02 மே 2010

கணினியின் வழி ஜோதிடம்

கணினியின் வழி ஜோதிடம் கணிக்க முடியும் என்று சென்ற வாரம் கேள்வி பதில் அங்கத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அதைப் பார்த்த பின்னர் கணினியின் மூலமாக தங்களுடைய ராசி பலனைக் கணித்துக் கொடுக்குமாறு பலர் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். 

கேட்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இதை ஓர் இலவச சேவையாகத் தான் தொடங்கினேன். ஜாதக ஏடுகள் PDF முறைமையில் 40 லிருந்து 45 பக்கங்கள் வரை தயாரித்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கிறோம். பிறப்பு கால கிரக நிலை, நடைமுறைக் கிரக நிலைகள், சனிப் பிரவேசம், கிரக யோகங்கள், கிரகப் பார்வையின் பலன்கள், எதிர்காலப் பலன்கள், திருமணப் பொருத்தம், மண வாழ்க்கை, நட்சத்திர பலன்கள் அனைத்தும் அந்த ஜாதகக் குறிப்புகளில் கிடைக்கின்றன.

இதற்காகக் கட்டணம் எதையும் இதுவரை கேட்கவில்லை. இருந்தாலும் ஒருவருடைய ஜாதகத்தைக் கணித்துக் கொடுக்க ஒரு மணி நேரம் பிடிக்கிறது. இதில் நம்முடைய நேரம் எவ்வளவு பிடிக்கிறது. கணினி இணையச் செலவுகள், கைப் பேசிச் செலவுகள், இதரச் செலவுகள் என்று எவ்வளவு வரும். இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜாதகக் குறிப்புகள் கேட்கும் சிலர் கிடைத்ததும் ஒரு வார்த்தை 'நன்றி' கூட சொல்லாமல் காணாமல் போய் விடுகிறார்கள். இலவசம் தானே என்கிற அலட்சியம் என்றைக்கும் யாருக்கும் இருக்கக் கூடாது. ஆக, இனிமேல் ஜாதகக் குறிப்பு கேட்பவர்கள், தயவு செய்து உங்களால் இயன்ற ஒரு சேவைக் கட்டணத்தைக் கொடுத்து உதவுங்கள். சராசரி கட்டணமாக மலேசிய ரிங்கிட் 20 சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இலவசமாகக் கிடைக்கிறது என்று மற்றவர்களை தரம் குறைவாக நினைக்கக் கூடாது.

ஜாதகம் அனுப்பப் படும் போது அதனுடன் ஒரு நிரல் அழிவையைப் போன்ற ஒரு பின்னூட்டமும் இருக்கும். இது உங்களுக்குத் தெரியாது ஜாதகம் கிடைத்ததும் நீங்கள் என்னுடன் தொடர்பு கொண்டால் அந்தப் பின்னூட்டம் அமைதியாக இருந்துவிடும். அசட்டையாக இருந்தால் கணினியில் சில விரும்பத் தகாத பிரச்னைகளை ஏற்படுத்தி விடும்.

1 கருத்து:

  1. ஜன்கித் மஞ்ச் என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பகவான்ஜி ரயானி என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
    வாஸ்து ஜோதிடத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்பதுதான் அந்த வழக்கு. அறிவியலுக்கு விரோதமான வாஸ்துவை அனுமதிக்கக் கூடாது என்பதுதான் வழக்கின் சாரமாகும்.
    இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்-பெற்றுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டி, விஞ்ஞான பூர்வமானதை மட்டுமே அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று தனது மனுவில் சுட்டிக்-காட்டியும் உள்ளார்.
    இதில் எதிர் வழக்குதாரர்களாக முக்கிய ஜோதிடர்களை தம் மனுவில் சேர்த்துள்ளார். வேஜன் தாருவாலா, வாஸ்து ஆலோசகர்கள் டாக்டர் ரவிராஜ், ராஜேஷ் ஷா, சந்திரசேகர் குருஜி, பவிக்சங்கவி, பிரம்மார்ஷி, சிறீகுமார் சுவாமிஜி ஆகியோர் எதிர் வழக்குதாரர்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
    மத்திய அரசின் சார்பில் வழக்குரைஞர் அத்வைத்சேதனா என்பவர் ஆஜர் ஆனார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் ஜோதிடம் இருந்து வருவதாக அவர் சமாதானம் கூறினார்.
    நீண்ட காலமாக ஒன்று இருந்து வருவதாலேயே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நியாயப்படுத்த முடியாது என்றும் வழக்கைத் தொடுத்த பகவான்ஜி ரயானி அடித்துக் கூறினார்.


    மகாராட்டிர மாநில அரசு மற்றும் மத்திய அரசுகளிடம் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் எப்.அய். ரெபெல்லோ, ஜே.எச். பாட்டியா ஆணையிட்டுள்ளனர்.
    வாஸ்து சாஸ்திரம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் இந்த வாஸ்து யார் என்பதை முதலில் முடிவு செய்யவேண்டும்.
    ஒருமுறை ஆண்டகாசுரன் என்னும் அசுரனுக்கும், சிவபெருமானுக்கும் பல்லாயிரம் ஆண்டு சண்டை நடந்ததாம். போரில் களைத்துப்போன சிவன் வியர்வையை வழித்து எறிந்தானாம் சிவனின் வியர்வையும், பூமாதேவியும் ஒன்று கலந்து ஒரு பிள்ளை பிறந்ததாம் அந்தப் பிள்ளைதான் இந்த வாஸ்துவாம்.
    வாஸ்துவின் பிறப்பே ஆபாசமானதாகவும், அறிவுக்குப் பொருத்தமற்றதாகவும் இருக்கும்போது அவன் பெயராலே சொல்லப்படும் சாஸ்திரமும் வேறு எந்தக் கதியில் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
    புகழ்பெற்ற இந்திய அறிவியலாளர் ஜெயந்த் நர்ஸிகர் வாஸ்து என்பது மூட நம்பிக்கையைச் சார்ந்தது. பழைய புராண கருத்துக்களை புதிய கருத்துகளோடு பொருத்திப் பார்க்கக் கூடாது. அறியாதவர்களால் அறிவியல் என்று சொல்லப்படுகின்ற ஜோதிடம் போன்ற மூட நம்பிக்கைகள் மக்களிடம் பரவாமல் தடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
    வாஸ்து சாஸ்திரமும், உள்நாட்டுக் கட்டடக்கலையும் எனும் தலைப்பில் அய்தராபாத் ஜே.என். தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்டடக் கலைத் துறைப் பேராசிரியர் ஆர்.வீ. கோல்ஹ் தாட்தார் அவர்கள், கட்டடக் கலைபற்றிய வரலாற்றைப் படிப்பவர்கள் வாஸ்து சாஸ்திரம் என்ற ஒன்று இருக்கிறது; கட்டடம் கட்டுவோர் சிலர் அதனைப் பின்பற்றிக் கட்டடங்களை எழுப்பினர் என்கிற அளவுக்கு அறிந்து கொள்ளலாமே தவிர, வாஸ்து சாஸ்திரத்தை இன்னும் பின்பற்றுவதும், அதன் அடிப்படையில் இருக்கின்ற கட்டடத்தை இடித்துப் புதிதாகக் கட்டுவதும் அறிவுடைமை ஆகாது என்று கூறினாரே!
    ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த என்.டி. ராமராவ் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளவர். தலைமைச் செயலகத்தின் நுழைவுவாயிலையே மாற்றினார். அதனால் கண்ட பலன் என்ன?
    5 ஆண்டு முழுவதுமாக ஆட்சி புரிய முடியவில்லையே உயிருடனும் இருக்க முடியவில்லையே! இதற்குப் பிறகும் வாஸ்துவைப் பற்றிப் பேசுபவர்களை மனநல மருத்துவமனையில் சேர்க்கவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு