18 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள்: மாட்டு வண்டிகளில் போராட்டம் - 1870

1870-ஆம் ஆண்டுகள் தொடங்கி மலாயா காபி தோட்டங்களில் உற்பத்தியாகும் காபி பழங்களை மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. வாகனங்கள் செல்ல முடியாத இடங்களிலும்; முறையான சாலை வசதிகள் இல்லாத இடங்களிலும்; உயரமான காட்டுப் பகுதிகளிலும்; இரயில் பாதைகள் இல்லாத இடங்களிலும் மாட்டு வண்டிகள் பயன்படுத்தப் பட்டன.

மலாயா, நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டம். 1870 - 1900

முதன்முதலில் மலாக்காவில் மலாக்கா சுல்தானகம் ஆட்சியில் இருந்த போது மாட்டு வண்டிகள் மலாயாவில் அறிமுகம் செய்யப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. (Bullock carts were said to have been introduced by Indian traders during the Malacca Sultanate.)

1900-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதும் திரவ ரப்பர் பாலையும் உலர்ந்த ரப்பர் பொருள்களையும் கொண்டு செல்வதற்கு மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.  

இந்தப் படம் எடுக்கப்பட்ட இடம்: நெகிரி செம்பிலான், லிங்கி, லுக்குட் தோட்டம். கொண்டு செல்லப்படும் பொருள்: மரவெள்ளிக் கிழங்குகள். காலம்: 1870 - 1900.

கரை தாண்டி வந்த தமிழர் இனம் இங்கே இரண்டாம் கிலாஸ் இனமாக தரம் பிரித்துப் பார்க்கப் படுகிறது. மூன்றாம் கிளாஸுக்குத் தள்ளப் படலாம். நமக்குள் ஏனோ தானோ போக்கு வேண்டாம்.

நாம் நமக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு மிக முக்கியமான காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒற்றுமை இல்லாததால் தான் நம்மை வந்தேறிகள் என்று சொல்லிச் சீண்டிப் பார்க்கிறார்கள்.

நமக்குள் சின்னச் சின்ன சண்டைகள் என்றால் அவற்றை உடனடியாக மறந்துவிட வேண்டும். இன உணர்வுடன் விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும்.

Sources:

1. https://nationalarchives.gov.uk/

2. https://coffeecultures.org/coffee-planting-in-colonial-malaya/

3. Drabble, J. H. 1973. Rubber in Malaya, 1876–1922: The Genesis of the Industry. Kuala Lumpur: Oxford University Press.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.09.2020




1 கருத்து:

  1. நமது வெற்றியே
    நமது ஒற்றுமையில் தான்
    தங்கியிருக்கிறது,

    பதிலளிநீக்கு