09 செப்டம்பர் 2019

இன்றைய சிந்தனை 08.07.2019 - அலெக்ஸ்சாண்டர் எடுக்கும் முடிவு

நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது. 
ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன் - Alexander the Great


மனித உயிர் விலை மதிப்பற்றது. அதனை இழப்பது என்றால் அது உன் நாட்டிற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று சொன்னவர் அலெக்ஸாண்டர்.

........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Manickam Nadeson அது அலெக்ஸாண்டர் சொன்னது, நீங்க என்னா சொல்ல வர்ரீங்க ஐயா சார்
 
 
Muthukrishnan Ipoh நான் நினைத்ததை அவர் சொல்லிட்டாரு... வேறு என்னங்க நான் சொல்ல...
 
 
Manickam Nadeson அதானே, அலெஸ்சாண்டர் எப்படி தானா சொல்லி இருக்க முடியும், இப்படி சூப்பரா சொல்ல உங்கள தவிர வேறு யாரால முடியும். நன்றி ஐயா சார்.
 
 
பாரதி கண்ணம்மா அருமையான வார்த்தைகள் 🙏
 
 
Doraisamy Lakshamanan முயற்சி திருவினையாக்கும் என்பதே வள்ளுவம்...
வெற்றியே தங்களுக்கு! வாழ்த்துக்கள் ஐயா...
 
 
Muthukrishnan Ipoh உண்மை வாசகம் ஐயா... முயற்சியை மட்டும் கைவிடவே கூடாது... யார் உங்களைக் கைவிட்டாலும் முயற்சியை மட்டும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்...
 
 
Muthukrishnan Ipoh தஞ்சை பெரிய கோயில்... ஓர் உலக அதிசயம்... இதை உலகின் எட்டாவது அதிசயமாகச் சேர்க்க வேண்டும்...
 
 
Sheila Mohan  காலை வணக்கம் சார்..தன் முனைப்பு வாசகம். நன்றிங்க சார்... 
 
 
Muthukrishnan Ipoh உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப் போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால் தான் அவரை அலெக்ஸாண்டர் தி கிரெட் என்று இன்றும் நினைவில் வைத்து இருக்கிறது வரலாறு.
மாவீரன் அலெக்ஸாண்டர் கி.மு 323-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி தன் 33-ஆவது வயதில் காலமானார். இந்த உலகமே தனக்கு போதாது என்று சொன்னவருக்கு ஆறடி நிலமே போதுமானதாக இருந்தது என்று அலெக்ஸாண்டரை வருணிக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

அலெக்ஸாண்டர் பேராசைக்காரன் என்ற
பொருளை அந்த வரிகள் தந்தாலும் நாம் அந்த மாவீரனின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். அவர் ஒட்டுமொத்த உலகையும் வெல்ல நினைத்தது உண்மைதான்.

ஆனால் வெற்றிகள் பல குவிந்தபோதும் அலெக்ஸாண்டர் அகம்பாவமோ ஆணவமோ கொள்ளவில்லை. மாறாக தான் கைப்பற்றிய தேசங்களையும் மன்னர்களையும் வீரர்களையும் கண்ணியமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது.

உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப்போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால் தான் அவரை அலெக்ஸாண்டர் தி கிரெட் என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு.

அப்படிப்பட்ட மாவீரனுக்கு வீரம் பலத்தை தந்தது. விவேகம் புகழைத் தந்தது. வீரமும் விவேகமும் அலெக்ஸாண்டரிடம் இருந்ததால் தான் அவருக்கு அந்த வானமும் வசப் பட்டது. இந்த நியதி நமக்கும் நிச்சயம் பொருந்தும்.

அலெக்ஸாண்டரைப் போல் நமக்கு வீரமும் விவேகமும் இல்லை என்றாலும் நாம் எண்ணுகின்ற இலக்கினை நோக்கி விடாமுயற்சியோடும் கடின உழைப்போடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படும்.

நன்றி: யாழ்அன்பு, August 5, 2012
 
Image may contain: 1 person
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக