12 ஏப்ரல் 2020

மலாக்கா மகா மைந்தர் பரமேஸ்வரா - 1

பரமேஸ்வரா என்பவர் யார்? அவர் எங்கு இருந்து வந்தார்? ஏன் மலாயாவுக்கு வந்தார்? மலாக்காவைத் தோற்றுவித்தவர் அவர் தானா? அவர் மதம் மாறினாரா? அவரின் வரலாற்றுப் படிவங்கள் காணாமல் போவது உண்மைதானா? அவர் கடைசியாக எங்கே வாழ்ந்தார்? அவர் எங்கே இறந்தார்? எங்கே புதைக்கப் பட்டார்? இவற்றுக்கான உண்மைச் சான்றுகளை அலசி ஆராய்ந்து பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இது ஒரு நீண்ட வரலாற்று ஆவணத் தொடர். பின்னாட்களில் பரமேஸ்வராவைப் பற்றிய உண்மையான உண்மைகளுக்கு உண்மைச் சான்றுகளாக அமையும்.

இந்தக் கட்டுரைத் தொடரை அடித்தளமாகக் கொண்டு ‘மலேசிய இந்தியர்கள் வரலாறு - பரமேஸ்வரா’ எனும் வரலாற்று நூல் எழுதப்பட்டு உள்ளது.

 

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு...
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன...
பதினாறும் பாட சுகமானது...


என்று கண்ணதாசன் எழுதிச் சென்றார்.

அவருக்கு முன்னாலேயே பரமேஸ்வர ராகம் எனும் ஒரு ராகம் இருந்து இருக்கிறது. அந்த ராகம் தான் மலாக்கா வரலாற்றில் பதினேழாவது ராகமாக சுவரங்கள் பாடி இருக்கிறது.

ஏழு சுவரங்களில் அழகிய ராகம் சம்பூர்ண ராகம்.

ஆறு சுவரங்களில் அதிசய ராகம் சாடவ ராகம்.

ஐந்து சுவரங்களில் அற்புத ராகம் ஔடவ ராகம்.

நான்கு சுவரங்களில் அபூர்வ ராகம் வக்ர ராகம்.

மூன்று சுவரங்களில் ஆனந்த ராகம் நவநீத ராகம்.

அத்தனை ராகங்களிலும் அப்போதும் எப்போதும் ஓர் அம்சவர்த்தினி ராகம் உள்ளது. அந்த ராகம் தான் பரமேஸ்வரா ராகம்.




பரமேஸ்வரா ராகம்

இந்தப் பரமேஸ்வர ராகம் மலேசிய வரலாற்றில் என்றைக்கும் மறைக்க முடியாத ஓர் அபூர்வ ராகம். ஒரு காலத்தில் அது ஒரு தெய்வீக ராகம்.

இருந்தாலும் இப்போதைக்கு அந்த ராகம் வேதனையின் விளிம்பில் கண்ணீர் வடிக்கும் ஒரு விசும்பல் ராகமாக மாறி வருகிறது.

சுருங்கச் சொன்னால் இந்தக் காலத்து வரலாற்று நூல்களில் இருந்தும் கல்விசார் நூல்களில் இருந்தும் கனவுகளாய்க் கரைந்து போகின்ற ஒரு காம்போதி ராகமாய் மாறி வருகிறது.

சுருங்கச் சொன்னால் இந்தக் காலத்து வரலாற்று நூல்களில் இருந்தும் கல்விசார் நூல்களில் இருந்தும் கனவுகளாய்க் கரைந்து போகின்ற ஒரு காம்போதி ராகமாய் மாறி வருகிறது.




இப்படிச் சொல்வதற்காக மன்னிக்கவும். மனம் வேதனைப் பட்டு கசியும் ஆதங்கத்தின் வெளிப்பாடுகள். சன்னமாய் ஆர்ப்பரிக்கின்றன.

இப்படிச் சொல்வதற்காக மன்னிக்கவும். மனம் வேதனைப் பட்டு கசியும் ஆதங்கத்தின் வெளிப்பாடுகள். சன்னமாய் ஆர்ப்பரிக்கின்றன.

காட்டில் ஒரு மனிதன் காணாமல் போகலாம். அப்படி காணாமல் போன அவனைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம். உடல் அடையாளம் தெரியாமல் போனாலும் பரவாயில்லை. உருவத்தையாவது பார்க்கலாமே. உற்றுப் பார்த்து உண்மையான வடிவத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு மனிதனின் பெயரே காணாமல் போனால் என்னங்க செய்வது. அப்படித்தான் நடக்கிறது. நடந்து கொண்டும் வருகிறது. சொல்லும் போது வேதனையாக இருக்கிறது.

கடல் தாண்டிய கரைகளில் பரமேஸ்வராவின் வரலாறு என்பது அத்திம் மேடு என்றால் அங்கே அது பௌர்ணமி வெளிச்சத்தின் கோளாறு. அதுவே கடல் தாண்டா இந்தக் கரைகளில் பரமேஸ்வராவின் வரலாறு என்பது ஓர் அமாவாசைக் கோளாறு.



தஞ்சோங் துவான் - இந்த இடத்தில் பரமேஸ்வராவின் பூதவுடல்
சமாதி அடைந்து இருக்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர்களின் ஐயப்பாடு

ஆக பட்ட பகலில் பசுமாடு தெரியாதவர்களுக்கு இருட்டில் திரியும் எருமை மாடு தெரியப் போவது இல்லை. அதற்கு விளக்கம் தேவை இல்லை என கருதுகிறேன்.

கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று சொன்னால் அது ஓர் உவமானத் தொடர்.

ஆனாலும் எத்தனை நாளைக்குத் தான் கொட்டாங்கச்சிக்கு அடியில் ஒளிந்து கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று இராமாயணம் பாடிக் கொண்டு இருக்க முடியும். சொல்லுங்கள்.

சில வரலாற்றுச் சித்தர்கள் அப்படித் தான் வரலாற்று உண்மைகளை மறைத்துத் திரித்து வாய்க்கு வந்தபடி கதை பேசுகிறார்கள். இல்லாதா ஒன்றை இருப்பதாக எழுதுகிறார்கள். பரவாயில்லை என்று சொல்ல மனசும் வரவில்லை.




உண்மை என்பது என்றைக்கும் உண்மை தான். அந்த உண்மை மறையக் கூடாது. மறைக்கப் படவும் கூடாது. அவை தான் நம் நெஞ்சங்களை நெருடிச் செல்லும் நியாயமான வேண்டுதல்கள்.

உருவாக்கி விட்டவன் ஒருவன். பெயரை வாங்கிக் கொள்வது வேறு ஒருவனா. பெற்ற தகப்பனுக்குப் பதிலாக வேறு ஒருவரின் பெயரைப் போடச் சொன்னால் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா?

ஆகவே பரமேஸ்வராவின் வரலாறு நிலைக்க வேண்டும். காலம் பூராவும் கதைகள் சொல்ல வேண்டும்.

அது மட்டும் அல்ல. பரமேஸ்வரா எனும் மனிதர் தான் மலாக்காவைத் தோற்றுவித்தார் எனும் உண்மை நிலைக்க வேண்டும். எதிர்காலத்து தலைமுறையினர் இந்த உண்மைகளைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

அந்த வரலாற்று உண்மை வரலாறு இருக்கும் வரையில் நிலைத்துப் பயணிக்க வேண்டும். அதை நிலைபெறச் செய்ய எதிர்காலத்துச் சந்ததியினர் முயற்சிகள் செய்ய வேண்டும். அதுவே நம்முடைய விருப்பம்.




பரமேஸ்வரா வாழ்க்கைச் சுருக்கம்

மலாக்காவைத் தோற்றுவித்தவர் யார் எனும் கேள்வியை முன் வைக்கிறேன். முக்கியமான ஒரு கேள்வி. மலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தோற்றுவித்தாரா? அல்லது ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவர் தோற்றுவித்தாரா? அல்லது சுல்கார்னாயின் ஷா என்பவர் தோற்றுவித்தாரா? அல்லது மகா அலெக்ஸாண்டர் என்பவர் தோற்றுவித்தாரா?

இது ஒரு பெரிய சர்ச்சைக்கு உரிய கேள்வி. பலரும் பலவிதமான பதில்களையும்; அந்தப் பதில்களுக்குப் பலவிதமான புராணக் கதைகளையும் முன் வைக்கின்றார்கள். அந்தக் கதைகள் கேட்பதற்கு மிகவும் சுவராஸ்யமாகத் தான் உள்ளன. இல்லை என்று சொல்லவில்லை.

ஆனாலும் மலாக்காவைத் தோற்றுவித்தவரைப் பற்றிய கதைகளில் மகா அலெக்ஸாந்தர் கதை தான் சற்றே சர்ச்சை. அதை அப்படியே சற்று ஒதுக்கி வைத்து விடுவோம்.

மலாக்காவைத் தோற்றுவித்தவரைப் பற்றிய சர்ச்சை உள்நாட்டு வரலாற்றில் ஒரு சின்னத் திரைக் காவியம் போல அரங்கேற்றம் கண்டு வருகிறது. அன்றும் சரி; இன்றும் சரி; அந்தச் சர்ச்சை ஒரு தொடர் நெடும் காவியமாய் நெளிந்து நீண்டு கொண்டுதான் போகிறது.




பரமேஸ்வரா எனும் சொல் ஒரு தமிழ்ச் சொல் தொடர். பரமா (Parama) எனும் சொல்லும் ஈஸ்வரா (Ishvara) எனும் சொல்லும் இணைந்து உருவானதே பரமேஸ்வரா (Parameswara) எனும் சொல் தொடர் ஆகும். இந்துக் கடவுளான சிவனுக்கு மற்றொரு பெயர் ஈஸ்வரன்.

(1.Tsang, Susan; Perera, Audrey)

முதலில் பரமேஸ்வரனின் வாழ்க்கை வரலாற்றின் சுருக்கத்தைப் பார்த்து விடுவோம்.

*    1375-ஆம் ஆண்டில் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja) என்பவர் சிங்கப்பூர் ராஜாவாக இருந்தார். இவர் சிங்கப்பூரை 1389-ஆம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்த ஸ்ரீ மகாராஜாவிற்கு மகனாகப் பிறந்தவர் தான் பரமேஸ்வரா.

*    1389-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சிற்றரசில் அரசியல் குழப்பங்கள். அதனால் ஸ்ரீ மகாராஜாவின் பொறுப்புகளை அவருடைய மகனான ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா ஏற்றுக் கொண்டு அரியணை ஏறினார். ஸ்ரீ மகாராஜா பரமேஸ்வரா 1389-ஆம் ஆண்டில் இருந்து 1399-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்து வந்தார்.
(2.Windstedt, Richard Olaf)




*    1399-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து வெளியேறினார்.

*    1401-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா மலாக்காவைத் தோற்றுவித்தார்.

*    1405-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்றார். மிங் அரசரின் நட்புறவைப் பாராட்டி அவரின் ஆதரவைப் பெற்றார்.

*    1409-ஆம் ஆண்டில் இந்தோனேசியா சுமத்திராவில் இருந்த பாசாய் எனும் சிற்றரசின் இளவரசியைப் பரமேஸ்வரா திருமணம் செய்து கொண்டார்.

*    1411-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா சீனாவிற்கு மறுபடியும் சென்றார். மிங் அரசரின் பாதுகாப்பை நாடினார்.

*    1414-ஆம் ஆண்டில் பரமேஸ்வரா தன்னுடைய 69 அல்லது 70-ஆவது வயதில் காலமானார்.
(3.Miksic, John N.)

பரமேஸ்வரா சிங்கப்பூருக்கு எப்படி வந்தார். இவருடைய பாட்டனார் முப்பாட்டனார்கள் சிங்கப்பூருக்கு எப்படி வந்தார்கள். ஏன் வந்தார்கள். எப்படி வந்தார்கள். அதைக் கொஞ்சம் பார்ப்போம்.




ஒரு காலக் கட்டத்தில் சுமத்திரா தீவின் கிழக்குப் பகுதியை ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்தது. அந்தப் பேரரசின் கீழ் பலேம்பாங் சிற்றரசு இயங்கி வந்தது.
அந்தச் சிற்றரசின் அரசராக பரமேஸ்வராவின் முப்பாட்டனார் நீல உத்தமன் இருந்தார். இவர் ஏன் சிங்கப்பூருக்கு வந்தார். இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்திய அரச பரம்பரையினர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்தோனேசியாவின் பாலி தீவை ஆட்சி செய்த வர்மதேவா பேரரசைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்போது தான் பரமேஸ்வராவின் உண்மையான வரலாற்றுப் பின்னணி தெளிவாகத் தெரிய வரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

References:

(1)  Tsang, Susan; Perera, Audrey (2011), Singapore at Random, Didier Millet, p. 120, ISBN 978-9-814-26037-4

(2) Windstedt, Richard Olaf (1938), "The Malay Annals or Sejarah Melayu", Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. The Branch, XVI.

(3)  Miksic, John N. (15 November 2013). Singapore and the Silk Road of the Sea, 1300_1800. NUS Press. ISBN 978-9971695743.

(தொடரும்)

All rights reserved. No part of this publication may be reproduced without written permission from the author.



பேஸ்புக் பதிவுகள்
16 April 2020


Parimala Muniyandy: இப்போதைய சூழ்நிலையில் தாங்கள்தான் எங்களின் வரலாற்று ஆசிரியர்.நன்றியும் வாழ்த்துகளும்🙏🙏🙏

Muthukrishnan Ipoh: வரலாற்று ஆசிரியர் பதவி... மிக்க மகிழ்ச்சி... பொறுப்புடன் சேவை செய்ய உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன் ✌️😃

Malathi Nair: Anna i also want a book for my children to know Parameswara history.thank.plis let me know the price.

Muthukrishnan Ipoh: விரைவில் வெளியீடு காணப்படும்... கண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன்... நன்றிங்க...

Thanabaal Varmen: வரலாற்றை திரும்பத் திரும்ப பதிவுச் செய்வதால், இளம் தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது; வாழ்த்துகள்.

Muthukrishnan Ipoh: அங்கேதான் நிற்கிறோம்... நம் குழந்தைகளுக்கு நம்முடைய உண்மையான வரலாற்றை நினைவுப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்... எது உண்மை என்பதும் அவர்களுக்குத் தெரிந்து இருக்க வேண்டும்...

Vally Jeeva: Sir i want the novel Parameswara

Muthukrishnan Ipoh: இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக வெளிவந்து விடும்... உங்களுக்கு ஒரு நூல் அனுப்பி வைக்கிறேன்... நன்றி....

Sri Kaali Karuppar Ubaasagar: அருமையான பதிவு அண்ணா..நன்றி🙏🏼

Muthukrishnan Ipoh: மிக்க நன்றி...

Sri Kaali Karuppar Ubaasagar >>> Muthukrishnan Ipoh: ✌️

Sush Meetha: Tenor 🙏

Sri Kaali Karuppar Ubaasaga: ✌️

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி...

Prem Rani: Waiting eagerly for the book sir.

Vejaya Kumaran: puttagham ware en waalthugal annaa (புத்தகம் வர என் வாழ்த்துகள் ஐயா)

M R Tanasegaran Rengasamy: நமக்கு தெரிந்தது எல்லாம் பரமேஸ்வரா பின்னாளில் மதம் மாறினார் என்பதுதான். அவரின் முழுமையான பின்னணி கொண்ட நூல் இருப்பின் நல்லது. வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக இருக்கும்.

Komathi Arumugam: அருமை..நூலுக்காக காத்திருக்கிறேன் ஐயா

Muthukrishnan Ipoh: செலவுகளை ஏற்றுக் கொண்டு நூலை வெளியிட தயாராக இருக்கிறார்கள்... நூலை முடிக்க முடியாமல் போராடுகிறேன். இந்த வருடம் கண்டிப்பாக வந்து விடும்...

Jainthee Karuppayah >>> Muthukrishnan Ipoh: விபரக் குறிப்பு சொன்னால் போதும் நான் எழுதி தாரேன்... சும்மா...

Muthukrishnan Ipoh >>> Jainthee Karuppayah: ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி...

Supramaniam Ramasamy: பரமேசுவரா தொடர்பான மெய்யான வரலாற்றைப் பதிவு செய்து கொண்டு இருக்கும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் ஐயா.

Thinagar Raman:
ஐயா.. நீங்கள் ஒவ்வொரு தடவையும் பல உண்மையான தடயங்களைத் தெளிவு படுத்துகிறீர்கள்... தொடரட்டும் உங்கள் சேவை... மிக்க மகிழ்ச்சி.

Muthukrishnan Ipoh:
மகிழ்ச்சி ஐயா...



3 கருத்துகள்:

  1. Most needed information for our future generations..... Waiting eagerly for the rest of the story sir. Tq for your great effort

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா. உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அதில் இந்த பரமேஸ்வராவும் அடங்கும். இம்மாதிரியான உண்மைகளை உரக்கச்சொல்லும் கட்டுரைகள நாளை நம் வரலாற்றை இங்கு நிலைபெற வைக்கும். அரைவேக்காடுகள் இன அடிப்படையில் வரலாற்றை மறைத்தும் மாற்றியும் வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு