12 ஆகஸ்ட் 2014

பாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு - பாகம் 1

[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 03.08.2014 நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது.]

இரண்டாம் உலகப் போர் முடிந்த காலக் கட்டம். அணுகுண்டுகள் போட்டதால், ஜப்பான் நாட்டின் இடுப்பு எலும்பு உடைந்து போனது. எழுந்து நடக்க முடியவில்லை. படுத்தப் படுக்கையாய்க் கிடக்கிறது. 


ஆணவம் பேசி வந்த உலகப் போலீஸ்காரர் அமெரிக்காவிற்கு, பசிபிக் பெருங்கடலில் பயங்கரமான அடி. ஏற்கனவே, ஜப்பான் துவைத்துப் பிழிந்து காயப் போட்டு விட்டது. இந்த இலட்சணத்தில், அமெரிக்காவின் முகம் ஒரு பக்கமாய் வீங்கிப் போனது. 

பாவம் பிரிட்டன். அதற்கு உடம்பு முழுவதும் வெட்டுக் குத்துக் காயங்கள். பற்றாக்குறைக்கு பர்மா மலாயாக் காடுகளில் விழுந்து எழுந்த இரத்தக் காயங்கள். ’பிலாஸ்திரி’ போட இடமே இல்லை. மருந்து போட கூட காசு இல்லாமல், கஞ்சி மாவைத் தடவி, கட்டு மேல் கட்டுகளைப் போட்டு இருக்கிறது. 


அந்தப் பக்கம் பார்த்தால், ஜெர்மனிக்கு வரி வரியாகச் சாட்டைக் கோடுகள். நாஜி சின்னத்திற்கு நன்றாகவே கறுப்புச் சாயம். இத்தாலியின் பக்கம் திரும்பினால், பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. முசோலினி விட்டுச் சென்ற கொஞ்ச நஞ்ச இட்லி மாவைப் பிசைந்து, ஒப்புக்கு ஒத்தடம் கொடுத்து இருக்கிறார்கள். 

ராகம் புரியவில்லை உள்ள சோகம் தெரியவில்லை

இந்தப் பக்கம் சீனாவைக் கேட்டால், சீனி வாங்கவே காசு இல்லையாம். இந்தியாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். விடுதலைப் போராட்டத்தில், ராகம் புரியவில்லை உள்ள சோகம் தெரியவில்லை என்று சன்னமாய் ஆபேரி ராகங்கள். அப்புறம் காந்தி தாத்தாவின் அதே பழைய கதிர் ஆடைப் போராட்டங்கள். 


ஆக, உலகின் அத்தனை நாடுகளுக்கும் உள் காயங்கள் வெளிக் காயங்கள். அதோடு உப்பு மிளகாய் சேர்த்த ரண வேதனைகள். அந்த வேதனைகளினால் வாய் ஓயாத புலம்பல்கள். இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை இப்படித்தான் என்னால் வர்ணிக்க முடிகிறது. 

இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனர்களின் போராட்டம்

சரி. இந்த மாதிரியான ஓர் இக்கட்டான நிலையில்தான், இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினையும் தலைகாட்டியது. இப்போதைய உலகில் தீர்க்கப் படாத பல பிரச்சினைகளில், இந்தப் பிரச்சினையும் ஒன்று. இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் எப்படி இப்பேர்ப் பட்ட ஒரு தீராப் பகை வந்தது. அதை ஆராய்ந்து பார்ப்பதே இன்றைய இந்தக் கட்டுரை.


பாலஸ்தீன நாட்டில் ஜபாலியா என்கிற ஒரு நகரம். அங்கே இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனர்களின் போராட்டம். ஒரு பதாகையை ஏந்திக் கொண்டு, ஒரு நாற்பது வயது தாயார் ஊர்வலம் போகிறார். கூடவே அவருடைய இரு பிள்ளைகள். அவரிடம் ஓர் அமெரிக்கப் பத்திரிகையாளர் கேட்டார். 

’நீங்கள் சாலைகளில் நியாயம் கேட்டு போராட்டம் செய்கிறீர்கள். சரி. ஆனால், ஏன் உங்கள் சின்னஞ் சிறு பிள்ளைகளையும் உங்களோடு கூட்டிக் கொண்டு போகிறீர்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகிவிடாதா?

எங்கள் பிள்ளைகள் எங்களோடு இறக்கட்டும்

அதற்கு அந்தத் தாயார் சொன்னார். ’வீட்டில் பிள்ளைகளை விட்டுச் சென்றால், திரும்பி வரும் போது அவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பது எங்களுக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. அதனால், மரணம் என்கிற ஒன்று வந்தால், அது எங்கள் கண் எதிரிலேயே நடந்து விட்டுப் போகட்டும். 


எங்கள் பிள்ளைகள் எங்களோடு இறக்கட்டும்’ என்று சொன்னார். ஆக, அந்த நிலையில் தான், இப்போது பாலஸ்தீனம் கண்ணீர் வடிக்கின்றது.

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை, உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். தெரியாதவர்கள் சிலர் இருப்பார்கள். பழமொழியைக் கொஞ்சம் விளக்கி விடுகிறேன். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரத்திற்குப் போகும் பாதையில் சீகாழி நகர் இருக்கிறது. சீர்காழி இல்லை. சீகாழி. 


அந்த நகரின் மையத்தில் கழுமலைக் கால்வாய் என்று ஒரு கால்வாய் ஓடுகிறது. கால்வாய் நீரின் ஓடும் வேகத்தில், ஒரு சிலை மேலே அடித்து வரப்பட்டது. அதைக் கரைக்கு கொண்டு வந்த சிலர், அருகில் இருந்த அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர். அந்தச் சிலை தான் பிடாரியம்மன் என்று அழைக்கப் படும் கழுமலையம்மன். பின்னாளில் பெயர் பெற்றது.

ஐரோப்பாவைக் கசக்கிப் பிழிந்தவர் ஹிட்லர்

புதிதாக வந்த பிடாரியம்மன், முன்பு இருந்த சப்தக் கன்னியர்களை ஒவ்வொருவராக வெளியேற்றியது. இது ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான ஒரு கிராமியக் கதை. அதை நினைவில் கொள்ளுங்கள். பின்னர், பிடாரியம்மன், அந்த ஆலயத்தை தன் வசப் படுத்திக் கொண்டது. 

அதனால், வெளியேறிய சப்தக் கன்னியர்கள் திரும்ப இந்த ஆலயத்திற்குள் வர முடியாமல் போனது. அந்தக் கன்னியர்கள் கொஞ்சம் தொலைவில் தனித் தனியே கோயில் கொண்டனர். ஆக, ஒண்ட வந்த இந்தப் பிடாரி ஊர் தெய்வங்களை எல்லாம் விரட்டி அடித்தது. 

ஒரு கோடியே பத்து இலட்சம் பேர் கொலை செய்யப் பட்டனர்

இப்படித் தான் அந்தக் கிராமியப் பழமொழியும் வந்தது. அதே மாதிரி தான் இப்போது பாலஸ்தீனத்திலும் நடந்து கொண்டு இருக்கிறது. 

இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்த பிறகு, உலகில் பலப் பல மாற்றங்கள். ஐரோப்பாவைக் கசக்கிப் பிழிந்தவர் ஹிட்லர். அந்த மனிதர் உலகத்திலேயே இதுவரை நடக்காத ஒரு பெரிய இனப் படுகொலையையே அரங்கேற்றம் செய்தவர். 

1941-ஆம் ஆண்டில் இருந்து, 1945-ஆம் ஆண்டு வரையில் யூதர்கள், நாடோடிகள், ஸ்லேவியர்கள், கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் என்று ஒரு கோடியே பத்து இலட்சம் பேர் கொலை செய்யப் பட்டனர். 

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இனப் படுகொலை

இதில் 10 இலட்சம் குழந்தைகளையும் கணக்கில் சேர்க்க வேண்டும். ஐரோப்பாவில் இருந்த யூதர்களில் தொன்னூறு இலட்சம் பேர் ஒட்டு மொத்தமாகத் துடைத் தொழிக்கப் பட்டனர். இது மிகச் சரியான புள்ளி விவரங்கள். ஆக, அதுவே இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இனப் படுகொலையாகும். 

உலக வரலாற்றில், ஜெங்கிஸ்கானுக்கு அடுத்த நிலையில் இருப்பது இந்த ஹிட்லர்தான். இடி அமின் என்கிற ஒரு நரவேட்டை நல்லையன் இருக்கிறார். அவரையும் மறந்துவிடக் கூடாது. ஹிட்லர் ஒரு சுத்த சைவம். ஆனால், அந்தச் சைவத்திற்குள் இப்பேர்ப்பட்ட ஓர் அரக்கத் தனமா? நம்ப முடியவில்லை. 

ஹிட்லரின் நெற்றிப் பொட்டைச் சீண்டிப் பார்த்த யூதர்கள்

காலம் காலமாய் யூத இனத்தின் மீது அவருக்கு இனம் காணாத வெறித் தனம். சின்ன வயதில் யூதர்களால் ஏற்பட்ட பாதிப்புகள். யூதர்களால் விரட்டி அடிக்கப்பட்ட வேதனைகள். யூதர்கள் பணத்தை ஐரோப்பிய ஏழைகளிடம் வட்டிக்கு விட்டு, அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த வெறுப்புகள். தவிர, பார்க்கும் இடம் எல்லாம் யூதர்களே பணக்காரர்களாக இருந்த பொறாமை கலந்த வெறித் தனங்கள். 

1920-களில், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் போன்ற தொழில்முறைத் துறைகள் அனைத்திலும், யூதர்களே கோலோச்சி முதலிடம் வகித்து வந்தனர். இவர்களை இப்படியே விட்டால், ஒட்டு மொத்த ஜெர்மனியையே விலை பேசி வாங்கி விடுவார்கள் என்கிற பயம் வேறு. அது ஹிட்லரின் நெற்றிப் பொட்டைச் சீண்டிப் பார்த்தது.

கல்வியிலும், அதிகாரத்திலும், சமயத்திலும்

அதையும் தாண்டிய நிலையில், கிறிஸ்துவர்களை யூதர்கள் தாழ்த்திய நிலையில் பார்த்தார்கள். பழகினார்கள். யூதர்கள் தங்களைத் தாங்களே நிறத்திலும், கல்வியிலும், அதிகாரத்திலும், சமயத்திலும் உயர்ந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டனர். 

இன்னும் ஒரு விஷயம். பொதுவாகவே, யூதர்களுக்கு ஆசைகள் அதிகம். பணத்தாசை தான். வஞ்சகம் பூசிய பேராசை என்றுகூட சொல்லலாம். எல்லாமே வேண்டும். ஆனால், தங்களுக்கு மட்டும்தான் வேண்டும் என்று நினைப்பவர்கள். அதைத் தானே இப்போதும் உலகம் முழுமையும் செய்து வருகிறார்கள்.

ஆரியர்களின் தலைவர் ஹிட்லருக்கு நிம்மதியான பெருமூச்சு

அடுத்து, ஹிட்லர் ஓர் ஆரியர். ஆக, ஆரியர்களுக்குக் கிடைக்க வேண்டிய எல்லா வாய்ப்புகளையும் யூதர்கள் தட்டிப் பறித்துக் கொண்டனர் என்பது ஜெர்மனியர்களின் அடக்க முடியாத ஆத்திரம். காலம் காலமாய்க் கடுகு பொரிந்தது. இரண்டாம் உலகப் போரில், பட்டாசு மாதிரி வெடித்தும் விட்டது. 

அதன் பின்னர் ஓர் இனம் முக்கால்வாசி அழித்து ஒழிக்கப் பட்டது தான், நரகத்தின் தலைவாசலாக அமைகின்றது. அதற்குப் பிறகுதான் ஆரியர்களின் தலைவர் ஹிட்லருக்கு நிம்மதியான பெருமூச்சு. ஓர் ஒட்டுமீசை நினைத்தது. கூட கட்டு மீசைகள் களையெடுப்பு செய்தன. அவ்வளவுதான். 

இரண்டாம் உலகப் போரில், பிரிட்டன் ரொம்பவுமே பாதிக்கப்பட்டுப் போனது. அந்தச் சமயத்தில் பிரிட்டனிடம், ஐம்பது அறுபது காலனிகள் (Colony) இருந்தன. அதாவது இந்தியா, மலாயா, பர்மா, கானா, கென்யா, மலாவி, உகாண்டா, பிஜி என்று பலப் பல  காலனி நாடுகள். எண்ணிப் பார்த்தால் 53 வருகிறது.

கணக்குத் தெரியாமல் மன்மத ராகம் பாடினால்

போருக்குப் பிறகு, பிரிட்டனைப் பார்த்தால் மனசிற்கு கஷ்டமாக இருக்கும். வெளியே பார்த்த மாதிரி வீட்டையும் பார்த்து இருக்க வேண்டுமே என்று கதை கதையாய்ச் சொல்லிக் கண்ணீர் விட்டது.

எல்லாக் காலனி நாடுகளையும், சரியாகக் கவனிக்க முடியாத நிலைமை. உண்மைதானே. ஒரு மனைவியாக இருந்தால், உருப்படியாகச் சோறு போட்டு அழகு பார்த்து இருக்கலாம். கணக்குத் தெரியாமல் மன்மத ராகம் பாடினால் எப்படிங்க. சொல்லாமல் கொள்ளாமல் காசி இராமேஸ்வரத்திற்கு டிக்கெட் எடுப்பது தான் உத்தமம். என்னைக் கேட்டால் அதுதான் சுத்தமான புருஷ இலட்சணம். 

3 கருத்துகள்: