14 செப்டம்பர் 2020

மலாயா தமிழர்கள்: தைப்பிங் - புக்கிட் பெராபிட் இரயில் பாதை 1902

மலாயாவின் முதலாவது இரயில் பாதை, தைப்பிங் - போர்ட் வெல்ட் இரயில் பாதை (Taiping – Port Weld railway). 135 ஆண்டுகளுக்கு முன்னால் 1885-ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. அதன் பின்னர் 1890-ஆம் ஆண்டு தைப்பிங் நகரில் இருந்து ஈப்போவுக்கு இரயில் பாதை உருவாக்கும் திட்டம்.

1893-ஆம் ஆம் ஆண்டில் இருந்து 1895-ஆம் ஆண்டு வரையில் தைப்பிங் - புக்கிட் கந்தாங் (Bukit Gantang) இரயில்பாதை உருவாக்கம். 1896-ஆம் ஆண்டு புக்கிட் கந்தாங் - புக்கிட் பெராபிட் (Bukit Berapit) இரயில் பாதை உருவாக்கம். 1902-ஆம் ஆண்டு முடிவுற்றது. இந்தப் பாதையில் நான்கு சுரங்கப் பாதைகள். அதனால் ஆறு ஆண்டுகள் பிடித்தன.

The  railway track from Bukit Gantang to Taiping was built in 1902 and it began operation in 1903. There were four tunnels and a high bridge along Bukit Berapit.

இந்தப் புக்கிட் கந்தாங் - புக்கிட் பெராபிட் இரயில் பாதை உருவாக்கும் போது சுடும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் நூற்றுக் கணக்கான தமிழர்களுக்கு கம்பிச் சடக்கு வேலை.

பல நூறு தமிழர்கள். மலாயாவின் மூத்த தமிழர்கள். மலாயா நாட்டில் முத்திரை பதித்த மூத்த நிலை தமிழர்கள். உதிர்ந்து போன முதல்நிலை முத்துகள்.

அவர்களில் பலர் அந்த இரயில் பாதைச் சிலிப்பர் கட்டைகளுக்கு அடியிலேயே சமாதி அடைந்தார்கள். சமாதியாகிய நிலையில் இன்றைய வரைக்கும் உறக்கம் கொள்கிறார்கள்.

நல்ல தூக்கம். தட்டி எழுப்பினாலும் அந்த இரயில் சடக்கு ஜீவன்கள் எழுந்து வர மாட்டார்கள். இதை எழுதும் போது கண்கள் பனிக்கின்றன. நினைத்துப் பார்ப்போம். நன்றி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.09.2020

படங்கள்:

1. National Archives, UK. Federated Malay States - Indian Labour at construction Bukit Gantang 1898 - 1902.

சான்றுகள்:

1. Sunderland, David, ed. (2014). "Fifty Years of Railways in Malaya". British Economic Development in South East Asia, 1880–1939, Volume 3. Routledge.

2. Malayan Railways 100 years 1885 - 1995

3. https://en.wikipedia.org/wiki/Bukit_Berapit_Rail_Tunnel

4.https://web.archive.org/web/20090423073934/http://www.pnm.my/yangpertama/Auto_Landasan.htm



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக