15 செப்டம்பர் 2023
Tengku Razaleigh Hamzah
07 செப்டம்பர் 2023
ஜெங்கிஸ்கான் - 1
உலக வரலாற்றில் அதிகமாக நினைத்துப் பார்க்கப்படும் தலைவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒருவர் மகா அலெக்சாண்டர். இன்னும் ஒருவர் ஜெங்கிஸ்கான் (Genghis Khan). இவர்களுக்கு இடையில் அசோகர் வரலாம். சந்திரகுப்தர் வரலாம். ஜூலியஸ் சீசர் வரலாம். பாபர் வரலாம். நெப்போலியன் எனும் மாவீரனின் பெயரும் வரலாம். இன்னும் பலர் இருக்கின்றார்கள். பட்டியல் நீளும்.
30 ஆகஸ்ட் 2023
ஜீன் சின்னப்பா - 2
அதனால் அங்கே வீடு பார்க்கப் போய் இருக்கிறார்கள். ஆகக் கடைசியாக கோலாலம்பூர் அபாட் ஓட்டலில் உணவு அருந்தி இருக்கிறார்கள். பின்னர் கூட்டரசு நெடுஞ்சாலை வழியாக பயணித்து இருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்தியது வெள்ளை நிற பியாட் 125 ரகக் கார்.
சுபாங் விமான நிலயத்திற்குப் போக, பாதை பிரியும் முச்சந்திக்கு வரும் போது கார்த்திகேசு காரை நிறுத்தி இருக்கிறார்.
உடல் முழுமையும் ஆழமான 10 கத்திக் குத்துக் காயங்கள். கார் முழுக்க இரத்தக் கறை. போலீசார் வருவதற்கு முன்னதாகவே ஜீன் சின்னப்பா இறந்துவிட்டார்.
அதற்கு முன்னர் நடந்தவை. ஏறக்குறைய இரவு மணி 11.30 இருக்கும். அப்போது மலேசிய விமானச் சேவையைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் வேலை முடிந்து அந்த வழியாகப் போய் இருக்கிறார்கள். தன்னந்தனியாக இருட்டில் ஒரு கார் நிறுத்தி வைக்கப் பட்டு இருப்பதைக் கண்டனர்.
ஜீன் சின்னப்பாவின் தோள் பட்டையில் வழக்கமான கார் பாதுகாப்பு வார்ப்பட்டை. அவர் அணிந்து இருந்த நகைகள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன. அவரின் கைப்பையும் அங்கேதான் இருந்தது. பணம், மற்ற சில்லறை அழகுச் சாமான்கள் எல்லாம் கைப்பையின் உள்ளே அப்படியே பத்திரமாகத்தான் இருந்தன. எதுவும் திருடு போகவில்லை.
கார்த்திகேசு உடனடியாக பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். அவருக்கு நினைவு திரும்பியதும் என்ன நடந்தது என்று கேட்டார்கள். தான் சிறுநீர் கழித்துக் கொண்டு இருக்கும் போது, தலைக்குப் பின்னால் பலமான அடி விழுந்தது. மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டதாகச் சொன்னார். மயக்கம் அடைவதற்கு முன்னால், மூன்று பேரைப் பார்த்ததாகவும் சொன்னார்.
ஜீன் சின்னப்பாவின் சவப் பரிசோதனையில் அவருடைய தொண்டை, மார்பு, வயிற்றுப் பகுதிகளில் ஆறு ஆழமான கத்திக் குத்துக் காயங்கள்; கைகளில் நான்கு கத்திக் குத்துக் காயங்கள். மொத்தம் பதினாறு கத்திக் குத்துகள். அதை ஒரு கொலை என்று போலீசார் அறிவித்தனர்.
இறந்து போனவர் ஒரு சாதாரண பெண் அல்ல. நெகிரி செம்பிலான் அழகி. சிலாங்கூர் அழகி. மலேசிய அழகி. அத்துடன் மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு பிரபலம்.
ஒரு மாதம் ஆனது. மே 9-ஆம் தேதி. ஜீன் சின்னப்பாவின் மைத்துனர் கார்த்திகேசுவின் வீட்டுக் கதவைப் போலீசார் தட்டினர். ‘புதுசா செய்தி கிடைச்சுதா’ என்று கார்த்திகேசு கேட்டார். அவரிடம் கைவிலங்கைக் காட்டிய போலீசார், அவரைப் பார்த்து புன்னகை செய்தார்கள். கார்த்திகேசு கைது செய்யப்பட்டார். ஜீன் சின்னப்பாவைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றப் பத்திரிகை.
அப்போது கார்த்திகேசுவிற்கு 37 வயது. இறந்து போன ஜீன் சின்னப்பாவிற்கு 31 வயது. செய்தி கேட்டு மலேசிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தப் பூனையா பால் குடித்தது. என்ன செய்வது. பால் குடிக்கிற பூனை கருவாட்டையும் தின்று இருக்கிறது. எப்படி தின்றது என்பதில் ஆளாளுக்கு ஒரு வியூகம்.
அந்தக் காலக் கட்டத்தில் எல்லாக் கொலை வழக்குகளும் ஜூரி முறையில் நடைபெற்றன. அந்த வகையில் ஜீன் சின்னப்பாவின் கொலை வழக்கிலும் ஜூரி முறைதான். கார்த்திகேசுவின் தலைவிதியை நிர்ணயிக்க ஏழு பேர் ஜூரிகளாக நியமிக்கப் பட்டனர். அனைத்து ஜூரிகளும் ஆண்கள்.
இங்கே ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்ல வேண்டும். ஜூரிகள் அனைவரும் ஆண்களாக இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் ஓர் ஆணாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஓர் ஆண் சாதகத் தன்மை ஏற்படலாம். அப்படி ஒரு கருத்து அப்போது நிலவி வந்தது.
ஜீன் சின்னப்பாவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஓர் ஆண். பாதிக்கப் பட்டவர் ஒரு பெண். ஜூரிகளின் தீர்ப்பு ஓர் ஆணுக்குச் சாதகமாக அமையலாம் எனும் ஓர் அச்சமும் நிலவியது. இருந்தாலும், தீர்ப்பு வேறு மாதிரியாக முடிந்து போனது.
அந்த வகையில் ஜீன் சின்னப்பாவைத் தன் சொந்த உடைமைப் பொருளாக நினைத்து இருக்கிறார். பழகி இருக்கிறார். அவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டும் இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு ஜீன் சின்னப்பாவின் குழந்தைகளைத் தன் குழந்தைகளாக வளர்த்து எடுக்க சம்மதமும் தெரிவித்து இருக்கிறார்.
இந்தக் கட்டத்தில் ஜீன் சின்னப்பா, வேறு ஒருவருடன் தொடர்பு கொண்டு இருக்கிறார். இதைக் கார்த்திகேசு கண்டுபிடித்து விட்டார். தனக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கருதி; ஆத்திரம் அடைந்து இருக்கிறார். ஆனால், வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சரியான நேரத்திற்காகப் பொறுமையைக் கடைபிடித்து இருக்கிறார்.
ஆக, பொறாமையின் காரணமாகதான் ஜீன் சின்னப்பாவை; கார்த்திகேசு கொலை செய்து இருக்கிறார் என்று அரசு தரப்பு வழக்கு வாதங்களை முன் வைத்தது.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சான்றுகள்; ஜீன் சின்னப்பாவின் அந்தரங்க வாழ்க்கையில் தலையிட்டவர் டாக்டர் நரதா வர்ணசூரியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். ஒரு சிங்களவர். திருமணமானவர். ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையார்.
அது நமக்குத் தேவை இல்லை. ஓர் ஆணும் பெண்ணும் ஆசைப்பட்டு ஏதாவது எழுதி இருப்பார்கள். பேசி இருப்பார்கள். அவற்றை எல்லாம் அம்பலப் படுத்துவது நாகரிகமன்று.
தவிர, இந்தக் கட்டுரையைச் சம்பந்தப் பட்டவர்கள் யாராவது படிக்கலாம். அல்லது அந்தப் பிள்ளைகளிடமே போய்ச் சேரலாம். சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. தணிந்து போன நெருப்பில் மறந்து போன நிகழ்விற்கு மறுபடியும் சூடம் காட்டுவது ஒரு பெரிய பாவச் செயல் ஆகும்.
ஜீன் சின்னப்பா அணிந்து இருந்த மேலாடையும் நீதிமன்றத்தில் காட்டப் பட்டது. முழுக்க முழுக்க இரத்தக் கறை படிந்த மஞ்சள் நிற ஆடை. ஆனால், கொலை செய்யப்படுவதற்குப் பயன்படுத்தப் பட்ட எந்த ஓர் ஆயுதமும் சாட்சியத்திற்கு வரவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு 50-க்கு 50 எனும் நிலையில் இருந்தது.
அந்தச் சமயத்தில்தான் அரசு தரப்பு, திடீரென்று ஒரு துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டது. ஜீன் சின்னப்பாவின் உறவினர் ஜெயதிலகா என்பவர்தான் அந்தத் துருப்புச் சீட்டு.
கொலை நடந்த பத்தாவது நாள் அந்த உறவினர் கார்த்திகேசுவைப் போய்ப் பார்த்து இருக்கிறார். அப்போது கார்த்திகேசு அவரிடம் ‘நிலைமை மோசம் அடைந்தால், உள்ளே போகத் தயாராக இருக்கிறேன். உயிரோடு இருக்க அந்தப் பெட்டைக் கழுதைக்கு தகுதி இல்லை’ என்று சொல்லி இருக்கிறார்.
இந்தச் சொற்கள்தான் கார்த்திகேசுவின் தலையெழுத்தையே மாற்றிப் போட்டன. எதிர்தரப்பு எவ்வளவோ போராடிப் பார்த்தது. கார்த்திகேசு ஒரு நல்ல மனிதர். நாணயமானவர். மனோவியல் கல்வி கற்றவர் என்று சொல்லி பல சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தியது. ஒன்றும் நடக்கவில்லை.
வழக்கு 38 நாட்கள் நடைபெற்றது. 58 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர். ஜூரிகள் ஒன்றுகூடி ஐந்து மணி நேரம் விவாதம் செய்தனர். கடைசியில் 5-க்கு 2 எனும் வாக்குப் பெரும்பான்மையில், கார்த்திகேசு குற்றவாளி என்று தீர்ப்பானது. சாகும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
கார்த்திகேசுவின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. மிக அமைதியாக இருந்தார். பொதுவாகவே, மலேசிய ஜூரிகள் அவ்வளவு சுலபத்தில் யாருக்கும் தூக்குத் தண்டனையை வழங்க மாட்டார்கள். மலேசிய நீதிமன்ற வரலாறு சொல்கிறது. ஆனால், நடந்து விட்டது.
கார்த்திகேசு காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டார். அங்கு இரண்டு வருடங்கள் சிறை வாழ்க்கை. தூக்குத் தண்டனைக்கு காத்து இருந்தார். கார்த்திகேசுவிற்கு ஆயுள் கெட்டி என்றுதான் சொல்ல வேண்டும். பத்து மாதங்களுக்குப் பிறகு வழக்கில் ஒரு பெரிய திருப்பம்.
மலேசியாவே கிடுகிடுத்துப் போனது. அது ஒரு பயங்கரமான திருப்பம். யாரும் எதிர்பார்க்காத திருப்பம். தவறுதலாகத் தெரியாமல் சொல்லி விட்டதாக ஜெயதிலகா சத்தியப் பிரமாணம் செய்தார்.
அப்புறம் என்ன. பொய்ச் சாட்சியம் சொன்னதற்காக, ஜெயதிலகாவிற்குப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை (Prison for Perjury). 1981 மே மாதம் 20-ஆம் தேதி, ஜெயதிலகா குற்றவாளியாக உள்ளே போனார். சுதந்திர மனிதனாகக் கார்த்திகேசு வெளியே வந்தார். ஜெயதிலகா சிறைக்குப் போய் இரண்டு ஆண்டுகளில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அவரும் இறந்து போனார்.
வெளியே வந்த கார்த்திகேசு திருமணம் செய்து கொண்டார். ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கினார். கிள்ளானில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கோலா சிலாங்கூரில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
சிறையில் இருந்து வெளியே வந்த கார்த்துகேசு, ஜீன் சின்னப்பாவின் மூன்று பிள்ளைகளையும் நன்றாகப் படிக்க வைத்தார். மூவரும் இப்போது நல்ல நல்ல பதவிகளில் இருக்கின்றனர். மூத்த மகள் வழக்கறிஞராகச் சேவை செய்கிறார். அவர் ஒரு மருத்துவர் என தவறுதலாக நேற்று பதிவு செய்து விட்டேன். ஜீன் சின்னப்பாவின் மூத்த மகளுக்கு இப்போது வயது 50-ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
கிள்ளான் தெலுக் பூலாய் புறநகர்ப்பகுதியில் வாழ்ந்து வந்த கார்த்திகேசு தன்னுடைய 81-ஆவது வயதில், 27.08.2023-ஆம் தேதி, மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
ஜீன் சின்னப்பாவைப் பற்றி, ஆஸ்ட்ரோ ஒரு தொடர் ஆவணப் படத்தை 2008 டிசம்பர் 21-இல், ஒளிபரப்பு செய்தது. ஜீன் சின்னப்பாவின் சகோதரர் பிரியான் பிரேராவையும்; ஜீன் சின்னப்பாவின் மகளையும் பேட்டி எடுக்க ஆஸ்ட்ரோ, எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தது. அவர்கள் இருவரும் மறுத்து விட்டனர். அலெக்ஸ் ஜோசி என்பவர் ‘தி மெர்டர் ஆப் எ பியூட்டி குயின்’ (The Murder Of A Beauty Queen) எனும் ஒரு நூலையும் எழுதி இருக்கிறார்.
ஜீன் சின்னப்பாவைக் கொலை செய்தது யார் என்று இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை செய்தவர் உயிரோடு இருக்கிறாரா இல்லை அவரும் ஜீன் சின்னப்பா மாதிரி போய்ச் சேர்ந்து விட்டாரா. தெரியவில்லை.
இந்தக் கட்டுரையை ஒரு வரலாற்று ஆவணமாகப் பார்ப்போம். மறைந்து போன ஒரு பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையைக் கிண்டி, சீண்டிப் பார்ப்பதாக நினைக்க வேண்டாம். ஜீன் சின்னப்பா இறக்கும் போது அவருக்கு வயது 31. நமக்கும் பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். நினைவில் கொள்வோம்.
பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம், ஆடம்பரம். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தால் ஒரு பெண்மகளைக் கெடுத்துக் கலைத்துவிடும் என்று ஏற்கனவே சொன்னேன். அதை விதி என்று சொல்வதா இல்லை கர்மவினை என்று சொல்வதா.
அது எந்த அளவுக்கு உண்மை. கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொள்ளுங்கள். அப்புறம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ஜீன் சின்னப்பா; கார்த்திகேசு இருவரின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வேண்டிக் கொள்வோம்.
29 ஆகஸ்ட் 2023
ஜீன் சின்னப்பா - 1
- 1974-இல் மலேசியாவின் தலைமை போலீஸ் ஐ.ஜி.பி. டான்ஸ்ரீ அப்துல் ரகுமான் ஆசிம் கொலை;
- 1992-இல் அரிபின் அகாசு (Ariffin Agas) கொலை வழக்கு (ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட மிக மோசமான நிகழ்வு)
- 1993-இல் பகாங், பத்து தாலாம் சட்டமன்ற உறுப்பினர் மசுலான் இட்ரிஸ் கொலை (மோனா பெண்டி கொலை வழக்கு);
- 2003-இல் கோலாலம்பூர் பங்சாரில் கென்னி ஓங் கொலை;
- 2003-இல் கோலாலம்பூர் ஸ்ரீ அர்த்தாமாஸ் நோரித்தா சம்சுடின் கொலை;
- 2004-இல் சபா மாநிலத் துணையமைச்சர் டத்தோ நோர்ஜான் கான் கொலை;
- 2006-இல் அல்தான்தூயா கொலை;
- 2007-இல் கோலாலம்பூர், வங்சா மாஜு நூருல் சாஸ்லின் ஜாசிமின் எனும் எட்டு வயதுச் சிறுமி கொலை;
- 2010-இல் பந்திங் டத்தோ சுசிலாவதி கொலை;
- 2013-இல் அராப் மலேசிய வங்கி நிறுவனர் உசேன் அகமாட் நஜாடி கொலை.
22 மார்ச் 2023
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 1
தமிழ் மலர் - 22.03.2023 - பாகம்: 1
மலேசியாவில் ஆட்சிகள் மாறின. அரசாங்க நிர்வாகங்கள் மாறின. அரசியல்வாதிகளும் மாறினார்கள். அமைச்சர்களும் மாறினார்கள். ஆனால் அந்த மாற்றங்களினால் அரசாங்கத்தின் கொள்கைகள் மாறுமா? அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் மாறுமா? அரசாங்கத்தின் நடைமுறைச் செயல் திறன்கள் மாறுமா? நடைமுறைப் பண்புகள் மாறுமா? பழைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கல்வித் திட்டக் கொள்கைகள் மாறுமா?
மாறும் ஆனால் மாறாது என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துக் கொள்ளலாம். அதில் எதை வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். பிரச்சினையே இல்லை.
மொகைதீன், இஸ்மாயில் சப்ரி அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய அரசாங்கத்தின் சில பல பழைய திட்டங்களை அப்படியே தூக்கிக் கொண்டு போய் ஊறுகாய் போட்டு விட்டார்கள், அனைவரும் அறிவோம். தெரிந்த விசயம்.
இதில் ஒரு டிரில்லியன் கடனில் நாடே தடுமாறிக் கொண்டு நிற்கிறது. இதில் பெரிய பெரிய மெகா திட்டங்கள் ரொம்ப முக்கியமா. தேவை தானா என்று சொல்லி எத்தனையோ திட்டங்களைத் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தி வைத்து விட்டார்கள். மகிழ்ச்சி. பிரச்சினை இப்போது அது இல்லை. நம்முடைய தமிழ்ப் பள்ளிக்கூடங்களைப் பற்றியது தான் பிரச்சினை.
பொதுவாக ஒரு நாட்டில் ஆட்சி மாறும் போது புதிதாக வரும் அரசாங்கம் பழைய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையிலும் சரி; கல்விக் கொள்கையிலும் சரி; கைவைக்க மாட்டார்கள். அது எழுதப் படாத சாசனம். பல நாடுகளில் அப்படித்தான் நடக்கிறது. நடந்தும் வருகிறது.
நம் நாட்டைப் பொருத்த வரையில் கல்விக் கொள்கைகள் இன மொழி அடிப்படையில் தான் இயங்கி வருகின்றன. சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து அப்படித்தான் நகர்ந்து வருகின்றன.
புதிதாக எந்த ஓர் அரசாங்கம் வந்தாலும் சரி; வரையறுக்கப்பட்ட பழைய அரசாங்கக் கொள்கைகளில் சிற்சில மாற்றங்களை மட்டுமே செய்வார்கள். பெரிதாக எதையும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது.
வீட்டுக்குள் வந்து நுழைந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது ஊழல் பெருச்சாளிகள் பேரன் பேத்தி எடுத்த கண்கொள்ளா காட்சிகள். அந்த எலிகளை ஒவ்வொன்றாகப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்கவே அவர்களுக்கு நேரம் இல்லை. இதில் சாதனையாவது சோதனையாவது. 2018 பாக்காத்தான் அரசாங்கத்திற்கு தலைக்குடைச்சல் தான் மிஞ்சிப் போனது. நல்லவேளை. இருபது காசு பெனடோல் மாத்திரைகள் உதவி செய்தன. ஒரு செருகல்.
2018-இல் பதவி ஏற்ற அமைச்சர்கள் அவர்களின் அலுவலகங்களுக்குப் போய் கோப்புகளைத் தூசு தட்டிப் பார்த்தால் மில்லியன் கணக்கில் காசு சுரண்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஓர் அமைச்சு இல்லை. பெரும்பாலான அமைச்சுகளில் பெருவாரியான பணம் காணாமல் போய் இருக்கின்றன.
எப்படி ஏது என்று அலசிப் பார்ப்பதற்குள் 100 நாட்கள் முடிந்து விட்டன. அப்புறம் எப்படிங்க அவர்களின் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். இப்போதைய அன்வார் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இருமொழித் திட்டம் என்றால் டி.எல்.பி. (DLP) (Dual Language Programme). மலேசிய மொழியில் Program Dwi Bahasa. தமிழில் இருமொழிப் பாடத் திட்டம்.
இரு மொழித் திட்டம் (DLP) என்பது 'பகாசா மலேசியாவை மேம்படுத்துதல் மற்றும் ஆங்கிலத்தை வலுப்படுத்துதல்' எனும் கொள்கைக்கான அரசாங்கத்தின் முன்முயற்சியின் கீழ் ஒரு திட்டமாகும்.
(The Dual Language Programme (DLP) is a programme under the government's initiative to 'Empower Bahasa Malaysia and Strengthen English' policy)
மலேசியாவில் இரு மொழித் திட்டம் 2016-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில தொடக்க நிலைப் பள்ளிகளிலும் மற்றும் இடைநிலைப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டது.
முக்கிய நோக்கம்: அறிவியல், கணிதம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (Information Technology and Communication), மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்பம் (Design and Technology) ஆகிய பாடங்களில் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியைப் பயன்படுத்துவதால் ஆங்கிலப் புலமையை அதிகரிக்கலாம்; அத்துடன் மாணவர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகளை மேம்படுத்தலாம். இதுதான் அந்த தலையாய நோக்கம்.
1950-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தந்தை துங்கு அவர்கள் பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் மலாயா பல்கலைக் கழகத்தில் டாக்டர் இராம சுப்பையா என்பவர் தமிழ்மொழிப் பேராசிரியராக இருந்தார். இவரும் அப்போதே 60 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி இருமொழிச் செயல் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
அவர் கொண்டு வந்த அந்த இருமொழித் திட்டம் அப்போதைக்கு நல்ல ஒரு திட்டமாகத் தெரிந்தது. இல்லை என்று சொல்லவில்லை. தூர நோக்குச் சிந்தனையில் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அப்போதைக்கு அவரின் தலையாய நோக்கமாக இருந்தது.
அப்போதைக்கு நல்ல ஒரு தூரநோக்குச் சிந்தனை. அப்போதைக்கு வேறு ஒரு கோணத்தில் அவர் அதைப் பார்த்து இருக்கிறார். தப்பாகச் சொல்லவில்லை. இருந்தாலும் டாக்டர் இராம சுப்பையாவின் அந்தத் திட்டம், 1950-ஆம் ஆண்டுகளில் அப்படியே அமலாக்கம் செய்யப்பட்டு இருந்தால் இன்றையச் சூழ்நிலையில் தமிழ்ப் பள்ளிகளின் அடையாளம் தேய்ந்து போய் இருக்கலாம். நம்புங்கள்.
மலைநாட்டு தமிழினப் பதற்றத்தின் தடுமாற்றங்களைப் பார்க்க நேர்ந்து இருக்கலாம். ஒரு மொழியின் உயிர்ப் போராட்டத்தில் ஊஞ்சலாடும் ஒரு சமூகத்தின் வேதனைகளையும் பார்க்க வேண்டி வந்து இருக்கலாம்.
டாக்டர் இராம சுப்பையா சொன்ன வழியில் போய் இருந்தால் மலேசியத் தமிழர்களின் அடையாளம் சன்னமாய்த் தேய்ந்து போய் இருக்கலாம். 50 ஆண்டுகால இடைவெளியில் கண்டிப்பாக அது நடந்து இருக்கலாம். அந்தத் தாக்கத்தினால் தமிழர்களின் சமூக அமைப்புகளும் அடையாளம் தேய்ந்து ஒரு தொய்வு நிலையை அடைந்து இருக்கலாம்.
50 ஆண்டுகள் என்பது வளரும் நாடுகளில் பெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு கால வரையறை. ஆக நாம் கண்மூடித்தனமாக எடுக்கும் எந்த ஒரு முடிவும் நாளைக்குப் பின்னாளில் நமக்கு மட்டும் அல்ல; நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் பாதகங்களை உருவாக்கலாம். சரிங்களா. அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும்.
ஆக இந்த மாதிரி ஒரு நொய்மையான விவகாரத்தில் காலை எடுத்து வைத்து விட்டால் அப்புறம் பின் வாங்கவே முடியாது. சுருங்கச் சொன்னால் நம்முடைய தமிழ்ப் பள்ளியின் உரிமைகளை நாம் நிரந்தரமாக இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.
என்னுடைய பணிவான வேண்டுகோள். என் கருத்தைச் சொல்ல எனக்கு உரிமை உள்ளது. அதே போல என் மொழிக்கு ஏற்படப் போகும் ஒரு தொய்வு நிலையை எடுத்துச் சொல்லவும் உரிமை உள்ளது.
நினைவில் கொள்வோம். முதலாவதாக நம் தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளை முதலில் காப்பாற்றினால் தான் பின்னர் தமிழ் மொழியையும் காப்பாற்ற முடியும். தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான் தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும்.
அடுத்து எதிர்காலத்தில் நம் சந்ததியினரின் மொழிப் பயன்பாட்டு உரிமைகளையும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி இனி மெல்ல மரிக்கும். தயவு செய்து தமிழ் பள்ளிகளின் உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடகு வைக்க வேண்டாமே.
தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கில மொழி, தேசிய மொழி ஆகிய இரு மொழிகளும் எப்போதும் போல தனிப் பாடங்களாக இருக்கட்டும். மற்றப் பாடங்கள் அனைத்தும் தமிழ் மொழி போதனா மொழியில் இருக்கட்டும்.
இந்த இரு மொழித் திட்டத்தினால் எதிர்காலத்தில் மொழிப் பள்ளிகள் பாதிக்கப்படலாம். தமிழ்ப் பள்ளிகள் மட்டும் அல்ல. தமிழாசிரியர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும். விளக்கம் தருகிறேன். அதற்கு முன் இன்னும் ஒரு முக்கியமான விசயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
இருமொழிப் பாடத் திட்டத்தில் கணிதம், அறிவியல் எனும் இரு பாடங்களைப் பற்றி மட்டுமே எல்லோருமே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள ஒரு மறைமுகமான நகர்வைப் பற்றி பலரும் கண்டு கொள்வதே இல்லை.
இப்போது தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழியில் நடத்தப்படும் பொருளியல், தொழிநுட்பப் பாடங்களை இரு மொழித் திட்டத்தில் பெரும்பாலோர் சேர்ப்பதே இல்லை.
ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால்… மன்னிக்கவும். ஏற்கனவே சில தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தி விட்டார்கள். இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் பொருளியல், தொழில் நுட்பம் ஆகிய இரு பாடங்களையும் ஆங்கிலத்தில் நடத்தலாம் அல்லது மலாய் மொழியில் நடத்தலாம். தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இது பள்ளியின் தலைமையாசிரியரைப் பொருத்த விசயம்.
அடுத்த விசயம்: மலாய், ஆங்கிலப் பாடங்களை வேறு மொழிகளில் போதிக்க முடியாது. தெரிந்த விசயம். அந்தப் பாடங்களை அந்த அந்த மொழிகளில் தான் போதிக்க வேண்டும். சரிங்களா. அதாவது மலாய் பாடத்தை மலாய் மொழியிலும் ஆங்கிலப் பாடத்தை ஆங்கில மொழியிலும் தான் போதிப்பார்கள். போதிக்க வேண்டும்.
ஆக இரு மொழித் திட்டம் அமல்படுத்தப் பட்டால் இந்த ஆங்கில, மலாய்ப் பாடங்களையும் சேர்த்து மொத்தம் ஆறு பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மொழிகளில் அதாவது மற்ற மொழிகளில் போதிப்பார்கள். இது தான் நடைமுறை உண்மை. நடந்து வரும் உண்மை.
அப்படி என்றால் கணிதம், அறிவியல், நன்னெறி, ஓவியம், தொழிநுட்பம், ஆங்கிலம் ஆகிய ஐந்து பாடங்களையும் ஆங்கில மொழியில் அல்லது மலாய் மொழியில் போதிக்க வேண்டி வரும்.
மலாய்ப் பாடம் மலாய் மொழியில் போதிக்கப்படும். ஆக அந்த வகையில் மொத்தம் ஆறு பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்கப் படும். அந்த ஆறு பாடங்களும் தமிழ் மொழியில் போதிக்கப் படாது.
இப்போது இருக்கிற 10 பாடங்களில் 6 பாடங்கள் மற்ற மொழிகளில் போதிக்கப் பட்டால் எஞ்சிய 4 பாடங்கள் மட்டுமே தமிழ் மொழியில் போதிக்கப்படும்.
அப்படி என்றால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்த இரு மொழித் திட்டத்தினால் 10 தமிழாசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகளில் 4 பேர் தான் தமிழாசிரியர்களாக இருப்பார்கள். மற்ற 6 ஆசிரியர்கள் இதர சீன, மலாய் ஆசிரியர்களாக இருப்பார்கள்.
ஆக அந்த 6 ஆசிரியர்கள் சீன, மலாய் ஆசிரியர்களாக இருக்கும் பட்சத்தில் அந்தத் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்மொழி தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பதும் அவசியம் இல்லை. மற்ற இனத்தவர் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பதவிக்கு வரலாம்.
2018-ஆம் ஆண்டு மலேசியாவில் 47 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வந்தது. அந்தத் தமிழ்ப் பள்ளிகளில் 6 பாடங்களைத் தமிழ் மொழி அல்லாத மற்ற மொழியில் படித்துக் கொடுத்தார்கள். இந்த நகர்வு எதிர்காலத்தில் நிச்சயமாக மொழிப் பள்ளிகளின் அடையாளத்தை இழக்கச் செய்யலாம்.
இருமொழிப் பாடத் திட்டத்தைச் சிலர் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார்கள். எதிர்கால மலேசியத் தமிழர்கள் தங்களின் அடையாளத்தை இழக்கலாம் என்பது தெரியாமலா இருக்கும். மொழி இருந்தால் என்ன போனால் என்ன. நானும் என் குடும்பமும் நல்லா இருந்தால் போதும் என்று நினைப்பது சரியன்று.
2021-ஆம் ஆண்டில் மலேசியாவில் 1,302 சீனப்பள்ளிகள் இருந்தன. 495,386 மாணவர்கள் பயின்றார்கள். ஆனால் எந்த ஒரு சீனப் பள்ளியும் அந்த இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. ஏன்? நீங்களே ஒரு முடிவு செய்யுங்கள்.
ஒரு மொழியின் ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால் அந்த மொழியைக் கற்பிக்கும் நேரத்தைக் கூட்டலாம் அல்லது சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்கலாம். இந்த முறைமைகளைத் தவிர்த்துவிட்டு மற்ற பாடங்களை ஆங்கிலத்திற்கு மாற்றுவது என்பது தேசிய மொழிக் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கலாம்; இது மலாய்க் கல்விமான்களின் மாற்றுக் கருத்துகள்.
(தொடரும்)