10 அக்டோபர் 2015

பெண்கள் அதிகம் பேசுவது ஏன்

பெண்கள் அதிகம் பேசுவதாக, அண்மைய கால ஆய்வுகளின் வழி கண்டு அறியப்பட்டு உள்ளது. ஓர் உயிரியின் தோற்றம், செயல், பண்பு போன்றவற்றைக் கட்டுப் படுத்தும் காரணிகளாக அந்த உயிரியின் மரபணுக்கள் அமைகின்றன. இந்த மரபணுக்கள், உடலில் உற்பத்திச் செய்யப்படும் புரதத்தின் மூலம் அமைகின்றன. 


இந்த மரபணுக்கள், பெற்றோர்களிடம் இருந்து பெறப் படுகின்றன. எனவே குழந்தைகளின் செயலும் தோற்றமும் அவற்றின் பெற்றோரைப் போலவே அமைகின்றன. ஆண் பெண்களுக்கு இடையே உடல் ரீதியான அமைப்பு, நடை, குரல் போன்ற பண்புக் கூறுகளில் தெளிவான வேறுபாடுகள் காணப் படுகின்றன.

பொதுவாக பெண்கள், ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுபவர்களாக உள்ளனர். அறிவியலார்கல் அதனை பால் (sex) சார்ந்த பண்பாக ஏற்றுக் கொண்டு உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் அதிகம் பேசுவதற்கான காரணங்களை அறிய அண்மைய காலமாக ஆய்வுகள் செய்யப் பட்டன.

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர் மார்க்ரட் மெக்கார்த்தி; உளவியலார் ஜெ மைக்கேல் பவ்வர் ஆகிய இருவரும் எலிகளைக் கொண்டு விரிவான சோதனைகளை மேற்கொண்டனர்.

எலிகளில் பெண் எலிகள் அதிகம் பேசுமா என்று தெரியவில்லை. சொல்ல முடியாது. அவற்றின் நயன மொழியை நானும் படித்தது இல்லை. நீங்களும் கேட்டது இல்லை. தனியாக நயனமொழி கல்லூரி ஒன்றைத் தொடங்கலாம். விலங்குகளை விரிவுரையாளர்களாகப் பணிகளில் அமர்த்தலாம்.

அவர்களின் ஆய்வு முடிவின்படி பாக்ஸ்பி2 (Foxp2) என்னும் புரதமே அந்த வேறுபாட்டிற்கு காரணம் எனக் கண்டு அறிந்தனர். பாக்ஸ்பி2 புரதத்தினை “மொழிப் புரதம்” என அறிவியலார் அழைக்கிறார்கள். இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யும் பாக்ஸ்பி2 மரபணுவை 2001-ஆம் ஆண்டு கண்டு பிடித்தார்கள்.

பாக்ஸ்பி2 மரபணுவினால் சுரக்கப்படும் பாக்ஸ்பி2 புரதம், பெண்களின் மூளையில் அதிகம் காணப் படுகின்றன. அதனால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர் என்று கண்டு அறியப் பட்டது.

பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளைக் காட்டிலும் விரைவாக அதிக வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதற்கும் அந்தப் பாக்ஸ்பி2 மரபணுக்கள் தான் காரணம். இன்னும் ஒரு கூடுதலான தகவல்.

ஒரு பெண் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 13000 வார்த்தைகளை ஓர் ஆணைக் காட்டிலும்கூடுதலாகப் பேசுகின்றாராம். ஒரு புள்ளி விவரம் சொல்கின்றது.

என் சொந்தக் கருத்து... தப்பாக நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் அந்தத் தொல்லை தரும் பாக்ஸ்பி2 மரபணுவை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டும். அறிவியலாளர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். நடைமுறைக்கு வரவில்லை.

அந்த மரபணுவை அழிப்பதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும். அதனால், ஆண்களின் ஆயுட்காலமும் கொஞ்சம் கூடுதலாகும். இது என் கருத்து. புதிய பார்வை நாளிதழில் அடியேன் எழுதிய கட்டுரையின் சுருக்கம். -மலாக்கா.....

09 அக்டோபர் 2015

அருள் ஆறுமுகம்

கவிஞர் அருள் ஆறுமுகம். அவரை இங்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.



பல்லாண்டுகளாக எழுத்துலகில் பவனி வருகிறார். நாடறிந்த கவிஞர், எழுத்தாளர், பன்முகக் கலைஞர். மரபுக் கவிதைத் துறையில் மிகுந்த ஈடுபாடு. சிலாங்கூர், கோலகுபு பாரு நகரில் பிறந்தவர். ஆனால்,

இப்போது அசல் ஈப்போ மண்ணின் மைந்தராகி விட்டார். சமூகப் பணிகளில் ஆர்வம். அதையும் தாண்டிய நிலையில் தமிழ் மொழியின் மீது அளப்பரிய பற்றுதல்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தன்முனைப்பு ஊட்டும் பேச்சு, நன்னெறிக் கோட்பாட்டு உரைகள் வழங்குவதில் அதீத நாட்டம். ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத் தலைவர். பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். 


2007 ஆண்டு ஈப்போ தமிழர் திருநாள் விழாக் குழுவின் தலைவராகச் செயல் ஆற்றியவர். 2014 ஆம் ஆண்டு அனைத்துலக கவிதைப் பெருவிழாவை ஈப்போவில் நடத்தி சாதனை செய்தவர்.

அண்மையில் ‘மணக்கும் சேவையும் மனித நேயமும்’ எனும் ஓர் அருமையான் தகவல் புதினத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, சில கவிதை தொகுப்புகளையும் வெளியீடு செய்து இருக்கிறார்.

இவர் அரச மலேசியக் காவல் உளவுத் துறையில் ஓர் அதிகாரி (Criminal Investigation).  மின்னியல்-மின்னணுவியல் பட்டயக் கல்வியும், சட்டக் கல்வியும் பெற்றவர். காவல் துறையில் சிறந்த சேவை ஆற்றியதற்காக 12 முறை நற்சான்றிதழ்கள் பெற்றவர்.

கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டவர். கவிஞர் ஆறுமுகம் அவர்களுக்கு ‘அருள்’ என்ற அடைமொழியைக் கவிதை பாடி வழங்கியவர் அமரர் சா.சி.குறிஞ்சிக்குமரனார். 


இவரின் சேவைகளைப் பாராட்டி பேரா மாநில மன்னர் 2006 ஆம் ஆண்டில் பி.ஜே.கே பதக்கத்தையும், 2009 ஆம் ஆண்டில் B.P.P. எனும் சிறப்பு வீரப் பதக்கத்தையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

தமிழ் மொழி, கல்வி, சமுதாயம், கலை, பண்பாடு, ஒற்றுமை என பல்முனைச் சேவை ஆற்றி வரும் கவிஞர் அருள் ஆறுமுகம் அவர்களுக்கு தமிழ் முத்துகள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

(தனிப்பதிவு: அவருடைய உணவகத்தில் சாப்பிட்ட பின்னர் பணம் கொடுத்தால் வாங்க மறுக்கிறார். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னிடம் மட்டும் தான்.)

ஒளிச்சேர்க்கை

ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பு (Photosynthesis) என்பது தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் போன்றவற்றில் நிகழும் ஒரு உயிர்வேதியியல் நிகழ்வு ஆகும். 

 

தாவரங்களின் எல்லா இலைகளிலும் ஓர் உணவுத் தொழிற்சாலை உள்ளது. இலைகளின் செல்களில் உள்ள பச்சையம் (குளோரோபில்) சூரிய ஒளியில் இருந்து பெறும் சூரியனின் ஆற்றலை, காற்றில் உள்ள கரியமில வாயு மற்றும் வேரில் இருந்து உறிஞ்சப் பட்டு இலையை அடையும் நீரின் நுண்துளிகளையும் (மாலிக்யூல்கள்) பயன்படுத்தி, சர்க்கரைச் சத்தாக மாற்றுகிறது. இதைத் தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம். 

சர்க்கரை அல்லது மாவுச்சத்தின் உபரிப் பொருளாக ஆக்சிஜன் (பிராண வாயு) என மாற்றம் காண்கிறது. இந்த உயிர்க்காற்று இலைகளின் அடிப்பகுதியில் உள்ள ஸ்டோமேட்டா செல்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

கூடவே நீரும் ஆவியாக வெளியேறுகிறது. அதனால் தான் நாம் வெயில் நேரத்தில் மரத்தடியில் ஒதுங்கும்போது புத்துணர்வு பெறுகிறோம். குளிர்ச்சியும்
பெறுகிறோம். 



இதே ஸ்டோமேட்டா செல்கள்தான் ஒளிச்சேர்க்கை நிகழாத சமயங்களில் அல்லது சூரியஒளி இல்லாத பகல் பொழுதிலும், இரவு நேரங்களிலும் ஏனைய உயிரினங்களைப் போல காற்றைச் சுவாசிக்கின்றன.

அதாவது காற்றிலுள்ள பிராண வாயுவை உள்வாங்கி கரியமில வாயுவை வெளியேற்றுகின்றன. அதனால் இரவு நேரங்களில் மரத்தடியில் இளைப்பாறும் போது புத்துணர்வு தோன்றாது.

அதாவது ஒளிச்சேர்க்கையின் மூலம் இந்த உயிரினங்கள் ஒளியின் ஆற்றலைப் பயன்டுத்திக் கொள்கின்றன.

தாவரங்களில் உள்ள பச்சையம் என்ற நிறமி பெரும்பாலும் இதற்கு உதவுகிறது. ஒளிச்சேர்க்கை வழியாகத் தாவரங்களும், பாசிகளும் கரியமில காற்றைக் கிரகித்து உயிர்க் காற்றை (அல்லது ஆக்சிசனைக்) கழிவுப் பொருளாக வெளிவிடுகின்றன.

ஒளிச்சேர்க்கையின் வழி சூரியனில் இருந்து பற்றப் படும் (பிடிக்கப் படும்) ஆற்றல் மிக மிகப் பெரியது. ஓர் ஆண்டிற்கு ஏறத்தாழ 100 டெரா வாட் (100,000,000,000,000 வாட்) மின் ஆற்றல் பிடிக்கப் படுவதாகக் கணக்கிட்டு இருக்கின்றார்கள். உலக முழுவதும் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த மின் ஆற்றலின் அளவைப் போல் ஏழு மடங்கு கூடுதல் ஆகும்.

இந்த ஒளிச்சேர்க்கையால் மரங்கள், செடிகள், கொடிகள், பாசிகள், பாக்டீரியாக்கள் போன்றவை 100,000,000,000 டன் கரியமிலக் காற்றைக் கிரகித்து உயிரகப் பொருளாக (biomass), மற்ற உயிர்ப் பொருட்களுக்கு மாற்றிக் கொடுக்கின்றன. கையெடுத்துக் கும்பிட வேண்டும். 

 புளிய மரமும் பேயும்

கொஞ்சம்கூடக் காற்றின் அசைவு இல்லாத சமயங்களில், பெரிய அடர்ந்த புளியமரம் போன்ற மரத்தடியில் உறங்கினால் உங்களைப் பேய் அடித்துக் கொல்லும் என்று பாமர மக்கள் இன்றும் நம்புகிறார்கள்.

                               அறிவியல் அடிப்படையிலான விளக்கம்

காற்று அசைவு இல்லாவிட்டாலும் இலைகள் சுவாசிக்கும் போது வெளியேறும் கரியமிலவாயு காற்றைவிடச் சற்று கனமானது. நாம் சுவாசிக்கும் காற்றில் கரியமில வாயு 0.5 விழுக்காடுதான் உள்ளது. 

ஆனால், இரவு நேரங்களில், அதுவும் காற்றின் சலனம் இல்லாவிட்டால் மரத்தடியில் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்கும். அதனால் நமக்கு மூச்சு அடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து இருப்பவர்களின் உயிரை எடுப்பது இந்தப் பேய்தான்.

      ஒவ்வொரு மரத்திலும் பொறியியல் கட்டிடக்கலை தொழில்நுட்பம்
ஆஸ்திரேலியா நாட்டில் வளரும் சில தைல மரங்கள் (யூக்கலிப்டஸ்) 300 அடி உயரம் வளரக் கூடியவை. அமெரிக்க கண்டத்தில் வளரும் சேக்கோவியா மரங்கள் 400 அடிக்கும் கூடுதலாக வளர்கின்றன. அவற்றை நாம் பார்த்தது இல்லை.

பெரிய புளியமரம் அல்லது வேப்ப மரம் அல்லது ஆல மரங்கள் 60-70 அடி உயரம் வரை வளர்கின்றன. 20-30 அடி தடிமன் கொண்ட அடிமரம். அவற்றில் இருந்து பிரிந்து செல்லும் கிளைகள், கொப்புகள். அவற்றில் வளரும் இலைகள், காய்க்கும் காய்கள், பழங்கள். இவை எல்லாம் 60-79 டன்களுக்கு மேல் எடை கொண்டவை. காற்றுக்கும் வளைந்து கொடுத்து அதே சமயம் உறுதியாகவும் நிற்பவை.

 http://siragu.com/wp-content/uploads/2013/10/puvi-veppamayamaathal-7.jpg
 
இந்த ஒட்டுமொத்த எடையையும், பூமிக்கு அடியில் இருக்கும் வேர்கள், ஒரு கட்டிடத்தின் அஸ்திவாரம் போல் தாங்கிக் கொள்கின்றன. அடிமரத்தில் இருந்து பிரியும் கிளைகள், கோப்புகள் எல்லாமே ஒரு ஜியோமிதி கணித அடிப்படையில் பிரிந்து செல்கின்றன. அதாவது கட்டிடக்கலை வல்லுநர் திட்டமிடுவது போல மரமும் ஒரு திட்டத்துடன்தான் கிளைகளைப் பரப்புகிறது.

அதே சமயம் இலைகளுக்குப் போதுமான அளவில் சூரிய ஒளி கிடைப்பதையும் உறுதி செய்து கொள்கிறது. அப்போதுதான் நாம் முன்பே குறிப்பிட்ட ஒளிச்சேர்க்கை உணவு தயாரிப்பு எல்லாமே நிகழ முடியும்.

 

06 அக்டோபர் 2015

திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறந்த நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் எனும் காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் காவியம். இந்த நூலை இயற்றியவர் திருவள்ளுவர். அனைவருக்கும் தெரியும். இந்தத் திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்...
  • திருக்குறளில் ‘தமிழ்‘ எனும் சொல் பயன்படுத்தப் படவில்லை
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812
  • திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
  • திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் - 133
  • திருக்குறள் அறத்துப் பாலில் உள்ள குறட் பாக்கள் - 380
  • திருக்குறள் பொருட் பாலில் உள்ள குறட் பாக்கள் - 700
  • திருக்குறள் காமத்துப் பாலில் உள்ள குறட் பாக்கள் - 250
  • திருக்குறளில் உள்ள மொத்த குறட் பாக்கள் - 1330
  • திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
  • ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர்களை கொண்டது.
  • திருக்குறளில் உள்ள சொற்கள் -  14,000
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம் பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம் பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை - குன்றிமணி
  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள
  • திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம் பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்
  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து - னி
  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் - ளீ,ங
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்
  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - ஜி.யு.போப்
  • திருக்குறளை உரை ஆசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் - பரிமேலழகர்
  • திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் - ஒன்பது.
  • திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம் பெற்று உள்ளது.
  • எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம் பெற்று உள்ளது.
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் ஆளப்பட்டு உள்ளது.
  • திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்து உள்ளனர்
  • நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

பெண் கொசுக்கள்

பெண்  கொசுக்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை
***********************************************************

• சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
• தர்பூசணி, தட்டும் போது “ஹாலோ” சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
• 8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
• சகாரா பாலைவனத்தில் பனி மழை... 1979 பிப்ரவரியில் பெய்தது. 
• திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், பழம் வெடிக்கும்.
• கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும் ஒரே மனித உறுப்பு.
• எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகளைப் போல வேறு விதமாக இருக்கும்.  
• வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.
• புது பேனாவை எழுதக் கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
• வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
• கை கடிகார விளம்பரத்தில் காட்டப் படும் 10:10 புன்னகையைக் குறிக்கும்.
• நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
• லியானார் டா வின்சி ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதுவார்.
• மறு கையால் வரையவும் செய்வார்.
• குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர்.
• 2 - 6 வயதில் தான் மூட்டுகள் வளர்கின்றன.
• ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும்.  இரத்தம் குடிக்கும். ஆண் கொசுக்கள் பூக்களில் இருந்து மகரந்தத்தைத் தான் குடிக்கும்
• கொசுக்களிலும் பெண்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை... போங்க மனசுக்கு கஷ்டமா இருக்கு...