துத் தோட்டக்காரனுக்குப் பொறுக்கவில்லை. கல்லைக் கொண்டு அடிக்கிறான். கட்டைகளை கன்னா பின்னா என்று வீசுகிறான். மட்டைகளை மானவாரியாக வீசுகிறான். வாய்க்கு வந்தபடி திட்டுகிறான். ஒன்றும் நடக்கவில்லை.

பூக்களும் பறவைகளும் அவனைப் பார்த்து மௌனமாய்ச் சிரிக்கின்றன. இதுதான் இங்கேயும் நடந்தது.

மலேசியா ஓர் அமைதியான நாடு. பொன் விளையும் பூமி. இந்த நாட்டில் பிறந்தவர்கள் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள். அப்பேர்ப்பட்ட அழகிய பூமி. இருந்தாலும் இங்கேயும் சக்கு புக்குகளின் சிக்கு புக்கு கோளாறுகள் இருக்கவே செய்கின்றன. சுற்றி வளைக்காமல் விசயத்திற்கு வருகிறேன்.

தமிழ் மலர் - 22.08.2019

ஸக்கீர் நாயக் விவகாரம் காரணமாக இந்தியா - மலேசியா நல்லுறவு பாதிக்கப் படலாம். காலம் காலமாகக் கட்டிக் காத்து வந்த நல்லிணக்கம் பாதிக்கப் படலாம். வரலாறு பார்த்த நட்புறவு நலிவு அடையலாம்.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும் சீரும் சிறப்புமாய் கோலோச்சி இருக்கின்றன. கொடுக்கல் வாங்கலில் நட்புறவு பாராட்டி இருக்கின்றன. அரசதந்திர உறவுகளில் ஆராய்ச்சி மணிகள் இசைத்து இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு புனிதமான உறவில் ஒரு சின்னத் துரும்பினால் விரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது. எங்கோ ஒரு கரிசல் காட்டில் முளைத்த ஒரு பூஞ்சைக் காளானினால் இரு கோபுரக் கலசங்களுக்குள் பாசி படர்ந்துவிடக் கூடாது. 

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது என்பார்கள். ஆனால் இங்கே அணை கடந்து வெள்ளம் போவதற்கு முன்னால் அணையை அழுத்தி இறுக்கிக் கட்ட வேண்டி உள்ளது. முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நம் கடமை.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி;
பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி;
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ;
முன்னாள் மலேசியத் தூதர் டெனிஷ் ஜே. இக்னேசியஸ்


அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாக மாறிவிடக் கூடாது என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.

ஸக்கீர்  நாயக் விசயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டு உள்ளது. இனியும் அமைதி காத்தால் அதுவே இனிவரும் காலங்களில் பெரிய இடர்பாடுகளை ஏற்படுத்தலாம்.

செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது இயல்பு. மனிதத் தன்மைக்கு உட்பட்ட செயல்பாடு. ஆனால் அந்த மன்னிப்பு உண்மையாக நேர்மையாக இருக்குமானால் அடி மனத்தில் இருந்து வர வேண்டும். வெறும் உதட்டில் இருந்து வேர்த்து வடியும் வெற்றுச் சொல்லாக அமைந்துவிடக்  கூடாது.

சுயநினைவு இல்லாமல் ஒருவர் செய்த தவற்றை மன்னிக்கலாம். மன்னிக்க வேண்டியது நம் பொறுப்பு. மனிதப் பாண்பு. ஆனால் சுத்தமாகச் சுயநினைவில் இருக்கும் போது தெரிந்தே செய்த தவற்றை எவரும் மன்னிக்க மாட்டார்கள். மன்னிக்கவும் முடியாது.

இலங்கை மலையகத்தில் தேயிலை
மூட்டைகள் தூக்கும் தமிழ்ப் பெண்கள்

செய்த தவற்றினால் ஓரிருவர் பாதிக்கப்பட்டு இருந்தால் சும்மா அப்படியே தட்டிவிட்டுப் போய் விடலாம். ஆனால் 20 இலட்சம் பேருடைய மனதைப் புண்படுத்தி விட்டு மன்னிப்பு கேட்டால் மன்னிக்க முடியுமா. எப்படிங்க முடியும். இது என்ன சின்ன பிள்ளைகள் விளையாடும் மனசா மனசா மங்கத்தா விளையாட்டா?

மலேசிய இந்தியர்களின் பூர்வீகமாக இந்தியா இருக்கலாம். ஆனால் மலேசியா தான் மலேசிய இந்தியர்களின் தாயகம். மறுக்க முடியாத உண்மை. மறைக்க முடியாத தொன்மை.

நாம் பார்த்துப் பழகும் எல்லா பெண்களையுமே அம்மா என்று அழைக்கிறோம். ஆனால் அவர்களில் ஒரே ஒரு பெண் மட்டுமே நம்மைப் பெற்ற தாயாகிறாள். ஆக அந்தத் தாய் எனும் சொல்லில் இருந்து தான் தாயகம் எனும் சொல் தொடர் உருவானது.

அந்த வகையில் மலேசிய இந்தியர்களைப் பொறுத்த வரையில் மலேசியா தான் அவர்களின் தாயகம். இந்தியா அவர்களின் பூர்வீகம்.

தமிழ் மலர் - 22.08.2019

ஆக அந்த இரு சொற்களின் பொருள் மயக்கத்தை உணர்ந்து கொள்வது சிறப்பு. எந்த நாட்டில் ஒருவர் பிறக்கிறாரோ அந்த நாடு தான் அவருக்குத் தாயகம்.

சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் குலசேகரன்; பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி; கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி; முன்னாள் மலேசியத் தூதர் டெனிஷ் ஜே. இக்னேசியஸ் ஆகியோருக்கு எதிராக புகார் மனுக்களை ஸக்கீர் நாயக் போலீஸில் தாக்கல் செய்து இருந்தார்.

இந்தப் புகார்கள் அனைத்தும் மலேசிய இந்தியர்களை மேலும் அவமதிப்பது போலாகும். எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றுவது போலாகும். ஏன் என்றால் அவர்கள் அனைவருமே மலேசிய இந்தியர்களின் தலைவர்கள் ஆகும்.

அமைதியாக வாழும் பல்வேறு இன மக்களிடையே பிரிவினையையும் வெறுப்பையும் தூண்டும் வகையில் பேசும் ஸக்கீர் நாயக்கிற்கு முகம் கொடுக்கக் கூடாது என்பது மலேசியர் பலரின் பொதுவான கருத்து.

ஸக்கீர் நாயக்கிற்குப் பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவரை இந்த நாட்டிற்குள் அனுமதித்தது பெரிய தப்பு. பிரச்சினை விஸ்வரூபம் ஆவதற்குள் அவருக்குத் தடை விதிப்பதே சிறப்பு. இல்லை என்றால் நிலைமை மேலும் மோசம் அடையலாம்.

பினாங்கு மாநிலத் துணை முதல்வர்
பேராசிரியர் ராமசாமி

மலேசிய இந்தியர்களின் உடல் பொருள், ஆவி ஆத்மா எல்லாமே இந்த மலேசிய மண்ணிற்குத் தான். அவர்களின் உயிர் விசுவாசம் எல்லாம் இந்த மண்ணிற்குத் தான். அதை ஸக்கீர் நாயக் புரிந்து கொள்ள வேண்டும்.

பிறர் மதத்தை இழிவு படுத்திக் கொண்டே இருப்பதில் சிலருக்கு அற்ப சுகம். நாட்டை வளப் படுத்த காரியம் ஏதும் நடக்கிறதோ இல்லையோ. ஆனால் காலம் தவறாமல் மற்றவர்களைப் புண்படுத்துவதில்  நியாயமே இல்லை என்று பெந்தோங் தமிழார்வலர் சத்தியா ராமன் வருத்தமாகச் சொல்கிறார்.

மேலும் அவர் வேதனையுடன் கேட்கிறார். காலில் செருப்பு இல்லாமல் பழைய தாட்களைக் கால்களில் கட்டிக் கொண்டு கொதிக்கக் கொதிக்கத் தார் சாலைகளில் வேலை செய்த அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா?

வரகட்டு மேடுகள், பாதாளப் பள்ளங்கள் நிறைந்த தேயிலை தோட்டங்களில்... அதிகாலையிலேயே எழுந்து கொட்டும் பனியில் செக்ரோல் முடித்து.. அவதி பவதியாய் குழந்தைகளை ஆயாக் கொட்டைகையில் கொண்டு போய் விட்டுவிட்டு.. விடிந்தும் விடியாமல் தோளில் கொழுந்துக் கூடையைச் சுமந்து கொண்டு... நாள் முழுதும் உழைத்தாலும் முப்பது நாற்பது காசு சம்பளம். இந்த அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா?

இதில் கங்காணிமார்களின் மானம் கெட்ட ஏச்சுப் பேச்சுகள். கட்டலை, முத்தலையை எடுத்து விட்டால் நாற்றம் அடிக்கும் கேள்விகள். அப்படியே வீட்டுக்கு விரட்டி அடிப்பார்கள். அன்றைய வயிற்றுப் பிழைப்பில் மண் விழுந்த துயரத்தை அழுது தீர்த்த அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா?

தோளில் காண்டவாளியுடன் நெற்றியில் லாம்பைக் கட்டிக் கொண்டு இருட்டு நேரத்தில் தீம்பாருக்குச் சென்று கித்தா மரத்தை சீவும் போது அங்கே உலா போகும் பாம்பு, பூரான், அட்டை கடிகளுக்கு மத்தியிலும்... மரத்தில் காயம் பட்டால் கத்தித் தொலையும் கங்காணிகளிடம் கண்ணீர் மல்க கூனிக் குறுகி நின்ற அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா?

ஸக்கீர் நாயக்

கட்டிடத் தொழிலில்... கரடுமுரடான காடுகளை அழிப்பதில்... இரயில் தாண்டவாளங்களை அமைப்பதில்... எண்ணிலடங்கா உடல் உழைப்புத் தானங்களை எங்களின் முன்னோர்கள் இந்த நாட்டிற்கு அர்ப்பணிப்புச் செய்து இருக்கிறார்கள். இந்த அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா?

மிக மிக சொற்ப ஊதியத்திற்காகத் தங்களின் உதிரத்தைச் சிந்தி "குந்தா கிந்தே”களாகச் செத்து மடிந்த கதைகளைப் படித்த கேட்ட அனுபவம் ஸக்கீர் நாயக்கிற்கு உண்டா? கொப்பளிக்கிறார் பெந்தோங் சத்யா ராமன்.

இப்படி எதுவுமே தெரியாமல்... இந்த நாட்டின் இந்தியர்களின் வரலாறு என்னவென்று அறியாமல் மலேசிய இந்தியர்களைத் திரும்பிப் போங்கள் என்று சொல்லலாமா. தன் சுயநலத்துக்காக, தன் வயிற்றுப் பிழைப்புக்காக நாடு விட்டு ஓடி வந்த ஒருவர் இப்படி வம்பு பேசலாமா? நியாயமா?

அதைப் பார்த்துக் கொண்டு மலேசிய இந்தியர்கள் சும்மா சொக்கட்டான் ஆட முடியுமா? காலத்துக்கும் பொறுமைக் காத்து நிற்க முடியுமா? காரியம் ஆகாத போது கட்டவிழ்த்துக் கரை புரண்டு ஓடும் வித்தையை மலேசிய இந்தியர்கள் காலம் அறிந்து கற்றுக் கொண்டார்கள். ஸக்கீர் நாயக் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

(தொடரும்)

ஜாகிர் நாயக் நிந்தனைகள் - 2

மலேசிய இந்தியர்களின் நாட்டுப் பற்று - 2

மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய மலேசிய இந்தியர்களுக்கு முதல் மரியாதை. 

1870-ஆம் ஆண்டுகளில் கொல்கத்தாவில் இருந்து
ஆப்பிரிக்க நாடுகளுக்கு கப்பலேறிய இந்தியர்கள்

18 - 19-ஆம் நூற்றாண்டுகளில் மலாயாவில் குடியேறிய இந்தியத் தொழிலாளர்கள் தான் மலேசியாவில் நிரந்தரமாக ஓர் இந்தியர் சமூகம் தோன்றுவதற்கு அடித்தளம் அமைத்தவர்கள். மலேசிய இந்தியர்கள் எனும் வித்துகளை விட்டுச் சென்றவர்கள்.

காட்டுப் பாதைகளில் இரத்தம் கொட்டி உயிர்களைச் சிந்தியவர்கள். காட்டு மரங்களைக் கட்டி அணைத்து காசு மழை பொழியச் செய்தவர்கள். காட்டு மிருகங்களுடன் மனித வாசம் பேசி மரித்துப் போனவர்கள். பாசா காடுகளில் பவித்திரம் பேசி பார் புகழச் செய்தவர்கள்.

அந்த வாயில்லா பூச்சிகளை விசுவாசம் இல்லாதவர்கள் என்று சொல்லலாமா. சொல்ல ஒரு மனசு வேண்டாமா. சொல்ல ஒரு விவஸ்தை வேண்டாமா. சொல்லும் போது ஒரு வெட்கம் வர வேண்டாமா. வேதனையின் கொப்பளிப்புகள். 

தமிழ் மலர் 20.08.2019
மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் 82 விழுக்காட்டினரின் மூதாதையர் இந்த நாட்டை வளம் செய்வதற்காகக் கப்பல் ஏறி வந்தவர்கள். முதலில் பாய்மரக் கப்பல்கள். அடுத்து நீராவிக் கப்பல்கள். அடுத்து டீசல் இஞ்சின் கப்பல்கள். இவை மறைக்க முடியாத வரலாற்று உண்மைகள்.

மலாயாவில காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குது. காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த ஒத்த வெள்ளியா கொட்டும். ஒரு பக்கம் அஞ்சு அஞ்சு வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் பத்து பத்து வெள்ளியா கொட்டும். எப்ப கொட்டும்னு தெரியாது. என்ன... பொறுக்கி எடுக்கிறது தான் பெரிய இலச்சை பிடிச்ச வேலை.

இப்படித் தான் மலாயாவில் இருந்து ஆள் பிடிக்கப் போன கங்காணிகள் ஆசை ஆசையாய் அவிழ்த்து விட்ட ஆனந்த பைரவிகள். வேறு எப்படித்தான் சொல்வதாம். 

மலேசியாவின் மனிதவள அமைச்சர் குலசேகரன்
கிராமத்துப் பாமர மக்களின் பச்சை மனங்களைப் பாசம் நேசமாய் நன்றாகவே மசாஜ் செய்து இருக்கிறார்கள். அது மட்டுமா. அப்போது அங்கே கிடைத்த லைவ் பாய் சவர்க்காரத்தைப் போட்டு நன்றாகவே குளிப்பாட்டியும் விட்டு இருக்கிறார்கள்.

உதறல் எடுத்த அந்தச் சாமானிய மக்களை நன்றாகவே துவைத்துக் காயப் போட்டு இருக்கிறார்கள். அப்படியே மூட்டை கட்டி இங்கே இந்தப் பக்கம் இழுத்து வந்து விட்டார்கள். அப்போது பிடித்த குளிர் நடுக்கம் இன்னும் ஓயவில்லை.

இனப் போராட்டம்; மொழிப் போராட்டம்; சமயப் போராட்டம்; தனிமனித உரிமைப் போராட்டம். இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். அந்தப் போராட்டங்களின் குளிர்க் காய்ச்சல் நடுக்கத்தைத் தான் சொல்ல வருகிறேன்.

இன்னும் எத்தனைத் தலைமுறைகளுக்குத் தொடருமோ. தெரியவில்லை. இதில் இடை இடையே ஸக்கீர் நாயக் போன்றவர்களின் ஐஸ்கட்டி ஆலாபனைகள் வேறு. 

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி
எதிர்காலச் சந்ததியினரை நினைத்துப் பார்க்கின்றேன். சமாளிப்பார்களா. இன்றைய வயதான தலைமுறையினர் நாங்களே தடுமாறிக் கொண்டு நிற்கிறோம். அவர்கள் சமாளிக்க வேண்டுமே.

பினாங்கு – பட்டர்வொர்த் கடற்கரைப் பகுதியில் புலாவ் ஜெராஜாக் (Pulau Jerajak) எனும் ஒரு தீவு இருக்கிறது. முன்பு புறமலை என்று அழைத்தார்கள். அப்போது அந்தத் தீவு ஒரு தொற்றுநோய் ஒதுக்கிடம். இப்போது அது ஒரு சுற்றுலாத் தளம்.

அந்த இடத்தில் தான் சென்னை நாகப்பட்டனத்தில் இருந்து கப்பல் ஏறி வந்த இந்தியத் தொழிலாளர்கள் தனிமைப் படுத்தப் பட்டார்கள். அதாவது quarantine செய்யப் பட்டார்கள்.

1870-ஆம் ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகள். அந்தப் புறமலையில் 1911-ஆம் ஆண்டு வரையில் 134,957 பேர் தனிமைப் படுத்தப் பட்டு இருக்கிறார்கள்.

இந்த விசயம் ஸக்கீர் நாயக்கிற்குத் தெரியுமா. தெரியாவிட்டால் பரவாயில்லை. தெரிய வைப்போம்.

(சான்று: https://www.malaymail.com/news/malaysia/2019/06/26/penangs-pulau-jerejak-a-storied-history-beyond-a-high-security-detention-ce/1765526 - The island was also used as a quarantine station in 1877 for newly arrived immigrants.)

மலேசிய இந்தியர்களையும் சீனர்களையும் தற்காத்துப் பேசிய
மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Syed Saddiq
இருந்தாலும் அன்றைய மலேசிய இந்தியர்கள், இன்றைய ஸக்கீர் நாயக் மாதிரி தப்பி ஓடி வரவில்லை. பணச் சலவை, பண மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து கொண்டு ஓடி வரவில்லை. மலாயா அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலமாகத் தான் நல்லபடியாகக் கப்பலேறி வந்தார்கள்.

மலாயா கித்தா மரங்களில் காய்த்துத் தொங்கிய அஞ்சு வெள்ளி பத்து வெள்ளிகளைப் பறித்து எடுத்து; சாக்குப் பைகளில் மூட்டை மூட்டையாய்க் கட்டி இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கவே அழைத்து வரப் பட்டார்கள்.

அவர்கள் வந்து 250 ஆண்டுகள் ஆகின்றன. வெள்ளைக்காரர்களும் கப்பல் கப்பலாய் பணத்தை ஏற்றிக் கொண்டு போனார்கள். ஜிங்கு ஜிக்கான் பாடி பழைய ஆளாகி விட்டார்கள்.

கடைசியில் மலேசிய இந்தியர்களுக்குப் ’பை பை’ காட்டி அவர்களை அனாதைகளாகப் பரிதவிக்க விட்டுச் சென்றது தான் வரலாற்றுக் கொடுமை. 

மலேசிய இந்தியர்களுக்காகக் குரல் கொடுத்து வரும்
மலேசிய இந்திய அமைச்சர்கள் கோபிந்த் சிங்; குலசேகரன்

மலேசிய இந்தியர்களின் உரிமைகளை மீட்டு எடுக்கிறோம் என்று காலம் காலமாக நானா நீயா போட்டிகள். அந்தச் சறுக்கில் ஆயிரம் ஆயிரம் கட்சிகள். தடுக்கி விழுகிற இடம் எல்லாம் கட்சிகள். கட்சிகள். விடுங்கள். இது மலேசிய இந்தியர்களின் போன ஜென்மத்து கர்ம வினைகள்.

சரி. புறமலை கதைக்கு வருவோம். அப்புறம் புறமலையில் இருந்து காட்டுப் பாதை கம்பிச் சடக்குகளில் அடிமைகளைப் போல நடக்க வைக்கப் பட்டார்கள். பலர் லாரிகளில் ஏற்றிக் கொண்டு வரப் பட்டார்கள்.

சிலர் குதிரை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரப் பட்டார்கள். இன்னும் சிலர் எருமை மாட்டு வண்டிகளில் மூட்டை முடிச்சுகளோடு இழுத்து வரப் பட்டார்கள்.

அவர்களில் சிலர் ஆடு மாடுகளைப் போல நசுக்கி நார் நாராய்க் கிழிந்து போய் வந்தார்கள். அவர்கள் பட்ட வேதனை அவர்களுக்குத் தான் தெரியும்.

அந்தக் காலத்து ரப்பர் தோட்டங்களில் அழகு அழகாய்த் தகரக் கொட்டகைகள். மன்னிக்கவும். தகர டப்பாக்கள். அவற்றை லயன்கள் என்று அழைத்தார்கள். அவற்றில் தான் கப்பலேறி வந்த வெள்ளந்திகள் தங்கிப் பேர் போட்டார்கள். 

தமிழ் மலர் 20.08.2019
அப்புறம் என்ன. சாகும் வரையில் அந்த வாயில்லாப் பூச்சிகள் அங்கேயே கிடந்து சாகட்டும் என்று சொல்லாமல் சொல்லி ’செக்ரோல்’ எழுதி வைத்து விட்டார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லயன் வீடு. இடித்துப் பிடித்துக் கொண்டு தான் படுக்க வேண்டும். இப்போது மாதிரி ஆளுக்கு ஓர் அறை எல்லாம் இல்லை. ஒரு குடும்பமே ஓர் அறையில் தான் படுத்துத் தூங்க வேண்டும். இதில் வயிற்றில் ஒன்று; இடுப்பில் ஒன்று; கைலித் தொட்டியில் ஒன்று என அரை டஜன் ஒரு டஜன் பிள்ளைகள்.

இரவு பகலாய் ஓய்வு ஒழிச்சலின்றி ஆடு மாடுகளைப் போல வேலைகள் செய்தார்கள். மிருகங்களை விட மோசமாக வேலை வாங்கப் பட்டார்கள். கொத்தடிமைகள் என்று சொல்வார்களே... அந்த மாதிரி ஆப்பிரிக்க நாட்டு அடிமைகளின் வாரிசுகள் என்று புகழ் பெற்றார்கள். ஆக வரலாற்று ஆவணங்கள் என்றைக்கும் பொய் சொல்வது இல்லை. அதை நினைவில் கொள்வோம்.

(சான்று: http://www.wami.com.my/2018/02/07/ancient-times-modern-days-brief-history-indian-migration-malaysia/)

ஐயா ஸக்கீர் நாயக் அவர்களின் கவனத்திற்கு... இந்தக் கட்டுரைகளைப் படியுங்கள். முடிந்தால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அனுப்பி வைக்கிறேன். மறக்காமல் எழுதி வைத்துப் படியுங்கள். 

மலேசியாவின் மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங்
இனி எங்கே பிரசாரம் செய்யப் போனாலும் மலேசிய இந்தியர்களின் உண்மைகளை மறைக்காமல் சொல்லி வாருங்கள். அதுவே மலேசிய இந்தியர்களுக்கு நீங்கள் செய்யப் போகிற புண்ணியம்.

ஒன்று மட்டும் உண்மை. மலேசிய இந்தியர்கள் நேற்று முந்தா நாள் மலாயாவுக்கு விருந்தாளிகளாய் வந்தவர்கள் அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே மலேசிய மண்ணில் தடம் பதித்து விட்ட உழைப்பாளிகள். இந்த நாட்டை பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய படைப்பாளிகள். அதை மறக்காமல் இருந்தால் சரி.

தகர டப்பா லயன்களில் நீர் விநியோகம் நிரந்தரம் இல்லை. நினைத்தால் வரும். நினைத்தால் வராது. குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பக்கத்து ஆற்று நீர் அட்ச பாத்திரம். மழை பெய்தால் எது தேநீர் எது கறுப்புக் கோப்பி என்று ஆராய்ச்சி பண்ண வேண்டி இருக்கும். நோபல் பரிசு வாங்கி விடலாம்.

பொதுவாக பத்து லயன் வீடுகளுக்கு ஒரு கழிவறை. ஒரு பொது குளியலறை. ஆண்களும் சரி பெண்களும் சரி. ஒரே குளியலறையில் தான் குளிக்க வேண்டும்.

ஒருவர் குளித்து வரும் வரையில் மற்றவர் வெளியே தலையைச் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும். எவர் பார்த்தாலும்; பார்க்கா விட்டாலும் நாலு தகர மறைப்புக்குள் குளியல்கள் தொடரும்.

கங்காணிகளும் தோட்டத் தொழிலாளர்களை அடிமைகளாகவே நினைத்தார்கள். அடிமைகளாக நினைத்து வேலையும் வாங்கினார்கள். சொல்லப் போனால் தோட்டத் தொழிலாளர்கள் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப் பட்டார்கள்.

அந்தச் சஞ்சிக் கூலிகளின் வாரிசுகள் இன்று வரையில் உரிமைப் போராட்டங்கள் செய்து வருகின்றார்கள். அது மட்டும் அல்ல.

நாடு விட்டு நாடு ஓடி வந்த நேற்று முளைத்த பூஞ்சைக் காளான்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

வேதனை! மலாயாவில் நடந்த கொடுமை அப்போதைக்கு ஒரு கதையாக இருந்தது. அதுவே இப்போதைக்கு ஒரு வரலாறாகவும் மாறிப் போகின்றது.

மலேசிய இந்தியர்கள் விசுவாசம் இல்லாதவர்கள் என்று ஸக்கீர் நாயக் சொல்லி இருக்கிறாரே... அதனால் தான் மலேசிய இந்தியர்கள் மலாயாவுக்கு வந்த கதை ஒரு வரலாறு என்று சொல்ல வருகிறேன்.
ஸக்கீர் நாயக்
தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். உண்மை தான். நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள். உண்மை தான். யானைக்கு மதம் பிடித்தால் மண்ணை அள்ளி மண்டையில் போட்டுக் கொள்ளும் என்று சொல்வார்கள். உண்மை தான். அந்த மாதிரி தான் ஸக்கீர் நாயக்கின் அடாவடித் தனமான பேச்சும் அமைகிறது.

மலேசிய இந்தியர்களின் மனங்களை ஸக்கீர் நாயக் புண்படுத்தி இருக்கக் கூடாது. நாம் எங்கே ஐயா பிரதமர் மோடியை ஆதரிக்கிறோம். இங்கே நம்ப நாட்டிலேயே நமக்கு ஆயிரத்து எட்டு பிரச்சினைகள். இதைச் சமாளிக்கவே தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறோம். இதில் மோடிஜியை நினைக்கவே நேரம் இல்லை. இதில் எப்படிங்க அவருக்கு சப்போர்ட் செய்வது.

இந்தியப் பிரதமரை இந்த விசயத்தில் இழுத்து வந்து, இந்த நாட்டு இந்தியர்களின் விசுவாசத்தின் மேல் வியாக்கியானம் பண்ணுவது எல்லாம் ஒரு பஞ்சோந்தியின் கைங்கரியம். தன் வயிற்றுப் பிழைப்புக்காக வால் பிடிக்க இந்த நாட்டு இந்தியர்கள் தான் பழிசுமக்கும் இளிச்சவாயர்கள் ஆனார்கள் என்று பகாங் பெந்தோங் சத்தியா ராமன் ஆதங்கப் படுகிறார்.

மலேசிய இந்தியர்கள் விசுவாசம் இல்லாதவர்கள் என்று கூறி, ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களை அவமதித்தவர் ஸக்கீர் நாயக். அவருக்கு எதிராக மலேசிய இந்தியர்கள் கொந்தளித்து கொதித்துப் போய் இருக்கிறார்கள்.

மலேசிய இந்தியர்களை மாசு படுத்திய ஸக்கீர் நாயக்கை மலேசிய இந்தியர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

(தொடரும்)

ஜாகிர் நாயக் நிந்தனைகள் - 1

மலேசிய இந்தியர்களின் நாட்டுப் பற்று - 1

மலேசிய வரலாற்றில் மலேசிய இந்தியர்கள் மாபெரும் சாதனைகளைச் செய்தவர்கள். அந்தச் சாதனைகள் அனைத்தும் காலத்தால் மறக்க முடியாத காலச் சுவடுகள். வரலாற்று வேதங்கள் வார்த்து எடுக்க முடியாத வரலாற்றுப் படிமங்கள்.
1900-ஆம் ஆண்டுகளில் விசாகப் பட்டினத்தில்
கப்பலேறிய மலேசிய இந்தியர்கள்
ஒரே வார்த்தையில் சொன்னால் இன்றைக்கும் சரி; இனி என்றைக்கும் சரி; மலேசிய இந்தியர்களின் வரலாறு சாகாவரம் பெற்ற மலேசியக் காவியங்கள். சோதனைகள் கடந்த மலேசிய இந்தியர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்குமே மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.

பச்சைக் காடாய்க் கிடந்த ஒரு நாட்டைப் பசும் பொன் பூமியாக மாற்றிச் சாதனை செய்தவர்கள் மலேசிய இந்தியர்கள். காடுகளை அழித்து மேடுகளைத் திருத்தி, பாதைகளைப் போட்டு பால் வடியும் ரப்பர் மரங்களை நட்டு; அந்த மரங்களில் காசு பணங்களைப் பார்த்தவர்கள் மலேசிய இந்தியர்கள். இல்லை என்று எவராலும் சொல்ல முடியுமா. 

தமிழ் மலர் 19.08.2019
அப்படிப்பட்ட மலேசிய இந்தியர்களின் விசுவாசம் பற்றி கேள்வி எழுப்புவதற்கு ஜாகிர் நாயக் அவர்களுக்கும் சரி; மற்ற எவருக்குக்கும் சரி; துளியும் அருகதை இல்லை என்பதே எம் கருத்து.

பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழும் இந்த மண்ணில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரின் நிந்தனையான பேச்சுகள் ஒரு கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தி வருகின்றது.

யார் இந்த ஜாகிர் நாயக். உண்மையிலேயே இவர் நல்ல ஓர் அறிஞர். உலக அளவில் பிரபலமான இஸ்லாமிய மதபோதகர். அனைத்துலகச் சொற்பொழிவாளர். சிறந்த எழுத்தாளர். 
 
மலேசிய இந்தியர்களின் நாட்டுப்பற்றுக்கு
களங்கம் விளைவித்த ஸக்கீர் நாயக்
2010-ஆம் ஆண்டுகளில் என்னைக் கவர்ந்த பேச்சாளர். யூடியூப் வழியாக இவரின் சொற்பொழிவுகளைக் கேட்டு ஈர்க்கப் பட்டேன். என் நண்பர்களிடமும் இவரின் பேச்சுகளை அறிமுகம் செய்தேன். இவரின் அறிவாற்றலைக் கண்டு வியந்து போய் இருக்கிறேன். இவரின் ஆங்கிலப் புலமையில் மயங்கிப் போய் இருக்கிறேன். இவரை ஓர் அறிவு ஜீவியாக உச்சம் பார்த்தேன்.

ஆனால் எல்லாமே தலைகீழாகிப் போனது. ஜாகிர் நாயக் இந்தியாவில் பிறந்த ஓர் இந்தியர். மதத்தால் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய இந்தியர்களின் மனம் வேதனைப் பட்டு குமுறும் அளவிற்கு நிந்தனைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கக் கூடாது.

மலேசிய இந்தியர்களின் பூர்வீகம் இந்தியாவாக இருக்கலாம். ஆனால் அந்தப் பூர்வீகத்தை மறந்து போன மலேசியர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மலேசிய இந்தியர்களின் வேர்களும் விழுதுகளும் கடல் தாண்டிய மண்ணில் வாழ்ந்தது. உண்மை.

1900-ஆம் ஆண்டுகளில் ரப்பர் தோட்டத்தில்
ரப்பர் விதைகளைப் பரவல் செய்யும் மலேசிய இந்தியர்கள்

ஆனால் அந்த வேர்களையும் விழுதுகளையும்... பாய்மரக் கப்பல்களிலும்; நீராவிக் கப்பல்களிலும்; டீசல் இஞ்சின் கப்பல்களிலும் எப்போதோ இந்த மண்ணிற்குக் கொண்டு வந்து கரை சேர்த்து விட்டோம்.

ஆறாவது ஏழாவது எட்டாவது தலைமுறைகளில் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் முக்கால்வாசி பேர் தங்களின் பூர்வீக மண்ணைத் தொட்டுப் பார்த்தது இல்லை. தொட்டுப் பார்த்து இருக்க மாட்டார்கள்.

மலேசிய இந்தியர்களுக்குத் தெரிந்த ஒரே உலகம் மலேசியா. மலேசிய இந்தியர்களுக்குத் தெரிந்த ஒரே நாடு மலேசியா.

இந்த நாட்டிற்காக அவர்களின் உயிர் உடல் பொருள் ஆவி இரத்தம் அனைத்தையும் அர்ப்பணித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மலேசிய இந்தியர்களின் நாட்டுப் பற்றையும்; அவர்களின் பிரதமர் மீதான விசுவாசத்தையும் நிந்திப்பது பெரும் வேதனை அளிக்கும் செயலாகும்.

யார் இந்த ஜாகிர் நாயக். மறுபடியும் கேட்கிறேன்.
1900-ஆம் ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்

இப்போது இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப் பட்டவர். பண பரிமாற்றம் தொடர்பாக இந்தியாவில் பண மோசடிக் குற்றச் சாட்டுகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. இந்தியாவிலும் வங்காள தேசத்திலும் பிரச்சினைகள்.

ஜாகிர் நாயக் அறக்கட்டளை மூலம் பலரைப் பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதாகவும்; பேச்சு மற்றும் போதனைகள் மூலம் வெவ்வேறு சமயத்தினர் இடையே பகைமை உணர்வைத் தூண்ட முயற்சி செய்ததாகவும்; இந்தியப் தேசியப் புலனாய்வுத் துறை மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.

(சான்று: https://www.indiatoday.in/india/story/nia-islamic-preacher-zakir-naik-islamic-research-foundation-1070616-2017-10-25)

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய ஜாகிர் நாயக்கைக் கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கு இந்திய அரசாங்கம் இண்டர் போல் அனைத்துலகப் போலீசாரின் உதவியை நாடியது.

(சான்று: https://www.dailythanthi.com/amp/News/India/2019/04/25155050/Interpol-takes-up-Indias-red-notice-on-fugitive-Zakir.vpf)

ஜாகிர் நாயக்கை இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகள் தடை செய்தன. இவரின் பேச்சுகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அமைந்து உள்ளதால் இங்கிலாந்து அரசு 2010-ஆம் ஆண்டில் இவரைத் தடை செய்தது.

(சான்று: https://www.bbc.com/news/10349564 - Indian preacher Zakir Naik is banned from UK)

அதனால் இந்தியாவில் இருந்து இங்கே வந்தார். வந்தவருக்கு மலேசிய நிரந்தவாசி எனும் தகுதி 2015-ஆம் ஆண்டில் வழங்கப் பட்டது. வழங்கியது முன்னாள் அரசாங்கம்.
தமிழ் மலர் 19.08.2019

அதை வைத்துக் கொண்டு அமைதியாகத் தன்னுடைய மதப் பிரசாரத்தைத் தொடர்ந்து இருக்கலாம். மத நல்லிணக்கச் சேவைகளைச் செய்து இருக்கலாம். மக்களிடையே புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி இருக்கலாம். பல்லினங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்த்து இருக்கலாம்.

பிரச்சினை வந்து இருக்காது. மற்ற இனங்களையும் மதங்களையும் சீண்டிப் பார்க்காமல் நன்றாகப் பயணித்து இருக்கலாம். ஆனால் நடந்ததே வேறு.

இந்த வீட்டுக்கு விருந்தாளியாக வந்து அடுத்த வீட்டுச் சுவரில் ஆணி அடித்தால் அவன் சும்மா இருப்பானா. எதிர்வீட்டுச் சன்னலில் கல்லை விட்டு எறிந்தால் அவன் சும்மா இருப்பானா?

அண்மையில் கிளந்தான் மாநிலத்தில் பிரசாரம் செய்த போது தேவையற்ற பேச்சு. அதுவே ஒரு சர்ச்சையாகிப் போனது.

மலேசியாவில் உள்ள இந்துக்களும் இந்தியர்களும் மலேசிய நாட்டுப் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல் இந்தியப் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர் எனும் பேச்சு. எதை வைத்து அவர் அப்படி சொன்னார். பெரிய தப்புங்க. அப்படி சொல்லி இருக்கவே கூடாது.
இந்தியாவில் இருந்து
மலேசியாவிற்கு வந்த மாமனிதர்

அவர் என்ன பேசினார் என்பதை அப்படியே பிரசுரிக்கிறோம்.

The Hindus here in Malaysia 6.4%. The Hindus in Malaysia get 100 times more rights ... They are half the percentage even though the number is less ... Yet the rights they get here are 100 times more than what India gives rights to the minority. So much so that they support the Prime Minister of India but not the Prime Minister of Malaysia.

(சான்று: https://www.thestartv.com/v/what-did-dr-zakir-naik-say-in-kelantan)

சென்ற ஆண்டு இந்த நாட்டில் ஓர் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. அந்த மாற்றத்தில் மலேசிய இந்தியர்கள் முக்கியமான பங்கு வகித்தார்கள். துன் மகாதீர் அவர்களை மீண்டும் பிரதமர் ஆக்குவதில் மலேசிய இந்தியர்கள் பெரும் பங்கு வகித்து உள்ளார்கள். மலேசிய அரசியலில் அனைவருக்கும் தெரிந்த விசயம்.

சென்ற ஆண்டு தேர்தல் நடக்கும் போது ஜாகிர் நாயக் மலேசியாவில் தான் இருந்தார். இவ்வளவு விசயம் தெரிந்தவருக்கு அது தெரியாமலா இருக்கும்.

கடந்த 08.08.2019 வியாழக்கிழமை கிளந்தானில் பேசும் போது தான் (ஜாகிர் நாயக்) இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் இந்த நாட்டிற்குச் சொந்தம் இல்லாத சீனர்களும் வெளியேற வேண்டும் என்று கருத்து கூறி இருக்கிறார்.

தொடர்ந்து அவர் பேசியது... மலேசியா முழு முஸ்லீம் நாடாக மாறியது. பிறகு சீனர்கள் வந்தார்கள். இந்தியர்கள் வந்தார்கள். பிரிட்டிஷார் வந்தார்கள். அவர்கள் புதிய விருந்தினர்கள். 

காடாய்க் கிடந்த மலாயாவைப் பொன் விளையும்
பூமியாக மாற்றிய மலேசிய இந்தியர்கள்
யாரோ ஒருவர் என்னை விருந்தினர் என்று அழைத்ததை நீங்கள் அறிவீர்கள். எனவே எனக்கு முன் சீனர்கள் விருந்தினர்களாக வந்தவர்கள். ஆகவே புதிய விருந்தினர் முதலில் செல்ல விரும்பினால் பழைய விருந்தினரைத் திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

அதாவது பழைய விருந்தினர்களான சீனர்கள், இந்தியர்கள் திரும்பிப் போக வேண்டுமாம். அதன் பிறகு புதிய விருந்தினரான இவர் (ஜாகிர் நாயக்) திரும்பிப் போகிறாராம்.

இவரின் இந்த மாதிரியான பேச்சு இந்த நாட்டின் மத, இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்குமா விளைவிக்காதா? சொல்லுங்கள்.

சீன மற்றும் இந்தியச் சகோதரர்கள் மீதான தாக்குதல்கள் என்பது அனைத்து மலேசியர்கள் மீதான தாக்குதல் என்பதை மலேசியர்கள் உணரத் தொடங்கி உள்ளனர்.

இந்த நாட்டிற்காக உழைத்து உருக்குலைந்து அனாதையாகிப் போன மலேசிய இந்திய இனத்தின் நாட்டுப் பற்றை நிந்திக்கலாமா?

மலேசியாவும் இந்தியாவும் நல்ல நட்பு நாடுகள். அப்படி இருக்கும் போது இந்தியா தேடும் ஒரு நபரை இந்த மாதிரி இங்கே சுதந்திரமாகப் பேச அனுமதிப்பது சரிதானா. சர்ச்சைக்குரிய ஜாகிர் நாயக் தம் கருத்துகளை வெளியிட அனுமதிப்பதும் சரி தானா? நியாயமா?

(தொடரும்)

16 ஆகஸ்ட் 2019

Asas Asas Protokol Malaysia

Susunan Keutamaan

Susunan Keutamaan Persekutuan ialah satu senarai yang disusun mengikut kedudukan kekananan antara pelbagai golongan masyarakat termasuk pegawai kerajaan, bukan pegawai kerajaan dan orang awam.

Susunan keutamaan yang digunakan sekarang ialah Susunan Keutamaan Persekutuan yang ke-20. Susunan Keutamaan ini telah digazet dan mula berkuat kuasa pada 22 Januari 1998 melalui Warta Kerajaan Malaysia Jilid 42 No. 2 P.U. (B) 29 bertarikh 22 Januari 1998.

Susunan keutamaan ini mengandungi 70 kategori seperti berikut:

  1. Seri Paduka Baginda Yang di-Pertuan Agong
  2. Raja Pemaisuri Agong
  3. Raja dan Pemangku Raja (negeri lain)
  4. Yang Dipertua Negeri
  5. Bekas Pemaisuri Agong yang menerima saraan diraja daripada kerajaan persekutuan
  6. Perdana Menteri
  7. Timbalan Perdana Menteri
    • Bakal Raja (Tengku Mahkota / Raja Muda)
  8. Ahli Darjah Utama Seri Mahkota Negara (D.M.N.)
  9. Ahli Seri Maharaja Mangku Negara (S.M.N.)
  10. Ahli Seri Setia Mahkota (S.S.M.)
    • Dato' Undang Yang Empat Negeri Sembilan dan Tengku Besar Tampin
  11. Ketua Hakim Negara Mahkamah Persekutuan
  12. Yang Dipertua Dewan Negara
  13. Yang Dipertua Dewan Rakyat
  14. Bekas Perdana Menteri
  15. Bekas Timbalan Perdana Menteri
  16. Ahli Jemaah Menteri
  17. Setiausaha Jemaah Menteri/Ketua Setiausaha Negara
    • Menteri Besar dan Ketua Menteri
  18. Peguam Negara
  19. Panglima Angkatan Tentera
  20. Ketua Polis Negara
  21. Ketua Pengarah Perkhidmatan Awam
  22. Timbalan Menteri
  23. Timbalan Yang Dipertua Dewan Negara dan Timbalan Yang Dipertua Dewan Rakyat
  24. Pesuruhjaya Tinggi, Duta Besar, Menteri yang mutlak, Pemangku Pesuruhjaya Tinggi dan Kuasa-kuasa Usaha
  25. Presiden Mahkamah Rayuan
  26. Hakim Besar Mahkamah Tinggi di Malaya
  27. Hakim Besar Mahkamah Tinggi di Sabah dan Sarawak
  28. Ketua Pembangkang dalam Parlimen
  29. Hakim Mahkamah Persekutuan
  30. Hakim Mahkamah Rayuan
  31. Setiausaha Parlimen
  32. Bekas Ketua Setiausaha Negara
  33. Pegawai Gred Utama Turus I, II dan III
  34. Bekas Peguam Negara
    Bekas Panglima Angkatan Tentera
    Bekas Ketua Polis Negara
  35. Pengerusi Suruhanjaya yang ditubuhkan di bawah Perlembagaan Persekutuan
  36. Hakim Mahkamah Tinggi
  37. Pengerusi Tribunal Perkhidmatan Awam
  38. Pesuruhjaya Kehakiman
  39. Ketua Audit Negara
  40. Gabenor Bank Negara
  41. Datuk Bandar Kuala Lumpur
  42. Pengerusi Majlis Rasmi Kerajaan
  43. Mufti Wilayah Persekutuan Kuala Lumpur
  44. Penyimpan Mohor Besar Raja-Raja
  45. Datuk Paduka Maharajalela
  46. Ahli Panglima Mangku Negara (P.M.N.)
  47. Ahli Panglima Setia Mahkota (P.S.M.)
  48. Profesor Diraja
  49. Ahli Panglima Jasa Negara (P.J.N.)
  50. Ahli Panglima Setia Diraja (P.S.D.)
    • Timbalan Menteri Besar/Timbalan Ketua Menteri
    • Speaker Dewan Undangan Negeri
  51. Ahli Dewan Negara
  52. Ahli Dewan Rakyat
  53. Pegawai Gred Utama 'A' dan Pegawai Tentera dan Polis yang setaraf dengannya
  54. Panglima Tentera Darat
  55. Panglima Tentera Laut
  56. Panglima Tentera Udara
  57. Timbalan Ketua Polis Negara
  58. Ketua Setiausaha Kementerian
  59. Naib Canselor Universiti
    • Ahli Majlis Mesyuarat Kerajaan Negeri dan Menteri Negeri di Sabah/Sarawak
  60. Pegawai Gred Utama 'B' dan pegawai tentera dan polis yang setaraf dengannya
  61. Pengerusi Badan Berkanun Persekutuan dan Ketua Badan Berkanun Persekutuan yang setaraf dengan Gred Utama 'B' dan ke atas
  62. Wakil Tempatan dalam Bangsa-Bangsa Bersatu
  63. Pegawai Gred Utama 'C', Pegawai Tentera dan Polis dan Ketua Badan Berkanun yang setaraf dengannya.
    • Ahli-ahli Dewan Undangan Negeri
  64. Ahli Johan Mangku Negara (J.M.N.)
  65. Ahli Johan Setia Mahkota (J.S.M.)
  66. Ahli Johan Setia Diraja (J.S.D.)
  67. Pegawai Gred I, Pegawai Tentera dan Polis dan Ketua Badan Berkanun Persekutuan yang setaraf dengannya
  68. Setiausaha Politik
  69. Pegawai Gred II dan pegawai tentera dan polis yang setaraf dengannya
  70. Konsul Besar negara-negara yang tiada perwakilan diplomatik di Malaysia

    Credits: http://protokolum.blogspot.com/2009/02/susunan-keutamaan.html?m=1