06 மார்ச் 2011

கணினியும் நீங்களும் - 90

அன்பு நெஞ்சங்களே, குடும்பப் படங்களைப் பதிப்பு செய்கிறேன். மற்ற பேரப் பிள்ளைகளின் படங்களை வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

Third grand daughter - Srilekha
 
First Grand Daughter - Harshitra

Second Grandson - Haresh

Fifth Grand daughter - Srinitha

(இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு இந்தப் பகுதி வெளிவருவதில் சற்று சுணக்கம் ஏற்படலாம். ’மலேசிய நண்பன்’ திங்கள் கிழமைகளில் வெளிவரும் ‘மாணவர் சோலை’  பகுதியையும் தயாரித்து வ்ருகிறேன். அதனால் என்னுடைய கணினியில் பழைய Pagemaker ஐ பதிப்பிக்க வேண்டி வந்தது. ஆகவே Indo Word ஐ பயன் படுத்த வேண்டிய கட்டாய நிலைமையும் ஏற்பட்டது.  இரண்டுக்கும் இடையே சின்னச் சின்ன சிக்கல்கள். தவிர்க்க முயற்சி செய்து வருகிறேன்.  அது வரை பொறுத்துக் கொள்ளுங்கள்.)




குமாரி கமலாதேவி (குறும் செய்தி 22.02.2011)
கே: Facebook - பேஸ்புக் இணையத் தளத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி மூடப் போகிறார்களாமே. உண்மையா?

ப:
பேஸ்புக் என்பது ஒரு நட்பு ஊடகம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை உலகம் முழுமையும் 700 மில்லியன் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதன் சொத்து மதிப்பு 4100 கோடி மலேசிய ரிங்கிட். மறுபடியும் சொல்கிறேன். 4100 கோடி மலேசிய ரிங்கிட். 



அதாவது நம்முடைய வடக்கு-தெற்கு பிளஸ் நெடுஞ்சாலை இருக்கிறதே அதைப் போல நான்கு நெடுஞ்சாலைகளைப் கட்டி விடலாம். அதில் இருந்து ஒரு வருடத்திற்கு ஆயிரம் கோடி ரிங்கிட் வருமானம் வேறு வருகிறது.

மைக்ராசாப்ட் நிறுவனம் பல நூறு கோடிகளை முதலீடு செய்து இருக்கிறது. பல ஆயிரம் ஆயிரம் பேர் கோடிக் கோடியாக முதலீடு செய்து இருக்கிறார்கள். அதை நம்பி பல இலட்சம் குடும்பங்கள் வேறு வாழ்கின்றன.

உலகத்திலேயே அதிகமான வருமானம் கிடைக்கும் நிறுவனமாகவும் இருக்கிறது. பேஸ்புக் என்பது தங்க முட்டைகள் போடும் ஒரு வாத்து. அவ்வளவு சீக்கிரத்தில் கசாப்புக் கடைக்கு அனுப்ப மாட்டார்கள். உட்கார்ந்து இருக்கும் இடத்திலேயே பணம் வந்து கொட்டுகிறது. 



அதை வேண்டாம் என்று சொல்வதற்கு அவர்கள் என்ன பைத்தியமா. இது என்னுடைய கருத்து. அதை மூடப் போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அது வெறும் ஒரு வதந்தி. உலகம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அழிந்து போகும் என்று ஒரு புரளி கிளம்பியதே. அந்த மாதிரி தான் இதுவும்.

இந்த பேஸ்புக் நட்பு ஊடகத்தை உருவாக்கியவர் மார்க் ஜூக்கர்பர்க். அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 2004ல் உருவாக்கினார்.

இந்த வலைத்தளத்தினால் பல சமுதாயச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாதிரியான சமுதாயச் சிக்கல்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்னால் சொன்னார்.

பேஸ்புக்கை மூடி விட வேண்டும் என்று அவர் சொல்லவே இல்லை. புரிகிறதா. அவர் மூடுவதாக இருந்தாலும் மற்றவர்கள் விட மாட்டார்கள்.

ஆக, கவலைப் பட வேண்டாம். இணையம் இருக்கும் வரையில் பேஸ்புக்கும் இருக்கும். பேஸ்புக் இருக்கும் வரையில் இணையமும் இருக்கும்.

அப்படியே பேஸ்புக்கை மூடுகிறார்கள் என்றால் அது ஓர் உலக மகா அதிசயமாகத் தான் இருக்கும். பல இளைஞர்களின் சாவுக்கு அவர்கள் காரணமாக இருக்க மாட்டார்கள்.

உதய்க்குமார் <uthayakumar15@gmail.com>
கே: பேஸ்புக்கை ஏன் எல்லோரும் விரும்புகிறார்கள்?

ப:
பேஸ்புக்கில் 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் உறுப்பினர் ஆகலாம். ஆயிரக்கணக்கான வயோதிகர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த 102 வயது பாட்டி ஒருவர் பேஸ்புக்கில் உறுப்பினர் ஆகி சரித்திரம் படைத்தார். 



'The Social Network' எனும் பேஸ்புக் திரைப்படம் வேறு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தயாரிக்கப் பட்டது. சரி. உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

பேஸ்புக்கை ஏன் எல்லோரும் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலகீனம் அடைந்து வருகின்றன. மனிதர்கள் தீவுக் கூட்டங்களாக மாறி வருகிறார்கள். கடந்த காலத்தைப் போல குடும்பம் என்பது ஒரு வலுவான அமைப்பாக இப்போது இல்லை. அவசர உலகில் குடும்ப உறவுகள் சிதைந்து வருகின்றன.

அதனால், மனிதர்கள் தனித்து விடப் படுகிறார்கள். அவர்கள்  உறவுகளைத் தேடி அலைகிறார்கள். இப்போதைய நவீன காலத்து  மனிதர்கள் குடும்பப் பொறுப்புகளைத் தவிர்க்கப் பார்க்கின்றனர்.

அவற்றின் பயன்களை மட்டுமே அனுபவிக்க விரும்புகின்றனர். கல்யாணம் பண்ணாமலேயே கணவன் மனைவியாக வாழ்வது எளிமை என்கின்றனர்.

ஆக அத்தகைய மனிதர்களுக்கு பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்கள் வரப்பிரசாதமாக அமைகின்றன. மேலும் Twitter, Orkut, Myspace, Mixi, LinkedIn, hi5, Flickr, Bebo போன்ற சமூக ஊடகங்களும் உள்ளன.

இந்தத் தளங்களில் உங்களுடைய உணர்வுகளை நினைத்த நேரத்தில் அப்படியே கொட்டலாம். புதிய நண்பர்களைத் தேடிக் கொள்ளலாம். அரட்டை அடிக்கலாம். புகைப்படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

அவர்களிடம் அந்தரங்கச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆறுதலான செய்திகள் வரும். ஆவேசமான கருத்து களும் வரும். பிறந்த நாளை நாமே மறந்து போனாலும் அதை நினைவில் வைத்து வாழ்த்து சொல்லும் நண்பர்களும் இருக்கிறார்கள்.

பணம் மட்டும் எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து விடும் என்பதை மாற்றி அமைத்தவை இந்தச் சமூகத் தளங்கள். அதனால் தான் சின்னவர்களில் இருந்து பெரியவர்கள் வரை பேஸ்புக்கிற்கு அடிமையாகிக் கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவில் 100ல் 41 பேர் பேஸ்புக் கணக்கு வைத்து இருக்கிறார்கள்.

மலேசியாவில் இளைஞர்கள் இடையே பேஸ்புக் பேய்க் காய்ச்சல் ரொம்ப வேகமாக அடிக்கிறது. கொஞ்ச காலமாக எனக்கும் அந்தக் காய்ச்சல். என்ன என்னவோ மருந்தை எல்லாம் சாப்பிடுகிறேன்.

உஹூம். முடியவில்லை. காய்ச்சல் நிற்பதாக இல்லை. அதற்கு காரணம். நேபாளத்தில் உள்ள பேஸ்புக் நண்பர். அவர் ஒரு 60 வயது விதவை. தப்பாக நினைக்க வேண்டாம். நாங்கள் எங்களுடைய பேரப் பிள்ளைகளைப் பற்றித் தான் பேசிக் கொள்கிறோம். வேறு ஒன்றும் இல்லை.


மு.கோமதி, தாமான் ரிஷா, ஈப்போ
கே: உலகில் எந்த எந்த நாடுகளில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது?
ப:
சீனா, வியட்நாம், ஈரான், உஸ்பெக்கிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, வங்காள தேசம். சமய அரசியல் காரணங்களுக்காகத் தடை செய்யப் பட்டு உள்ளன. பேஸ்புக் தடை செய்யப் பட்டுள்ளது. 



எப்படித்தான் தடை செய்தாலும் மாற்று இணையத் தளங்களைக் கொண்டு பேஸ்புக்கைப் பார்க்க முடியும். உலகில் முக்கால் வாசி பகுதிகள் அழியக் கூடிய ஓர் இயற்கைப் பேரிடர் கொடுமை ஏற்பட்டாலும் இணையத்தை அழைக்க முடியாது.மலேசியாவில் பேஸ்புக்கைத் தடை செய்ய மாட்டார்கள்.

ஏனென்றால் அரசாங்கத்தின் சில செய்திகள் இந்த இணையத் தளத்தின் மூலமாக மக்களைப் போய்ச் சேர்கின்றன. ஆக, பேஸ்புக்கினால் சில கெடுதல்கள் இருந்தாலும் நன்மைகள்தான் அதிகம். 

செ.இராதாகிருஷ்ணன், தியாக துருகம், விழுப்புரம், தமிழ்நாடு
கே: அய்யா, ஐந்து வயதில் நடந்த ஒரு விபத்தில் என் இரு விழிப் பார்வையையும் இழந்தேன். பார்வையற்றோர் பள்ளியில் பயின்றேன். சென்னை லாயோலா கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தையும் தஞ்சை அரசக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியையும் பெற்றேன். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முது கலைப் பட்டம் படித்தேன். இப்போது ரிஷ’வந்தியம் அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன்.

உங்களுடைய கணினியும் நீங்களும் கணினித் தொடரை சமீபத்தில் இணையத்தில் படித்தேன். அறிவாந்த முறையிலும் அழகான தமிழிலும் விளக்கம் தருகிறீர்கள். நான் nvda, jaws எனும் நிரலிகளின் துணையுடன் கணினியையும் இணையத்தையும் இயக்கி வருகிறேன்.


இது என்னுடைய முதல் மின்னஞ்சல். அதனை nvda நிரலியைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்தேன். கணினித் தொடர்பான சந்தேகங்களை நிறைய உங்களிடம் கேட்க வேண்டும். உங்கள் அருள் மழையும் அறிவு மழையும் என் மீது பொழிய வேண்டும்.

ப:
அன்புச் சகோதரரே, உங்களுடைய கடிதத்தைப் படித்து மனம் கலங்கிப் போனேன். பார்வை இல்லை என்று நீங்கள் கவலையே பட வேண்டாம். 



ஆனால், பார் போற்றும் ஆற்றலும் திறமையும் உங்களுக்கு இருக்கிறதே. அவற்றைக் கொண்டு சாதனை செய்கிறீர்களே. பார்வையற்றவர்கள் படிக்க கேட்க, அவர்கள் சொல்லுவதை எழுத nvda, jaws நிரலிகள் உள்ளன. அவற்றை நீங்கள் பயன் படுத்துவதைக் கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

பார்வை உள்ள பல இலட்சம் பேருக்கு nvda, jaws நிரலிகளைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. NVDA என்றால் Non Visual Desktop Access. பார்வையற்றவர் கணினிப் பயன்பாடு என்று தமிழில் அழைக்கலாம்.

JAWS என்றால் இராட்சச சுறா அல்ல. இது ஒரு கணினி மென்பொருள். Job Access With Speech என்பதன் சுருக்கம். இந்த இரண்டும் இருந்தால் பார்வை இல்லாமல் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

ஓர் இணையப் பக்கத்திற்குப் போனதும் கணினித் திரையில் தெரியும் இணையப் பக்கங்களைப்  கணினி படிக்கத் தொடங்கும்.

அதற்குப் பதில் எழுத வேண்டும் என்று சொன்னால் கணினி உடனே  தட்டச்சு செய்யும். என்ன எழுத்தில் எவ்வளவு பெரிய எழுத்தில் என்று சொன்னால் போதும். அழகாகத் தட்டச்சு செய்து விடும்.

அப்புறம் அனுப்பு என்றால் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு மின்னஞ்சல் செய்து விடும். உங்களுடைய முதல் மின்னஞ்சலை எனக்கு அனுப்பி வைக்கிறீர்கள்.

அன்பு இராதாகிருஷ்ணன் அவர்களே, உங்களுடைய மின்னஞ்சலை இலட்சக்கணக்கான மலேசிய நண்பன் வாசகர்கள் படிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். அவர்களின் சார்பில் உங்களுக்கு எங்களின் அன்பான வாழ்த்துகள்.

என்னுடன் பேச விரும்புவதாகச் சொன்னீர்கள். இணையத்தின் மூலமாகப் பேச முடியும். 'ஸ்கைப்' நிரலியை உங்களுக்காகத் திறந்து விட்டு இருக்கிறேன். எப்போது வேண்டும் என்றாலும் என்னுடன் பேசலாம். நீங்கள் நலமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

4 கருத்துகள்:

  1. அருமையான விளக்கங்கள். அங்கதம் சுவைக்கிறது.
    http://kopunniavan.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_5823.html

    பதிலளிநீக்கு
  3. ROMBA NALLA VISHAYAM PANREENGA SIR ...
    VAAZHTHUKKAL..!!

    பதிலளிநீக்கு
  4. அருமையான விளக்கங்கள்.

    பதிலளிநீக்கு