09 செப்டம்பர் 2019

இன்றைய சிந்தனை 13.07.2019 - நிறை காண்பது தெய்வீகம்

அடுத்தவரைக் குறை சொல்வதில் நம்மில் பலருக்கு மகிழ்ச்சி. அதிலும் நாம் சரியாகச் செய்து அடுத்தவர் தவறாகச் செய்து விட்டால் அவ்வளவுதான். அவர் தொலைந்தார்.


சிலருக்கு எதைச் செய்தாலும் சரியாக வராது. இது சரி இல்லை. அது சரி இல்லை என்று சொல்லிச் சொல்லியே உயிரை வாங்கி விடுவார்கள்.

தனக்கும் சரியாகச் செய்யத் தெரியாது. செய்கிறவர்களையும் நிம்மதியாகச் செய்ய விடமாட்டார்கள். அடுத்தவர்களை மட்டம் தட்டுவதே அவர்களின் தூரநோக்கு.

பவளத்திலும் பழுது உள்ளது. வைரத்திலும் காயம் உள்ளது. பிறருடைய குற்றங்களைப் பார்ப்பதைவிட நம்முடைய குற்றங்களைப் பார்ப்போம். குறை காண்பது மனிதம். நிறை காண்பது தெய்வீகம்.

...........................
பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Sheila Mohan இனிய காலை வணக்கம் சார்.. குறை காண்பது மனிதம், நிறை காண்பது தெய்வீகம்..அருமையான வரிகள் சார் !!!!
 
 
Muthukrishnan Ipoh உண்மை தான்... அதே சமயத்தில் குறையே காணாமல் புகழ்ந்து கொண்டே இருந்தாலும் பிரச்சினை தான்... இவன் என்ன லூஸு என்று மனசுக்குள் நினைத்துக் கொள்வார்கள்... நிறைகள் குறைகள் சொன்னாலும் பார்த்துச் சொல்ல வேண்டும்...
 
 
Raghawan Krishnan If the thief doesn't realize his mistake,its very difficult to change a person. What Yb MK says is 100% rite.
 
 
M R Tanasegaran Rengasamy நம்மிடம் குறை இருக்கலாம் அதை நல்ல விதமாகச் சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்ளலாம். அதே வேளை பிறர் புரியும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் துணிவும் வேண்டும்.  . இது என்னுடைய கருத்து.
 
 
Vanaja Ponnan அடுத்தவர்களை ஆராய்வதை விட...நம்மையே நாம் ஆராய்வது சிறப்பு....
 
 
Doraisamy Lakshamanan இனிய கருத்துக்களை நாளும் எடுத்துரைப்போம்!
இதுவே, நாம் போற்றும் நம் இனத்திற்கு நாம் ஆற்றும் நற்பணி, ஆம் உறவுகளே!
 
 
Neela Vanam எல்லோரும் படித்து விட்டு, பார்த்து விட்டு கம்மென்று இருந்து விட்டால்!!!
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக