02 நவம்பர் 2020

துன் மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும்

 கோலாலம்பூர், நவ. 1 -

அண்மையில் பிரான்சில் நடந்த கொலை வெறித் தாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் பேசி இருக்கும் துன் மகாதீர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுதந்திரமான பத்திரிகை மையம் (சி.ஐ.ஜே) அறிவுறுத்தி உள்ளது.

ஊடகங்களைப் பயன்படுத்தி மகாதீர் வெறுப்பையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கும் வகையில் பேசாமல் தமது பரந்த அனுபவத்தையும் முதிர்ச்சியையும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு அகிம்சையையும் சகிப்புத் தன்மையையும் போதித்து இருக்க வேண்டும் என்று அந்த மையம் குறிப்பிட்டு உள்ளது.

அவரின் கூற்றானது பல்வேறு பிரச்சினைகளை எழுப்பும் என்பதால் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்து, உடனடியாக மன்னிப்பைக் கோர வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தி உள்ளது. உலகில் யாரும் தாங்கள் எண்ணுவதை எடுத்து உரைப்பதில் உரிமை கொண்டு இருந்தாலும், அது ஒரு வரம்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மகாதீரின் கூற்றானது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அம்மாதிரியாகப் பேசும் போது, வார்த்தைகளைக் கவனமாகப் பிரயோகிக்க வேண்டும் என்றும் அந்த மையம் கேட்டுக் கொண்டு உள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக