12 ஏப்ரல் 2020

ஹைட்ராக்சி குளோரோ குயின்: இந்தியாவிற்குப் புகழாரம்

தமிழ் மலர் - 11.04.2020
கொரோனா வைரஸ் நோய்க்குத் தற்காலிகமான நிவாரண மருந்து ஹைட்ராக்சி குளோரோ குயின். கொரோனா தாக்கத்தை 50 விழுக்காடு கட்டுப் படுத்தும் தன்மை கொண்டது. முழுமையாகக் குணப் படுத்தும் ஆற்றல் இல்லை என்றாலும் ஓரளவிற்குக் கட்டுப்படுத்தும் சிறப்பு கொண்டது. ஆய்வுகள் சொல்கின்றன.  




இந்த மருந்திற்குத் தான் இப்போது உலகம் முழுமைக்கும் வாய்ச் சண்டை பேய்ச் சண்டைகள். ஒரு பக்கம் அமெரிக்கா, 'விட்டேனா பார்’ என்று இந்தியா மீது எகிறிப் பாய்ந்தது. ’நீ என்ன சொல்ல நான் என்ன கேட்க’ என்று அமெரிக்காவிற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

இன்னொரு பக்கம் பார்த்தால் சீனாவின் கெடுபிடிகள். மருந்து தயாரிப்பிற்கான மூலப் பொருட்களை இந்தியாவிற்குத் தர மாட்டோம் என்று சீனாவின் சிகப்புக் கொடிகள். இதில் கியூபா நாடு பல கோடி மாத்திரைகளை இரகசியமாக ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் பார்சல் பண்ணிய கில்லாடித் தனங்கள்.

இந்தக் களேபரத்தில் பிரேசில் நாட்டிற்கு இந்தியா பல கோடி மதிப்புள்ள மாத்திரைகளை அனுப்பி வைத்தது. மனம் குளிர்ந்த பிரேசில் நாட்டு அதிபர் நன்றி சொல்லப் போய்... விசயம் வெளியே வர... பல நாடுகளின் முணுமுணுப்புகள். எங்களுக்குக் கொடுக்காமல் பிரேசிலுக்குக் கொண்டு போய்க் கொடுத்து இருக்கிறார்கள். இது ஐரோப்பிய நாடுகளின் சலசப்புகள்.




இன்னொரு விசயம். உலகில் பின்தங்கிய நாடுகளில் முதலிடம் வகிப்பவை ஆப்பிரிக்காவின் மூன்றாம் உலக நாடுகள். பெயர்கள் வேண்டாமே. நீண்ட பட்டியல்.

அந்த ஏழை நாடுகளுக்கு இந்தியா இலவசமாகப் பல கோடி மாத்திரைகளை வல்லரசுகளுக்குத் தெரியாமல் அனுப்பி இருக்கிறது. இந்த விசயம் ஊடகங்களில் கசிந்த பின்னர் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது மல்லுக்கு நின்றார்.

உலகத்திலேயே அதிக அளவில் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்தை இந்தியா தயாரிக்கிறது. உலகத் தேவைக்கான 70 விழுக்காட்டு மருந்ததைத் தயாரிக்கிறது.

அது மட்டும் அல்ல. ஓர் ஆண்டுக்கு 40 டன் ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்து தயாரிப்பதற்கான தாவரக் கச்சா பொருட்களையும் இந்தியா சொந்தமாக உற்பத்தி செய்கிறது. இதுவும் பற்றாமல் தான் சீனாவிடம் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 120 டன் தாவரக் கச்சா பொருட்களை இறக்குமதி செய்து வந்தது. அதற்கும் இப்போது சீனாவின் தடை.




மருந்து தயாரிக்கும் துறையில் இந்தியாவை ஒரு சாதாரண நாடாகத் தான் பல நாடுகள் நினைத்தன. ஆனால் இப்போதுதான் இந்தியாவின் மருத்துவ ஆற்றல், மருத்துவத் திறன், மருத்துவப் பெருமை வெளியுலகத்திற்குத் தெரிய வருகிறது. இந்தக் கொரோனா கெடுபிடி நேரத்தில் இந்தியாவின் மனிதாபிமான உணர்வுகளுக்கு தலை வணங்குகிறோம். வாழ்க பாரதம்.

மிக அண்மையில் அமெரிக்கா 29 மில்லியன் மாத்திரைகளை இந்தியாவிடம் கேட்டது. இந்தியாவும் முகம் கோணாமல் பகுதிப் பகுதியாய் அனுப்பிக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் அல்ல.

இன்றையக் கட்டத்தில் உலகில் 30 நாடுகளுக்கு இந்தியாவின் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நாடுகளில் ஆசியாவின் இந்தோனேசியா, தாய்லாந்து, தென் கொரியா, மலேசியா போன்ற நாடுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஐரோப்பாவில் ஜெர்மனி முதலிடம் வகிக்கிறது. 




இந்தியாவில் சைடஸ் கடிலா (Zydus Cadila); இப்கா (Ipca) எனும் இரு பெரும் மருந்து நிறுவனங்கள் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை முழுமூச்சாகத் தயாரித்துக் கொண்டு இருக்கின்றன. 24 மணி நேரத்திற்கும் அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

முன்பு ஒரு மாதத்திற்கு 3 - 5 டன் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளைத் தயாரித்த சைடஸ் கடிலா நிறுவனம், இப்போது 30 டன் மாத்திரைகளைத் தயாரிக்கிறது. உலகளாவிய நிலையில் அதிகமாக மாத்திரைகள் தேவைப் பட்டால் 50 டன்கள் வரை தயாரிக்க முடியும் என்றும் அந்த நிறுவனம் சொல்கிறது.

இதில் இப்கா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 100 மில்லிய்ன் மாத்திரைகளைத் தயாரிக்க முடியும்.

இந்த இரு நிறுவனங்களும் ஒரே மாதத்தில் 25 கோடி மாத்திரைகளைத் தயாரித்து உள்ளன. ஒவ்வொரு மாத்திரையும் 200 மில்லி கிராம் அளவு கொண்டது. 




இந்த ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறப் படுகிறது. அதனால் தான் அதற்கு இவ்வளவு கிராக்கி.

மலேரியா, முடக்குவாதம், லூபஸ் உள்ளிட்ட சில நோய்களுக்கான எதிர்ப்பு வைரசாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் உள்நாட்டுத் தேவைக்கு முதலிடம் வழங்கப் படுகிறது.

ஒருவர் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர் என்றால் அவர் முறைப்படி 14 மாத்திரைகளைச் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அந்த வகையில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சு பல கோடி மாத்திரைகளுக்கு ஆர்டர் செய்து உள்ளது.

அந்த மருந்துகளைக் கொண்டு ஏறக்குறைய 90 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கலாம்.




உலக நாடுகளைக் கதிகலங்கச் செய்யும் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதற்கு இதுவரையிலும் சரியான மருந்துகள் எதுவும்  கண்டுபிடிக்கப் படவில்லை. இருப்பினும் அதை கட்டுப்படுத்த முடியும். முன்பு மலேரியா நோய்க்கு அந்த ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கு அமெரிக்கா திட்டம் போட்டது. அதற்கு இந்தியா முதலில் மறுப்பு தெரிவித்து தடை விதித்தது.

அப்புறம் அதிபர் டிரம்பின் ஒரு சின்ன மிரட்டல். அப்புறம் என்ன. உன்னோடு மல்லுக்கு நின்று ஆகப் போவது ஒன்றும் இல்லை என்று இந்தியா ஏற்றுமதித் தடையை நீக்கியது.

அதிபர் டிரம்பிற்கு ரொம்ப சந்தோஷம். தலைகால் தெரியாமல் இந்தியாவைப் புகழ்ந்து தள்ளிவிட்டார். அவரோடு பிரேசில நாடும் சேர்ந்து கொண்டது. இந்தியாவிற்கு நன்றி மாலைகள் குவிந்த வண்ணம் உள்ளன.



President of Brazil - Jair Bolsonaro

அதிபர் டிரம்ப் இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி டுவிட்டர் செய்து இருக்கிறார். அதில், “அசாதாரணமான சூழலில்தான் நண்பர்களுக்கு இடையே அதிகமான ஒத்துழைப்பு தேவை. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த இந்தியாவுக்கு நன்றி. இந்திய மக்களுக்கு நன்றி.

இந்த உதவியை அமெரிக்க மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டும் அல்ல... உலக மனித நேயத்திற்கும் உதவி இருக்கிறீர்கள். உங்கள் வலுவான தலைமைத்துவத்திற்கும் நன்றி” என்று பதிவு செய்து உள்ளார்.

அதற்குப் பிரதமர் மோடி பதில் அனுப்பினார். ‘இந்தியா - அமெரிக்கா உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் வலுவாக உள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனித குலத்திற்குத் தேவையான எல்லாவித உதவிகளையும் இந்தியா செய்யும்’ என்று டுவிட்டர் செய்து இருக்கிறார்.




அடுத்து பிரேசில் நாட்டு அதிபர் சாயர் பொல்சோனாரு (Jair Bolsonaro) நன்றி தெரிவித்து இருக்கிறார். ’கோவிட்-19 தொற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவைப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மூலப் பொருட்களை இந்தியாவிடம் இருந்து பெற்றோம். இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் மிக்க நன்றி’ என்று டுவிட்டர் செய்து இருக்கிறார்.

பிரேசில் நாட்டு அதிபர் இந்தியாவிடம் இருந்து உதவி கிடைத்த போது இராமாயணத்தை உவமைக் காட்டினார்.

இராமனின் சகோதரர் இலட்சுமணன். இவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அனுமான் இமயமலையில் இருந்து புனித மருந்தைக் கொண்டு வந்தார். அதே போலத் தான் பிரேசில் நாட்டு மக்களுக்கும் இந்திய மக்கள் உதவி செய்து இருக்கிறார்கள் என்று டுவிட்டர் செய்து இருக்கிறார்.

கொரோனா நோய்க்கு ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைப் பயன்படுத்த உலகின் பல மருத்துவ ஆராய்ச்சிக் கழகங்கள் பரிந்துரை செய்து உள்ளன. ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தின் வணிகப் பெயர் பிளேக்கனில் (Plaquenil).

ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்து மலேரியாக் காய்ச்சலுக்குக் கைகண்ட மருந்து. அந்த மருந்தில் கொயினா மூலிகை (Quinine) சேர்க்கப் படுகிறது. கொயினா மூலிகை சிஞ்சோனா (Cinchona) எனும் மரத்தின் பட்டைகளில் இருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. 




இந்த மூலிகை மரம் தென் அமெரிக்காவின் பெரு நாட்டின் பூர்வீகம். இருந்தாலும் இந்தியாவில் அதிகமாகப் பயிர் செய்யப் படுகிறது. அங்குள்ள மரங்களில் இருந்து பட்டைகளை வெட்டி ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைத் தயாரிக்கிறார்கள்.

கடந்த செவ்வாய்க் கிழமை (07.04.2020) ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தைத் தயாரிக்க இஸ்ரேல் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா  5 டன் மூலப் பொருட்களை அனுப்பி வத்தது.

கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, ஐந்து வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எந்த மருந்துமே முழுமையாகக் குணப்படுத்தும் என்று சொல்ல இயலாது.

அந்த ஐந்து வகையான மருந்துகள்:

1. குளோரோ குயின் (Chloroquine),

2. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine),

3. பாவிபிராவிர் (Favipravir),

4. ரெம்டெசிவிர் (Remdesivir)

5. கலெத்ரா (Kaletra) எனப்படும் லோபினாவிர் (Lopinavir),  ரிடோனாவிர் (Ritonavir) மருந்துகளின் கலவை.




இந்த மருந்துகள் ஏற்கனவே மற்ற மற்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இப்போது கொரோனாவிற்குப் பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் சற்று தீவிரமான மருந்து. அதைத்தான் உலக நாடுகள் இப்போது இந்தியாவிடம் இருந்து பெற்று வருகின்றன.

கொரோனா மனுக் குலத்திற்குப் பெரிய ஒரு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கொரோனாவை நம்முடைய பூமியில் இருந்து முற்றாக அழிக்க வேண்டும். அதற்கு எப்படியும் இரண்டு ஆண்டுகள் பிடிக்கலாம்.

அதுவரையில் என்ன செய்யலாம். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மருந்துகள், வீரியம் குறைந்த மருந்தாக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி, நம் மனுக்குலத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோம். 




ஓர் உலகளாவிய நெருக்கடியில் உலக வல்லரசுகள் எல்லாம் ஆட்டம் கண்டு அதிர்ந்து போய்க் கிடக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் ஆறுதல் சொல்லும் முதன்மை நாடாக இந்தியா பெயர் எடுத்து வருகிறது.

இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான சூழ்நிலையில் உலகின் பல நாடுகளுக்கு இந்தியா தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருவதைக் கண்டு உலக மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். காலத்தின் அறிந்த உதவி ஞாலத்தின் பெரிது. வாழ்க பாரதம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Athiletchumy Ramudu வாழ்க பாரதம்... உடல் சிலிர்க்கின்றது.

Muthukrishnan Ipoh 🙏🙏

Kevin Karu இந்தியாவில் உள்ள மருந்து கம்பெனிகள் எல்லாம் அமெரிக்க, ஐரோப்பாவுக்குச் சொந்தமானவை! ஏற்றுமதி தடை மட்டுமே இந்தியா கொண்டு வந்தது! அதனால் தான் டிரம்ப் மிரட்டி ஏற்றுமதி தடையை நீக்கினார்! இது தான் உண்மை நிலை!

Muthukrishnan Ipoh //இந்தியாவில் உள்ள மருந்து கம்பெனிகள் எல்லாம் அமெரிக்க, ஐரோப்பாவுக்கு சொந்தமானவை/// அப்படி என்றால் இந்தியாவில் இந்தியாவுக்குச் சொந்தமாக எந்தக் கம்பெனியும் இல்லையா...

சைடஸ் கடிலா (Zydus Cadila); இப்கா (Ipca) எனும் இந்த இரு மருந்து நிறுவனங்கள்... இந்த இந்தியக் கம்பெனிகள்... உலகத்தின் 70 விழுக்காட்டு ஹைட்ரோக்சி குளோரோ குயின் மருந்துகளைத் தயாரித்து உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றன...

Lohesvaran Lohes >>> Kevin Karu: hello brother please don't simply write as you know the whole story.. There is a lot of things you may don't know. Please read more books before commenting. Thank you.
Lohesvaran Lohes  >>> Muthukrishnan Ipoh: well said sir. And i really admire your world knowledge.

Lohesvaran Lohes >>> Muthukrishnan Ipoh: And one more my mother and my self are your sincere fans.

Kevin Karu >>> Lohesvaran Lohes: Major Share Holding is from USA. Indian Share Holding is less than 20%

Kevin Karu >>> Lohesvaran Lohes: https://economictimes.indiatimes.com/.../52834293.cms...
FDI up to 74% in brownfield pharma under automatic route

Kevin Karu >>> Lohesvaran Lohes:
https://www.thepharmaletter.com/.../foreign-direct...
Foreign direct investment in Indian pharma sector causing concern

Kevin Karu >>> Lohesvaran Lohes: https://www.investindia.gov.in/sector/pharmaceuticals
Pharmaceuticals

Kevin Karu >>> Lohesvaran Lohes https://www.thedollarbusiness.com/.../cadila-healthcare-ltd
Cadila Healthcare Ltd - The Dollar Business...

ஆதாரங்களைத் தெளிவாக வைத்துக் கொண்டு பதிவிட வேண்டும்.... 💐❤️👏👏👏👍

Muthukrishnan Ipoh >>> Lohesvaran Lohes: நன்றிங்க ஐயா..

Muthukrishnan Ipoh >>> Lohesvaran Lohes: மகிழ்ச்சி... வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்...

Kumaravelu Shanmugasundaram நேருவின் சாதனை அல்லவா

Muthukrishnan Ipoh புரியவில்லை ஐயா...

Kevin Karu Kumaravelu ஒரு முறை #நேருவிடம் ஹிந்துத்துவ அமைப்பினர் மல்லுக்கு நின்றார்கள். அந்த #தெரசா மதமாற்றம் செய்கின்றார். அவரை நாட்டை விட்டு வெளியேற்று என குட்டிக்கரணம் அடித்தார்கள்.

#நேரு அமைதியாகச் சொன்னார். "வாருங்கள் செல்வோம் அப்படி அவர் மதமாற்றம் செய்தால் இன்றே அனுப்பி விடுவோம்" என சொல்லிவிட்டு #கல்கத்தா விரைந்தார்.

#காவி கோஷ்டிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. செல்வோம் அங்கே அந்தம்மா #ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டு இருக்கும். இன்றே தூக்கி விடலாம் என மகிழ்வோடு சென்றார்கள்.

நேரு அவர்கள் உள்ளே நுழைய அந்தக் கும்பலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே #தொழுநோயாளிகள் புண்களுக்கு சிலர் மருந்து இட்டுக் கொண்டிருந்தனர். சிலர் முதியவர்களுக்கு உணவு ஊட்டினர். சிலர் அவர்களை குளிப்பாட்டி கொண்டு இருந்தனர்.

சீழ் பிடித்த அந்த நோயாளிகளை, மற்றவர்கள் அருகே செல்லும் அந்த வியாதிக் காரர்களை எந்த கூச்சமுமின்றி அவர்கள் பராமரித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஜெபமாலையும், கர்த்தராகிய இயேசு வாழ்க, #அல்லேலூயா என்ற சத்தம் கேட்கும் என சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி..

நேரு கேட்டார் "இந்த நோயாளிகள் எந்த நாட்டுக்காரர்கள்".

#காவிகள் சொன்னது "நம் நாட்டுக்காரர்கள்"

"அந்த பெண் யார்?"

"அயல் நாட்டுக்காரி"

நேரு சற்று கோபத்துடன் சொன்னார், "இந்த நாட்டு நோயாளிகளை அந்நிய நாட்டு பெண் வந்து பராமரிக்கின்றார். உங்கள் வீட்டுப் பெண்கள் இந்தச் சேவைக்கு வர தயார் என்றால் இப்பொழுதே தெரசாவினை அனுப்பி விடுகின்றேன்"..

அதன் பின் காவி அட்டகாசம் தெரசா சபைக்கு இல்லை... Shanmugasundaram -

Muthukrishnan Ipoh >>> Kevin Karu நல்ல தகவல்... நன்றி...

Kevin Karu >>> Muthukrishnan Ipoh - Sir.. I’m following all your articles ... keep going tq💐👏👍🙏

Persatuan Kabaddi Johor






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக