05 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6

மலாக்கா மன்னர்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சி காலங்களையும் தெரிந்து கொள்வோம்.


•    ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா  1400–1414
•    ஸ்ரீ ராம விக்ரமா 1414–1424
•    முகமது ஷா 1424–1444
•    அபு ஷாகித் 1444–1446
•    முஷபர் ஷா 1446–1459
•    மன்சூர் ஷா 1459–1477
•    அலாவுடின் ரியாட் ஷா 1477–1488
•    முகமது ஷா 1488–1511
•    அகமட் ஷா 1511–1513



பரமேஸ்வராவின் மத மாற்றம் இந்த நாள் வரையில் ஒரு தெளிவற்ற நிலையில் இருந்து வருகிறது. அவர் சமய மாற்றம் செய்து கொண்டார் என்பதற்குச் சரியான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் பரமேஸ்வரா மதமாற்றம் செய்தார் என்று Malay Annals எனும் மலாய் காலச்சுவடுகள் சொல்கின்றன.

சீனாவில் கிடைத்த காலக் கணிப்புக் குறிப்புகளின் படி பரமேஸ்வராவின் மகன் ஸ்ரீ ராம விக்ரமா 1414-இல் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். சரியான தேதி விவரங்களும் நம்மிடம் உள்ளன. அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414.

தன்னுடைய தந்தையாரைப் பரமேஸ்வரா என்று அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.
(சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781.) 



பரமேஸ்வரா இறந்த அதே ஆண்டு இறுதி வாக்கில் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா மறுபடியும் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். அதையும் உறுதி படுத்துகிறேன்.

மேலே சொல்லப் பட்டது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து மீட்கப் பட்டச் சான்றுகள். அந்த இணைய முகவரியில் மேலும் தகவல்கள் உள்ளன. நீங்களும் போய்ப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். 
(சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781.)

உள்நாட்டு வரலாற்றுப் பாடநூல் ஆசிரியர்கள் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மிகவும் கவனமாகக் கையாள வேண்டி உள்ளது.

பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சிப் செய்த காலத்தில் அவரைப் பலமேசுலா என்றே சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள். அழைத்தும் வந்தார்கள். இப்போதும்கூட மலேசியச் சீனர்கள் பலேமிசுலா… பலேமிசுலா… (Bai-li-mi-su-la) என்றுதான் அழைக்கிறார்கள்.

நமக்கும் வாய் தவறி வந்து விடுகிறது. சரி விடுங்கள். பரமேஸ்வராவைச் சீனர்கள் இஸ்கந்தார் ஷா என்று அழைக்கவே இல்லை. பலமேசுலா என்றுதான் அழைத்து இருக்கிறார்கள். (சான்று: Zhong-yang Yan-jiu yuan Ming Shi-lu, volume 12, page 1487 - 1489)



இந்திய நாட்டவர்கள் பரம ஈஸ்வரா அழைத்து இருக்கிறார்கள். அராபிய நாட்டு வணிகர்கள் பரமோ ஈஸ்வரா என்று அழைத்து இருக்கிறார்கள். பின்னர் வந்த சீன வணிகர்கள் பலமோஸ் லா என்று அழைத்து இருக்கிறார்கள். ரகரம் ஒரு லகரமாக மாறிப் போவதையும் கவனியுங்கள். இங்கே தான் சரித்திரம் அழகாகப் பாரிய வீணை வாசிக்கின்றது.

மறுபடியும் சீன நாட்டின் மிங் அரச குறிப்பேடுகளுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். மலாக்கா நாட்டின் அரசர் பலேமிசுலா (Bai-li-mi-su-la, the king of the country of Melaka) என்றுதான் சீனப் பழஞ்சுவடிகள் சொல்கின்றன.
(Ming Shilu - also known as the Veritable Records of the Ming dynasty, has a comprehensive 150 records or more on Parameswara (Bai-li-mi-su-la) and Malacca.)

ஆக மலாக்கா வரலாற்றின் கதாநாயகன் பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா.

இன்னும் ஒரு விசயம். பரமேஸ்வராவின் மனைவியைப் பரமேஸ்வரி என்று தான் சீனாவின் மிங் அரசர் யோங் லே (Yong-lo Emperor) அழைத்து இருக்கிறார். அதாவது சீன மொழியின் பேச்சு வழக்கில் பர்மிசுலி (Ba-er-mi-su-li).

அடுத்து நீங்கள் கவனிக்க வேண்டிய இன்னும் ஒரு விசயம். அதாவது யோங் லே அரசர் சீனாவை 1402-ஆம் ஆண்டில் இருந்து 1424-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார் எனும் விசயம்.

இந்தக் காலக் கட்டத்தில் தான் மலாக்காவின் வாணிகம் வளர்ச்சி பெற்று வந்த காலக் கட்டம். இந்தக் கால இடுக்குகளில் தான் பரமேஸ்வரா கடல் பயணம் செய்து இருக்கிறார். அதாவது சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார்.



ஆக சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். பரமேஸ்வரா என்பவர் வாழும் காலத்தில் பரமேஸ்வரா எனும் பெயரில் தான் வாழ்ந்து இருக்கிறார். இறக்கும் காலத்திலும் பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்தும் போய் இருக்கிறார்.

அப்படி இருக்கும் போது எப்படி இஸ்கந்தார் ஷா என்பவர் வந்தார். எங்கே இருந்து சுல்கார்னாயின் என்பவர் வந்தார். எப்படி பரமேஸ்வராவின் பெயர் வசதிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப் பட்டது. உங்களுக்கே குழப்பம் ஏற்பட்டு இருக்கும்.

ஆக வரலாற்றுச் சித்தர்கள் எப்படி எல்லாம் வரலாற்றுச் சித்துகளைக் காட்டி வருகிறார்கள் பாருங்கள். போதுங்களா. எங்கே வருகிறேன்… அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் இப்போது இருந்தே பரமேஸ்வரா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை முன் எடுத்து வைக்க வேண்டும். இல்லை என்றால் பரமேஸ்வரா எனும் பெயரே வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டு விடும். அதனால் தான் வலுவான சான்றுகளுடன் பரமேஸ்வராவின் சரிதையை முன்னெடுத்து வைக்க வேண்டி உள்ளது.

(தொடரும்)

04 செப்டம்பர் 2017

கெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள்

மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் கெடா மாநிலத்தை ஆட்சி செய்த இந்திய ஆட்சியாளர்களின் பட்டியல். போதுமான சான்றுகளுடன் முன் வைக்கிறேன். அதற்கு முன்னர் ஒரு பின்னூட்டம்:

மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா சாம்ராஜ்யத்தை (Kedah kingdom - Kadaram) உருவாக்கியவர்.
(சான்று:https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100 - Around 170 CE a group of native refugees of Hindu faith arrived at Kedah,

மாறன் மகாவம்சன் என்பவர் ஈரானின் தென்பகுதி துறைமுகப் பட்டினமான கொம்ரூன் (Gombroon) பகுதியில் இருந்து தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலக் கட்டத்தில் தென் இந்தியாவில் பாண்டியர்களின் ஆதிக்கம் வலுவாக இருந்தது.

மாறன் மகாவம்சன் பாண்டியர்கள் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். கெடா பேரரசு தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் ெட நிலப் பகுதி லங்காசுகம் (Langkasuka) என்று அழைக்கப் பட்டது.


பாண்டிய மன்னர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த போது இந்த மாறன் மகாவம்சன் லங்காவித் தீவிற்கு வந்து இருக்கிறார். பின்னர் கெடாவிற்கு குடியேறி இருக்கிறார். அப்படியே கெடா பேரரசையும் உருவாக்கி இருக்கிறார். வணிகம் செய்வதே அவரின் பிரதான நோக்கம். ஆட்சி செய்வது அல்லது நிலத்தை ஆட்கொள்வது அவரின் நோக்கம் அல்ல.

அந்த வகையில் கெடா பேரரசு என்பது தொடக்க காலத்தில் ஓர் இந்து
பேரரசு. சில காலம் புத்த மதமும் இந்தப் பேரரசுடன் இணைந்து இருந்தது. 

மறுபடியும் சொல்கிறேன். லங்காசுகம் இருந்த காலக் கட்டத்தில் தான் கெடா பேரரசு (Kedah kingdom (Kadaram)  தோற்றுவிக்கப் பட்டது. இந்த இரு அரசுகளுமே ஒரே காலக் கட்டத்தில் கோலோச்சிய பேரரசுகள்.

கெடா பேரரசின் கடைசி இந்து அரசரின் பெயர் தர்பார் ராஜா II (Durbar Raja II). இவர் தான் மதமாற்றம் செய்து கொண்டார். மதமாற்றம் நடந்ததும் 800 ஆண்டுகால கெடா மாநிலத்தின் இந்து ஆளுமை ஒரு முடிவிற்கு வந்தது. கெடா பேரரசு கெடா சுல்தானகமாக மாறியது.
(சான்று: https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate#Hindu_era)

எப்படி மதமாற்றம் நடந்தது என்பதையும் கவனியுங்கள்.

கி.பி.1136-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த சமய போதகர் Sheikh Abdullah bin Ja'afar Quamiri என்பவர் கெடாவிற்கு வந்தார். கெடா சாம்ராஜ்யத்தின் கடைசி ராஜாவான தர்பார் ராஜா II என்பவரை மதம் மாற்றம் செய்தார். அந்த அரசருக்கு Mudzaffar Shah I என்று பெயர் மாற்றம் கண்டது. தர்பார் ராஜா II அரசரை சயாமியர்கள் பரா ஓங் மகாவங்சா (Phra Ong Mahawangsa) என்று அழைத்து இருக்கிறார்கள்.


(சான்று: https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100  The Hindu dynasty ended when the ninth king Durbaraja II, styled "Phra Ong Mahawangsa" by the Siamese, converted to Islam in 1136)

இப்போது கெடாவின் சுல்தானாக இருக்கும் Abdul Halim Mu'adzam Shah அவர்களும் இதே இந்த அரச பரம்பரையைச் சேர்ந்தவர்.
(சான்று: https://web.archive.org/web/20060511194957/http://uqconnect.net/~zzhsoszy/states/malaysia/kedah.html )

கெடா மாநில ஆட்சியாளர்கள்
(மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் வந்த இந்து அரசர்கள்)


தர்பார் ராஜா I - Durbar Raja I (கி.பி. 0330 - 0390)

ராஜா புத்ரா - Raja Putra (கி.பி. 0390 - 0440)

மகா தேவா I - Maha Dewa I (கி.பி. 0440 - 0465)

கர்ண ராஜா - Karna Diraja (கி.பி. 0465 - 0512)

கர்மா - Karma (கி.பி. 0512 - 0580)

மகா தேவா II - Maha Dewa II (கி.பி. 0580 - 0620)

மகா தேவா III- Maha Dewa III (கி.பி. 0620 - 0660)

ராஜா புத்ரா II - Raja Putra II (கி.பி. 0660 - 0712)

தர்ம ராஜா - Darma Raja (கி.பி. 0712 - 0788)

மகா ஜீவா - Maha Jiwa (கி.பி. 0788 - 0832)

கர்மா II - Karma II (கி.பி. 0832 - 0880)

தர்ம ராஜா II- Darma Raja II (கி.பி. 0880 - 0956)

தர்பார் ராஜா II- Durbar Raja II (கி.பி. 0956 - 1136)


(சான்று: https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate#Hindu_era)

கெடா பேரரசில் எப்போது மதமாற்றம் நடைபெற்றது என்பதற்கான சான்றுகள் கீழ்க்காணும் இணையத் தளத்தில் உள்ளன.

(https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100 - Dubar Raja II, renounced Hinduism and converted to Islam, which was introduced by Muslims from neighbouring Aceh, he also changed his name to Sultan Mudzafar Shah.)

*மதமாற்றம்*
(https://www.revolvy.com/main/index.php?s=Mudzaffar%20Shah%20I%20of%20Kedah&uid=1575 - Sultan Mudzaffar Shah I, or Phra Ong Mahawangsa (died 1179) was the first Sultan of Kedah. His reign was from 1136 to 1179. He was the last Hindu king of Kedah. After his conversion to Islam, he later became the founder of the Kedah Sultanate, which still exists to this day.)

முஷபர் ஷா I - Mudzaffar Shah I (கி.பி. 1136–1179)

முவட்ஷாம் ஷா - Mu'adzam Shah (கி.பி. 1179–1201

முகமட் ஷா - Muhammad Shah (கி.பி. 1201–1236)

முஷபர் ஷா II - Mudzaffar Shah II (கி.பி. 1236–1280)

முகமட் ஷா II - Mahmud Shah I (கி.பி. 1280– 1321)

இப்ராகிம் ஷா - Ibrahim Shah (கி.பி. 1321– 1373)

சுலைமான் ஷா I - Sulaiman Shah I (கி.பி. 1373–1422)

அதுல்லா முகமட் ஷா I - Ataullah Muhammad Shah I (கி.பி. 1422–1472)

முகமட் ஜீவா ஜைனல் ஷா I - Muhammad Jiwa Shah I (கி.பி. 1472–1506)

முகமட் ஷா II - Mahmud Shah II (கி.பி. 1506–1546)

முஷபர் ஷா II - Mudzaffar Shah III (கி.பி. 1546–1602)

சுலைமான் ஷா II - Sulaiman Shah II (கி.பி. 1602–1625)

ரிஜாலிடின் ஷா - Rijaluddin Muhammad Shah (கி.பி. 1625–1651)

முகயிடின் மன்சூர் ஷா - Muhyiddin Mansur Shah (கி.பி. 1651–1661)

ஜியாடின் முகாராம் ஷா I - Dziaddin Mukarram Shah I (கி.பி. 1661–1687)

அதுல்லா முகமட் ஷா II - Ataullah Muhammad Shah II (கி.பி. 1687–1698)

அப்துல்லா முவட்ஷாம் ஷா - Abdullah Mu'adzam Shah (கி.பி. 1698–1706)

அகம்ட் தாஜுடின் ஹாலிம் ஷா I - Ahmad Tajuddin Halim Shah I (கி.பி. 1706–1709)

முகமட் ஜீவா ஜைனல் ஷா II - Muhammad Jiwa Zainal Shah II (கி.பி. 1710–1778)

அப்துல்லா முகாராம் ஷா - Abdullah Mukarram Shah (கி.பி. 1778–1797)

ஜியாடின் முகாராம் ஷா II - Dziaddin Mukarram Shah II (கி.பி. 1797–1803)

அகமட் தாஜுடின் ஹாலிம் ஷா II - Ahmad Tajuddin Halim Shah II (கி.பி. 1803–1843)

ஜைனல் ரசீட் அல்முவட்ஷாம் ஷா I - Zainal Rashid Al-Mu'adzam Shah I (கி.பி. 1843–1854)

அகம்ட் தாஜுடின் முகாராம் ஷா - Ahmad Tajuddin Mukarram Shah (கி.பி. 1854–1879)

ஜைனல் ரசீட் முவட்ஷாம் ஷா II - Zainal Rashid Mu'adzam Shah II (கி.பி. 1879–1881)

அப்துல் ஹமீட் ஹாலிம் ஷா - Abdul Hamid Halim Shah (கி.பி. 1881–1943)

பட்லிஷா - Badlishah (கி.பி. 1943–1958)

அப்துல் ஹாலிம் முவட்ஷாம் ஷா - Abdul Halim Mu'adzam Shah (கி.பி. 1958 - 2017)


(சான்று: http://go2travelmalaysia.com/tour_malaysia/kdh_bckgnd.htm - The Kedah Sultanate began when the 9th Kedah Maharaja Derbar Raja (1136 -1179 AD) converted to Islam and changed his name to Sultan Muzaffar Shah. Since then there have been 27 Sultans who ruled Kedah)

(சான்று: https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate#Islamic_era)
(எழுத்து: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)


ுமானாற்றுச் சான்றுகுடன் இந்தக் கட்டுரை எழப்பட்டு உள்ளு.

03 செப்டம்பர் 2017

பரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா சிங்கப்பூரின் ராஜாவாக இருந்த போது சுமத்திராவின் மஜாபாகித் அரசு சிங்கப்பூர் மீது தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிங்கப்பூரில் இருந்து பரமேஸ்வரா வெளியேறினார்.

மறுபடியும் சொல்கிறேன். பரமேஸ்வராவின் அசல் பெயர் ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா. இவர் தான் நீல உத்தமனின் கொள்ளுப் பேரனின் மகன்.

ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது மூவார் (Muar) எனும் இடத்தை அடைந்தார்.

மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் (Biawak Busuk - அழுகிப் போன உடும்பு) எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் (Kota Buruk) எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. 


இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேஸ்வரா தீர்மானித்தார். (சான்று: The Indianized States of South-East Asia: https://books.google.com.my/books?id=iDyJBFTdiwoC&redir_esc=y)

நன்கு ஆராய்ந்து பார்த்தார். அந்த இடங்கள் இரண்டுமே பரமேஸ்வராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப் பொருத்தமாகவும் அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.

அப்படி போகும் போது செனிங் ஊஜோங் (Sungai Ujong) எனும் இடத்தை அடைந்தார். இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. 

அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு தான் இப்போது மலாக்கா ஆறு Bertam River - former name of the Malacca River) என்று அழைக்கப் படுகின்றது.


அந்த மீன்பிடி கிராமம் தான் இப்போதைய மலாக்கா மாநகரம். ஒரு நாள் ஒரு மரத்தின் அடியில் பரமேஸ்வரா ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி மலாக்கா வரலாற்றுக்கு புதிய வடிவம் கொடுத்தது. அவருடன் இருந்த நாய்களில் ஒன்றை ஒரு சருகுமான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது.

சருகுமானின் துணிச்சலைக் கண்டு பரமேஸ்வரா அதிசயித்துப் போனார். அவர் ஓய்வு எடுத்த இடத்திலேயே ஓர் அரசை உருவாக்கலாமே எனும் ஓர் எண்ணம் அவருக்குத் தோன்றியது. 

அதன்படி மலாக்கா எனும் ஊர் உருவானது. அந்த ஊரே இப்போதைய மலேசிய வரலாற்றில் மலாக்கா பேரரசு என்று பீடு நடை போடுகிறது. அப்படித் தான் இப்போதைய மலாக்காவிற்குப் பெயரும் வந்தது.

இன்னும் ஒரு வரலாற்றுப் பதிவும் உள்ளது. சருகு மானுக்கும் நாய்க்கும் நடந்த மோதலின் போது பரமேஸ்வரா ஒரு மரத்தின் மீது சாய்ந்து இருந்தார். 

அந்த மரத்தின் பெயர் மலாக்கா மரம். (மலாய்: Pokok Melaka. ஆங்கிலம்: Phyllanthus emblica). அந்த மரத்தின் பெயரையே பரமேஸ்வரா தான் உருவாக்கிய புதிய இடத்திற்கும் வைத்ததாகச் சொல்லப் படுகிறது. 
 
(சான்று: http://archive.aramcoworld.com/issue/200104/beyond.the.monsoon.htm -  Beyond the Monsoon, Written by Douglas Bullis)


இந்தக் காலக் கட்டத்தில் நிறைய சீன வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். அவர்களின் வாணிக ஈடுபாடுகளும் அதிகரித்தன. பெருமிதம் அடைந்தார் பரமேஸ்வரா. அந்த வகையில் மலாக்காவில் புக்கிட் சீனா எனும் ஒரு குன்றுப் பகுதியைச் சீனர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.

கடல் கடந்து மலாக்காவில் வியாபாரம் செய்ய வணிகர்கள் வந்தனர். வாணிகம் அனைத்தும் பண்ட மாற்று வியாபாரமாக இருந்தது. வணிகப் பெருக்கத்தினால் மலாக்கா குறுகிய காலத்திலேயே மிகுந்த வளம் அடைந்தது. இந்த வளர்ச்சி சயாமியர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்தச் சமயத்தில் வட சுமத்திராவில் சமுத்திரா பாசாய் (Samudra Pasai) எனும் ஒரு சிற்றரசு வளர்ச்சி பெற்று இருந்தது. இது கடல் கரையோரமாக இருந்த ஒரு சிற்றரசு. சுமத்திரா எனும் சொல் சமுத்திரம் எனும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து உருவானது. அசல் பெயர் சுமத்திரபூமி (Sumatrabhumi).

மார்க்கோ போலோ எழுதிய The Travels of Marco Polo எனும் நூலில் (Harmondsworth, Middlesex; New York: Penguin Books, Penguin Classics, 1958) சுமத்திராவை Samara என்றும் Samarcha என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சமுத்திரா பாசாய் சிற்றரசின் இளவரசியைத் தான் பரமேஸ்வரா 1409-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அந்த இளவரசியின் பெயர் மாலிக் உல் சாலே (Malik ul Salih). 


திருமணத்திற்குப் பிறகு அவர் இஸ்லாமிய சமயத்தில் இணைந்ததாகச் சொல்லப் படுகிறது. தன் பெயரை இஸ்கந்தார் ஷா (styled himself) என்று மாற்றிக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. 

‎ஷா என்பது பாரசீகத்தில் பல்லவர்கள் பயன்படுத்திய அரசச் சொல். பாரசீக எனும் ஈரானிய அரசர்களின் பெயர்களுக்குப் பின்னால் Pahlawa எனும் சொல் வருவதைக் கவனித்து இருக்கலாம். இந்தச் சொல் பல்லவர் எனும் சொல்லில் இருந்து உருவானதாகும்.

ஆகவே பரமேஸ்வரா என்பவர் பல்லவர் அரச பாரம்பரியத்தைச் சார்ந்தவர் என்பதை நினைவு கூறுகிறேன். இதைப் பற்றி இன்னும் ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறேன். 

அந்த வகையில் பரமேஸ்வரா மதம் மாறவில்லை. உலகக் கலைக் களஞ்சியங்கள் உறுதி கூறுகின்றன. (சான்று:  http://www.newworldencyclopedia.org/entry/Malacca_Sultanate)

In 1409, Parameswara married Malik ul Salih, a princess of Pasai, adopted the Persian title Shah, and styled himself as Sultan Iskandar Shah although he remained a Hindu to his death. Although he did not convert to Islam, his marriage to the Muslim princess encouraged a number of his subjects to embrace Islam.

ஒன்று மட்டும் உண்மை. பரமேஸ்வரா தன் பெயரை ஷா என்று மாற்றிக் கொண்டார். உண்மை. ஆனால் வேறு மதத்திற்கு மதம் மாறவில்லை என்பது தான் உண்மை. அதற்கான சான்றுகளும்டன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
(தொடரும்)

தெள்ளு பூச்சி

தெள்ளு பூச்சி (Corrodopsylla curvata - Shrew Flea).  Shrew என்றால் மூஞ்சுறு எலி. Flea என்றால் தெள்ளு வகையைச் சேர்ந்த உண்ணி. இதன் அசல் பெயர் மூஞ்சூறு தெள்ளுப் பூச்சி. 



Body plan of the cat flea.
Encyclopædia Britannica, Inc.

எலி, சுண்டெலி, மூஞ்சுறு எலி, அணில், பூனை, நாய் போன்ற பாலூட்டிகளை ஒட்டி அவற்றின் இரத்ததை உறிஞ்சிக் குடித்து குஞ்சுகள் பொரிக்கும். இந்தச் சிறு வகை உயிரினங்கள் இல்லாத போது தான் மனிதர்களை நாடிச் செல்லும். இது வெளிப்பக்க ஒட்டுண்ணியாகும் (ectoparasitic).

தெள்ளுப் பூச்சிகளுக்கு இறக்கைகள் இல்லை. இதன் நீளம் 0.1 லிருந்து 1 cm (0.039 லிருந்து 0.39 அங்குலம்). இதுவரை 2000 வகையான தெள்ளுப் பூச்சிகளை அடையாம் கண்டு இருக்கிறார்கள்.

 


Flea (Ctenocephalides)

10-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவை பிளேக் நோய் (bubonic plague) தாக்கியதால் மொத்த மக்கள் தொகையில் கால்வாசி பேர் இறந்து போனார்கள். இந்தப் பிளேக் நோய்க்கு எலிகள் மட்டும் காரணம் அல்ல. அந்த எலிகளை ஒட்டி வாழ்ந்த இந்தத் தெள்ளு பூச்சிகளும் ஒரு காரணம்.

ஆடு மாடுகளையும் தாக்கும் தெள்ளுப் பூச்சிகளை Ctenocephalides felis என்று அழைக்கிறார்கள். மனிதர்களைத் தாக்கும் தெள்ளுப் பூச்சிகளை (human flea - Pulex irritans) என்று அழைக்கிறார்கள். நாய்த் தெள்ளுகளுக்கு Ctenocephalides canis என்று பெயர். 



Spilopsyllus cuniculi – rabbit flea

கோழித் தெள்ளுகளுக்கு Ceratophyllus gallinae என்று பெயர். ஆப்பிரிக்க மனிதர்களைத் தாக்கும் தெள்ளுகளுக்கு Ceratophyllus niger என்று பெயர். தென்கிழக்காசிய நாடுகளில் Xenopsylla cheopis எனும் தெள்ளுண்ணி எலிகள் மூலமாகப் பரவுகின்றன.

மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை குறையும் போது அவர்கள் மீது இந்த ஒட்டுண்ணிகள் மிகையான தாக்கங்களை உண்டாக்கும்.


மனிதர்களின் தலைமுடி, அக்குள் பகுதி, மறைப் பகுதிகளில் உள்ள மயிர்களுக்கு இடையில் தஞ்சம் அடைந்து இரத்தம் உறிஞ்சி குஞ்சுகள் பொரிக்கும். 3 லிருந்து 4 நாட்களுக்குள் குஞ்சுகள் பொரிக்கும். தெள்ளுண்ணி அல்லது தெள்ளு பூச்சியைப் பார்க்கிறது கஷ்டம். எப்பவும் குதித்துக் கொண்டே இருக்கும்.

இந்த ஒட்டுண்ணி அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தைத் தாண்டும். அதாவது ஒரு மனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம். எப்போதும் துள்ளிக் கொண்டே இருக்கும். நெட்டை வாக்கில் 7 அங்குலம் குதிக்கும். நேர் வாக்கில் 11 அங்குலம் வரை துள்ளிப் பாயும்.

மூஞ்சுறு எலி

இதை ஒழிப்பதோடு மட்டும் சரியாகி விடும் விசயம் இல்லை. தொடர்ந்து கவனிக்கப்பட‌ வேண்டிய‌ விசயம். திரும்பத் திரும்ப‌த் தெள்ளு வரலாம். சுத்தம் செய்ய செய்ய வந்து கொண்டே இருக்கும்.

துணிகளை வெயிலில் காய‌ போட்டாலும் பிரயோசனம் இல்லை. இவற்றுக்கு வெயிலோ, வெப்பமோ எதுவும் செய்வது இல்லை. ஒரு தடவை துணிகளில் அல்லது பலகை இடுக்குகளில் முட்டையிட்டால் அது பொரிக்கும். 

 

பின்னர் திரும்ப‌ கடிக்க ஆரம்பிக்கும். மனித இரத்தம் மற்ற உயிரினங்களைக் கடித்து இரத்தம் குடித்து முட்டைகள் போடும்.

ஒரு தெள்ளுண்ணி 30 லிருந்து 35 முட்டைகள் போடும். இவற்றின் வாழ்நாள் 7 லிருந்து 8 மாதங்கள். இந்தக் காலத்தில் உணவு இல்லை என்றாலும் பட்டினியாகவே இருக்கும். சந்தர்ப்பம் வரும் வரை அமைதியாகக் காத்து இருக்கும்.



Human flea - Pulex irritans

ரச‌ கற்ப்பூரம் பொடி செய்து துணிகளில் தூவினால் இந்தப் பூச்சி சாகும் என்று சொல்ல முடியாது. தெள்ளு ஒரே இடத்தில் இராமல் துள்ளிக் கொண்டே இருக்கும். வாசனை பொறுக்க‌ முடியாமல் கட்டிலிருந்து விலகி இருக்கலாம். 


கற்பூர‌ வாசனை தீர்ந்ததும் மீண்டும் வரும். எலுமிச்சை சாறுக்கு விலகி இருக்கும். வாடை மறைந்ததும் மீண்டும் வரும். தாய்ப் பூச்சி செத்தாலும் அதன் முட்டைகள் இருக்கும். 



தற்காலிகமாக‌ insect repellent பயன்படுத்தலாம். தெள்ளுக்கும் சேர்த்த‌ மருந்து தானா என்பதைக் கவனித்து வாங்குங்கள். இந்த மருந்தும் 6 மணி நேரத்தில் வீரியம் இழந்துவிடும்.

தெள்ளு கட்டிலில் மட்டும் இருப்பது இல்லை. கட்டிலின் அடியில், கதவு இடுக்குகளில் கூட‌ ஒளிந்திருக்கும். முழு வீட்டிற்கும் சிகிச்சை செய்தாக‌ வேண்டும். ஒரு தட‌வை வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்யுங்கள். வேண்டாத‌ பொருட்களை அப்புறப் படுத்துங்கள். படுக்கை மெத்தைகளை எரித்து விடுங்கள்.

நீர்த் தொட்டிகளை அடிக்கடி இடம் மாற்றி வையுங்கள். முடிந்தால் தொட்டிகளைக் ஒட்டுக் கால்களின் மேல் வைக்கலாம். இதற்கு என‌ உள்ள‌ மருந்து தெளிப்பாளர்களைப் பிடித்தால் வீட்டைச் சுற்றி உள்ள‌ பகுதிகளுக்கும் மருந்து தெளித்து விடுவார்கள்.

(Because fleas are able to leap horizontal or vertical distances 200 times their body length and to develop an acceleration of 200 gravities, they have been described as insects that fly with their legs.)

(சான்று: https://www.britannica.com/animal/flea#ref256631)

02 செப்டம்பர் 2017

நீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி

சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் மலாய் உயர்நிலைப்பள்ளி (Sang Nila Utama Secondary School). 1961ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி சிங்கப்பூர் கல்வியமைச்சர் யோங் நியோக் லின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
 

இந்தப் பள்ளி சிங்கப்பூர் அல்ஜுனிட் சாலையில் (Upper Aljunied Road) அமைந்து உள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்தப் பள்ளி $700,000 செலவில் கட்டப்பட்டது. 1600 மாணவர்கள் பயிலும் வசதி. 



1961-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போது 560 மாணவர்கள் பயின்றனர். ஆண்களுக்கு 9 வகுப்புகள். பெண்களுக்கு 5 வகுப்புகள்.
சான்று: http://eresources.nlb.gov.sg/history/events/4bf07e40-41c4-48fd-964b-62404adc14b5