06 ஜூலை 2021

பெண்களின் வளர்ச்சி இமயம் பார்க்கும் முதிர்ச்சி

இன்றையக் காலக் கட்டத்தில் பெண்களின் வளர்ச்சி இமயம் பார்க்கும் மலர்ச்சி அல்ல முதிர்ச்சி. ஆண்களுக்குச் சமமாக... மன்னிக்கவும்... ஆண்களை விட அதிகமாகவே முன்னேறியும் வருகின்றார்கள்.

பெண்கள் பல்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். கொடி கட்டிப் பறக்கின்றார்கள். பெருமையாக உள்ளது. பெண்களால் நாட்டிற்கும் பெருமை; வீட்டிற்கும் பெருமை.
 

அது மட்டும் அல்ல. பெண்களைப் பார்த்து ஆண்களே பொறாமைப் படும் அளவிற்கு ஒரு நவீன மயத்தில் வாழ்ந்து கொண்டும் போகிறார்கள். எனக்கும் கொஞ்சம் பொறாமை தான். மன்னிக்கவும். ரொம்பவும் இல்லை.

நாட்டை ஆட்சி செய்வதற்கு ஓர் அரசர் வேண்டும். அதைப் போல ஒரு வீட்டை ஆட்சி செய்வதற்கு ஒரு பெண் வேண்டும். இதை எவராலும் மறுக்க முடியாது. பெண்கள் இல்லாமல் பெயர் போடுவது ரொம்பவுமே சிரமம். இதை ஆண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆக... பெண் உரிமையைக் காப்போம். பெண்ணியத்தைக் காப்போம். பெண் இனத்தைப் போற்றுவோம். ஓர் ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மறக்காமல் இருந்தால் சரி.

அந்த வகையில் எந்த நாடு பெண்ணின் பெருமையை உயர்த்திப் பிடிக்கின்றதோ அந்த நாடு தான், உலகில் உயர்ந்த நாடு. மனிதத்தில் உச்சம் பார்க்கும் நாடு. நான்கு மனைவிகள் வேண்டும். 25 பிள்ளைகள் வேண்டும் என்பது எல்லாம் பெண்மையைச் சிறுமைப் படுத்தும் நகர்வாகும். பெண்ணாசைப் பிடித்து பெண்மையைச் சிறுமைப் படுத்தும் போக்கு. பெண்மையைச் சுய போகத்திற்குப் பயன்படுத்தும் அணுகுமுறை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
06.07.2021

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக