22 செப்டம்பர் 2020

வியட்நாம்: 2000 ஆண்டு சம்பா பூர்வீக இந்து மக்கள்

இந்த உலகில் இந்தியர் அல்லாத பூர்வீக இந்து மக்கள் இரண்டே இடங்களில் தான் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். பழைமை வாய்ந்த இந்தியக் கலாச்சாரத்துடன் 2,000 ஆண்டுகளாக இந்து மதத்தைப் பின்பற்றியும் வருகின்றார்கள்.

Cham people visit this one of the oldest Hindu temples in Vietnam

இந்தோனேசியா பாலி தீவில் ஒரு பிரிவினர். இவர்கள் பாலினிய இந்துக்கள் (Balinese Hinduism). அடுத்த பிரிவினர் வியட்நாம் நின் துன் மாநிலத்தில் (Ninh Thuan Province) பலமான் சாம் (Balamon Cham) எனும் பூர்வீக இந்து மக்கள். இவர்கள் சாம் இந்துக்கள் (Cham Hindus) என்று அழைக்கப் படுகிறார்கள்.[#1]

[#1]. Balamon Cham, one of only two surviving non-Indic indigenous Hindu peoples in the world, with a culture dating back thousands of years.

[#1]. Parker, Vrndavan Brannon (April–June 2014). "Cultures: Vietnam's Champa Kingdom Marches on". Hinduism Today.

Cham women performing a traditional dance in Nha Trang, Vietnam

சம்பா அல்லது சியோம்பா அரசு (Champa or Tsiompa) என்பது முன்பு காலத்தில் வியட்நாமில் இருந்த சின்னச் சின்ன அரசுகளின் ஒரு கூட்டு அரசாகும். பாண்டியர்கள் அமைத்த அரசு. அதுவே பின்னாட்களில் பல்லவர்களின் ஒரு பெரிய பேரரசாக மாறியது. சம்பா பேரரசு (Kingdom of Champa: கி.பி. 192 – கி.பி. 1832). சம்பா என்றால் சமஸ்கிருத மொழியில் சண்பகம் (campaka).[#2]

[#2]. Champa, Sanskrit Dictionary for Spoken Sanskrit". spokensanskrit.org.

சம்பா அரசைத் தோற்றுவித்தவர் பத்திரவர்மன் (Bhadravarman). இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 349 - கி.பி. 361. இவர்தான் சிம்மபுரம் (Simhapura - Lion City) எனும் நகரத்தை உருவாக்கியவர். இப்போது இந்த நகரம் Tra Kieu என்று அழைக்கப் படுகிறது. பத்திரவர்மன் தன் கடைசி காலத்தில் இந்தியாவிற்குச் சென்று கங்கை நதிக்கரையில் வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது.[#2.1]

[#2.1] Badravarman built a number of temples, conquered his rivals, ruled well and in his final years abdicated his throne and spent his last days in India on the banks of the Ganges River.

Onam celebration in Saigon fetes Indian diversity

சண்பக மண் என்று பெயர் வைத்து இருக்கலாம். இன்னும் ஒரு விசயம். இவருக்கு முன்னதாகவே பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அவர்களில் முதலாவதாக ஆட்சி செய்தவர் திருமாறன் பாண்டியன் என்று வியட்நாமிய வோ-கான் கல்வெட்டு (Vo Canh inscription) சொல்கிறது.[#3]

[#3]. The oldest Sanksrit inscription discovered in Vietnam mentions the name of Sri Maran. The inscription is known as the Vo-Canh inscription.

தென்கிழக்கு ஆசியாவில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான சமஸ்கிருத கல்வெட்டு. Vo Canh கல்வெட்டு ஆகும். 1885-ஆம் ஆண்டில் வியட்நாமின் நா திராங் (Nha Trang) நகரில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ள வோ-கான் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.[#4]

[#4]. The Vo-Canh inscription is the oldest Sanskrit inscription ever found in Southeast Asia, discovered in 1885 in the village of Vo-Canh, about 4 km from the city of Nha Trang, Vietnam

Celebrating the rainy season’s three-day Kait Festival

அந்தக் கல்வெட்டில் இப்படி ஒரு வாசகம் வருகிறது.
"the ornament... by that which is the joy of the family of the daughter of the grandson of King Sri Mara... has been ordained"

இதன் பொருள்: ஆபரணம் ... ஸ்ரீ மாறனின் பேரன் மகளின் குடும்பத்தின் மகிழ்ச்சி... இதன் மூலம் உறுதி செய்யப் படுகிறது. இந்தக் கல்வெட்டைப் பற்றி, பின்னர் பத்திரிகையில் விளக்கமாக ஒரு கட்டுரை எழுதுகிறேன்.

இந்தோனேசியாவின் மஜபாகித்; ஸ்ரீ விஜயம்; சிங்காசாரி; மத்தாரம் போன்று சம்பா பேரரசும் அந்தக் காலக் கட்டத்தில் பெரிய ஓர் அரசு. இந்தியாவும் சீனாவும் இதனிடம் பிரச்சினை பண்ணாமல் சற்றே ஒதுங்கி இருக்கின்றன.  

இன்றைய மத்திய வியட்நாம்; தெற்கு வியட்நாம் கடற்கரை முழுவதும் கி.பி 2-ஆம் நூற்றாண்டு தொடங்கி 19-ஆம் நூற்றாண்டு வரையில் சம்பா பேரரசு வியாபித்து இருந்து உள்ளது.

1. சம்பா பேரரசு முதலாவது தலைநகரம் சிம்மபூரம் (Simhapura - 4th century to the 8th century CE)

2. சம்பா பேரரசு இரண்டாவது தலைநகரம் இந்திரபுரம் (Indrapura கி.பி 875 – கி.பி 978)

3. சம்பா பேரரசு மூன்றாவது தலைநகரம் அமராவதி விஜயா (Amaravat Vijaya கி.பி 978 – கி.பி 1485)

4. சம்பா பேரரசு (கௌதாரம் சிற்றரசு - Kauthara Polity) நான்காவது தலைநகரம் கௌதாரம் (Kauthara கி.பி 757 - கி.பி 1653)

5. சம்பா பேரரசு (பாண்டுரங்கா சிற்றரசு - Panduranga Polity) ஐந்தாவது தலைநகரம் பாண்டுரங்கா (Panduranga கி.பி 757 - கி.பி 1832)

1832-ஆம் ஆண்டு சம்பா பேரரசு இப்போதைய வியட்நாமிய அரசாங்கத்துடன் இணைக்கப் பட்டது. இந்து மதம் எப்படி இங்கே வந்தது.

கி.பி 4-ஆம் நூற்றாண்டில் அண்டை நாடான பூனான் (Funan) அரசு சம்பா மீது தாக்குதல் நடத்தி சம்பாவைக் கைப்பற்றியது. அதன் பின்னர் இந்து மதம் சம்பாவில் அரசாங்க மதமானது. பல நூற்றாண்டுகளாகச் சம்பா சாம்ராச்சியத்தின் கலை, கலாசாரங்களில் இந்தியச் சாரங்கள் பரிணாமம் பெற்று உள்ளன. சம்பா இந்துக்கள் சிவனை வழிபடும் சைவ சமயத்தைப் பின்பற்றி வருகிறார்கள்.

கி.பி 4-ஆம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே சம்பா அரசு இருந்து உள்ளது. அப்போது அதன் துறைமுக நகரம் காதிகரம் (Kattigara).[#5]

[#5]. (Champa was a formidible Hindu kingdom, renowned for its immense wealth and sophisticated culture. Its major port was Kattigara.)

பல இந்துக் கோயில்கள்; பல சிவப்புச் செங்கல் கோயில்கள் சம்பா நிலங்களில் கட்டப்பட்டன. முன்பு காலத்தில் மை சான் (My Son) எனும் நகரம் முக்கிய இந்து மத மையமாக விளங்கி உள்ளது. இங்கே நிறைய இந்துக் கோயில்கள் கட்டப்பட்டு உள்ளன. அதற்கு அருகாமையில் ஹோய் ஆன் (Hoi An) எனும் ஒரு துறைமுக நகரம். இப்போது இந்த இரு இடங்களுமே உலக பாரம்பரியத் தளங்களாக (UNESCO World Heritage Sites) அறிவிக்கப்பட்டு உள்ளன.[#6]

[#6]. Champa legacy is the red-brick temples, or Cham towers, the oldest found dating to the seventh and eighth centuries. The temple city of My Son, near Hoi An, preserved as a UNESCO World Heritage site, has nearly 70 individual structures.

Nearly 2,000 years ago, Claudius Ptolemy wrote of Cattigara and outlined it on his map of the world. Modern scholarship has confirmed Cattigara as the forerunner of Saigon (modern day Ho Chi Minh City.

மீகோங் ஆறு. கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதில் வரும் கோங் எனும் கடைச் சொல் கங்கை நதியைக் குறிக்கின்றது.[#7]

[#7]. Cattigara was the main port at the mouth of the Mekong River, a name derived from Mae Nam Khong, the Mother Water Ganga.

10-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் பரவியது. அதன் பின்னர் பிரஞ்சுக்காரர்களின் கிறிஸ்துவ மதம் வந்தது. இருந்தாலும் அங்கு வாழ்ந்த பலர் தங்களின் பழைய இந்து நம்பிக்கைகள், இந்து சடங்குகள் மற்றும் இந்து பண்டிகைகளைக் கைவிடவில்லை. இன்னும் தக்க வைத்துப் பாதுகாத்து வருகிறார்கள்.

வியட்நாமில் இப்போது 60,000 பூர்வீக இந்துக்கள் வாழ்கின்றார்கள். இவர்களின் திருமணம்; காதணி விழா; திருவிழாக்கள் எல்லாம் இந்து மதம் சார்ந்தவையாக உள்ளன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.09.2020
© 2020 https://ksmuthukrishnan.blogspot.com. All rights reserved

சான்றுகள்:

1. Thurgood, Graham (1999). From Ancient Cham to Modern Dialects.

2. Ralph Bernard Smith (1979). Early South East Asia: essays in archaeology, history, and historical geography. Oxford University Press. p. 447.

3. Chatterji, B. (1939). JAYAVARMAN VII (1181-1201 A.D.) (The last of the great monarchs of Cambodia). Proceedings of the Indian History Congress. - www.jstor.org/stable/44252387

4. Hindus of Vietnam - Hindu Human Rights Online News Magazine". www.hinduhumanrights.info.

5. India's interaction with Southeast Asia, Volume 1, Part 3 By Govind Chandra Pande, Project of History of Indian Science, Philosophy, and Culture, Centre for Studies in Civilizations (Delhi, India).

6. https://en.wikipedia.org/wiki/Võ Cạnh inscription

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக