27 அக்டோபர் 2020

மலாயா தமிழர்களும் அசாம் மக்களும் 1860

இந்தியா, அசாம் (Assam) மாநிலத்தில் சர் சாமுவேல் கிளெலாண்ட் டேவிட்சன் (Sir Samuel Cleland Davidson) எனும் தேயிலை தோட்ட நிர்வாகியால் 1860-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். மலாயாவில் எடுக்கப் பட்டதாகப் பலர் கருதுகிறார்கள். இந்தப் பதிவு மலாயா தமிழர்களின் அன்றைய வாழ்க்கையுடன் ஒத்துப் போகிறது. அதனால் அந்த ஒற்றுமைத் தாக்கம்.

இருப்பினும் இந்த இரு இன மக்களும் ஒரே குளத்தில் வாழ்ந்த மீன்கள் தாம். பிரித்துப் பார்க்க முடியவில்லை. மலாயாவில் காண்டா போட்டு ரப்பர் பாலைத் தூக்கினார்கள். அங்கே அசாமில் காண்டா போட்டு தேயிலைச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சினார்கள். அங்கேயும் இடுப்பில் வேட்டிக் கோவணம். இங்கேயும் வேட்டிக் கோவணம் தான்.

ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால், அசாம் நாட்டு மக்களையும் பிரிட்டிஷ் முதலாளித்தும் விட்டு வைக்கவில்லை. அவர்களும் மலாயா தமிழர்களைப் போல அடிமைகளைப் போல பிழிந்து எடுக்கப் பட்டார்கள். அசாம் மணிப்பூரில் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் வாழ்கிறார்கள். 1950-ஆம் ஆண்டுகளில் குடியேறிய தமிழர்கள்.

புகைப்படம்: அசாம்  தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 1860

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.10.2020

சான்றுகள்:

1. Jayeeta Sharma, 'Lazy' Natives, Coolie Labour, and the Assam Tea Industry, Modern Asian Studies, Vol.43, No.6 (Nov., 2009), pp.1287–1324.

2. Coolies watering the tea bushes (c. 1870): http://wiki.fibis.org/index.php?title=File:Carrying_ water_for_tea_coolies.jpg

3. Photographie de Sir Samuel Cleland Davidson (1846–1921), planteur de thé en Assam (de 1864 à 1874), inventeur de patented machinery pour la manufacture du thé et fondateur de la compagnie Davidson à Belfast en 1881.

4. http://ginger.tessitures.site/lien-politique-entre-les-vivants/coolies-dans-les-plantations

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக