16 டிசம்பர் 2020

இந்தோனேசியாவில் சோழர் காலத்து தமிழர்கள்

தமிழ் மலர் - 08.12.2020

1025-ஆம் ஆண்டு. இராஜேந்திர சோழன் அயல் நாடுகளுக்குப் படை எடுத்துச் சென்றார். இந்தோனேசியாவின் மீது படை எடுத்த காலக் கட்டத்தில் இந்தோனேசியாவை ஸ்ரீ விஜயம் எனும் அரசு ஆட்சி செய்து வந்தது. சங்கர ராம விஜயோத்துங்க வர்மன் என்பவர் பேரரசராக இருந்தார்.

இராஜேந்திர சோழர் சுமத்திரா தீவைக் கைப்பற்றிய பின்னர் ஏறக்குறைய 200 தமிழர்கள் சுமத்திராவில் விட்டுச் செல்லப் பட்டார்கள். அப்படி விட்டுச் செல்லப்பட்ட தமிழர்கள் அனைவருமே இராஜேந்திர சோழரின் கடல் படையைச் சேர்ந்த வீரர்கள். 

Rias Busana Adat Batak

அவர்களின் வழித்தோன்றல்கள் தான் இன்றும் சுமத்திராவில் உள்ளனர். மொழியை மறந்து... இனத்தை மறந்து.. பூர்வீக மக்களுடன் ஐக்கியமாகித் தனி ஒரு சமுதாயமாக வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா, மேடான் நகருக்கு அருகில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது தோபா ஏரி (Lake Toba). உலகில் அதிக ஆழம் கொண்ட ஏரிகளில் தோபா ஏரியும் ஒன்றாகும்.

உலகின் மிகப் பெரிய எரிமலை ஏரி. 62 மைல் நீளம். 20 மைல் அகலம். ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் மலை உச்சியில் இருக்கிறது. 450 மீட்டர் ஆழம் கொண்டது. தோபா ஏரியின் மையத்தில் இருப்பது சமோசிர் (Samosir) தீவு. ஒரு பெரிய தீவு. இந்தத் தீவில் ஆறு மாவட்டங்கள் உள்ளன.

1. ஓனான் ருங்கு (Onan Runggu)

2. பாலிப்பி (Palipi)

3. பாங்குருரான் (Pangururan)

4. ரெங்கர் நிகுதா (Ronggur Nihuta)

5. சீமா நிந்தா (Simanindo)

6. நாயன் கோலன் (Nainggolan)

சமோசிர் தீவின் பரப்பளவு 630 சதுர கி.மீ. (240 சதுர மைல்கள்). சிங்கப்பூர் தீவை விட சற்றே சின்னது. சிங்கப்பூரின் பரப்பளவு 721 சதுர கி.மீ. (280.2 சதுர மைல்கள்). அந்த இடங்களின் பெயர்களைப் பாருங்கள். தமிழர் வாடை வீசுவதையும் கவனியுங்கள்.

2010-ஆண்டின் மக்கள் தொகை 95,238. அங்கு வாழ்பவர்கள் பெரும்பாலோர் பாத்தாக் (Batak) இனத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் இந்தோனேசியக் குடிமக்கள்.

It has been suggested that the important port of Barus in Tapanuli was populated by Batak people. A Tamil inscription has been found in Barus which is dated to 1088. Tamil remains have been found on key trade routes to the Batak lands. The Bataks practiced Shaivism and local culture for thousands of years. The last Batak king who fought valiantly against Dutch imperialists until 1905 was an Indonesian Shaivite king.

The Karo marga or tribe Sembiring "black one" is believed to originate from their ties with Tamils, with specific Sembiring sub-marga, namely Colia, Pandia, Depari, Meliala, Muham, Pelawi, and Tekan all of Indian origin. Tamil influence on Karo religious practices are also noted.

Drakard, Jane (1990). A Malay Frontier: Unity and Duality in a Sumatran Kingdom. SEAP Publications.

இவர்களில் பலர் இராஜேந்திர சோழர் படையின் வழித்தோன்றல்கள் என்று சொல்லப் படுகிறது. பல நூற்றாண்டுகள் தனிமைப் படுத்தப்பட்டு விட்டார்கள். பூர்வீக மக்களுடன் ஆழமாகக் கலந்து விட்டார்கள். அதனால் அசல் அடையாளம் மறைந்து போய் வாழ்கிறார்கள். தொடர்ந்து படியுங்கள்.

சமோசிர் தீவில் ஒரு துறைமுகம். அதன் பெயர் சீமா நிந்தா (Simanindo). இதற்கு அருகாமையில் இருப்பது தீகா ராஸ் (Tiga Ras) என்கிற துறைமுகம். இந்த இரு துறைமுகங்களுக்கு இடையில் ஒரு மலைக்காடு உள்ளது. இந்த மலைக்காட்டில் தான் சோழர் காலத்துத் தமிழர்களின் வழித்தோன்றல்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

வடக்கு சுமத்திராவில் செம்பயரிங் (Sembiring) எனும் ஒரு வம்சாவளியினர் உள்ளனர். இவர்களுக்குத் தமிழர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப் படுகிறது. அந்த வம்சாவளியினரில் துணைப் பிரிவினரும் உள்ளனர்.


கோலியா (Colia);

பெராஹ்மனா (Berahmana);

பாண்டியா (Pandia);

மெலியாலா (Meliala);

டெபாரி (Depari);

முஹாம் (Muham);

பெலாவி (Pelawi);

தெக்கான் (Tekan)

பெரும்பாலும் தென்னிந்தியத் தமிழ் வம்சாவளியினர். இந்த உண்மையை மரபியல் சோதனை மூலமாகக் கண்டு அறிந்து உள்ளார்கள்.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான இந்தோனேசியர்களும் தமிழர்கள் என்று சுயமாக அடையாளப் படுத்தப் படுகின்றார்கள். அவர்கள் பெரும்பாலும் வடக்கு சுமத்திராவில் காணப் படுகின்றார்கள். இவர்கள் பூர்வீக மக்களுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டு உள்ளார்கள்.

மரபியல் டி.என்.ஏ. (DNA) அடிப்படையில் சோதித்துப் பார்த்தார்கள். அதிகமான இந்திய டி.என்.ஏ. அணுக்கள் அவர்களிடம் உள்ளன என்பதையும் கண்டுபிடித்தார்கள்.

இந்தோனேசியாவில் இந்தியக் கலாசாரம் மிகவும் வலுவானது. ஆழமானது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியாவிற்கு வந்த தமிழர்கள் இந்து மதத்தை சுமத்திரா; ஜாவா தீவுகளில் பரப்பி இருக்கிறார்கள். உள்ளூர் மக்களுடன் ஆழமாகக் கலந்து உறவாடி இருக்கிறார்கள். அதனால் தான் இந்தோனேசியர்கள் சிலர் இந்திய மரபணுவைப் பெற்று உள்ளார்கள்.

Various influences affected the Batak through their contact with Tamil in southern Batakland, and the east and west coast near Barus and Tapanuli. These contacts took place many centuries ago.

(H. Parkin, The Extent and Areas of Indian/Hindu Influence on the Ideas and Development of Toba-Batak Religion and Its Implications for the Christianization of the Toba-Batak People of North Sumatra. D.Th. Dissertation, Serampore, 1975, p. 440)

இந்தோனேசியர்கள் இன ரீதியாக மிக வலுவான தமிழர்களின் அம்சங்களைக் கொண்டவர்கள். சற்றுக் கறுமையான தோல். தமிழர்களின் தலை அமைப்பு. உடலில் அதிகமான உரோமங்கள்.

இந்தோனேசியாவில் முதலில் கால் பதித்த வெளியூர் மக்கள் யார் என்றால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் தான். இந்தோனேசியாவின் ஆச்சே, வட சுமத்திரா, கிழக்கு சுமத்திரா போன்ற இடங்களில் தமிழர்களின் மரபியல் தாக்கங்கள் ஆழமாய்ப் பதிந்து உள்ளன.

உலகின் பல நாடுகளில் தமிழர்கள் தடம் பதித்து உள்ளார்கள். இருந்தாலும்; அவர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை. நேற்று படகு ஏற்றி வந்தவர்களில் சிலரும்கூட அந்தக் காலத்துத் தமிழர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று வாய்கூசாமல் பேசுகிறார்கள். வெட்கம். வேதனை. என்றைக்கு என் இனத்திற்கு இந்த வசைமொழிகளில் இருந்து விடுதலை கிடைக்குமோ தெரியவில்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.12.2020

சான்றுகள்:

1. Andaya, Leonard Y. (2002). The Trans-Sumatra Trade and the Ethnicization of the 'Batak'". Land- en Volkenkunde. 158 (3): 367–409.

2. Tamil community forms new cultural association, The Jakarta Post, 15 August 2011.

3. Sandhu, K. S.; Mani, A. (December 18, 1993). Indian Communities in Southeast Asia. Institute of Southeast Asian Studies.

4. J.L.A. Brandes, 1913, Old Javanese inscriptions, bequeathed by the late J.L.A. Brandes.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக