21 ஆகஸ்ட் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 69 (22.08.2010)



(மலேசிய நண்பன் 22-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம். மற்றவை Archive எனும் பகுதியில் கிடைக்கும்.)


மணிவண்ணன், லூயி தீமோர், கெமாயாங்
கே: தமிழ்மொழிக்கு எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்று சிலர் கட்சி கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். உண்மையிலேயே நமக்கு இப்போது எழுத்துச் சீர்த்திருத்தம் அவசியம் தானா?

ப:
இளமை காலாவதியாகிறது. பணி ஓய்வு பெறும் காலம் வருகிறது. அந்த மாதிரியான சமயங்களில் மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சியைப் பார்த்து வாழ்க்கையை ரசிக்க வேண்டும். அதை விட்டு விட்டு இருக்கிற தமிழைத் திருத்துகிறேன் என்று கிளம்பினால் மன உளைச்சல் தான் மிஞ்சும்.

இருக்கிற மனைவி அழகாகத்தானே இருக்கிறாள். இன்னும் அழகாய் ஆக்கிக் காட்டுகிறேன் என்று கிறுக்குப் பிடித்து அலையக் கூடாது. அழகாக இருந்தவளை அசிங்கமாக்கிய  பாவத்தைச் சுமக்கக் கூடாது.

கணினியின் நிரல் ஆக்கத்திற்கு CPU எனும் மத்தியச் செயலகத்தின் வேகம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு Parsing எனும் கணினிக்கு உள்ளே இருக்கும் பகுத்தறித் தன்மை கூடுதலாக இருக்க வேண்டும். இது கணினி அறிஞர்களுக்குத் தெரிந்த விஷயம். இந்த Parsing கணினிப் பகுத்தறித் தன்மையைக் கூடுதலாக்க வேண்டும் என்றால் தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தம் தேவை என்கிறார்கள் ஒரு தரப்பினர். என்னய்யா இது. அநியாயமாக இருக்கிறது. இப்போது வரும் Dual Core கணினிகள் இந்த Parsing தன்மைகளை எல்லாம் தாண்டி எங்கேயோ போய் விட்டன.

இவர்கள் என்னடா என்றால் இன்னும் பழைய குண்டு சட்டிக்குள் கும்பிப் போன குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். (குதிர்+ஐ). எங்கேயாவது காமா சோமா இருப்பான். அங்கே போய் காது வலிக்கிற மாதிரி பூ சுற்றுங்கள். இருக்கின்ற தாய்மொழியைக் கட்டாயம் ஆக்க துப்பு இல்லை. சீர்திருத்தம் செய்து கிழிக்கப் போகிறார்களாம்.


இப்போது இருக்கும் தமிழ் எழுத்துருகளை மாற்றினால் அச்சுத்துறையில் பெரிய பெரிய மாறுதல்கள் செய்ய வேண்டி வரும். உலகத்தில் உள்ள எல்லா தமிழ்ப் புத்தகங்களையும் மாற்றியாக வேண்டும். உலகத்தில் இருக்கிற எல்லா தமிழ் நிரலிகளையும் மாற்றியாக வேண்டும்.

உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களின் கணினிகளையும், ஏதாவது ஒரு வகையில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும்.இப்போது தமிழில் இலவசமாக நிரலிகள் கொடுப்பவர்கள் கூட காசு கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அது மட்டுமா. சின்னச் சின்னப் பதிப்பகங்கள் எல்லாம் அடிபட்டு போகும். தமிழில் Unicode எனும் ஒருங்குறி இருக்கிறதே. அப்புறம் ஏன் அய்யா தமிழ்ச் சீர்த்திருத்தம்.

பேரும் புகழும் கிடைக்க ஆசைப் படலாம். ஆனால், உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த வேதனையில் அந்த ஆசை வரக்கூடாது. திசை மாறி வீசும் காற்றில் குளிர்காய்ந்து, ஆனந்த பைரவிக்கு காம்போதியில் சுதி தேடுவதில் அர்த்தமே இல்லை. தமிழ் மொழி சீர்திருத்தம் செய்யப்பட்ட  செம்மொழி. அதைச் செத்துப் போன மொழியாக ஆக்கவேண்டாம். அந்தப் பாவத்தை ஏழேழு ஜென்மத்திற்கும் சுமக்க வேண்டாம்.

ம்அல்எ‘‘ச்இய்அ  ந் அண்ப்அன் - இது என்ன எழுத்து என்று புரிகிறதா? எழுத்துச் சீர்த்திருத்தம் வந்தால் மலேசிய நண்பன் என்பதை இப்படியும் எழுதச் சொல்லுவார்கள். ஆக, இப்பொழுதே எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

பெயர் வேண்டாம், ஜொகூர் பாரு (குறும் செய்தி)
கே: சார், இது மிகவும் அவசரமான தேவை. என் நண்பன் தன்னுடைய மின்னஞ்சலின் கடவுச் சொல்லை மறந்து விட்டான். மின்னஞ்சலை எப்படியாவது திறக்க வேண்டும். அதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. அவனுடைய மின்னஞ்சல் இது தான் subashini_xxxxx@gmail.com. உடனடியாகக் கடவுச் சொல்லைக் கண்டுபிடித்து எனக்கு அனுப்பி வையுங்கள். நான் அவனிடம் கொடுத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள். ரொம்ப அவசரம் சார்.


ப: மின்னஞ்சல் கடவுச் சொல்லை மீட்கச் சொல்லிக் கேட்டவர்களிடம் இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைத்து இருக்கிறது. உங்கள் பெயரை வெளியிட வில்லை. நான் ஒன்று கேட்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். அடுத்த வீட்டுக்காரனுக்கு வயிற்றுவலி என்றால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு அப்படி  என்ன அய்யா அவசரம். தேனும் பாலும் கலந்து தெருவெல்லாம் ஓடுகிறது. சொல்லுங்கள்.

அதில் அவன் இவன் என்று ஏக வசனம் வேறு. ஆனால், மின்னஞ்சல் முகவரி யாரோ ஒரு பெண்ணின் பெயரில் இருக்கிறது. ஒன்று மட்டும் உண்மை. யாரோ ஒரு பெண்ணின் கடவுச் சொல்லைக் கேட்கிறீர்கள் என்பது மட்டும் நன்றாகத் தெரிகின்றது. உங்க மாதிரி எத்தனை பேரை நான் பார்த்து இருப்பேன். தேவையா? அடுத்து வரும் பதிலையும் படியுங்கள்.

திருமதி. கல்பனா, மலாக்கா
கே: என்னுடைய மின்னஞ்சல்களை என் கணவர் எனக்குத் தெரியாமல் படிக்கிறார் என்று நினைக்கிறேன். என் அலுவலக ஊழியர்கள் அலுவல் சம்பந்தமாக எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்புவார்கள். மறைமுகமாகப் பட்டும் படாமலும் அடிக்கடி குத்தலாக குதர்க்கமாகப் பேசுவார். அவர் பேச்சில் இருந்து சந்தேகம் வருகிறது. அந்தச் சொற்கள் மனதை வேதனைப் படுத்துகின்றன. அவரைக் கொஞ்சம் முறைத்துப் பார்த்தால் சாந்தமாகி விடுவார்.


ப: உங்களுடைய நலன் கருதி ஊர் பெயரை மாற்றி இருக்கிறேன். வேலை செய்யும் மனைவியைப் பார்த்து ஆதங்கப் படுவது கணவர்கள் பலரிடம் உள்ள ஒரு ஜனரஞ்சகமான ஒற்றுமை. உங்கள் வீட்டில் மட்டும் இல்லை. உலகம் பூராவும் உலா வரும் ஒரு நவீனமான அரிச்சுவடி. அது ஓர் ஆதங்கமான உணர்வு. அவ்வளவுதான். பெரிது படுத்த வேண்டாம். இந்த இடத்தில் ஆதங்கம் என்பதை வயிற்றெரிச்சல், தாழ்வு மனப்பான்மை என்று கூட சொல்லலாம். உங்கள் பிரச்னைக்கு வருகிறேன்.பட்டும் படாமலும் குதர்க்கமாகப் பேசுகிறார் என்பதற்காக அவர் உங்கள் மின்னஞ்சலைப் படிக்கின்றார் என்று அர்த்தம் ஆகி விடாது.

மனைவியை அளவுக்கு மீறி நேசிப்பதால் சிலருக்கு அந்த மாதிரியான கோளாறுகள் வரலாம். மனைவியின் மீது உள்ள அதீதமான அன்பின் காரணமாகவும் சிலர் அப்படி நடந்து கொள்வதும் உண்டு. அவர் மீது சந்தேகப் படுவதை முதலில் விடுங்கள்.

இனிமேல் உங்கள் மின்னஞ்சலைப் படிப்பதற்கு முன்னால் அவரையும் அழையுங்கள். ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்காரச் சொல்லுங்கள். அஞ்சலை அவருக்கு முன்னால் சத்தம் போட்டு படியுங்கள்.

ஒரு சிலவற்றை அவரே படிக்கட்டும். இந்த மாதிரி ஒரு சில தடவை செய்து பாருங்கள். அப்புறம் அவரே அம்மா தாயே ஆளை விடுமா என்று ஓடி விடுவார்.

இந்த இடத்தில் என்னுடைய தனிப்பட்ட கருத்தைச் சொல்ல வேண்டி இருக்கிறது. அடுத்தவர் மின்னஞ்சலைப் படிப்பது இருக்கிறதே அது ஒரு பெரிய அசிங்கத் தனமான செயல். அதுவும் சொந்த மனைவியின் மின்னஞ்சலைத் திருட்டுத் தனமாய்ப் படிப்பது சில்லறைத் தனமான செயல்.

மனைவி சம்மதம் கொடுத்து இருந்தாலும் அவளுக்கு வரும் கடிதங்களைப் படிக்காமல் இருப்பது ஆண்மைக்கு அழகு. அப்போதுதான் கணவன் மீது மனைவிக்கு உயர்வான மரியாதை உண்டாகும். பயம் கலந்த பக்தியும் உண்டாகும்.

கே.எல்.நாராயணன், பத்து காஜா, பேராக்
கே: நம்முடைய கைப்பேசியில் திருக்குறள், பாரதியார் பாடல்களைப் பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. எங்கே கிடைக்கும்?

ப:
செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியார் என்பவர் யார் என்று இப்போதைய இளைஞர்களில் சிலர் கேட்கும் காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அந்த அளவுக்கு உலகத்தில் ஓர் அவசர காலக் கோலம். எல்லாமே அவசரம் அவசரமாக நடக்கிறது. அந்த அவசரத்திலும் சிலர் பாரதியாரை மறக்காமல் அவருடைய பாடல்களைக் கேட்கிறார்கள். அவர்களில் நீங்கள் ஒருவர். வாழ்த்துகள்.


உங்களுடைய கைப்பேசியில் பாரதியார் பாடல்களைப் பதிக்க முடியும். அது மட்டும் அல்ல. அகநானூறு, புறநானூறு, பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து என்று நூற்றுக்கணக்கான இலக்கியப் பாடல்கள் ஒரு தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. வாரக் கணக்கில் இணையத்தில் அலசல் செய்த பலன்.

http://www.fublish.com/beta/browse/books/Bharathiyar_Padalkal எனும் இடத்தில் அந்த இலக்கிய நயனங்கள் கிடைக்கின்றன. முதலில் அங்கு போய் உங்கள் கணினிக்குள் அவற்றைப் பதித்துக் கொள்ளுங்கள். பின்னர் கைப்பேசிக்குள் பதிப்பு செய்து கொள்ளலாம்.

பிரச்னை என்றால் அழைத்துப் பேசுங்கள். எல்லாம் சரி. உங்களுடைய பொன் பாவலர் மன்றம் பல அழகான சமூகச் சேவைகள் செய்து வருவதாகக் கேள்வி பட்டோம். தொடரட்டும் மன்றக் குழுவினரின் சேவைகள்.

அகிலன் merrickraja@yahoo.com
கே: Defragment எனும் சுத்திகரிப்புச் செய்வதால் கணினிக்கு என்ன பயன்?
விளக்கம் கொடுக்க முடியுமா?

ப:
கணினிக்குள் ஒரு நிரலியைப் பதிப்பு செய்கிறோம். அல்லது ஓர் ஆவணத்தைச் சேமித்து வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.


கணினியின் வன் தட்டில் அந்த ஆவணங்கள் நிரந்தரமாகப் பதிவு செய்யப் படுகின்றன. வன் தட்டு என்றால் Hard Disk. பதிவு செய்யப் படும் போது அந்த ஆவணங்கள் தொடர்ச்சியாகவும் சீராகவும் பதிவு செய்யப் படுவது இல்லை. ஆவணங்கள் என்றால் Files, Folders அல்லது Documents. பதிப்பு நேரத்தை மிச்சப் படுத்த கணினியும் ஒரு குறுக்கு வழியைக் கடைபிடிக்கிறது. வன் தட்டில் எந்த எந்த இடங்களில் அப்போது காலியான இடம் இருக்கிறதோ அங்கே தகவல்களைக் கொண்டு போய் அவசரம் அவசரமாகப் பதித்து வைக்கிறது.

வேலையைச் சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பது கணினியின் செயல்பாடு. அது கணினிக்குள் உட்செலுத்தப் பட்ட  தாரக மந்திரம்.

பின்னர் நாம் அந்த ஆவணத்தை அல்லது நிரலியைப் பயன் படுத்தக் கேட்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். கணினி என்ன செய்கிறது தெரியுமா. அதை எடுத்துக்கொடுக்க, பதிப்பு செய்த இடங்களில் அலைந்து திரிகிறது. தகவல்களை வலை போட்டுத்  தேடுகிறது.

அப்புறம் அவற்றை எல்லாம் ஒன்றாகச் சேர்க்கிறது.  நம்மிடம் கொண்டு வந்து காட்டுகிறது. நமக்கு என்னவோ பார்க்க ரொம்ப சிம்பிள். பாவம் கணினி, அதற்கு ரொம்ப சிரமம்.

தகவல்களைத் தேட கணினிக்கு  அதிக நேரமும் செலவாகிறது. இந்தப் போராட்டம் உள்ளே நடக்கும் போது கணினி மெதுவாக வேலை செய்வதாக நமக்கு ஒரு பிரமையும் தோன்றுகிறது. முட்டைப் போட்ட வேதனை கோழிக்குத் தெரியும். மூட்டைத் தூக்கிய சோதனை முது குக்குத் தெரியும் என்பார்கள். அந்த மாதிரி அவரவர் அவஸ்தை அவர் அவருக்குத் தானே தெரியும்.

சரி. Defragment எனும் சுத்திகரிப்பு செய்கிறோம். உள்ளே என்ன நடக்கிறது தெரியுமா. உடைந்து போன ஆவணங்கள், நொறுங்கிப் போன செய்திகள், சிதறிப் போன தகவல்கள், சிதைந்து போன படங்கள் எல்லாம் சீராகச் சிறப்பாக அடுக்கப் படுகின்றன. அப்புறம் வேடிக்கையைப் பாருங்களேன்.  தொண்டைத் தண்ணி காயந்து போன தொண்டனுக்கு தயிரும் மோரும் கிடைத்த மாதிரி மின்னல் வேகத்தில் வேலை நடக்கும். சுத்திகரிப்பு செய்வது எப்படி என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. கணினியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னம் இருக்கிறது. தெரியும் தானே. அதை வலது சொடுக்குச் செய்யுங்கள்.

அதில் Manage என்பதைச் சொடுக்கினால் இடது பக்கம் Disk Defragmenter என்பது வரும். அதைச் சொடுக்குங்கள். வன் தட்டின் பிரிவுகள் தெரியும். அவற்றை ஒன்று ஒன்றாகச் சுத்திகரிப்புச் செய்யுங்கள். அவ்வளவுதான். சில சமயங்களில் அதிக நேரம் பிடிக்கலாம்.

வாரத்திற்கு ஒரு முறை சுத்திகரிப்புச் செய்யுங்கள். போதும். காலா காலத்திற்கும் கணினி உங்களைக் கை எடுத்துக் கும்பிடும். 

மா. இளவேணன், சிரம்பான் ஜெயா
கே: நான் ஒரு பள்ளி ஆசிரியர். என் மாணவர்கள் எழுதிய கட்டுரைகளை Audio CD ஆக மாற்ற முடியுமா? அதாவது நாம் எழுதியதை ஒலியாக்கம் செய்ய முடியுமா?

ப:
நல்ல கேள்வி. உங்கள் கேள்விக்குப் பதில் முடியும். மாணவர்கள் எழுதியதைப் படித்துக் காட்டும் ஒரு நிரலி இருக்கிறது. இலவசமாகவும் கிடைக்கிறது. அந்த நிரலியை Speaking Notepad என்று சொல்வார்கள். http://www.4shared.com/file/-orY3_K4/Speaking_Notepad_v51.html எனும் இணையத் தளத்திற்குப் போக வேண்டும். அங்கே Muat Turun Sekarang என்பதைச் சொடுக்க வேண்டும். அல்லது http://rapidshare.com/files/285112981/Speaking_Notepad_6.0.rar எனும் இணையத் தளத்தில் கிடைக்கும்.


பதிவிறக்கம் செய்ததும் அதை உங்கள் கணினியில் பதிப்பு எனும் Install செய்யுங்கள். அதன் பின்னர் நீங்கள் தட்டச்சு கட்டுரையின் இடத்தைக் காட்டுங்கள். நிரலியில் Reading என்பதைச் சொடுக்குங்கள். கட்டுரை படிக்கப் படும்.

இதில் 12 குரல்கள் உள்ளன. ஆண்குரல் வேண்டுமா பெண்குரல் வேண்டுமா. எந்தக் குரல் வேண்டுமோ அதைத் தேர்வு செய்யுங்கள். பிறகு அதை எம்.பி.3 வடிவத்திற்கு மாற்றி குறுந்தட்டாகத் தயாரித்துக் கொள்ளலாம். பிரச்னை இருந்தால் 012-5838171 எனும் என்னுடைய கைப்பேசி எண்களுக்கு அழையுங்கள்.

திருமதி. ஜமீலா பகருதீன், செந்தூல் டாலாம், கோலாலம்பூர்
கே: Blackberry எனும் கைப்பேசிகளின் விற்பனையைப் பல நாடுகளில் தடை செய்கிறார்கள். ஏன்? மலேசியாவில் தடை செய்யப் படுமா? நீங்கள் எந்த வகையான கைப்பேசியைப் பயன் படுத்துகிறீர்கள்?

ப:
முன்பு வந்த கைப்பேசிகளில் குறும் செய்திகளை மட்டும் அனுப்ப முடிந்தது. இப்பொழுது வரும் கைப்பேசிகளில் பெரும்பாலானவை 3G கைப்பேசிகள். இந்தக் கைப்பேசிகள் அசுரத் தனமான செயல் ஆற்றல் கொண்டவை. இவற்றில் குறும் செய்திகள், மின்னஞ்சல்கள், இணைய வசதிகள், காணொளி, புகைப்படக் கருவி, வீடியோ கருவி, வங்கியில் இருந்து பணம் எடுக்கும் கொடுக்கும் வசதி, கணினியும் கைப்பேசியும் உறவாடிக் கொள்ளும் வசதி என்று பல வசதிகள் உள்ளன.


இதில் மிக மிக முக்கியமானவை இணைய வசதி, மின்னஞ்சல் அனுப்புவது, மின்படங்கள் அனுப்புவது, வீடியோ படங்களை அனுப்புவது. பொதுவாக மற்ற வகையான கைப்பேசிகளில் அனுப்பும் போது அரசாங்கம் இடை மறித்து அந்தத் தகவல்களைப் படிக்க முடியும். நாட்டின் தற்காப்பு, பாது காப்பு முறைகளுக்கு பாதகமானவற்றைத் தடை செய்ய முடியும். அனுப்பியவர்களைக் கண்டு பிடிக்க முடியும். தண்டிக்கவும் முடியும்.

ஆனால், இப்போது வரும் Blackberry எனும் கைப்பேசிகளில் அனுப்பப் படும் தகவல்களை அரசாங்கத்தால் இடை மறிக்க முடியாது.

அதாவது ஒட்டு கேட்க முடியாது. ஏன் என்றால் இந்தக் கைப்பேசி அனுப்பும் தகவல்கள் Encryption எனும் இரகசிய முறையில் அனுப்பப் படுகிறது. அனுப்புவருக்கும் பெறுவருக்கும் மட்டுமே இரகசியம் தெரியும். மற்ற எவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.

ஆனானப் பட்ட அரசாங்கத்தாலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆக, இந்தக் கைப்பேசிகள் பயங்கரவாதிகளின் கைகளுக்குப் போனால் என்ன ஆகும். ஒரு நாட்டின் நிலைமை என்ன ஆகும்.

அதை முன்னிட்டு அந்தக் கைப்பேசிகளில் சில மாற்றங்களைச் செய்யச் சொன்னார்கள். தயாரிக்கும் RIM எனும் கனடிய நிறுவனம் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால் தான் தடை செய்கிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் முதல் தடை வந்து இருக்கிறது. அடுத்து இந்தியாவும் இந்தோனாசியாவும் போர்க் கொடிகளைத் தூக்கி உள்ளன. இனிமேல் தான் முடிவுகள் வரலாம். இந்தக் கைப்பேசிகளுக்கு மலேசியாவில் தடை செய்யப் பட வில்லை. நான் பயன் படுத்துவது நோக்கியா 3G வகை.

ஜெ.தர்மசீலன், சிகாம்புட், கோலாலம்பூர்
கே: கணினியின் சேவை இல்லாமல் எதிர்காலத்தில் மனித இனம் பேர் போட முடியாது என்கிறார்களே. என்ன சார் கதை?

ப:
கதை இல்லை சார், கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டு இருக்கிற மாயா ஜாலம். புரிகிறதா. போகிற போக்கைப் பார்த்தால் கணினி மனிதனை அடிமை ஆக்கி விடும் போல தெரிகிறது. இந்த அழகான  குட்டி தெய்வம் இருக்கிறதே இது வந்த பிறகு மனிதன் ரொம்பவும் சோம்பேறி ஆகி விட்டான். உண்மைதாங்க. இப்பவே மனிதனின் வேலைகளில் பாதியைக்  செய்கிறதே. இன்னும் கொஞ்ச நாளில் அதற்கு கல்யாண ஆசை வந்தாலும் வரலாம். யார் கண்டது.


இன்னும் ஒரு விஷயம். கணினி ஜோசியம் பார்க்கிறது அய்யா. ஜோசியம் பார்க்கிறது. அதுவும் நூற்றுக்கு 90 விழுக்காடு சரியாகவும் இருக்கிறது. ஒரு காசோலையை எழுதி வங்கியில் உள்ள ஒரு பெட்டியில் போடுகிறோம். அது என்னடா என்றால் அந்தக் காசோலையைச் சரி பார்த்து பணத்தைக் கொடுத்தும் விடுகிறது. இத்தனைக்கும் மனித வேலை என்று எதுவுமே  அங்கே இல்லை.

15 ஆகஸ்ட் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 68 (15.08.2010)

(மலேசிய நண்பன் 15-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம். மற்றவை Archive எனும் பகுதியில் கிடைக்கும். )

குடும்ப மாது, ஊர் பெயர் வெளியிடப் படவில்லை.

கே: எனக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்கள் வீட்டில் மூன்று கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள். வீட்டின் கீழ் மாடியில் உள்ள கணினியைப் பயன் படுத்துவார்கள். அண்மையில் நாங்கள் குடும்பத்துடன் லங்காவி தீவிற்கு மூன்று நாள்கள் சுற்றுலா போய் இருந்தோம். வீடு திரும்பினோம். ஒரு பெரிய  அதிர்ச்சி காத்து இருந்தது. மின்னஞ்சல் படிக்க கணினியைத் திறந்தேன். ஆபாச அகப் பக்கங்கள் அடுத்து அடுத்து வருகின்றன. யார் அப்படி செய்தது என்று தெரியவில்லை. அந்தப் பக்கங்கள் வருவதை எப்படி நிறுத்துவது?  போலீசில் புகார் செய்யலாம் என்று நினைக்கிறேன். என் கணவர் வெளி நாட்டில் வேலை செய்கிறார்.
(இவர் கைப்பேசியில் அழுது கொண்டே தன் வேதனைகளைச் சொல்கிறார்.)

ப:
அழுகை ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த அழுகையின் பின்னால் ஓர் உறுதியான உண்மை இருக்கிறது. அங்கேதான் இந்தப் பெண்மணி ஓர் அழகான அற்புதமான குடும்பப் பெண்ணாக நிற்கிறார். இது ஓர் உணர்வு சார்ந்த பிரச்னை. ஓர் உறுதியான தீர்வு காணும் தேடல் முயற்சி.

உங்களின் மன ஆதங்கத்தைக் கொட்ட ஒரு நல்ல இடத்தைத் தேடினீர்கள். சரியான இடத்திற்கு வந்தும் இருக்கிறீர்கள்.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பார்கள். சரியா. பாத்திரம் எப்படிப் பட்டது என்பது இங்கே அர்த்தம் இல்லை. பாத்திரம் ஏந்தி இருப்பவர் இருக்கிறாரே அவர் ஒரு கதாபாத்திரம். அந்தப் பாத்திரம் சுயமாக ஜீவனம் செய்யக் கூடியவரா.  வயதானவரா. உடல் ஊனம் உள்ளவரா.

மனநிலை பாதிக்கப் பட்டவரா. இல்லை மனைவி மக்களைப் பிரிந்தவரா. இப்படிப் பார்க்கச் சொல்லிதான் அந்தப் பழமொழி வந்தது.

பாத்திரம் சுத்தமாக இருக்கிறதா. ஓட்டை ஒடிசல் இருக்கிறதா என்று பார்த்து பிச்சை போடச் சொல்லவில்லை. அலுமினியமா, தகரமா, தண்டவாளத்து இரும்பா என்று பார்க்கச் சொல்லவும் இல்லை.

யாரையும் வீட்டில் குடி வைப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய முழு விவரத்தையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும். வெளுத்தது எல்லாம் பால் என்று நினைப்பது ரொம்பவும் தப்பு. ஒன்று தெரியுமா.

அன்னம் இட்ட வீட்டில் கன்னக் கோல் சாத்துவது இருக்கிறதே அது பாவத்திலும் பெரிய பாவம். சரி. அந்தப் படங்களை வர வைக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சொல்லி இருக்கிறேன். அதன்படி செய்யுங்கள்.

வீட்டுக்கு உள்ளேதான் ஓநாய் ஓலம் போடுகிறது. அதைப் பிடிக்க வீட்டுக்கு வெளியே கோலம் போட அவசியம் இல்லை.

போலீசில் புகார் செய்யலாம். தப்பு இல்லை. ஆனால் அதன் பின்னால் வரும் பிரச்னை இருக்கிறதே அது தீர்ந்து விடுமா. அதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டாமா. உங்கள் கணவருக்குத் தெரிந்தால் அடுத்த கப்பலைப் பிடித்து வருவார். கூடவே சிவகாசி அரிவாள், வீச்சு கத்திகள் என்று வந்து குவியும். தேவையா. அப்புறம் என்ன? தமிழ் சினிமாவுக்கு ஓர் அருமையான கரு கிடைத்த மாதிரியாகவும்  இருக்கும்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உடனடியாக இணையச் சேவையை நிறுத்தி விடுங்கள். அல்லது  கணினியை எடுத்து உங்கள் அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பயன் படுத்த அனுமதிக்க வேண்டாம். அதுவே நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை.

மூன்று பேரில் யாருக்கு வக்கிரப் புத்தி என்று ஆராய்வதை நிறுத்துங்கள். சின்ன வயசுப் பையன்கள். சின்னச் சின்ன சில்மிஷங்கள். அவ்வளவுதான்.

பருவக் கோளாறுகள் பேசும் சில்லறைத் தனமான ஆசைகள். அவர்கள் பந்த பாசங்களைத் தாண்டிப் போகும் நவீனக் காலத்தில் வாழ்கிறார்கள். அந்தப் பையன்களை உங்கள் மகன்களாக நினைத்து மன்னித்து விடுங்கள்.

உடனடியாக வீட்டை விட்டுப் போகச் சொல்ல வேண்டாம். அவர்களுடைய படிப்பு பாதிக்கும். வீட்டை விற்கப் போவதாகச் சொல்லி மெதுவாக அப்புறப் படுத்தி விடுங்கள்.

எதிர்காலத்தில் மூன்று இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பலில் ஐக்கியமான பாவம் நம்மை வந்து சேரக் கூடாது. அதுவே நமக்கு பெரிய புண்ணியம்.


சுப்ரீம் சூரியா, செலாயாங், சிலாங்கூர்
கே: சென்ற வாரம் Facebook என்பதை முகநூல் என்று மொழி பெயர்ப்பு செய்து இருந்தீர்கள். அது தவறு. பேஸ்புக் என்பது ஒரு நிறுவனம். ஒரு வாணிகச் சின்னம். அதை மாற்ற முடியாது. நோக்கியா என்பது நோக்கியா தான். மலாக்கா முத்துக்கிருஷ்ணன் என்றால் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தான். முகநூல் என்பது நேரடியான மொழியாக்கமே. அர்த்தத்தை கொண்டு மொழி பெயர்க்க வேண்டும். வார்த்தையை நேரடியாக மொழி பெயர்க்கக் கூடாது. இது என்னுடைய பணிவான கருத்து. சரியான கருத்தும் கூட.

ப:
மொழி பெயர்ப்பு என்பது வேறு. மொழியாக்கம் என்பது வேறு. இந்த இரண்டுக்கும் இடையில் நடை முறைத் தாக்கம் வருகிறது. ஆக, காலத்திற்கு ஏற்றவாறு நாம் புதியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். Facebook என்பதை முகநூல் என்று அழைப்பது ஒரு நடைமுறைக்கு வந்துவிட்டது.

நேரடியாக முகநூல் என்று மொழி பெயர்ப்பு செய்து இருக்கிறோம். முகநூல் என்பது ஒரு செம்மையான தமிழ்ச் சொல்லாக மாறிவிட்டது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் Facebook நிறுவனத்தின் பெயரை மாற்றம் செய்யவில்லை. உங்கள் பணிவான கருத்துக்கு மிக்க நன்றி.

திருமதி வர்ஷா, கோலாலம்பூர்
கே: நான் இண்டல் கோர்2 வகையைச் சேர்ந்த கணினியைப் பயன் படுத்துகிறேன். முன்பு எல்லாம் ஒரு நிமிடத்தில் ஒரு பாடலைப் பதிவு இறக்கம் செய்து விடுவேன். இப்போது 20 நிமிடங்கள் பிடிக்கின்றன. ஆனால், இணையத்தின் வேகம் குறையவில்லை. பதிவு இறக்கத்தின் வேகம் தான் குறைந்து விட்டது. என்ன பிரச்னை?

ப:
இணையத்தில் அகப் பக்கங்கள் வேகமாகத் திறக்கப் படுகின்றன. ஆனால் Download எனும் பதிவு இறக்கத்தின் வேகம் தான் குறைந்து விட்டது என்று சொல்கிறீர்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

இணையச் சேவையை வழங்கும் டி.எம்.நெட் பதிவிறக்க வேகத்தைக் குறைத்து இருக்கலாம். இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் இந்தப் பதிவிறக்க வேகம் கூடும் அல்லது குறையும். இது வழக்கமான ஒன்று.

எதற்கும் நீங்கள் 100 எனும் எண்களுக்கு அழைத்துப் பேசுங்கள். உங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள். நிச்சயம் உதவி செய்வார்கள். தற்சமயத்திற்கு பதிவிறக்க நிரலி ஒன்றை வழங்குகிறேன். எதுவும் பிரச்னை என்றால் என்னுடைய 012-5838171 எனும் கைப்பேசி

எண்களுக்கு அழையுங்கள். அந்த நிரலி கீழ்காணும் தளத்தில் கிடைக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://rapidshare.com/files/235451291/Internet_Download_Manager_5.17_Build_4_Full.zip

கே.எல்.நாராயணன், பத்து காஜா, பேராக்
கே: நம்முடைய கைப்பேசியில் திருக்குறள், பாரதியார் பாடல்களைப் பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. எங்கே கிடைக்கும். உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை?

ப:
செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியார் என்பவர் யார் என்று இப்போதைய இளைஞர்களில் சிலர் கேட்கும் காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

அந்த அளவுக்கு உலகத்தில் ஓர் அவசர காலக் கோலம். எல்லாமே அவசரம் அவசரமாக நடக்கிறது. அந்த அவசரத்திலும் சிலர் பாரதியாரை மறக்காமல் அவருடைய பாடல்களைக் கேட்கிறார்கள். அவர்களில் நீங்கள் ஒருவர். வாழ்த்துகள்.

உங்களுடைய கைப்பேசியில் பாரதியார் பாடல்களைப் பதிக்க முடியும். அது மட்டும் அல்ல. அகநானூறு, புறநானூறு, பத்துப் பாட்டு, பதிற்றுப் பத்து என்று நூற்றுக்கணக்கான இலக்கியப் பாடல்கள் ஒரு தளத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. வாரக் கணக்கில் இணையத்தில் அலசல் செய்த பலன். http://www.fublish.com/beta/browse/books/Bharathiyar_Padalkal எனும் இடத்தில் அந்த இலக்கிய நயனங்கள் கிடைக்கின்றன.

முதலில் அங்கு போய் உங்கள் கணினிக்குள் அவற்றைப் பதித்துக் கொள்ளுங்கள். பின்னர் கைப்பேசிக்குள் பதிப்பு செய்து கொள்ளலாம். பிரச்னை என்றால் அழைத்துப் பேசுங்கள்.

எல்லாம் சரி. உங்களுடைய பொன் பாவலர் மன்றம் பல அழகான சமூகச் சேவைகள் செய்து வருவதாகக் கேள்வி பட்டோம். தொடரட்டும் மன்றக் குழுவினரின் சேவைகள்.

ஜெ.தர்மசீலன், சிகாம்புட், கோலாலம்பூர்
கே: கணினியின் சேவை இல்லாமல் எதிர்காலத்தில் மனித இனம் பேர் போட முடியாது என்கிறார்களே. என்ன சார் கதை?

ப:
கதை இல்லை சார், கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டு இருக்கிற மாயா ஜாலம். புரிகிறதா. போகிற போக்கைப் பார்த்தால் கணினி மனிதனை அடிமை ஆக்கி விடும் போல தெரிகிறது. இந்த அழகான  குட்டி தெய்வம் இருக்கிறதே இது வந்த பிறகு மனிதன் ரொம்பவும் சோம்பேறி ஆகி விட்டான். உண்மைதாங்க.

இப்பவே மனிதனின் வேலைகளில் பாதியைக்  செய்கிறதே. இன்னும் கொஞ்ச நாளில் அதற்கு கல்யாண ஆசை வந்தாலும் வரலாம். யார் கண்டது.

இன்னும் ஒரு விஷயம். கணினி ஜோசியம் பார்க்கிறது அய்யா. ஜோசியம் பார்க்கிறது. அதுவும் நூற்றுக்கு 90 விழுக்காடு சரியாகவும் இருக்கிறது. ஒரு காசோலையை எழுதி வங்கியில் உள்ள ஒரு பெட்டியில் போடுகிறோம். அது என்னடா என்றால் அந்தக் காசோலையைச்

சரி பார்த்து பணத்தைக் கொடுத்தும் விடுகிறது. இத்தனைக்கும் மனித வேலை என்று எதுவுமே  அங்கே இல்லை.

11 ஆகஸ்ட் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 67 (08.08.2010)

(மலேசிய நண்பன் 08-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம். மற்றவை Archive எனும் பகுதியில் கிடைக்கும்.)

ஜீவா கலியபெருமாள் jeevaria@yahoo.com
கே: என்னுடைய கணினியில் USB எனும் விரலியைப் போட்டு Format செய்ய இயலவில்லை. அப்படியே முயற்சி செய்தாலும் Windows can not format this drive எனும் அறிவிப்பு வருகிறது. என்ன செய்வது?

ப:
Format என்றால் ஒரு புதிய நிலைக்கு கொண்டு வரும் நிலைமை. ஒரு துளி அழுக்கு அசடு இல்லாமல் சுத்தம் செய்வதைத் தான் Format என்கிறோம். தமிழில் சுத்திகரிப்பு என்கிறோம். கணினிக்குள் இருக்கும் வன் தட்டின் ஆவணங்களை முற்றிலுமாக துடைத்து அழிப்பதைத் தான் சுத்திகரிப்பு  என்று சொல்கிறார்கள். அதைப் போல விரலியின் ஆவணங்களைத் துடைத்து அழிப்பதையும்  சுத்திகரிப்பு  என்று சொல்லலாம்.

இந்த மாதிரி சுத்திகரிப்பு செய்வதால் அந்தச் சாதனம் பின்னர் வேகமாக வேலை செய்யும். அதனுள் இருக்கும் நச்சு அழிவிகளும் அழிக்கப் படும். அந்தச் சாதனத்தின் இயக்கம் மிக மிக அருமையாக புதுமையாக இருக்கும். சரியா.

உங்கள் விரலி பிரச்னைக்கு வருகிறேன். கணினியின் முகப்புத் திரையில் My Computer எனும் சின்னம் இருக்கும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage என்பதைச் சொடுக்குங்கள். Disk Management எனும் ஒரு பிரிவு இருக்கும். அதைச் சொடுக்கி விடுங்கள். ஒரு பட்டியல் வரும். அந்தப் பட்டியலில் உங்களுடைய விரலி இருக்கும். அதில் வலது சொடுக்கு செய்து Format செய்து விடுங்கள். உங்கள் பிரச்னை தீர்ந்தது.

செல்வராஜ் குழந்தையன்
கே: உலகத்திலேயே மிகவும் புகழ் பெற்ற Facebook எனும் சமூக வலைத் தளத்தை 19 வயது இளைஞர் உருவாக்கினார் என்று சொல்கிறார்களே உண்மையா? அந்தத் தளத்தை முகநூல் என்று அழைக்கலாமா?

ப:
'பேஸ் புக்'கை முகநூல் என்று அழைப்பதில் தவறு இல்லையே. நல்லத் தமிழ்ச் சொல் தானே. அந்தச் சொல்லை உருவாக்கியவர்கள் மலேசிய வானொலி மின்னல் எப்.எம் அறிவிப்பாளர்கள். அவர்களுக்கு முதலில் நன்றி சொல்வோம். 'பேஸ் புக்' சமூகத் தொடர்பு தளத்தை உருவாக்கியவர் Mark Zuckerberg எனும் இளைஞர். அமெரிக்காவில் ஹாவார்ட் பல்கலைக்கழகம் இருக்கிறது.

அதில் மார்க் சுக்கர்பெர்க் படித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு வயது 19. அந்தப் பல்கலைக்கழகத்தில் தான் இந்த முகநூலை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு அதன் பயன்பாடுகள் மற்ற மற்ற பல்கலைக்கழகங்களிலும் அறிமுகம் செய்யப் பட்டது. மேலும் பரவலாக்கப் பட்டு உலக அளவில் பயன் படுத்தப் படுகிறது. உலகம் முழுமையும் 350 மில்லியன் பயனர்கள் முகநூலைப் பயன்படுத்துகின்றார்கள். ஒவ்வொரு மாதமும் 2500 மில்லியன் படங்கள் பதிவேற்றம் செய்யப் படுகின்றன.

(கணினியின் மூலமாக ராசி பலன், பிறப்பு ஜாதகம் பார்க்க விரும்புகிறவர்கள் தங்களுடைய முழுப் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய விவரங்களைத் தெரியப் படுத்தவும். கைப்பேசி எண்:0125838171. அல்லது ksmuthukrishnan@gmail.com. மின்னஞ்சல் மூலமாக ஜாதகம் அனுப்பி வைக்கப் படும். சேவைக் கட்டணம் 30 ரிங்கிட். வெளிநாட்டுத் தமிழர்களுக்கு இலவசம்.)

அருள்தாஸ் லோசன்பிரபு
கே: சார், 'ஜன கன மன' என்பது இந்திய தேசிய கீதம். ஆனால், 'வந்தே மாதரம்' தான் இந்திய தேசிய கீதம் என்று என் நண்பர் சொல்கிறார். எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவு செய்து இணையத்தில் போய் உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.

ப:
ஜன கன மன என்பதுதான் இந்திய தேசிய கீதம். 1912 ஆம் ஆண்டு பாரத் வித்தா எனும் நாளிதழில் அறிஞர் ராபிந்திரநாத் தாகூர் ஒரு கவிதை வரைந்தார். அதன் பெயர் Morning Song of India. அந்தக் கவிதைதான் இந்த ஜன கன மன. 52 விநாடிகளுக்கு ஒலிக்கும் கீதம்.

ஆனால், வந்தே மாதரம் என்பது தேசிய பாடல். இந்தக் கட்டத்தில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தேசிய கீதம் என்பது வேறு. தேசிய பாடல் என்பது வேறு. சந்திர சட்டர்ஜி என்பவர் ஆனந்த மாதா எனும் நாவலை எழுதினார். அந்த நாவலில் இந்த வந்தே மாதரம் பாடல் வருகிறது. அந்தப் பாடலை தேசியப் பாடலாக உருவகம் கொடுத்து விட்டார்கள். 1896 ஆம் ஆண்டில் இருந்து வந்தே மாதரம் இந்தியாவின் தேசியப் பாடலாக விளங்கி வருகிறது.


சுந்தரம் எம்  
கே: 3G கைப்பேசி என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
ப: 
3G என்றால் 3 Generation. 3G கைப்பேசி என்றால் மூன்றாம் தலைமுறைக் கைப்பேசி. கணினியின் வளர்ச்சி பல்வேறு தலைமுறைகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. அதைப் போல கைப்பேசிகளுக்கும் பல தலைமுறைகள் உள்ளன. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் 1G கைப்பேசிகள் வெளிவந்தன. இவை Analog குறிகளைப் பயன்படுத்திச் செயல் படும் கைப்பேசிகள். Analog என்றால் வெறும் எழுத்து கள், எண்களைப் பயன் படுத்தும் முறை. படங்கள் எதையும் பார்க்க முடியாது. 1991ல் டிஜிட்டல் முறையில் கைப்பேசிகள் வெளிவரத் தொடங்கின.

இந்த டிஜிட்டல் முறைதான் 2G தலைமுறை. டிஜிட்டல் என்றால் மிக மிகத் துல்லிதமாக எழுத்துக் குறிகள், படங்களை அனுப்பும் முறை. ஆவணங்களைச் சேர்த்து வைக்கும் மறுமலர்ச்சி இந்த முறையில் ஏற்பட்டது. இப்போது 3G கைப்பேசிகள் வந்துவிட்டன. மூன்றாம் தலைமுறைக் கைப்பேசிகள்.

இந்த வகை கைப்பேசிகளில் மின்னஞ்சல், இணையம், காணொளிகள், பாடல்கள் என்று பல வகையான வசதிகள் உள்ளன. அகன்ற அலை வரிசை இணைய வசதிகளும் 3G கைப்பேசிகளில் இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள ஒருவரின் முகத்தைக் கைப்பேசியில் பார்த்தவாறு இங்கே மலேசியாவில் உள்ளவர் பேச முடியும். அதே மாதிரி அங்கே உள்ளவர் உங்கள் முகத்தையும் பார்க்க முடியும்.

அண்மையில் அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரனுக்குப் போனார்கள். அங்கே இருந்து இந்த 3G கைப்பேசியைப் பயன் படுத்தி பூமியில் உள்ளவர்களிடம் பேசி இருக்கிறர்கள். பெரிய சாதனைதானே.

அடுத்ததாக 4G கைப்பேசிகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளி வரலாம். 4G கைப்பேசிகளைப் பயன்படுத்தி அலுவலகத்தில் இருந்து வீட்டில் நடப்பதை ரகசியமாகப் பார்க்க முடியும். கைப்பேசியில் கட்டளை போட்டு காரின் கதவைத் திறக்க முடியும். உடம்பின் சின்னச் சின்னப் பாகங்களை எக்ஸ்ரே எடுக்க முடியும்.

மனைவி வீட்டு வேலைகளை ஒழுங்காகப் பார்க்கிறாளா. சீரியல்களைப் பார்த்து சீரியஸாகிப் போகிறாளா. அதை வைத்துக் கொண்டு நிறைய குற்றப் பத்திரிகைகளைத் தயாரிக்க முடியும். எதற்கும் பெண்களே கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். உலகம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள்.


குமாரி தட்சாயினி, அசகான், மலாக்கா
கே: E-currency என்றால் என்ன? எப்படி பதிந்து கொள்வது?
ப: 
Electronic currency என்பதைத் தான் இ-கரன்சி என்கிறோம். தமிழில் மின் நாணயம் என்று சொல்லலாம். இணையம் மூலமாக பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் இந்த முறை பயன் படுகிறது. இதில் Alertpay என்பது ஒரு வகை. மற்றொன்று Paypal முறை. இன்னும் சில வகைகள் உள்ளன. அவை இன்னும் பிரபலம் ஆகவில்லை. ஒரு மின் நாணயக் கணக்கு திறப்பதற்கு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் இருக்க வேண்டும். நீங்கள் 18 வயதுக்கும் மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். https://www.paypal.com/ எனும் முகவரிக்குச் சென்று பதிந்து கொள்ளுங்கள். சுலபமாகப் பதிந்து கொள்ள முடியும்.


முருகன் குப்புசாமி
கே: திருடு போன கைப்பேசியைக் கண்டுபிடிக்க வழி இருக்கிறதா?
ப:
வழி இருக்கிறது. ஆனால், நோக்கியா கைப்பேசிகளில் மட்டுமே செயல் படும். கீழே கொடுக்கப் பட்டு இருக்கும் இணையத் தளத்திற்குப் போய் ஒரு நிரலியைப் பதிவி இறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://www.ziddu.com/download/5424188/Nokia_Antitheft.zip.html
பின்னர் உங்கள் கைப் பேசியில் பதிப்பு செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்கள் நோக்கியா கைப்பேசி திருடு போனதாக வைத்துக் கொள்வோம்.

திருடியவர் என்ன செய்வார். கைப்பேசியை முதலில் அடைத்து விடுவார். பின்னர் அவருடைய 'சிம்' அட்டையை உங்கள் கைப்பேசிக்குள் போட்டு சந்தோஷப் படுவார். இனிமேல் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு திருடி வந்த கைப்பேசியை முடுக்கி விடுவார். கைப்பேசியைத் தொடக்கியதும் 'இந்தக் கைப்பேசி உங்களுக்குச் சொந்தமானது இல்லை. தயவு செய்து அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கவும்' என்று அறிவிப்பு வரும். அப்புறம் சும்மா இருக்காது. சத்தம் போடும். 'பீப் பீப்' என்று எரிச்சலான சத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். உங்களுக்கும் ஒரு செய்தி அனுப்பும். பெரிய தலைவலியைக் கொடுக்கும்.

01 ஆகஸ்ட் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 66 (01.08.2010)

(


(மலேசிய நண்பன் 01-08-2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் வெளிவந்த கேள்வி பதில் அங்கம்.)

நா.சிவசக்தி, சுங்கை சிப்புட், பேராக்
கே: நாம் விரும்புகிறோமோ இல்லையோ சில மின்னஞ்சல்கள் நமக்கு வருகின்றன. அந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுக்கும் அனுப்பச் சொல்கிறார்கள். அப்படி  அனுப்பவில்லை என்றால் அப்பா அம்மாவுக்குள் சண்டை வரும். அடுத்த வீட்டுக்காரர் கடன் கேட்டு வருவார். ஆலோங் வீட்டைத் தேடி வருவான் என்று பல விதமாக எச்சரிக்கை செய்கின்றனர். என்ன செய்வது? எப்படி தவிர்ப்பது? பயமாக இருக்கிறது.

ப:
இந்த அஞ்சலைப் படியுங்கள். 'இந்தக் கடிதத்தைப் பலருக்கு அனுப்பியதால், பீடோங் செல்வராகவனுக்கு  இருபது இலட்சம் வெள்ளி கூடா லாட்டரியில் கிடைத்தது. கோப்பேங் சரவணன் அனுப்பத் தவறினார். அதனால் அவருடைய ஆட்டுப் பண்ணையில் இருந்த கோழிகள் ஆயிரக் கணக்கில் செத்துப் போயின. நஷ்டம் பல இலட்சம். இந்தக் கடிதத்தை நீங்கள் இருபது பேருக்கு அனுப்ப வேண்டும். அனுப்பினால் 24 மணி நேரத்தில் நல்ல செய்தி வரும். எப்படியாவது பணம் கிடைக்கும். இல்லை என்றால் ஆந்தை வீட்டு வாசலில் கத்தும்.'

இது என்னய்யா கதை. ஆந்தை வீட்டுக் குசினிக்கே வந்து  கத்தட்டும். கத்தாமல் இருந்தால் பத்து நாளைக்கு பாயாசம் பருப்பு வடை கிடைக்கும். பாருங்கள். இப்படி எல்லாம் மின்னஞ்சல்கள் வருகின்றன. என்ன செய்வது.  இருபது இலட்சம் கிடைத்த அந்த செல்வராகவன், எந்தக் கம்பத்தில் இருக்கிறார் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. அஞ்சோ பத்தோ கேட்கலாம். எப்படி எல்லாம் ஆளைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இன்னும் ஒன்று. ஆட்டுப் பண்ணையில் எப்படி ஆயிரக் கணக்கில் கோழிகள் வந்தன. ஆடுகள் குட்டி போடுவதற்கு பதிலாக முட்டைகள் போட்டு விட்டனவா. இவை எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள், மனநோயினால் பாதிக்கப் பட்டவர்கள் செய்யும் சின்னச் சின்ன சில்மிஷங்கள். கவலையை விடுங்கள்.

ஆக, இந்த மாதிரியான இமெயில்கள் இனிமேல் வந்தால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு நல்ல காரியம் என்ன தெரியுமா. தூக்கி குப்பைத் தொட்டியில் போடுங்கள். புண்ணியமாக இருக்கட்டும்.

இராக்ஷா பாண்டியன், அம்பாங் பெச்சா, கோல குபு
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா? போட வேண்டும் என்று சொல்கிறார்களே. என்? நார்த்தன் அண்டி வைரஸ் போட்டால் நல்லது என்கிறார்கள். ஆனால் விலை அதிகமாக இருக்கிறது. எனக்கு அதன் மேல் ஆசை. நீங்கள் மனசு வைத்தால் செய்ய முடியும்.

ப:
கணினி வைரஸ் என்பதை மனிதர்களைத் தாக்கும் கிருமிகள் என்று நினைக்க வேண்டாம். அவை சின்ன மென்பொருட்கள் அல்லது சின்ன Program - நிரலிகள். இவை கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்திருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றை அழித்துவிடும். அதனால் அவற்றுக்கு தமிழில் அழிவி என்று பெயர்.

கணினிகள் செயல்படுவதற்கு செயலிகள் Programs தேவை. இந்தச் செயலிகளை எழுதும் கணினி நிபுணர்களே இந்த அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக  மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று தெரியாது.

அதனால் உடனடியாக Anti Virus தடுப்பு நிரலியை வாங்கி கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். Norton Anti Virus தடுப்பு நிரலியின் சந்தாத் தொகை ஆண்டு ஒன்றுக்கு RM180.  AVG, Avast போன்ற இலவச தடுப்பு நிரலிகளும் உள்ளன. அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


ஜான் பீட்டர்ஸ், ஆயர் குரோ, மலாக்கா
கே: கணினி வைரஸ்கள் என்னென்ன தீமைகளைச் செய்கின்றன?
ப:
பட்டியல் போட முடியாது. Trojan எனும் கணினி அழிவி உங்களுடைய கணினிக்குள் நுழைந்து விட்டால் நீங்கள் செய்யும் வேலைகளைக் கவனித்து வரும். நீங்கள் பயன்படுத்தும் கடன் அட்டை இலக்கங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளும். இணைய வங்கியில் பயன்படுத்தும் கடவுச் žட்டுகளையும் எடுத்து வைத்துக் கொள்ளும். அப்புறம் தனது எஜமானனுக்கு (Owner of the Virus) இணையத்தின் வாயிலாக சகவாசமாக ரகசியங்களை அனுப்பி வைக்கும்.

சில நச்சுநிரல்கள் கணினியின் நிரலிகளில் கோப்புகளை அழித்தல், கோப்புகளின் குணா திசயங்களை மாற்றுதல் போன்றவற்றைச் செய்யும். இவை கணினியின் நினைவகத்தை உபயோகிப்பதால் நீங்கள் பயன்படுத்தும் Programs எனும் நிரலிகளுடன் குழப்பத்தை உண்டு பண்ணும். கணினியை நிலைகுலையச் செய்யும். சில அழிவிகள் கணினி தொடங்குவதை மெதுவாக்கும். வேலை செய்யும் வேகத்தைக் குறைக்கும். அழிவி அல்லது நச்சுநிரல் எல்லாம் ஒன்றுதான். சில அழிவிகள் வெடிகுண்டு போல குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெடித்து தம் அழிவு வேலைகளைச் செய்யும்.

ஒரு கணினி 30 வினாடிகளிலிருந்து 40 வினாடிகளுக்குள் இயங்குதளத்தைத் தொடங்க வேண்டும். கூடுதல் நேரம் எடுத்தால் முதலில் நச்சுநிரலைச் சந்தேகிக்கலாம்.

எஸ்.சுமிதா, பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்
கே: கணினி அழிவிகளைத் தடுப்பது எப்படி?
ப:
நல்ல ஒரு Antivirus எனும் தடுப்பு அழிவியை கணினிக்குள் பதித்துக் கொள்ள வேண்டும். அதை அடிக்கடி updates எனும் மேம்பாடு செய்ய வேண்டும். பிறரிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தும் குறுந்தட்டகங்கள், USB  எனும் விரலி போன்றவற்றை முறையாகச் சோதித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

வேண்டாத விளையாட்டு நிரலிகள் இலவசமாகக் கிடைக்கிறதே என்று நண்பர்களிடம் இருந்து வாங்கி, சகட்டுமேனிக்கு உபயோகிப்பதைக் குறைப்பது நல்லது. அதிகாரப்பூர்வமில்லாத இணையத்தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டாம். முடிந்த அளவுக்கு கணினியை அடிக்கடி அழிவிச் சோதிப்பிற்கு உட்படுத்த வேண்டும். மின் அஞ்சலில் வரும் இணைப்புகளை அனுப்பியவர் உங்களுக்கு தெரிந்தவராக இல்லாத பட்சத்தில் கவனமுடன் கையாள வேண்டும். Autorun எனும் தானியங்கி முறையில் கோப்புகளை இயங்கவிட வேண்டாம்.

திரு.நல்லக்கருப்பன், பாரீட் பாஞ்சாங், பத்து பகாட்
கே: நீங்கள் அதிகமான வடச் சொற்களைக் கூட்டிச் சொல்கிறீர்கள் என்று வாசகர் ஒருவர் இணையத்தில் விமர்சனம் செய்து இருந்தார். உங்களுக்கு வருத்தம் இல்லையா?

ப:
இருபதையும் பதினெட்டையும் கூட்டிச் சொன்னால் அங்கே பள்ளிக்கூடப் பாடம் வரும். இருபது பதினெட்டைக் கூட்டிச் சென்றால் அங்கே பள்ளியறைப் பாடம் வரும். ஆக, கூட்டிச் செல்வது வேறு. கூட்டிச் சொல்வது வேறு. தமிழ் மொழிக்கும் வடச் சொல்லுக்கும் அருந்ததி பார்க்கவில்லை. அதனால் தமிழ் இருபதாக இருக்கட்டும். வடச் சொல் பதினெட்டாக இருக்கட்டும். இதில் வருத்தப்பட வேண்டி என்ன இருக்கிறது.

உலகத்தில் ஆயிரக் கணக்கான மொழிகள் உள்ளன. அவற்றில் ஆறு மொழிகள் தான் செம்மொழிகள். அந்த ஆறு மொழிகளில் இரண்டு தான் தமிழும் சமஸ்கிருதமும். ஆக செம்மொழிகள் உறவு கொண்டாடுவதில் தப்பு இல்லை.


செல்வக்கன்னி, சிகாம்புட், கோலாலம்பூர்
கே: RAM என்றால் என்ன? கணினியில் அது எதற்காகப் பயன் படுகின்றது? அண்மையில் என்னுடைய கணினியில் இரண்டு ரேம்களை மாற்றினேன். மாற்றியதும் Fatal Exception Error என்று வருகிறது. அதோடு கணினியும் நின்று போகிறது. இதற்கு இந்த 'ரேம்' ஒரு காரணமா?

ப:
கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த வேலைகளைக் கணினி ஓர் இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். பொதுவாக Hard Disk எனும் வன் தட்டில் சேமித்து வைக்கும். இந்த வன் தட்டில் சேமித்து வைப்பதற்கு முன்னால் அது வேறு எங்கேயாவது தற்காலிகமாகச் சேமித்து வைக்க வேண்டும்.

அதற்குத் தான் இந்த RAM பயன் படுகிறது. RAM என்றால் Random Access Memory. தமிழில் தற்காலிக நினைவி அல்லது இடை மாற்றகம் என்று சொல்லலாம். இந்தத் தற்காலிக நினைவியின் ஆற்றலைக் கூட்டுவதற்காக புதிய நினைவிகளைச் சேர்ப்பது உண்டு.

அப்படி சேர்க்கும் போது வெவ்வேறு வேகம் உள்ள நினைவிகளைச் சேர்த்தால் அவை ஒன்றுக்கு ஒன்று இணைந்து போக முடியாத நிலைமை ஏற்படும். ஒரு நினைவின் வேகம் 133 ஆக இருக்கும். இன்னொன்றின் வேகம் 288 ஆக இருக்கும்.

இந்த இரண்டுமே முரண்பாடான வேக அளவு. அதனால், கணினி தடுமாறிப் போய் இரண்டுக்கும் இடையே சமரசம் செய்ய முயற்சி செய்யும். இந்தக் கட்டத்தில் எந்த நினைவியின் வேகம் குறைவாக இருக்கிறதோ அந்த நினைவியைத் தான் முதல் நிலை நினைவியாகக் கணினி ஏற்றுக் கொள்ளும். முதல் நிலை நினைவி என்றால் Default RAM. புரிகிறதா.

அப்படி முதல் நிலை நினைவியாக ஏற்றுக் கொள்ளப் படும் போது அந்த நினைவியால் கணினியின் இயக்கத்திற்கு ஈடு கொடுக்க முடிந்தால் பிரச்னை இல்லை. ஈடு கொடுக்க முடியவில்லை என்றால் Fatal Exception Error எனும் அறிவிப்பு வரும். இதைத் தமிழில் தவிர்க்க முடியாத இயக்கப் பிழை என்று சொல்லலாம்.

அத்துடன் கணினிக்கு கிறுக்கு வந்து நீலத் திரையைக் காட்டும். நமக்கும் மண்டை சுற்றிப் போகும். தப்பாக நினைக்க வேண்டாம். ஆக, விஷயம் தெரியாமல் கணினிக்குள் கையை வைக்க வேண்டாம்.


ஊர் பேர் இல்லை (குறும் செய்தி 20.05.2010)
கே: என் கணினியில் நான்கு மாதங்களாக Streamyx 384 kbps பயன்படுத்துகிறேன். மிகத் தாமதமாக அகப் பக்கத்திற்குள் நுழைகிறது. Reformat செய்வது நல்லதா?

ப:
தயவு செய்து ஊர் பேர் போட்டு கேள்விகளைக் கேளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் 384 kbps தொலைத் தொடர்பு இணைய வசதி என்பது மின்னஞ்சல்களைப் பார்த்து படிப்பதற்கு உரியது. அதன் கட்டணம் குறைவு. அதனால் தாமதமாக வேலை செய்யும். நிச்சயமாக அகப் பக்கங்கள் தாமதமாகத்தான் வரும். Reformat எனும் சுத்திகரிப்பு செய்ய வேண்டாம். அதன் வேகத்தைக் மேம்படுத்த டெலிகம்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் 100 எனும் எண்களுக்கு அழைத்துக் கேளுங்கள். இப்போது 1Gh லிருந்து 5Gh வரையிலான இணையத் தொடர்புச் சேவைகள் வந்துவிட்டன.



சி.குணசேகரன், புக்கிட் கெமுனிங், கிள்ளான்
கே: என்னுடைய கடன் அட்டையில் MEPS எனும் எழுத்து கள் உள்ளன. அதன் அர்த்தம் என்ன சார்?
ப:
Malaysian Electronic Payment System என்பதுதான் MEPS எனும் எழுத்து களின் பொருள். இந்த எழுத்து குறிகள் இருந்தால் போதும். உலகத்திலுள்ள எந்த வங்கியும் உடனே பணத்தைக் கொடுத்து விடும். இன்னும் ஒரு விஷயம். இந்த சின்னம் உள்ள அட்டையில் அறவே பணம் இல்லை என்றாலும் வெளி நாட்டில் மலேசியர்கள் இருந்தால் 100 அமெரிக்க டாலர்கள் வரை கடனாகவும் எடுக்கலாம். இது மலேசியர்களுக்கு மட்டுமே உள்ள உலகளாவிய ஓர் உடன் படிக்கை. ஆனால், சிப்பாங் விமான நிலையத்திலேயே கேட்டு வாங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடக் கூடாது.



திருவே பாலசேனா, பத்து தீக்கா, ஷா ஆலாம்.

கே: என்னுடைய சில ஆவணங்கள், கோப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் பார்க்கக் கூடாது படிக்கக்கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும். வழி இருக்கிறதா?

ப:
Documents என்பதை ஆவணங்கள் என்று சொல்கிறோம். Folders என்பதைக் கோப்புகள் என்று சொல்கிறோம். இவற்றை மற்றவர்கள் பார்க்காமல் இருக்கச் செய்ய முடியும். அதற்கு ஒரு வழி இருக்கிறது. இந்த ஆவணத்தின் மீது உங்கள் சுழலியை வைத்து வலது சொடுக்குசெய்யுங்கள். அதில் Hidden என்பதைச் 'சரி' என்று சொடுக்கி விடுங்கள்.

அப்புறம் உங்களுடைய கணினித் திறையில் ஆக மேலே போனால் Tools எனும் பகுதி வரும். அங்கே Folder Options என்பதில் View என்பதைத் தட்டினால் ஒரு செய்திப் பெட்டகம் வரும். Do not Show hidden files and folders என்பதைத் தட்டி விடுங்கள். அவ்வளவுதான். உங்கள் ஆவணம் காணாமல் போய்விடும். யாரும் பார்க்க முடியாது. அப்படி ஓர் ஆவணம் இருப்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். இதைவிட இன்னும் பல இரகசியப் பாது காப்பு நிரலிகள் வந்துள்ளன. இலவசமாகவும் கிடைக்கும். வேண்டும் என்றால் கேளுங்கள். இணைய முகவரியைச் சொல்கிறேன்.
http://uploading.com/files/7c2m47de/Folder_Lock_6%25252C3.1.rar/
எனும் இடத்தில் Folder Lock எனும் ஒரு நல்ல நிரலி கிடைக்கும். பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.