20 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள்: நெகிரி செம்பிலான், லின்சம் தோட்டம் - 1878

1870-ஆம் ஆண்டுகளில் நெகிரி செம்பிலான், ரந்தாவ் (Rantau), லின்சம் தோட்டம் (Linsum Estate); அந்த மாநிலத்தின் மிகப் பழமையான தோட்டமாக விளங்கியது. மலாயாவின் முன்னோடித் தோட்டங்களில் ஒன்றாகும்.

மலாயா தமிழர்கள்: நெகிரி செம்பிலான், லின்சம் தோட்டம்  - 1878


அது மட்டும் அல்ல. கூட்டாட்சி மலாய் மாநிலங்களில் (Federated Malay States) இருந்த காபி ரப்பர் தோட்டங்களில் மிகவும் பிரபலமான தோட்டமாகவும் விளங்கியது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முதன்முதலில் இந்தத் தோட்டத்தில் தான் காபி பயிர் செய்யப் பட்டது.

The Linsum estate, at Rantau, is the oldest estate in Negri Sambilan, and is famous throughout the Federated Malay States because it contains some of the oldest and largest Para trees in the district. Originally it was planted with coffee, but, as that product became unprofitable, the proprietors turned their attention to rubber.

Source: Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Page: 101

Camping and Tramping in Malaya:
Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Page: 84

1876-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களைக் கொண்டு வருவதற்கு  இந்தியாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும்; மலாயாவின் பிரிட்டிஷ் அரசாங்கமும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டன. இரண்டு ஆண்டுகள் கழித்து 1878-ஆம் ஆண்டில் தமிழர்கள் மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்ய வந்தனர்.

In 1876 the Secretaries of State for India and the Colonies had both agreed to the principle of allowing natives of India to be employed in the Malayan States, and in 1878 the then Governor of the Straits Settlements requested permission for their direct importation to the native states from India.

இதே காலக் கட்டத்தில் நெகிரி செம்பிலான் லுக்குட் லிங்கி தோட்டம்; பேராக் கோலாகங்சார்; பாடாங் செராய்; புரோவின்ஸ் வெல்லஸ்லி நிபோங் திபால்; மலாக்கோப் தோட்டம் பினாங்கு; போன்ற இடங்களிலும் காபி பயிர் செய்யப் பட்டது. அங்கேயும் தமிழர்கள் போய் இருக்கிறார்கள்.

Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Author: Rathborne, Ambrose B. Place of Publication: London (England). Date of Publication: 1898. Publisher: Swan Sonnenschein.

ஆனால், 1878-ஆம் ஆண்டில், நெகிரி செம்பிலான், ரந்தாவ், லின்சம் காபி தோட்டத்திற்குத் தான் தமிழர்கள் முதன் முதலில் கொண்டு வரப்பட்டார்கள் என்று தெரிய வருகிறது. அந்தத் தோட்டத்தில் காபி உற்பத்தி லாபகரமானதாக அமையவில்லை. அதனால் தோட்ட உரிமையாளர்கள் தங்கள் கவனத்தை ரப்பர் பயிரிடுவதில் கவனம் செலுத்தினார்கள்.

ராத்போர்ன் அம்ப்ரோஸ் (Rathborne, Ambrose) எனும் ஆங்கிலேயர் எழுதி இருக்கும் ’மலாயா தீபகற்பத்தின் மாநிலங்களில் பதினைந்து ஆண்டுகள்’ (Camping and Tramping in Malaya: fifteen years' pioneering in the native states of the Malay peninsula) எனும் நூலில் பக்கம்: 85-இல் இந்தப் படங்கள் உள்ளன. 1898-ஆம் ஆண்டில் தான் அந்தப் புத்தககத்தில் பதிவு செய்யப்பட்டது.

Jungle clearing works at Rantau, Negeri Sembilan 1878

இந்தப் படங்கள் ரந்தாவ் லிங்கி தோட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனும் ஒரு கருத்து உள்ளது. எனினும் ரந்தாவ், லின்சம் தோட்டத்தில் காபி பயிர் செய்வதற்காகக் காடுகள் அழிக்கப்படும் படமும் கிடைத்து உள்ளது. ஆகவே இந்தப் படம் லின்சம் தோட்டத்தில் தான் எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

எது எப்படி இருந்தாலும் ரந்தாவ், லின்சம் தோட்டமும்; ரந்தாவ் லிங்கி தோட்டமும் மிக அருகாமையில் இருக்கும் தோட்டங்கள். ஆக மலாயா தமிழர்கள், 1878-ஆம் ஆண்டில், அந்தப் பகுதியில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிய வருகிறது.

Jungle Clearing at Rantau Negeri Sembilan in 1878. Source: Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula. Page: 47

ஆக 142 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயாவுக்கு வந்த தமிழர்கள்; மலாயா காபி தோட்டங்களில் வேலை செய்து இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி ஆகின்றது.

இந்தக் காலக் கட்டத்திற்கு முன்பாகவே, 1840-ஆம் ஆண்டுகளில்; பினாங்கு, சிங்கப்பூர் தீவுகளில் காடுகளை அழிக்கவும்; சாலைகள் அமைக்கவும் தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டார்கள் என்பது பலருக்கும் தெரியாத விசயமாக இருக்கலாம்.

இருந்தாலும் மலாயா தமிழர்கள் என்பவர்கள் மலையூர் மலாயாவிற்கு நேற்று முந்தா நாள் வந்தவர்கள் அல்ல. ஒன்றை நினைவில் கொள்வோம். மனுசர்கள் நுழைய முடியாத பாசா காடுகளின் கித்தா தோப்புகளில் வாழ்ந்தவர்கள் தான் மலாயா தமிழர்கள்.

மலைக் காடுகளை அழித்துத் திருத்திக் காபி, மிளகு, கொக்கோ, ரப்பர் தோட்டங்களைப் போட்டவர்கள். அவர்கள் உருவாக்கிக் கொடுத்த கட்டுமானத்தில் சொகுசு காண்பவர்கள் சிலரும் பலரும் இருக்கிறார்கள்.

மலாயா தமிழர்கள் நேற்று வந்த வந்தேறிகள் என்று சிலர் சொல்கிறார்கள். என்ன சொல்வது? அவர்களை நன்றி கெட்டவர்கள் என்று சொல்ல மனசு வரவில்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.09.2020

1. Source: Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 480.

2. Source: Source: Camping and Tramping in Malaya: Fifteen Years' Pioneering in the Native States of the Malay Peninsula.
Author(s): Rathborne, Ambrose B.
British Library shelfmark: Digital Store 010055.ee.10
Place of publication: London (England)
Date of publication: 1898
Publisher: Swan Sonnenschein




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக